வெள்ளி, 25 நவம்பர், 2016

இந்திய அரசியல் சாசன தினம் நவம்பர் 26.

இந்திய அரசியல் சாசன தினம்

இந்திய அரசியல் சாசன தினம்
அல்லது இந்திய அரசியலமைப்பு நாள்
(Constitution Day Of India) எனப்படும்
இந்நாள், 2015 நவம்பர் 26 ஆம்
திகதியன்று முதல் முறையாக
அனுசரிக்கப்படுவதாகவும். மேலும்
இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை
வலியுறுத்தும் வகையிலும், இந்திய
அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட
தினமான நவம்பர் 26ம் நாளை,
அரசியலமைப்பு தினமாக,
கொண்டாடப்படுவதாக
அறியப்படுகிறது.
துவக்கம்
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின்
வரைவுக்குழுவின் தலைவராக
செயற்பட்ட டாக்டர் அம்பேத்கர்
என்பவரை கௌரவிக்கும் விதமாகவும்,
நினைவுகூரும் வகையிலும் மற்றும் இந்திய
அரசியலமைப்புக்காக அயாரதுழைத்த
அனைவருக்கும் மரியாதை செய்யும்
விதமாகவும் இந்தியப் பிரதமர் நரேந்திர
மோதியின் தலையில் உள்ள இந்திய அரசால்
2015 ஆம் ஆண்டு, நவம்பர் 26 ல் அரசியல்
சாசன தினம் துவக்கப்பட்டு
கொண்டாடப்பட்டது.
வறலாறு
தெற்கு ஆசியா நாடான
இந்தியாவின் பெரும்பகுதி 1858 லிருந்து
1947 வரையில் ஆங்கிலேயர்கள் காலனித்துவ
ஆட்சிக்கு கீழ் இருந்துள்ளது.
இக்காலகட்டத்தில், ஆங்கிலேய
ஆட்சியிலிருந்து விடுதலைப்பெற இந்திய
சுதந்திர இயக்கம் படிப்படியாக முயன்று
வெற்றியை ஈட்டியது. 1934 ஆம்
ஆண்டுவாக்கில் இந்திய நாட்டிற்கு
அரசியல் நிர்ணயசபை அமைக்க ஒரு கோரிக்கை
முனவைக்கப்பட்டது. பிறகு 1936 -லும், மற்றும்
1939 -லும் இருமுறை இக்கோரிக்கையை பற்றி
வலியுறத்தப்பட்டன. அதன்படி 1942 -ம்
ஆண்டு மார்ச்-ல் கிரிப்ஸ் தூதுக்குழு
அரசியல் நிர்ணய சபையை உருவாக்க
பரிந்துரைக்கப்பட்டது. அதன்பின்பு 1946 மே-ல்
அரசியல் நிர்ணய சபை ஏற்பத்த
பரிந்துரைக்கப்பட்டு, 1946 சூலையில் அரசியல்
நிர்ணய சபைக்கான தேர்தல்
நடைபெற்றது 1946 திசம்பர் 11-ல்
அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு
அச்சபையின் தலைவராக இராசேந்திர
பிரசாத் தேர்வு செய்யப்பட்டார்.
1947 ஆகத்து 15-க்கு (விடுதலைக்கு) பின்பு,
பிரித்தானியாவின் இந்தியா , இந்திய
மாகாணம், பாக்கித்தான்
மாகாணம் என இருவேறு
பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டு சுதந்திர
இந்தியாவின் அரசியலமைப்புச்சாசனத்தை,
உருவாக்கும் பணியை அரசியல் நிர்ணயசபை
குழு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.
இவையையும் காண்க
இந்திய அரசியலமைப்பு
இந்திய அரசியலமைப்புச் சட்டம், உறுப்பு 14
குடியரசு நாள் (இந்தியா)
உப தகவல்கள்
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை 1946
திசம்பர் 6-ஆம் திகதி தோற்றுவிக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை முதல்
கூட்டம் 1946 -ம் ஆண்டு திசம்பர்-9-ல்
நடைபெற்றது.
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை
தலைவராக டாக்டர் சச்சிதானந்த
சின்கா (தர்க்காலிகம்)
செயற்பட்டார்.
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை
தலைவராக டாக்டர் இராசேந்திர பிரசாத்
(நிரந்தரம்) தலைமைவகித்தார்.
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை முதல்
கூட்டம் தில்லியில் நடைபெற்றது.
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை
அமைச்சரவை தூதுக்குழு திட்டத்தின் கீழ்
உறுவாக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு எழுது வரைவுக்குழு
தலைவராக டாக்டர் அம்பேத்கர்
செயல்பட்டார்.
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின்,
ஆரம்பகால மொத்தம் 389
உறுப்பினர்கள் இருந்துள்ளனர்.
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின்,
உறுப்பினர்களின் எண்ணிக்கை 299-ஆக
இருந்தது.
இந்திய அரசியலமைப்பு
பொதுவாக இங்கிலாந்து
அரசியலமைப்போடு ஒத்ததாகும்.

************************************

இந்திய அரசியலமைப்பு ( இந்தி :
भारतीय़ संविधान, ஆங்கிலம்: Constitution
of India ) என்பது இந்தியாவின்
உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின்
மிகப்பெரிய குடியரசு நாடான
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு,
உலகிலேயே மிக நீளமான
அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு
சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு,
நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித்
தன்மையும் உடையது, கூட்டாட்சியும்
ஒருமுகத்தன்மையும் கொண்டது,
பொறுப்புள்ள அரசாங்கத்தை
உடையது என்று பல சிறப்பம்சங்களைக்
கொண்டது. இது அடிப்படை அரசியல்
கொள்கைகள், அரசாங்க
நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள்,
சக்திகள், மற்றும் அடிப்படை உரிமைகள்,
உத்தரவுக் கொள்கைகள்,
குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றின்
கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. இது
தான் இதுவரை உலக நாடுகளின் இடையே
எழுதப்பட்டதில் மிக நீண்ட
அரசியலமைப்பாகும். இதில்
மொத்தம் 22 பிரிவுகள், 12
அட்டவணைகள், 94 திருத்தங்கள், 465
உட்பிரிவுகள் மற்றும் 117,369
சொற்கள் உள்ளன. இது
ஆங்கிலப் பதிப்பைத் தவிர, ஒரு
அதிகாரப்பூர்வ இந்தி
மொழிபெயர்ப்பினையும்
கொண்டுள்ளது. இந்திய
அரசியலமைப்பை உருவாக்கும் பணி 29
ஆகஸ்ட் 1947 அன்று முதல் இந்திய
அரசமைப்பு நிர்ணய மன்றத்தால்
தொடங்கப்பட்டது. முழுமையடைந்த
அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26
அன்று நடைமுறைக்கு வந்தது. (இத்தேதி 26
ஜனவரி 1929, முழு தன்னாட்சி சாற்றல்
நினைவாகத் தேர்வு செய்யப்பட்டது).
இதன் மூலம் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த,
தன்னாட்சி கொண்ட, குடியரசின்
மக்களாட்சிக் கோட்பாட்டின்படி
வழிநடத்துகின்ற நாடாக அறிவித்துக்
கொண்டது. நடைமுறைக்கு வந்த பிறகு,
அதுவரை நாட்டின் அடிப்படை நிருவாக
ஆவணமாக இருந்த இந்திய அரசு சட்டம்,
1935 என்னும் சட்டத்திற்கு பதில் இந்திய
அரசியலமைப்பு நாட்டின் அடிப்படை நிர்வாக
ஆவணமாக மாற்றியது.
அரசியலமைப்புக்கு வலுசேர்க்கும் விதமாக
1976 ல் நடைபெற்ற திருத்தங்களில்
இந்தியா பொதுவுடைமை ,
மதச்சார்பின்மை மற்றும் நேர்மை இவைகளை தன்
கொள்கைகளாக அறிவித்தது.
இந்தியா தனது அரசியலமைப்பின் ஏற்பை
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம்
தேதியை குடியரசு நாளாகக்
கொண்டாடுகிறது.
இந்திய அரசியலமைப்பின் படி இந்தியா ஒரு
கூட்டாட்சி(federalism) நாடாகும்.
இருப்பினும் இந்திய அரசியலமைப்புச்
சட்டத்தில் 'கூட்டாட்சி' (கூட்டரசு - federal
government) என்ற சொல்லிற்குப்
பதிலாக 'ஒன்றியம்' (union) என்ற
சொல்தான்
பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் முகப்புரை
(preamble)யில், " இறையாண்மை உடைய
ஜனநாயக, சமதர்ம, சுதந்திரக் குடியரசு"
என்றும் " இந்திய யூனியன்" என்றும்
இந்தியா பெயரிடப்பட்டுள்ளது. இது
இச்சட்டத் தொகுப்பின் முழுப்
புரிதலையும் தரும்படி அமைக்கப்பட்டுள்ளது.
இதில் இந்தியக் குடிமக்களுக்கான
அடிப்படை உரிமைகள் தொடக்கத்திலேயே
வழங்கப்பட்டிருந்தாலும், பின்பு அடிப்படைக்
கடமைகளும் உருவாக்கப்பட்டன. இந்திய
அரசமைப்பின் தனிச் சிறப்புக்களில் 'அடிப்படை
உரிமைகளும்' அடங்கும்.
இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கப்படும்
போது, பல்வேறு நாடுகளின் அரசமைப்புச்
சட்டங்களின் கூறுகள் எடுத்துக்
கொள்ளப்பட்டன. இதனால்
இந்திய அரசமைப்பு சட்டத்தை, 'கடன்களின்
பொதி' என்பர். 'கூட்டாட்சி முறையை'
கனடாவில் இருந்தும், 'அடிப்படை உரிமைகள்'
அமெரிக்க ஐக்கிய நாடுகளிடம்
இருந்தும், அடிப்படைக் கடமைகளை அன்றைய
சோவியத் யூனியனிடமிருந்தும் பெற்றது.
அரசியல் சட்டத்திருத்த முறையை தென்
ஆப்ரிக்காவிடம் இருந்தும், ராஜ்யசபா
நியமன எம்.பி.,க்கள் முறையை
அயர்லாந்திடம் இருந்தும் பெற்றது.
இந்திய அரசியலமைப்பு
உருவான வரலாறு
இந்திய துணைக்கண்டத்தின்
பெரும்பாலான பகுதி 1858 லிருந்து
1947 வரை ஆங்கிலேயர் காலனித்துவ
ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த காலத்தில்
வெளிநாட்டு ஆட்சியில் இருந்து
சுதந்திரம் பெற இந்திய சுதந்திர
இயக்கம் படிப்படியாக உயர்வு கண்டது.
1934-ல் இந்தியாவிற்கு ஒரு அரசியல்
நிர்ணய சபை வேண்டும் என்ற கோரிக்கை
எழுப்பப்பட்டது. பின்னர் 1936-இலும் 1939-
இலும் இக்கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அதன்படி, அரசியல் நிர்ணய சபையை
உருவாக்கலாம் என கிரிப்ஸ் தூதுக்குழு
மார்ச்-1942-ல் பரிந்துரைத்தது. பின்னர் வந்த
அமைச்சரவைத் தூதுக்குழு (மே-1946) அரசியல்
நிர்ணய சபை ஏற்படுத்த வேண்டும் எனப்
பரிந்துரைத்தது. அதன்படி அரசியல் நிர்ணய
சபைக்கான தேர்தல், ஜூலை 1946-ல்
நடைபெற்றது. டிசம்பர் 1946-ல் அரசியல்
நிர்ணய சபை கூடியது. அச்சபையின்
தலைவராக டிசம்பர்-11, 1946-ல்
இராசேந்திர பிரசாத்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1947,ஆகஸ்ட் 15-ல் பிரித்தானிய
இந்தியாவானது இந்திய மாகாணம்,
பாக்கிஸ்தான் மாகாணம் என்ற
இரண்டு நாடுகளாகப்
பிரிக்கப்பட்டதால் சுதந்திர
இந்தியாவிற்கான அரசியலமைப்பை மட்டும்
உருவாக்கும் பணியை அரசியல் நிர்ணய சபை
செய்ய வேண்டியதாயிற்று.
அரசியலமைப்புச் சட்ட வரைவுக்
குழு
1947, ஆகஸ்ட் 29 -ல் அரசியல் நிர்ணய சபை
ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத பீ.
இரா. அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட
ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச்
சட்ட வரைவுக்குழு (Drafting committee)
உருவாக்கப்பட்டது.
1. பீ. இரா. அம்பேத்கர்
2. கோபால்சாமி ஐயங்கார்
3. அல்லாடி கிருஷ்ணமூர்த்தி
4. கே. எம். முன்ஷி
5. சையது முகமது சாதுல்லா
6. மாதவராவ்
7. டி. பி. கைதான்
ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக
இடம்பெற்றனர். இக்குழு தனது
அறிக்கையை 1948, பிப்ரவரி 21-ல் ஒப்படைத்தது.
நவம்பர் 4-ல் அரசியல் நிர்ணய சபைக்கு
ஒப்படைக்கப்பட்ட இவ்வறிக்கை, முழு வடிவம்
பெற்று 1949 நவம்பர் 26-ல் அரசியல்
நிர்ணய சபையின் தலைவர் இராஜேந்திரப்
பிரசாத்தின் கையொப்பம்
பெற்றது. ஜனவரி 24-ல் நடைபெற்ற
அரசியல் நிர்ணய சபையின் கடைசிக் கூட்டத்தில்
சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத்
தலைவராக இராசேந்திர பிரசாத்
தேர்ந்தெடுக்கப்பட்டார். லாகூரில்
நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ்
மாநாட்டில் 1930,ஜனவரி 26-ல்
இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றே
தீருவது என்ற தீர்மானம்
நிறைவேற்றப்பட்டதன் நினைவாக ஜனவரி 26
தேதியை இந்தியக் குடியரசு நாளாக ஏற்பது
என்றும் அரசியல் நிர்ணய சபை முடிவு
செய்தது. "இந்திய அரசியலமைச்
சட்டம்-1950" இந்தியக் குடியரசு தினத்தில்
நடைமுறைக்கு வந்தது.
இது பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து அதன்
விடுதலைக்கு பிறகு இந்திய அரசின் நில
சட்டத்தின் ஸ்தாபக
கொள்கைகளைக்
கொண்டிருந்தது. அரசியலமைப்பு
நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து, இந்தியா
பிரிட்டிஷ் அரசாட்சியில் இருந்து
நீக்கப்பட்டது.
பிறநாட்டு அரசியலமைப்பின்
தாக்கங்கள்
சட்ட வரைவுக்குழு இந்திய அரசியல்
சாசனத்தை உருக்கும் பொருட்டு
அப்போது மக்களாட்சி நடைபெற்ற
நாடுகள் பலவற்றிலிருந்து இந்திய
நடைமுறைக்கு பொருத்தும் சட்டக்கூறுகளை
இந்திய அரசியல் சாசன வரைவில் சேர்த்தது.
இவற்றில், 1935ஆம் ஆண்டு முதல்
இந்தியாவில் நடைமுறைக்கு
கொண்டுவரப்பட்ட இந்திய
அரசாங்க சட்டம் 1935 -உம் அடக்கம்.
இங்கிலாந்து
பாராளுமன்ற
முறையிலான
அரசாங்கம்
ஒற்றைக்குடியுரிமை
'சட்டத்தின் ஆட்சி'
கருத்தியல்
அவைத்தலைவர் முறைமை
மற்றும் அவரது பணிகள்
சட்டமியற்றும் முறை
Procedure established
by Law
ஐக்கிய
அமெரிக்கா
அடிப்படை
உரிமைகளுக்கான
சாசனம்
கூட்டாட்சி முறை
அரசாங்கம்
வாக்களர் மன்றம்
நீதித்துறையின்
தன்னாட்சி மற்றும்
அரசாங்கத்தின் மூன்று
அங்கங்களுக்கிடையேயான
அதிகாரப் பகிர்வு
நீதித்துறையின்
புலனாய்வு
முப்படைகளின்
தலைவராக
குடியரசுத்தலைவர்
சட்டத்தின் சம
பாதுகாப்பு
அயர்லாந்து
அரசின் நெறிமுறை
கோட்பாடுகள்
ஆஸ்திரேலிய
Freedom of tr
commerce within
and between the
Power of the
legislature to ma
implementing tre
matters outside
jurisdiction
பொ
முகவுரையின்
பிரான்சு
சுதந்திரம், சம
சகோதரத்துவ கரு
கனடா
பலமிக்க நடு
அரசாங்கமுறை
அமையப்பெ
கூட்டாட்சி முறை
மைய மற்றும்
அரசுகளுக்கிடையே
அதிகாரப்பகிர்
எஞ்சிய அதிக
அரசாங்கம்
சோவியத் யூனிய
அடிப்படை கடமை
நாட்டின்
பொரு
வளர்ச்சிகளை
முன்னெடு
திட்டக்குழு
இந்திய
அரசியலமைப்பின்
கூறுகள்
இந்திய அரசியலமைப்பில் 22
அத்தியாயங்களும்(Chapters) 9
அட்டவணைகளும் (Schedules) (முதலில் 8
அட்டவணைகளே இருந்தன; 1951-ல் 9-ஆவது
அட்டவணை சேர்க்கப்பட்டது) 22
அத்தியாயங்களும் 395 பிரிவு (Article)
களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில்
இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமைகள்,
அரசு நெறிமுறைக் கோட்பாடுகள், மத்திய
நிர்வாகக்குழு, மாநில அரசுகள்,
நீதிமன்றங்கள் ஆகியன பற்றி
சொல்லப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு கீழ்கண்ட
முகப்புரையுடன் தொடங்குகிறது:
“ இந்தியாவின்
மக்களாகிய நாங்கள்
இந்தியாவை ஒரு
சுதந்திரமான,
சமுதாயநலம்நாடும்,
சமயச்சார்பற்ற,
சமஉரிமைக் குடியரசு
நாடாக அமைக்க
மனமார்ந்து
முடிவுசெய்து,
அதன் குடிமக்கள்
எல்லோருக்கும் சமூக,
பொருளாதார,
மற்றும் அரசியல்
நியாயமும், எண்ணத்தில்,
வெளிப்பாடுகளில்,
நம்பிக்கையில், மதம் மற்றும்
வழிபாடுகளில் சுதந்திரமும்,
சமூகநிலையில் மற்றும்
வாய்ப்புகளில்
சமத்துவமும் கிடைக்கச்
செய்யவும்,
ஒவ்வொரு
மனிதனின் மதிப்பையும்
நாட்டின் ஒருமையையும்
முழுமையையும்
காக்கும்வண்ணம்
அவர்கள் அனைவரிடமும்
சகோதரத்துவத்தை
ஊக்குவிக்கவும் நம்
அரசியல் அமைப்பு
உருவாக்கும் அவையில்
இந்த 1949 நவம்பர்
இருபத்தாறாம் நாளில்
இங்ஙனம் இந்த
அரசாங்க சாசனத்தை
இயற்றி, எங்களுக்கே தந்து,
ஏற்றுக்கொள்கிறோம். ”
அடிப்படை உரிமைகள்
இந்திய அரசியலமைப்பின் முதல்
அத்தியாயத்தில் நாட்டின் பெயர்,
ஆட்சிப்பரப்பு ஆகியனவும், இரண்டாவது
அத்தியாயத்தில் குடிமை(Citizenship)
பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. 12-
ஆவது பிரிவு முதல் 35-ஆவது பிரிவு வரை
உள்ள மூன்றாவது அத்தியாயத்தில்
இந்தியரின் அடிப்படை உரிமைகள்
பட்டியலிடப்பட்டு உள்ளன. அவற்றுள்:
1. இந்தியாவிற்குள் அனைவரும் சம
பாதுகாப்பு (பிரிவு-14)
2. வேறுபாடின்றி சட்டத்தின் முன் அனைவரும்
சமம் (பிரிவு-15)
3. பொதுவேலைவாய்ப்பில் சம
வாய்ப்பு (பிரிவு-16)
4. தீண்டாமை ஒழிப்பு (பிரிவு-17)
5. பட்டங்கள் ஒழிப்பு (பிரிவு-18)
6. ஏழு சுதந்திரங்கள் (பிரிவு-19 முதல் 22)
7. சமய உரிமை (பிரிவு 25-28)
8. சிறுபான்மையினரின் பண்பாட்டு,கல்வி
உரிமை (பிரிவு 29-30)
9. இவ்வுரிமைகளைக் காத்துக்
கொள்ள உச்ச நீதிமன்றத்தில்
வழக்கு தொடரும் உரிமை (பிரிவு-32)
ஆகியன முக்கியமானவையாகும்.
நெருக்கடி நிலையின் போது
தற்காலிகமாக அடிப்படை உரிமைகள்
நீக்கப்படும். ஆனால் நெருக்கடி நிலை
ரத்தானதும் அடிப்படை உரிமைகள்
தானாக அமுலாகிவிடும்.
அரசு நெறிமுறைக்
கோட்பாடுகள்
இந்தியாவிலுள்ள மத்திய மாநில
அரசுகள் மக்களைப் பாதுகாத்து
நல்வழிப்படுத்த, எந்தக் கோட்பாடுகளை
உள்ளடக்கி சட்டங்கள் இயற்ற வேண்டும்
என்பதே அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்
(Directive Principles) ஆகும். இது பற்றி
நான்காம் அத்தியாயத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லோருக்கும்
போதுமான வாழ்க்கை வசதிகள், வயதுக்கும்
வேலைக்கு ஏற்ற பொருத்தமான
வேலை, தொழில் செய்ய ஏற்ற
சூழ்நிலை, வேலைக்கு ஏற்ற வயது வரை இலவச
கட்டாயக் கல்வி, பொது
சுகாதாரம், மது விலக்கு, வேளாண்மை
வளர்ச்சி, வரலாற்றுச் சின்னங்கள்
பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு ஆகியன
அக்கோட்பாடுகளுள் சிலவாகும்.
இக்கோட்பாடுகள் யாவும் அறிவுரைகளே;
இவற்றைச் செயல்படுத்தக் கோரி
அரசுகள் மீது நீதிமன்றங்களில் வழக்கு
தொடர முடியாது.
மத்திய நிர்வாகக் குழு
குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர்,
மத்திய அமைச்சரவை, பாராளுமன்றம்
ஆகியவற்றைக் கொண்டதாக
மத்திய நிர்வாகக் குழு அமையும்.
குடியரசுத் தலைவர் (President of
India)
இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர்
இந்தியக் குடியரசு எனப்பட்ட "இந்திய
அரசின் தலைவர்" ஆவார். மத்திய
நிர்வாகக் குழுவின் தலைவரும், கூட்டாட்சி
நிர்வாகத்தின் தலைவரும், இந்திய
இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத்
தளபதியும் ஆவார். 'இந்தியாவின் முதல்
குடிமகன்' என்றும் அவர்
குறிப்பிடப்படுகிறார்.
குடியரசுத் துணைத் தலைவர்
இந்தியாவின் இரண்டாவது மிக உயர்
பதவிக்குரியதாகும், குடியரசுத் தலைவருக்கு
அடுத்த நிலையில் வரும் பதவியாகும்.
துணைக்குடியரசுத்தலைவரே
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைத்
தலைவராவார். எனினும் இவருக்கு
மாநிலங்களவை வாக்கெடுப்பில்
வாக்களிக்கும் உரிமை இல்லை.
ஏனெனில் இவர் மாநிலங்களவை
உறுப்பினர் அல்லர். எனினும் வாக்குகள்
சமநிலையில் இருக்கும் போது இவர்
வாக்களிக்கலாம்.
மத்திய அமைச்சரவை
பாராளுமன்றம்
மாநிலங்களவை
முதன்மைக் கட்டுரை: மாநிலங்களவை
மாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள்
மாநில-பிரதேச சட்டப்பேரவைகளால்
தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12
உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால்
நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு
வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில்
ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள்
இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் மூலம்
தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
மக்களவை
முதன்மைக் கட்டுரை: இந்திய மக்களவை
மக்களவை, மக்களால் நேரடியாக
தேர்ந்தெடுக்கப்படும் 543
உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால்
நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும்
கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்
நடைபெறும்.
மாநில அரசுகள்
1935 முன்பான பிரித்தானிய
நாடாளுமன்றத்தின்
சட்டங்கள்
அச்சட்டம் மேலும் இங்கிலாந்தில் இந்திய
மாநில செயலாளர் அலுவலகத்தை
நிறுவி நாடாளுமன்றம், அதன் மூலம்
ஆட்சி செய்தது. அதே போல் இந்திய அரச
பிரதிநிதி அலுவலகத்தை நிறுவியது. நிருவாகச்
சபை மற்றும் அல்லாத அதிகாரப்பூர்வ
உறுப்பினர்கள் கொண்ட சட்ட
சபையை இந்திய சபைகள் சட்டம், 1861
வழங்கியது. இந்திய சபைகள் சட்டம், 1892
மாகாண சட்டமன்றங்களை நிறுவியது.
சட்ட சபையின் அதிகாரங்களை அதிகரித்தது.
இந்த சட்டங்களால் அரசாங்கத்தில்
இந்தியர்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்த
போதிலும், அவர்களின் அதிகாரம்
குறைவாகத் தான் இருந்தது. இந்திய
சபைகள் சட்டம், 1909 மற்றும் இந்திய அரசுச்
சட்டம், 1919 ஆகியவற்றால்
இந்தியர்களின் பங்கு மேலும் விரிவடைந்தது.
இந்திய அரசுச் சட்டம் 1935
முதன்மை கட்டுரை: இந்திய அரசுச் சட்டம், 1935
இந்திய அரசு சட்டம் 1935 யின் விதிகள்
முழுமையாக அமல்படுத்தப்படவில்லை,
எனினும் இந்திய அரசியலமைப்பில்
பெரும் தாக்கத்தை ஏர்படுத்தியது.
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பின்
பல முக்கிய அம்சங்கள் நேரடியாக இந்த
சட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டன.
கூட்டாட்சி அரசாங்கம் அமைப்பு,
மாகாண சுயாட்சி, கூட்டாட்சி
சட்டமன்றம் மற்றும் சட்ட அதிகாரங்களை
மத்தியிலும் மாகாணங்களின் இடையிலும்
பிரித்தல் ஆகியவற்றை தற்போது இந்திய
அரசியலமைப்பு அவை சட்டத்தின் விதிகளில்
இருந்து எடுத்துக்கொண்டது.
கேபினெட்டு மிஷன் திட்டம்
முதன்மை கட்டுரை: இந்திய 1946 கேபினெட்
மிஷன்
1946 இல், பிரித்தானியப் பிரதமர்
கிளெமென்ட் அட்லி அதிகாரத்தை
பிரித்தானிய இந்தியாவிடமிருந்து இந்திய
தலைமைக்கு மாற்ற விவாதித்து முடிவு
செய்யவும், காமன்வெல்த்து
நாடுகளின் ஒரு அங்கமாக இந்தியாவை
மேலாட்சி அரசுமுறையின் கீழ் சுதந்திரம்
வழங்க ஒரு அமைச்சரவைக் குழுவை
உருவாக்கினார். இக்குழு கேபினட்டு மிஷன்
என அழைக்கப்பட்டது.
பிரித்தானிய இந்திய மாநிலங்களில்
ஒதுக்கப்பட்டிருந்த 296 இடங்களுக்கான
தேர்தல் ஆகத்து 1946 இல் நிறைவு
பெற்றது. இந்திய அரசியலமைப்பு
நிர்ணய மன்றம் திசம்பர் 9, 1946 அன்று
முதல் கூடி புதிய அரசமைப்பை உருவாக்கும்
வேலையைத் தொடங்கியது.
இந்திய சுதந்திர சட்டம் 1947
முதன்மை கட்டுரை: இந்திய சுதந்திர சட்டம், 1947
சூலை 18, 1947 பிரித்தானிய
நாடாளுமன்றத்தில் இந்திய விடுதலை
(சுதந்திர)ச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது
இரண்டு புதிய சுதந்திர மேலாட்சி
நாடுகளான - இந்தியா மற்றும்
பாக்கிஸ்தான் என்று பிரித்தானிய
இந்தியாவைப் பிரித்து, அவர்கள்
தங்களுக்கான புதிய அரசியலமைப்பு சட்டம்
எழுதப்படும் வரை, காமன்வெல்த்
நாடுகள் கீழ் இருக்க வேண்டும் என்றது.
தனி மாநிலங்களுக்காக அரசமைப்பு சபை
இரண்டாக பிரிக்கப்பட்டு,
ஒவ்வொரு புதிய
சட்டமன்றத்திற்கும் சம்பந்தப்பட்ட
அரசாங்க அதிகாரங்கள்
வழங்கப்பட்டது. இந்த சட்டம் மன்னர்கள்
ஆளும் மற்ற மாநிலங்களை ஏதாவது
ஒன்றின் அடியே இணையச்
சொன்னது. இந்திய அரசியலமைப்பு
1950 ஆம் ஆண்டு சனவரி 26 அன்று
வழக்குக்கு வந்த போது இந்திய விடுதலைச்
சட்டம் நீக்கப்பட்டது. இந்தியா ஆங்கிலேயர்
ஆட்சியிலிருந்து விடுப்பட்டு இறையாண்மை
கொண்ட மக்களாட்சிக்
குடியரசாக மாறியது. 26 நவம்பர், 1949
தேசிய சட்ட தினம் என்று அறியப்படுகின்றது.
இந்திய அரசியலமைப்பு
நிர்ணய மன்றம்
முதன்மை கட்டுரை: இந்திய அரசியலமைப்பு
நிர்ணய மன்றம்
மத்திய மாகாண சட்டமன்றங்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய
உறுப்பினர்களால் அரசியலமைப்பு நிர்ணய
மன்றம் அமைக்கப்பட்டது. ஜவகர்லால் நேரு ,
சி ராஜகோபாலாச்சாரி , ராஜேந்திர
பிரசாத் , சர்தார் வல்லபாய் படேல்,
சந்திப் குமார் படேல், டாக்டர் அம்பேத்கர்,
மவுலானா அபுல் கலாம் ஆசாத்,
ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, நளினி
ரஞ்சன் கோஷ், மற்றும் பால்வந்த் சிங்
மேத்தா ஆகியோர் சட்டமன்றத்தில் முக்கிய
பிரமுகர்களாக இருந்தனர். தாழ்த்தபட்ட
வகுப்புகளை சேர்ந்த 30 மேற்பட்ட
உறுப்பினர்கள் அங்கு இருந்தன. பிராங்க்
அந்தோணி ஆங்கிலோ இந்திய சமூகத்தை
பிரதிபலித்தார். பார்சி இனத்தவர்களை
ஹெச்பி மோடி பிரதிபலித்தார்.
சிறுபான்மையினர் குழுவின் தலைவராக,
ஆங்கிலோ இந்தியர்கள் தவிர மற்ற அனைத்து
கிரிஸ்துவர்களின் பிரதிநிதியாக
ஃஅரென்ட்ர Cஊமர் முகெர்ஜீ
என்ற புகழ்பெற்ற கிரிஸ்துவர்
இருந்தார். அரி பகதூர் குறூங் கோர்கா
சமூகத்தை பிரதிபலித்தார். அல்லாடி
கிருஷ்ணசாமி ஐயர், பி ஆர் அம்பேத்கர்,
பெனகல் நர்சிங் ராவ் மற்றும் கி.மீ.
முன்ஷி, கணேஷ் மவ்லன்கர் போன்ற முக்கிய
நடுவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக
இருந்தனர். சரோஜினி நாயுடு , ஹன்சா
மேத்தா, துர்காபாய் தேஷ்முக்,
ராஜ்குமாரி அம்ரித் கவுர் மற்றும்
விஜயலட்சுமி பண்டிட் போன்றவர்கள்
முக்கியமான பெண்கள்
உறுப்பினர்களாக இருந்தனர். அரசமைப்பு
சபையின் முதல் ஜனாதிபதியாக டாக்டர்
சச்சிதானந்தன் சின்ஹா ​​இருந்ததார்.
பின்னர், ராஜேந்திர பிரசாத் சட்டசபை
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அரசமைப்பு சபை உறுப்பினர்கள் டிசம்பர் 9,
1946 அன்று முதல் முறையாகக் கூடினர்.
வரைவு
சட்டமன்றத்தின் 14 ஆகஸ்ட் 1947
கூட்டத்தில், பல்வேறு குழுக்களை உருவாக்கும்
திட்டம் வழங்கப்பட்டது. அத்தகைய
குழுக்களில் அடிப்படை உரிமைகள்,
ஒன்றியத்துக்கான அதிகாரக் குழு மற்றும்
மத்திய அரசியல் குழு அடங்கியிருந்தன. 29
ஆகஸ்ட் 1947 அன்று, வரைவு குழு, தலைவரை
டாக்டர் அம்பேத்கராக கொண்டு,
ஆறு உறுப்பினர்களுடன் நியமிக்கப்பட்டது.
அரசியலமைப்பின் வரைவு தயாரிக்கப்பட்டு 4
நவம்பர், 1947 அன்று சட்டமன்ற குழுவிடம்
சமர்பித்தது. இந்திய அரசியலமைப்பை
உருவாக்கியவர்கள், பல வெளிப்புற
ஆதாரங்களை தழுவினாலும், மிக அதிக
அளவில் பிரிட்டிஷ் முறையான
பாராளுமன்ற ஜனநாயகத்தால்
ஈர்க்கப்பட்டனர். கூடுதலாக பல
கொள்கைகள் அமெரிக்க
அரசியலமைப்பிலிருந்து
ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அரசாங்கத்தின் முக்கிய கிளைகள் மத்தியில்
அதிகார பிரிப்பு, உச்ச நீதிமன்ற நடைமுறை,
மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பு ஆகிய
கொள்கைகள் அடங்கும். சட்டமன்ற
அரசியலமைப்பு தத்தெடுக்கும்
முன்னதாக 2 ஆண்டுகள் 11 மாதங்கள்
மற்றும் 18 நாட்கள் முழுவதும்
கொண்ட மொத்தம் 166
நாட்கள், பொது திறந்த
அமர்வுகளில் சந்தித்தது. சில
மாற்றங்களுக்கு பிறகு, சட்டமன்றத்தின்
308 உறுப்பினர்களும் இரண்டு ஒப்பந்ததிலும்
(இந்தி மற்றும் ஆங்கிலம்)24 ஜனவரி,1950
அன்று கையெழுத்து இட்டனர்.
இந்தியாவின் உண்மையான
அரசியலமைப்பு கையால் எழுதப்பட்டு,
பியூகார் ராம்மனோஹர் சின்ஹா ​​மற்றும்
மற்றவர்கள் உட்பட சாந்திநிகேதன்
கலைஞர்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு பின்னர், 26 ஜனவரி
1950 அன்று, இந்திய அரசியலமைப்பு அனைத்து
இந்திய மாநிலங்களுக்கும் ஒன்றியப்
பகுதிகளுக்குமான சட்டமானது.
அரசியலமைப்பு அதன் அரங்கேற்றம் முதல்
பல திருத்தங்களை பெற்றுவிட்டது.
அமைப்பு
அரசியலமைப்பு அதன் தற்போதைய வடிவத்தில்
(மார்ச்,2011), ஒரு முன்னுரை, 450 கட்டுரைகள்,
12 அட்டவணை, 2 பின் இணைப்பு மற்றும் 114
திருத்தங்களை இன்றுவரை கொண்டு
மொத்தம் 24 பகுதிகளை
கொண்டுள்ளது. இது கூட்டாட்சி
தத்துவம் கொன்டது எண்றாலும்
ஒரு வலுவான ஒற்றை சார்பு
கொண்டிருக்கிறது.
அரசாங்கத்தின் அமைப்பு
பின்வருமாறு மத்திய அரசு அடிப்படை
வடிவம் எதிர்நோக்குகிறது
"ஒரு ஜனநாயக நிர்வாகம் மூன்று
நிலைகளை தீர்க்க வேண்டும்: 1. ஒரு நிலையான
நிர்வாகம் இருக்க வேண்டும் 2. ஒரு
பொறுப்பான நிர்வாகம் இருக்க
வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, அது சம
அளவு இரண்டு நிலைமைகளையும் உறுதி
செய்ய ஒரு முறையை திட்டமிடுவது இதுவரை
சாத்தியமே இல்லை. ..... அமெரிக்க
முறையில் இல்லாத தினசரி
பொறுப்பு மதிப்பீடு குறித்த
காலத்து மதிப்பீட்டை விட மிகவும்
பயனுள்ளதக இந்தியா போன்ற நாடுகளில்
மிகவும் பயனுள்ளதாக அமையும். வரைவு
அரசியமைப்பு நிலைத்தன்மையைவிட
பொறுப்புக்கு விருப்பமாக
பாராளுமன்ற அமைப்புக்கு
பரிந்துரைத்துள்ளது.”
கூட்டாட்சி அமைப்பு
அரசியலமைப்பு மத்திய அரசுக்கும், மாநில
அரசுக்கும் இடையே அதிகாரங்களை பகிர்ந்து
வழங்குகிறது. இது பாராளுமன்றம்
மற்றும் மாநில சட்டமன்றங்களின்
அதிகாரங்களை மூன்று பட்டியல்,அதாவது
மத்திய பட்டியல், மாநில பட்டியல் மற்றும்
உடன்நிகழ்கிற பட்டியல் என பிரிக்கிறது.
தேசிய பாதுகாப்பு, வெளியுறவு
கொள்கை, நாணய வழங்கல்
போன்ற விஷயங்கள் யூனியன் பட்டியலில்
ஒதுக்கப்பட்டுள்ளன. பொது
ஒழுங்கு, உள்ளூர் அரசாங்கங்கள், சில
வரிகள் ஆகியவை மாநிலம் பட்டியல்
உள்ளன. பாராளுமன்றம்
விதிவிலக்கான சூழ்நிலைகளில் தவிர, அந்த
சட்டங்களை இயற்ற எந்த சக்தியும்
கிடையாது.கல்வி, போக்குவரத்து, குற்றவியல்
சட்டம் ஆகிய உடன்நிகழ்கிற பட்டியலில்
உள்ள பாடங்களில் மாநில சட்டமன்றம்
மற்றும் நாடாளுமன்றம் சட்டங்களை
இயற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது
.எஞ்சியுள்ள அதிகாரங்கள் யூனியன்
வசம் உள்ளது.மாநிலங்களின் பிரதிநிதிகளை
கொண்டிருக்கும் மேல்சபையான
ராஜ்ய சபா,மேல் கூட கூட்டாட்சி
அரசாங்கம் முறைக்கு ஒரு
எடுத்துக்காட்டாக உள்ளது.
பாராளுமன்ற ஜனநாயகம்
இந்திய ஜனாதிபதி, பாராளுமன்றம்
மற்றும் மாநில சட்டமன்றங்களாலும்
தேர்ந்தெடுக்கப்பட்டார், மற்றும்
நேரடியாக மக்களால்
கிடையாது .ஜனாதிபதி மாநில தலைவர்
உள்ளார் மற்றும் பாராளுமன்றத்தில்
இயற்றப்படும் நிர்வாகம் மற்றும்
சட்டங்கள் அனைத்தும் அவர் பெயரில்
நிறைவேற்றப்படுகிறது. ஆனால் இந்த
அதிகாரங்கள் பெயரளவுக்கு மட்டுமே
உள்ளன, ஜனாதிபதி பிரதமர் மற்றும்
அமைச்சரவையின் ஆலோசனையின் படி தான்
செயல்பட வேண்டும். இதே போன்ற ஒரு
அமைப்பு, நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட
சட்டமன்ற உறுப்பினர்கள்,முதல்வர் மீதும்
அமைச்சர்கள் மீதும் தங்கள் கட்டுப்பாட்டை
செலுத்தும் முறை தற்போது மாநிலங்களில்
உள்ளது.
சுதந்திரமான நீதித்துறை
இந்திய நீதித்துறை, நிர்வாகிகள் முதல்
பாராளுமன்றம் வரை அதன் கட்டுப்பாட்டை
செலுத்த முடியும். நீதித்துறை அரசியல்
பொருள் விளக்குபவராக
செயல்படுகிறது. இரு மாநிலங்களுக்கு
இடையிலோ,ஒரு மாநிலத்துக்கும் மத்திய
அரசுக்கும் இடையிலோ ஏற்படும் பிரச்சினைகளில்
நடுநிலையாளராக செயல்படும்.
பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும்
இயற்றப்பட்ட சட்டம் நீதிமுறை மேலாய்வுக்கு
உட்பட்டது. அந்த சட்டம் அரசியலமைப்பு
விதிகளை மீறுகிறது என்று நினைத்தால்
நீதித்துறை அரசியலமைப்பில் அல்லாததாக
அறிவிக்க முடியும்.
அரசியலமைப்பை மாற்ற
கட்டுரை 368 அமைக்கப்பட்டுள்ள
செயல்முறை படி, அரசியல் சட்ட
திருத்தங்களை பாராளுமன்றம் மாற்றம்
செய்யலாம். ஒரு திருத்த மசோதா
மூன்றில் இரண்டு
பெரும்பான்மையினரின்
வாக்கெடுப்பால்
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும்
நிறைவேற வேண்டும். மேலும் கூட்டாட்சி
அரசியலமைப்பு தொடர்புடையதான
சில திருத்தங்களை மாநில சட்டமன்றங்கள்
பெரும்பான்மை மூலம் உறுதிப்படுத்த
வேண்டும். செப்டம்பர் 2010 வரை,
பாராளுமன்றம் முன் செலுத்தப்பட்ட
108 திருத்த மசோதாக்களில் 94 திருத்தம்
சட்டமாக நிறைவேறி உள்ளது. எனினும்,
அரசியலமைப்பு அரசாங்க அதிகாரங்களை
மிகவும் கவனிப்பதால் இந்த
பிரச்சினைகளில் அரசியலமைப்பு திருத்தம்
செய்யப்பட வேண்டும். இதன்
விளைவாக, ஆவணம் ஒரு வருடத்திற்கு
சுமார் இரண்டு முறை திருத்தப்பட்டு உள்ளது.
சட்டங்களின் நீதிமுறை
மேலாய்வு
நீதிமுறை மேலாய்வை அமெரிக்காவின்
அரசியலமைப்பிலிருந்து இந்திய அரசியலமைப்பு
பயன்படுத்திக்கொண்டது.
நீதிமன்ற உறுப்புரை 13 கீழ் நீதிமுறை மேலாய்வு
செயல்படுகிறது. நீதிமன்ற
அரசியலமைப்பு நாட்டின் உச்ச சக்தி மற்றும்
அனைத்து சட்டங்களும் அதன்
மேலாதிக்கத்தின் கீழ் என்பதை குறிக்கிறது.
உறுப்புரை 13 கூறுவதாவது,
1. அனைத்து முன் அரசியலமைப்பு சட்டங்களும்
பின்னர் அரசியலமைப்பு சட்ட விதிகளுடன்
மோதல்கள் ஏற்பட்டால், அரசியலமைப்பின்
விதிகள் அதற்கு ஏற்றதாக மாற்றப்படும்
வரை செயல்படுத்த படாமல்
இருக்கும்.இது டாற்றின் ஆப் எலிப்ஸ்
கொள்கை என்று அழைக்கப்படுகிறது.
2. இதே முறையில், அரசமைப்பு சபையால்
அரசியலமைப்பு
ஏற்றுக்கொண்டதிலிருந்து
இயற்றபடும் சட்டங்கள் அரசியலமைப்புக்கு
இணக்கத்தன்மை கொண்டதாக
இருக்க வேண்டும், இல்லையெனில்
சட்டங்கள் மற்றும் திருத்தங்களை வய்டு-அ பி-
இனிடியோ வேண்டும் என கருதப்படுகிறது.
பகுதிகள்
பகுதி 1 (உட்பிரிவு 1-4) இந்திய யூனியன்
பற்றியது. அதாவது மாநில அமைப்பு.
மாநில எல்லை வரையறை போன்றவை.
பகுதி 2 (உட்பிரிவு 5-11) இந்திய குடியுரிமை
பற்றியது.
பகுதி 3 (உட்பிரிவு 12-35) அடிப்படை உரிமைகள்/
அது மறுக்கப்படும் போது அதற்கான
தீர்வுகள்.
பகுதி 4 (உட்பிரிவு 36-51) அரசு
கொள்கைக்கான வழி காட்டும்
நெறிகள்.
பகுதி 4A ( உட்பிரிவு 51 A) அடிப்படை கடமைகள்.
பகுதி 5 (உட்பிரிவு 52- 151) மத்திய அரசமைப்பு
அதாவது குடியரசு தலைவர், துணைக் குடியரசு
தலைவர், நடுவண் அமைச்சரவை,
பாராளுமன்றம் மற்றும் அதன் அமைப்பு,
உச்ச நீதிமன்றம் மற்றும் அதன் அமைப்பு.
பகுதி 6( உட்பிரிவு 152-237) மாநில
அரசமைப்பு, கவர்னர், மாநில அமைச்சரவை.
மாநில சட்டமன்றம் / சட்ட மேலவை அதன்
அமைப்பு உயர் நீதி மன்றம் அதன் அமைப்பு.
பகுதி 7 (உட்பிரிவு 238) அரசமைப்பு சட்டம்
முதல் பட்டியலில் உள்ள மாநிலங்கள்
பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப்
பட்டுள்ளது.
பகுதி 8 (உட்பிரிவு 239 -242) ஒன்றியப்
பகுதிகள் குறித்து.
பகுதி 9 ( உட்பிரிவு 243) உள்ளாட்சி
நிர்வாகம் இந்த உட்பிரிவில்
குறிப்பிடப்பட்டுள்ளன.
பகுதி 9A ( உட்பிரிவு
243P-243Z,243ZA-243ZG) நகராட்சி
நிர்வாகம் இந்த உட்பிரிவில்
குறிப்பிடப்பட்டுள்ளன.
பகுதி 10 உட்பிரிவு 244) பட்டியல் சாதிகள்/
பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்தியர் ஆகியோர்
குறித்து.
பகுதி 11 (உட்பிரிவு 245-263) மத்திய மாநில
அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான
உறவு.
பகுதி 12 (உட்பிரிவு 264-300) அரசின் நிதி
குறித்த உட்பிரிவுகள் நிதி / நிதியினைக்
கையாளும் நெறிகள்.
பகுதி 13( உட்பிரிவு 301- 307) இந்திய
நாட்டில் வணிகம் செய்யும்
நடைமுறைக்கான உட்பிரிவுகள்.
பகுதி 14( உட்பிரிவு 308-323) அரசுப் பணிகள்
பகுதி 14A (உட்பிரிவு 323ஏ மற்றும் 323 பி)
மத்திய தீர்ப்பாயங்கள்.
பகுதி 15 (உட்பிரிவு 324-329) தேர்தல்கள்,
தேர்தல் ஆணையம்.
பகுதி 16 (உட்பிரிவு 330-342) - பகுதிவாரி
பெரும்பாண்மை சாதிகளுக்கான
உரிமைகள் பற்றி.
பகுதி 17 (உட்பிரிவு 343-351) அலுவல்
மொழி, வட்டார மொழி,
நீதி மன்றங்களில் மொழி.
பகுதி 18 (உட்பிரிவு 352-360) அவசர
நிலைக்கானது (எமெர்ஜென்சி)
பகுதி 19 (உட்பிரிவு 361-367) இதர (இதில்
குடியரசு தலைவர், கவர்னர் இந்தப்
பதவிக்கான சட்ட சிறப்பு பாதுகாப்பு
மற்றும் சில)
பகுதி 20 (உட்பிரிவு 368) இந்திய அரசமைப்புச்
சட்டம் திருத்தம் அதற்கான நடைமுறை.
பகுதி 21 (உட்பிரிவு 369-392) தற்காலிக,
இடைநிலை மற்றும் சிறப்பு ஒதுக்கீடுகள்
பகுதி 22 (உட்பிரிவு 392-395) குறுகிய தலைப்பு,
ஆரம்பம் தேதி, இந்தி மற்றும் ரிப்பீல்ஸில்
அதிகாரப்பூர்வ உரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக