சனி, 26 நவம்பர், 2016

புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோமறைந்தார் நவம்பர் 25, 2016.

புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோமறைந்தார் நவம்பர் 25, 2016.
பிடல் காஸ்ட்ரோ ( Fidel Alejandro Castro Ruz,
(எசுப்பானியம்: [fiˈðel ˈkastro] , ஆகஸ்ட்
13, 1926 - நவம்பர் 25, 2016) கூபாவைச்
சேர்ந்த பொதுவுடைமைப்
புரட்சியாளரும் பொதுவுடைமை
அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில்
1959 இல் புரட்சியை வழிநடத்தி
புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின்
அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர்
பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959
முதல் 1976 வரை கியூபாவின்
பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை
ஜனாதிபதியாகவும் பொறுப்பு
வகித்தார். கூபாவின்
பொதுவுடைமைக் கட்சியின் முதல்
செயலாளராக 1965 இல்
பதவியேற்ற இவர் கூபாவை ஒற்றைக் கட்சி
சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49
ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ
பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து
விலகினார். உலகத்தில் நீண்ட
காலத்துக்கு தலைமைப் பொறுப்பில்
இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. சர்வதேச
அளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983
வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி
சேரா இயக்கத்தின் பொதுச்
செயலாளராக இருந்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து 93 மைல்
தூரத்தில் இருந்தாலும் கியூபாவை ஒரு
சோசலிச நாடாகப் பேணிய பெருமை
இவரைச் சாரும். இதைவிட ருசியா -
அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில்
இவர் ருசியாவிற்குச் சாதகமாகப் பல
பணிகளைச் செய்தார்.
குழந்தைப் பருவமும்
கல்வியும்
1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான்
அருகில் ஒரு கரும்புத் தோட்டத்தில் பிடல்
அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ பிறந்தார்.
காஸ்ட்ரோவின் தந்தை ஏன்ஜல் காஸ்ட்ரோ
ஆவார். காஸ்ட்ரோ குடும்பம் மிகவும்
நடுத்தர குடும்பம் ஆகும். ஏன்ஜல் காஸ்ட்ரோ
ஒரு பண்ணையார் ஆவார். ஏன்ஜல் ரஸ்
காஸ்ட்ரோ ஸ்பெய்னில் இருந்து
கியூபாவுக்கு பிழைக்க வந்தார். அவர்
கியூபாவின் ஓரியன்ட் மாகாணத்தில்
குடியேறினார். ஏன்ஜல் காஸ்ட்ரோ
கடுமையாக உழைத்து ஒரு பண்ணையார்
ஆனார். அவரின் கீழ்
ஆயிரக்கணக்கான கியூபர்கள் வேலை
பார்த்தார்கள். 1940 ஏக்கர் நிலத்திற்கு
உரிமையாளர் ஆனார் ஏன்ஜல். பிடலின்
தாய் லினா, இவர் ஒரு க்யூப
பெண்மணி. ஏழை விவசாயின் மகள்.
இத்தம்பதிக்கு முதல் குழந்தையாக
காஸ்ட்ரோ பிறந்தார். மேலும் காஸ்ட்ரோ
பிறந்த பின்னரே இத்தம்பதியினர் திருமணம்
செய்து கொண்டிருந்தனர்.
அதனால் சிறுவன் காஸ்ட்ரோவிற்கு
அவனது பெற்றோரின் திருமணத்தை நேரில்
காணும் வாய்ப்பு கிடைத்தது. பிடல்
இயற்கையாகவே ஏழைகளின் மீது மிகுந்த
அன்பு கொண்டிருந்தார்.
கல்வி
1930 ல் கியூபாவில்
பொருளாதார நெருக்கடி
காரணமாக காஸ்ட்ரோ தமது ஐந்து
வயதில், சான்டியாகோ டி-க்யூபா
சென்றார். ஏஞ்சலின் குடும்ப நண்பர்
வீட்டிற்கு காஸ்ட்ரோவும் அவரது சகோதர
சகோதரிகளும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஏஞ்சலின் குடும்ப நண்பர் ஒரு ஆசிரியர்.
ஆனால் மிகவும் ஏழை. அதனால் ஏஞ்சல்
குழந்தைகளுக்கு அனுப்பும் பணத்தை அந்த
முழுக் குடும்பமும்
பகிர்ந்துக்கொண்டது. இதனால்
காஸ்ட்ரோவின் சகோதரிகள் அனைவரும் வீடு
திரும்பிவிட்டனர். ஆனால் காஸ்ட்ரோ மட்டும்
அங்கேயே தங்கி பள்ளிப் படிப்பை
தொடங்கினார். சான்டியாகோ
டி-கியூபாவில் லா சேல் எனும் பள்ளியில்
காஸ்ரோ படித்தார். பின் காஸ்ட்ரோ டோலோரஸ்
பள்ளியில் சேர்க்கப்பட்டார். 1941 ல்
காஸ்ட்ரோ பெலன் கல்லூரியில்
சேர்ந்தார். இங்கு படிக்கும்போதே
காஸ்ட்ரோவுக்கு கம்யூனிசம் எனும்
பெயர் தெரியவந்தது. 1945 -ல்
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது
காஸ்ட்ரோ உயர்கல்வியை முடித்திருந்தார்.
ஸ்பானிய உள்நாட்டுப் போரும் முடிவுக்கு
வந்தது.. காஸ்ட்ரோவிற்கு அப்போது கம்யூனிசம்
பற்றி எதுவும் தெரியாது. ஆனால்
அவர்களை எல்லோரும் ஒதுக்கிவைத்தார்கள்
என்பது மட்டும் அவருக்கு தெரியும்.
நாட்கள் செல்ல செல்ல
காஸ்ட்ரோவும் கம்யூனிசத்தை மறந்து போனார்.
பின் காஸ்ட்ரோ 1945 ல் ஹவானா
பல்கலைகழகத்தில் சட்டம் பயின்றார்.
இங்குதான் காஸ்ட்ரோ
கம்யூனிசவாதியாகப் பரிமாணம்
பெற்றார்.
முதல் அரசியல்
காஸ்ட்ரோ, ஹவானா பல்கலைகழகத்தில்
சேர்ந்த பிறகு சிறிது சிறிதாக அரசியலால்
ஈர்க்கப்பட்டார். கல்லூரி அரசியலில் பங்கு
கொண்டார். அப்போது இரண்டு
முக்கிய கட்சிகள் மாணவர்கள் மத்தியில்
இயங்கி கொண்டிருந்தன. ஒன்று
1925-இல் தொடங்கப்பட்ட
கம்யூனிஸ்ட் கட்சி, மற்றொன்று
ஜோஸ் மார்த்தியை மானசீக குருவாக
ஏற்றுக்கொண்ட ஆர்த்தோடாச்சோ
கட்சி. காஸ்ட்ரோ கம்யூனிஸ்டு கட்சியில்
இணைந்தார். முதல் வருடமே
பிரச்சாரத்திலெல்லாம் ஈடுபட்டு
வெற்றி பெற்றார்.
காஸ்ட்ரோவும் புரட்சியும்
கல்லூரியில் பயிலும்போதேகம்யூனிச கட்சிகளில்
சேர்ந்தார். போராட்டங்களும்
செய்தார். பேச்சுத் திறமையால் பிடல்
மக்களைக் கவர்ந்தார். 1952 ல்
அமெரிக்காவின் கைப்பாவையான
பாடிஸ்டா, கியூபாவின் ஆட்சியை
கைப்பற்றினார். அப்போது 'குற்றம்
சாட்டுகிறேன்' என்னும் பத்திரிக்கையை
துவங்கிய காஸ்ட்ரோ, பாடிஸ்டா அரசின்
தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தவும்,
புரட்சிக்கு மக்களை அணிதிரட்டவும்
செய்து கொண்டிருந்தார்.
காஸ்ட்ரோவின்
பிரச்சாரம்
காஸ்ட்ரோ முதன்முதலில் பிரச்சாரம்
செய்தது ஓரியண்ட் மாகாணத்தில்
ஆதன்டிக் கட்சி சார்பில் போட்டியிட்ட அவரின்
ஒன்று விட்ட சகோதரர் எமிலியோவிற்காக.
அப்போது காஸ்ட்ரோவின் வயது 14. பைரனில்
உள்ள அனைவரின் வீட்டிற்கும் சென்று
யார் யார் எந்த எந்த கட்சிகளின்
சார்பாக நிற்கிறார்கள், எப்படி
வாக்களிக்க வேண்டும் என்று விளக்குவது
பிடலின் பொறுப்பு. வெற்றி
பெற்றால் குதிரை வாங்கி தருவதாக
எமிலியோ கூறியிருந்ததால், அதற்காக
முனைப்பாகப் பிரச்சாரம் செய்து
அரபிய குதிரையையும் பெற்றார்.
கல்லூரியில் இறுதியாண்டு நடக்கும்
தேர்தலுக்கு பிடல் முதல் ஆண்டிலிருந்தே
கடுமையாக பிரச்சாரம் செய்தார்.
அத்தேர்தலில் வெற்றியும் கண்டார்.
முதல் தாக்குதல்
ஜுலை 26, 1953 ல் மொன்காடாத்
ராணுவமுகாமின் மீது தாக்குதல்
நடத்தத் திட்டமிட்டார் காஸ்ட்ரோ.
நன்றாக திட்டமிடப்பட்டிருந்தும்
பிடெலின் வண்டி கோளாறு
காரணமாகவும், இருட்டில் மற்ற வீரர்கள்
வழி தவறியதாலும் அந்த தாக்குதல்
தோல்வியை தழுவியது. காஸ்ட்ரோவும்
மாட்டிக்கொண்டார். 1953 ல்
காஸ்ட்ரோவின் வழக்கு நீதி விசாரணைக்கு
வந்தது. காஸ்ட்ரோ புரட்சிக்கு திட்டம் தீட்டியதை
ஒப்புக்கொண்டார். மேலும்
பாடிஸ்டாவின் அரசையும்
தோலுரித்துக்காட்டினார்;
அமெரிக்காவைக் கடுமையாக
சாடினார். நீதி மன்றத்தில் ஃபிடெல்
நிகழ்த்திய இந்த உரையே பின்னாளில்
'வரலாறு என்னை விடுதலை
செய்யும்' (THE HISTORY WILL ABSOLVE
ME) என்று வெளிவந்த நூலாகும். பின்
மே 15 1955 ல் காஸ்ட்ரோ விடுதலை
செய்யப்பட்டார். பின்னர்
மெக்சிகோ சென்ற காஸ்ட்ரோ
கொரில்லா முறை தாக்குதல்களைக்
கற்றுத் தேர்ந்தார்.
காஸ்ட்ரோவும் சேவும்
மெக்சிகோவில் காஸ்ட்ரோ இருக்கும்
போதுதான் அவருக்குத் தேச எல்லைகடந்த
மனிதநேயப் போராளியான சேகுவேரா
அறிமுகம் ஆனார். அவர் கியூப விடுதலைப்
போராட்டத்தில் தன்னையும் இணைத்துக்
கொண்டார். காஸ்ட்ரோவும்
சேகுவெராவும் க்ரான்மா எனும்
கள்ளத்தோணி மூலம் கியூபா வந்தடைந்தனர்.
அடர்த்தியான மரங்கள் நிறைந்த
சியார்ரா மேஸ்தாரவில்
தங்கியிருந்தபடியே கியூப விவசாயிகளையும்,
இளைஞர்களையும் புரட்சிக்கு
தயார்ப்படுத்தினார். பின் படிப்படியாக
முன்னேறி கியூபாவில் காஸ்ட்ரோ
தலைமையிலான சோசியலிச குடியரசை நிறுவினர்.
காஸ்ட்ரோவும்
அமெரிக்காவும்
காஸ்ட்ரோவின் ஆட்சியின்கீழ் கியூபா
வந்ததும் அமெரிக்கா அவரைத்
தன்வசம் இழுக்க முயற்சித்தது. ஆனால்
அதற்கு காஸ்ட்ரோ மறுத்து, 'கியூப வளங்கள்
கியூப மக்களுக்கே சொந்தம்' என்று
கூறிவிட்டார். அதனால் அமெரிக்கா
கியூபா மீது பொருளாதாரத்
தடையை விதித்தாலும் காஸ்ட்ரோ அதனைச்
சமாளித்தார். அமெரிக்கா தனது
சி.ஐ.ஏ அமைப்பின் மூலம் காஸ்ட்ரோவை 638
முறை கொல்லத் திட்டம் திட்டியும்
அதன் முயற்சிகள் பலிக்கவில்லை.
காஸ்ட்ரோவின்
ஆட்சியில் கியூபா
கியூபாவில் அனைவருக்கும் இலவசக்
கல்வியை காஸ்ட்ரோ அறிமுகப்படுத்தினார்.
1995 ஆம் ஆண்டின் யுனெஸ்கோ
ஆய்வின்படி கியூபாவில் படிப்பறிவு
சதவிகிதம் 96 ஆகும். மேலும் கியூபாவின்
தொழில் நுட்பத்துறையில்
பணிபுரிபவர்களில் 60 சதவிகிதத்தினர்
பெண்கள் ஆவர். மருத்துவ துறையிலும்
கியூபர்கள் சிறந்து விளங்கினர். மகப்பேற்றின்
போது தாய்மார்களின் இறப்பு விகிதம்
உலகிலேயே மிகக்குறைவாக
காஸ்ட்ரோவிற்குப் பின்
கியூபா
உணவு செரிமானமின்மையால்
பிடெல் 2008 ஆம் ஆண்டில்
பதவிவிலகினார். அவருக்கு பின் அவரின்
தமையன் ராவுல் காஸ்ட்ரோ அதிபராக
பதவியேற்றார்.
விருதுகள்
கன்பூசியஸ் அமைதி விருது , 2014
************************************
கியூபாவின் புரட்சியாளரும்,
அந்நாட்டின் முன்னாள்
அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ
உடல்நலக்குறைவு காரணமாக
வெள்ளிக்கிழமை இரவு
காலமானார். அவருக்கு வயது 90.
கியூபாவில் புரட்சி மூலம் ஆட்சியைப்
பிடித்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ.
அமெரிக்க ஆதிக்கத்தை கடுமையாக
எதிர்த்த தலைவர்களில்
குறிப்பிடத்தக்கவர். சோவியத் யூனியன்
பாணியில் கம்யூனிஸத்தை ஆதரித்தவர்
காஸ்ட்ரோ. புரட்சி மூலம் கியூபாவின்
ஆட்சியைப் பிடித்த காஸ்ட்ரோ, கடந்த
1959-ம் ஆண்டு முதல் 1976-ம் ஆண்டு
வரை பிரதமராக பதவி வகித்தார்.
அதன்பிறகு, 2008-ம் ஆண்டு வரை
கியூபா அதிபராக இருந்தார்.
சுமார் 49 ஆண்டுகள் கியூபாவை ஆட்சி
செய்தார். உலகிலேயே அதிக
ஆண்டுகள் ஆட்சி செய்த தலைவர்
என்ற பெருமையும் இவருக்குள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு பதவியில் இருந்து
விலகிய ஃபிடல் காஸ்ட்ரோ, தனது
தம்பி ரவுல் காஸ்ட்ரோவை கியூபா
அதிபராக்கினார். அதன்பின் அவரது
உடல்நிலை வயது பாதிக்கப்பட்டு தீவிர
சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு
அவர் காலமானார். இத்தகவலை
அதிபர் ரவுல் காஸ்ட்ரோ கியூபா
அரசு தொலைக்காட்சியில்
தழுதழுத்த குரலில் அறிவித்தார். ரவுல்
கூறும்போது, ‘‘வெள்ளிக்கிழமை
இரவு 10.29 மணிக்கு கியூபா தலைவர்
ஃபிடல் காஸ்ட்ரோ காலமாகி
விட்டார்’’ என்றார். கடந்த 2008-ம்
ஆண்டு முதல் 8 ஆண்டுகள் உடல்நலம்
குன்றியிருந்த ஃபிடல் காஸ்ட்ரோ
காலமானார்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக
கியூபாவின் அதிபராக பதவி வகித்த
பிடல் காஸ்ட்ரோ கடந்து வந்த பாதை
இதுதான்:
1926, ஆகஸ்ட் 13: கிழக்கு கியூபாவில்
உள்ள பிரனில் ஸ்பெயின்
நிலச்சுவாந்தாருக்கும், கியூபா
தாய்க்கும் 3-வது குழந்தையாக
பிறந்தார். பள்ளிப் பருவத்தில் சிறந்த
மாணவராக திகழ்ந்தார்.
1953, ஜூலை 26: கியூபாவின் ராணுவப்
படைகளுக்கு எதிராக பிடல் காஸ்ட்ரோ
தொடுத்த தாக்குதல்
தோல்வியில் முடிந்தது.
ஆதரவாளர்களுடன்,
காஸ்ட்ரோவும் கைது செய்யப்பட்டு
சிறையில் தள்ளப்பட்டார்.
1956, டிசம்பர் 2: மெக்ஸிகோவில்
இருந்து தப்பியதும் 81
போராளிகளுடன் கிரான்மா என்ற
கப்பல் மூலம் தென்கிழக்கு
கியூபாவுக்கு வந்தடைந்தார். பின்னர்
சியாரா மெஸ்டிரா மலைகளில்
இருந்தபடி 25 மாதங்கள்
ராணுவத்துக்கு எதிரான
பிரச்சாரத்தை தொடங்கினார்.
1959, ஜனவரி 1: ராணுவ
சர்வாதிகாரி பல்ஜெனிசியோ
படிஸ்டா நாட்டை விட்டு
தப்பியோடினார். பின்னர் ஜனவரி 8-
ம் தேதி காஸ்ட்ரோ வெற்றி
உற்சாகத்துடன் நாட்டுக்குள்
நுழைந்தார். பிப்ரவரியில் கியூபாவின்
பிரதமராக பதவியேற்றார்.
1959, ஏப்ரல் 15-27:
அமெரிக்காவில் அதிபர் ரிச்சர்டு
நிக்ஸனை சந்தித்தார்.
1960: சோவியத் யூனியனுடன்
ராஜாங்க ரீதியிலான உறவை
நிர்மாணித்தார்.
1961: கியூபாவுடனான ராஜாங்க
உறவுகளை அமெரிக்கா முறித்துக்
கொண்டது.
1961, ஏப்ரல் 17-19: அமெரிக்க
ஆதரவுடன் பே ஆப் பிக்ஸ் பகுதியில்
நடந்த படையெடுப்பில்
எதிர்ப்பாளர்கள் 1,400 பேரை
விரட்டியடித்து வெற்றிப்
பெற்றார்.
1962, பிப்ரவரி 13: அமெரிக்க அதிபர்
ஜான் எப் கென்னடி
கியூபாவுக்கு எதிராக ஏற்றுமதி தடை
விதிக்கும் ஆணை பிறப்பித்தார்.
1962, அக்டோபர்: கியூபாவுக்கு
ஆதரவாக சோவியத் யூனியன்
ஏவுகணைகளை நிலைநிறுத்தியது. பின்னர்
கியூபா மீது படையெடுப்பு இல்லை
என்ற உத்தரவாதத்தை
அமெரிக்கா வழங்கியதும்,
ஏவுகணைகளை சோவியத் யூனியன்
வாபஸ் பெற்றது.
1963 ஏப்ரல்: முதல் முறையாக சோவியத்
யூனியன் சென்றார்
காஸ்ட்ரோ.
1965: கியூபா கம்யூனிச கட்சியை
நிறுவினார் காஸ்ட்ரோ.
1990: சோவியத் யூனியன் உடைந்ததால்
கியூபா மிகப் பெரிய
பொருளாதார
நெருக்கடியைச் சந்தித்தது.
1995: முதல்முறையாக சீனா
சென்றார் காஸ்ட்ரோ.
1998: கியூபாவுக்கு வந்த வாடிகன்
போப் ஜான் பாலை வரவேற்றார்
காஸ்ட்ரோ.
2003, மார்ச்: அரசுக்கு எதிரான
நடவடிக்கையில் ஈடுபட்ட எதிர்க்கட்சித்
தலைவர்கள் 75 பேரை கைது செய்வதற்கு
காஸ்ட்ரோ உத்தரவு பிறப்பித்தார்.
2006, ஜூலை 31: ஆபத்தான குடல் அறுவை
சிகிச்சை காரணமாக தனது பதவியை
சகோதரர் ரால் காஸ்ட்ரோவிடம்
தற்காலிகமாக ஒப்படைத்தார்
காஸ்ட்ரோ. அப்போது அவருக்கு
வயது 75.
2006, டிசம்பர் 3: உடல் நலக்குறைவு
காரணமாக தனது 80-வது பிறந்த
தினத்திலும், கிரான்மா கப்பல் மூலம்
கியூபா வந்தடைந்த 50-வது
ஆண்டுவிழாவில் பங்கேற்கவில்லை.
2008, பிப்ரவரி: கியூபாவின் அதிபராக
ரால் காஸ்ட்ரோ
நியமிக்கப்பட்டார்.
2014, டிசம்பர் 17: அமெரிக்க அதிபர்
ஒபாமா கியூபாவுக்கு வருகை தந்து
இரு நாட்டுக்கும் இடையே சமரச
பேச்சுவார்த்தை நடத்தினார்.
2016, நவம்பர் 25: 90 வயதில்
காஸ்ட்ரோ காலமானார்.
கியூபா கண்ணீரில் மூழ்கியது.

*********************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக