சனி, 8 ஏப்ரல், 2017

எழுத்தாளர் ஜெயகாந்தன் நினைவு தினம் ஏப்ரல் 08, 2015.




எழுத்தாளர் ஜெயகாந்தன் நினைவு தினம்  ஏப்ரல் 08, 2015.

ஜெயகாந்தன் ( ஏப்ரல் 24 , 1934 - ஏப்ரல் 08, 2015) சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம்
சிறுகதைகள் , புதினங்கள் , கட்டுரைகள்,
திரைப்படங்கள் என பரந்து இருக்கின்றது.
வாழ்க்கைக் குறிப்பு
ஜெயகாந்தன் 1934-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் என்ற ஊரில், ஒரு வேளாண் குடும்பத்தில் தண்டபாணிப் பிள்ளை,மகாலெட்சுமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார்  . பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லாமையால், ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். உலகியல் அனுபவம் பெறவேண்டி, வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் சென்றார். அங்கு, அவர் மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். அவர் ஜெயகாந்தனைப் பொதுவுடைமைக் கோட்பாடுகளுக்கும் பாரதியின் எழுத்துக்களுக்கும் அறிமுகப்படுத்தினார்.
ஜெயகாந்தன் சில ஆண்டுகள் விழுப்புரத்தில் வாழ்ந்த பின் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அங்கு பெரும்பாலான நேரத்தை சி.பி.ஐ -யின் ஜனசக்தி அலுவலக அச்சகத்தில் பணிபுரிந்தும், ஜனசக்தி இதழ்கள் விற்றும் கழித்தார். 1949-ஆம் ஆண்டு சி. பி. ஐ மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் தடை போடப் பட்டது. ஆதலால் சில திங்கள்கள், தஞ்சையில் காலணிகள் விற்கும் கடை ஒன்றில் பணிபுரிந்தார். இந்த எதிர்பாராத இடைவேளை அவர் வாழ்க்கையில் முதன்மையான காலகட்டமாக அமைந்தது. அவர் சிந்திக்கவும் எழுதவும் அப்பொழுது நேரம் கிடைத்தது. இக்கால கட்டத்தில், தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் மாற்றங்களும் நேர்ந்தன. தி.மு.க மற்றும் தி.க -வின் வளர்ச்சியால், சி.பி.ஐ மெதுவாக மறையத் துவங்கியது. உட்கட்சிப் பூசல்களினாலும், கட்சியுடன ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினாலும், ஜெயகாந்தன் சி.பி.ஐ-யிலிருந்து விலகினார். பின்னர் காமராசருடைய தீவிரத் தொண்டனாக மாறி, தமிழகக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
அவரது இலக்கிய வாழ்க்கை 1950களில் தொடங்கியது - சரஸ்வதி , தாமரை , கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின. படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப் பெற்றார். ஜெயகாந்தன் சில ஆண்டுகள், தமிழ்த் திரையுலகிலும் வலம் வந்தார். இவரது நாவல்களான " உன்னைப் போல் ஒருவன் " மற்றும் "சில நேரங்களில் சில மனிதர்கள் " ஆகியவை படமாக்கப்பட்டன. இதில் "உன்னைப் போல் ஒருவன்" சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதைப் பெற்றது. மேலும், அவருக்கும் ஒரு நடிகைக்கும் ஏற்பட்ட உறவே "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" என்ற புதினமாக உருப் பெற்றது.
ரயிலில் டிக்கெட்இல்லாத பயணியாகப் புறப்பட்டு வந்த ஜெயகாந்தன் பார்த்த உத்தியோகங்கள்... மளிகைக் கடைப் பையன், டாக்டரிடம் பை தூக்கும் வேலை, மாவு மெஷின் கூலி, தியேட்டரில் பாட்டுப் புத்தகம் விற்றது, டிரெடில் மேன், அச்சுக் கோப்பாளர், பவுண்டரியில் இன்ஜின் கரி அள்ளிப்போட்டது, இங்க் ஃபேக்டரியில் கை வண்டி இழுத்தது, ஜட்கா வண்டிக்காரரிடம் உதவியாளர்,
பத்திரிகை புரூஃப் ரீடர்,உதவி ஆசிரியர் . பின் முழு நேர எழுத்தாளர்!

படைப்புகள்
தன் வரலாறு

ஒர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் (அக்டோபர் 1974 )
ஒர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் (செப்டம்பர் 1980 )
ஓர் இலக்கியவாதியின் பத்திரிகை அனுபவங்கள் (டிசம்பர் 2009)
ஓர் இலக்கியவாதியின் ஆன்மீக அனுபவங்கள்.

வாழ்க்கை வரலாறு

வாழ்விக்க வந்த காந்தி 1973 ( ரொமெயின் ரொலேண்ட்டின் ஃப்ரெஞ்சு மொழியில் வந்த காந்தியின் தன்வரலாற்றின் தமிழாக்கம் )
ஒரு கதாசிரியனின் கதை (மே 1989 (
முன்ஷி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு)
நாவல்கள் மற்றும் குறுநாவல்கள்
வாழ்க்கை அழைக்கிறது (ஆகஸ்ட் 1957)
கைவிலங்கு (ஜனவரி 1961)
யாருக்காக அழுதான்? (பெப்ரவரி 1962)
பிரம்ம உபதேசம் (மே 1963)
பிரியாலயம் (ஆகஸ்ட் 1965)
கருணையினால் அல்ல (நவம்பர் 1965 )
பாரீசுக்குப் போ! (டிசம்பர் 1966)
கோகிலா என்ன செய்துவிட்டாள்? (நவம்பர் 1967)
சில நேரங்களில் சில மனிதர்கள் (ஜூன் 1970)
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (ஜனவரி 1971)
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (ஏப்ரல் 1973)
ஜெய ஜெய சங்கர... (செப்டம்பர் 1977)
கங்கை எங்கே போகிறாள் (டிசம்பர் 1978)
ஒரு குடும்பத்தில் நடக்கிறது... (ஜனவரி 1979)
பாவம், இவள் ஒரு பாப்பாத்தி ! (மார்ச் 1979)
எங்கெங்கு காணினும்... (மே 1979)
ஊருக்கு நூறு பேர் (ஜூன் 1979)
கரிக்கோடுகள் (ஜூலை 1979)
மூங்கில் காட்டினுள்ளே (செப்டம்பர் 1979)
ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும் (டிசம்பர் 1979)
ஒவ்வொரு கூரைக்கும் கீழே... (ஜனவரி 1980)
பாட்டிமார்களும் பேத்திமார்களும் (ஏப்ரல் 1980)
அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் (ஆகஸ்ட் 1980)
இந்த நேரத்தில் இவள்... (1980)
காத்திருக்கா ஒருத்தி (செப்டம்பர் 1980)
காரு (ஏப்ரல் 1981)
ஆயுத பூசை (மார்ச் 1982)
சுந்தர காண்டம் (செப்டம்பர் 1982)
ஈஸ்வர அல்லா தேரே நாம் (ஜனவரி 1983)
ஓ, அமெரிக்கா! (பெப்ரவரி 1983)
இல்லாதவர்கள் (பெப்ரவரி 1983)
இதய ராணிகளும் ஸ்பெடு ராஜாக்களும் (ஜூலை 1983)
காற்று வெளியினிலே... (ஏப்ரல் 1984)
கழுத்தில் விழுந்த மாலை (செப்டம்பர் 1984)
அந்த அக்காவினைத்தேடி... (அக்டோபர் 1985)
இன்னும் ஒரு பெண்ணின் கதை (ஜூலை 1986)
ரிஷிமூலம் (செப்டம்பர் 1965)
சினிமாவுக்குப் போன சித்தாளு (செப்டம்பர் 1972)
உன்னைப் போல் ஒருவன்
ஹர ஹர சங்கர (2005)
கண்ணன் (2011)

சிறுகதைகள் தொகுப்பு

ஒரு பிடி சோறு (செப்டம்பர் 1958)
இனிப்பும் கரிப்பும் (ஆகஸ்ட் 1960)
தேவன் வருவாரா (1961)
மாலை மயக்கம் (ஜனவரி 1962)
யுகசந்தி (அக்டோபர் 1963)
உண்மை சுடும் (செப்டம்பர் 1964)
புதிய வார்ப்புகள் (ஏப்ரல் 1965)
சுயதரிசனம் (ஏப்ரல் 1967)
இறந்த காலங்கள் (பெப்ரவரி 1969)
குருபீடம் (அக்டோபர் 1971)
சக்கரம் நிற்பதில்லை (பெப்ரவரி 1975)
புகை நடுவினிலே... (டிசம்பர் 1990)
சுமைதாங்கி
பொம்மை

ஜெயகாந்தனின் சிறுகதைப்பட்டியல்
(கால முறைப்படி)
வ.எண் கதையின் பெயர் வெளியா காலம்
1 ஆணும் பெண்னும் -/-/1953
2 பட்டணத்து வீதியிலே -/-/1953
3 பேசும் புழுக்கள் 15/9/1953
4 காலம் தோற்றது -/12/1953
5 சாந்தி பூமி -
6 சுமை பேதம் -
7 கண்ணன் பிறந்தான் -
8 உதயம் -
9 பிழைப்பு -
10 மீனாட்சி ராஜ்யம் -
11 காந்தி ராஜ்யம் -
12 சொக்குப்பொடி 16/05/1954
13 சட்டம் வந்த நள்ளிரவில் 23/05/1954
14 மரணவாயில் 30/05/1954
15 சாந்தி சாகரம் 13/06/1954
16 எச்சரிக்கை 20,27/06/1954
17 தத்துவச் சொறி 04/07/1954
18 இவர்களும் இருக்கிறார்கள் 11,18/07/1954
19 இலட்சியச் சிலுவை -/-/1954
20 யாசனம் -/05/1955
21 தேரைப்பழி -/06/1955
22 ஆலமரம் ----
23 பித்துக்குளி -/07/1955
24 பேதைப்பருவம் -/08/1955
25 தனிமனிதன் -/-/1955
26 பொறுக்கி -/-/1955
27 தமிழச்சி -/-/1955
28 சலிப்பு -/03/1956
29 வேலைகொடுத்தவன் -/08/1956
30 பூ வாங்கலியோ பூ -/09/1956
31 தீபம் -/11/1956
32 தாம்பத்தியம் -/2/1957
33 திரஸ்காரம் -/3/1957
34 ரிக் ஷாகாரன் பாஷை -/4/1957
35 பெளருஷம் -/5/1957
36 சினம் எனும் தீ 6/6/1957
37 பால் பேதம் -/8/1957
38 எது, எப்போது -/09/1957
39 ஒருபிடி சோறு -/10/1957
40 ராசா வந்துட்டாரு -/11/1957
41 ஒரு பிரமுகர் -/12/1957
42 முச்சந்தி -/01/1958
43 தாலாட்டு -/03/1958
44 டிரெடில் -/04/1958
45 சாளரம் -/06/1958
46 கண்ணம்மா -/08/1958
47 நந்தவனத்தில் ஒரு ஆண்டி -/09/1958
48 பிணக்கு -/10/1958
49 போர்வை -/12/1958
50 யந்திரம் -/12/1958
51 பட்டணம் சிரிக்கிறது -/-/1958
52 அபாயம் -/-/1959
53 ஓவர்டைம் -/02/1959
54 பற்றுகோல் -/03/1959
55 தர்க்கம் -/04/1959
56 செக்சன் நம்பர் 54 -/07/1959
57 புகைச்சல் -/07/1959
58 இனிப்பும் கரிப்பும் -/07/1959
59 நிந்தாஸ்துதி -/09/1959
60 போன வருசம் பொங்கலப்போ -/10/1959
61 சர்வர் சீனு -/10/1959
62 ராஜா -/10/1959
63 கேவலம் ஓரு நாய் -/10/1959
64 உண்ணாவிரதம் -/11/1959
65 துறவு -/-/1959
66 நீ இன்னா சார் சொல்றே -/-/1959
67 இரண்டு குழந்தைகள் -/-/1959
68 குறைப்பிறவி -/-/1959
69 தேவன் வருவாரா -/-/1959
70 அன்புக்கு நன்றி 14/01/1960
71 சுய ரூபம் -/01/1960
72 வெளிச்சம் 07/04/1960
73 துர்க்கை 27/03/1960
74 சிலுவை -/05/1960
75 இதோ, ஒரு காதல் கதை 08/05/1960
76 சீட்டாட்டம் 17/07/1960
77 புதிய கதை -/-/1960
78 வாய்ச்சொற்கள் 14/08/1960
79 இது என்ன பெரிய விஷயம் 11/09/1960
80 பொம்மை 30/10/1960
81 தொத்தோ -/-/1960
82 உடன்கட்டை 11/12/1960
83 பத்தினிப் பரம்பரை -/12/1960
84 நிறங்கள் -/-/1960
85 உறங்குவது போலும் -/-/1960
86 மே--20 -/-/1960
87 மூக்கோணம் 09/01/1961
88 மூங்கில் 26/05/1961
89 கற்பு நிலை 21/05/1961
90 நான் இருக்கிறேன் 30/07/1961
91 என்னை நம்பாதே -/-/1961
92 தர்க்கத்திற்கு அப்பால் 5/11/1961
93 லவ் பண்ணூங்கோ ஸார் 17/12/1961
94 சோற்றுச்சுமை -/-/1961
95 மாலை மயக்கம் -/-/1962
96 சுமைதாங்கி -/-/1962
97 கருங்காலி 3/2/1962
98 அடல்ட்ஸ் ஒன்லி -/4/1962
99 மெளனம் ஒரு பாஷை -/5/1962
100 ஒரெ நண்பன் 10/06/1962
101 பிம்பம் -/-07/1962
102 முன்நிலவும் பின்பனியும் 26/08/1962
103 இல்லாதது எது 07/10/1962
104 பூ உதிரும் 16/12/1962
105 கிழக்கும் மேற்கும் 21/07/1963
106 தரக்குறைவு 16/06/1963
107 யுகசந்தி 21/07/1963
108 உண்மை சுடும் 22/09/1963
109 ஆளுகை 00/00/1963
110 பொய் வெல்லும் 10/11/1963
111 சாத்தானும் வேதம் ஓதட்டும் 29/12/1963
112 இருளைத் தேடி 08/03/1964
113 ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் 12/04/1964
114 எத்தனை கோணம் எத்தனை பார்வை 21/06/1964
115 ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில் 28/08/1964
116 விளக்கு எரிகிறது 09/11/1964
117 புதிய வார்ப்புகள் 14/03/1965
118 அந்தக் கோழைகள் 16/05/1965
119 சட்டை 03/10/1965
120 சுயதரிசனம் 00/00/1965
121 முற்றுகை 00/00/1965
122 இருளில் ஒரு துணை 14/08/1966
123 லட்சாதிபதிகள் 0/0/1966
124 அக்கினிப் பிரவேசம் 20/11/1968
125 பாவம் பக்தர்தானே! 03/05/1967
126
நான் ஜன்னலருகே உட்கார்ந்து இருக்கிறேன்
17/03/1968
127 அக்ரஹாரத்துப் பூனை 09/11/1968
128
நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ
19/01/1969
129 ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது 13/04/1969
130 தவறுகள் குற்றங்களல்ல 05/10/1969
131
டீக்கடை சாமியாரும் டிராக்டர் சாமியாரும்
07/11/1969
132 கண்ணாமூச்சி 0/0/1969
133 அந்த உயிரின் மரணம் 0/0/1969
134 அந்தரங்கம் புனிதமானது 0/0/1969
135 இறந்த காலங்கள் 0/0/1969
136 விதியும் விபத்தும் 0/0/1969
137 எங்கோ, யாரோ, யாருக்காகவோ 2,3/04/1970
138 குரு பீடம் 0/0/1970
139 நிக்கி 0/0/1970
140 புதுச் செருப்பு கடிக்கும் 02/05/1970
141 சீசர் 16/09/1971
142 அரைகுறைகள் 0/0/1971
143 சக்கரம் நிற்பதில்லை 15/11/1974
144 இந்த இடத்திலிருந்து 0/0/1975
145 குருக்கள் ஆத்து பையன் 0/0/1975

கட்டுரை
பாரதி பாடம்
இமயத்துக்கு அப்பால்
தொகுப்பு
ஜெயகாந்தன் பேட்டிகள் (கபிலன் பதிப்பகம்)
திரைப்படமாக்கப்பட்ட இவருடைய கதைகள்
சில நேரங்களில் சில மனிதர்கள் (இயக்குநர் : பீம்சிங் )
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (இயக்குநர் : பீம்சிங் )
ஊருக்கு நூறு பேர் (இயக்குநர் :
லெனின்)
உன்னைப் போல் ஒருவன்
யாருக்காக அழுதான்
புதுச்செருப்பு கடிக்கும்


விருதுகள்
1972 – சாஹித்ய அகாடமி விருது
2002 – இலக்கியத்திற்காக இந்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ‘ஞான பீட விருதைப்’ பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர்.
2009 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’, இலக்கியத்துறைக்காக முதல்முறை வென்றார்.
2011 – ரஷ்ய விருது
காலவரிசை
1934: தமிழ்நாட்டில் இருக்கும் கடலூரில் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி, 1934 ஆம் ஆண்டில் ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார்.
1950: அவரது இலக்கிய வாழ்க்கையை 1950களில் தொடங்கினார்.
2002: இலக்கியத்திற்காக இந்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ‘ஞான பீட விருதைப்’ பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர்.
2009: இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’, இலக்கியத்துறைக்காக முதல்முறை வென்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக