திங்கள், 10 ஏப்ரல், 2017

தமிழுக்கு ஏன் 60 வருடங்கள்? தமிழ் ஆண்டுகளின் கதை...



தமிழுக்கு ஏன் 60 வருடங்கள்? தமிழ் ஆண்டுகளின் கதை...

தமிழ் ஆண்டுகளின் கதை
60 ஆண்டுகள் எப்படி உருவாகின என்பதற்கு ஒரு அழகான புனைகதை முன்வைக்கப்படுகிறது. அந்தக் கதையின் சுருக்கம் இது:
ஒரு முறை நாரத முனிவர் மோகத்தால் தாக்கப்பட்டார். கிருஷ்ணனிடம் போய் அவருடைய 60 ஆயிரம் காதலிகளில் ஒருவரையாவது தனக்குத் தரக் கூடாதா என்று வேண்டியுள்ளார். “என்னைத் தன் மனதில் வைக்காத ஏதேனும் ஒரு பெண்ணை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார் அவர். அப்படிப்பட்ட பெண்ணைத் தேடிஅலைந்தும் நாரதரால் காண முடியவில்லை.அதனால் நாரதர் கிருஷ்ணனிடமே வந்து “நானும் ஒரு பெண்ணாகி உங்களோடு இருந்துவிடுகிறேன்” எனச் சொல்ல, கிருஷ்ணன் நாரதரை ஒரு பெண்ணாக மாற்றி, அவருடன் 60 வருடம் வாழ்ந்து 60 மகன்களைப் பெற்றார்.அவர்களில் ஒருவர்தான் இன்று புதிதாய் பிறக்கிற ‘மன்மத’ ஆண்டு.
சென்னையின் கிருஷ்ணாம்பேட்டையில் (!) வாழ்ந்த ஆ.சிங்காரவேலு முதலியார் (1855-1931) அபிதான சிந்தாமணி எனும் இலக்கிய கதைக்களஞ்சிய நூலை 1910-ல் வெளியிட்டார். அவரது மகன் 1934-ல் இரண்டாம் பதிப்பு வெளியிட்டபோது இந்தக் கதை சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழில் மட்டுமா 60?
இந்தக் கதை இருக்கட்டும். 60 ஆண்டுகள் வந்ததற்கு வரலாற்றுப் பின்புலமும் உண்டு.
60 ஆண்டுகள் காலண்டர் முறை என்பது காலத்தைப்பற்றிய மனிதஅறிவின் பரிணாம வளர்ச்சிப் பாதையில் ஒரு கட்டமே. உலகின் பல காலண்டர்களில் அது வெளிப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளின் காலண்டர்களிலும் வெளிப்பட்டுள்ளது.
உலக அளவில் 60
இன்றைய இராக் எனப்படுகிற நாட்டின் தென்பகுதியில் வாழ்ந்த சுமேரிய மக்களும் 60 வருடங்கள் கொண்ட ஒரு முறையை பயன்படுத்தியுள்ளனர். 12 மாதங்களையும் பயன்படுத்தியுள்ளனர்.அவர்களின் மாதங்களில் வாரங்களே கிடையாது. ஒரு நாளுக்கு 12 மணிநேரம் என்ற கணக்கும் அவர்களிடம் இருந்தது.
அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த மாயன் நாகரிக மக்கள் ஒரே நேரத்தில்இரண்டு காலண்டர்களைக் கையாண்டுள்ளனர். புனிதமான சடங்குகளுக்காக 260 நாட்கள் கொண்ட ஒரு புனித காலண்டரும் மற்ற விஷயங்களுக்காக 365 நாட்கள் கொண்ட ஒரு காலண்டரும் வைத்துள்ளனர்.
அதில் 20 நாட்கள் கொண்ட 18 மாதங்கள் இருந்துள்ளன. மாயன் மக்களின் வாழ்வில் இந்த இரண்டுகாலண்டர்களும் ஒன்றின் மீது இன்னொன்று ஏறிக்கொண்டு பயணம்செய்தன. (நம்ம ஊர் பஞ்சாங்கத்தையும் காலண்டரையும் போலத்தான்.) அவையும் 60 ஆண்டுகள் சுழற்சிமுறையைப் பயன்படுத்தியுள்ளன எனவும் தகவல்கள் உள்ளன.
சீனத்திலும் இந்த 60 வருட சுழற்சி முறை இன்னமும் புழக்கத்தில் உள்ளது.
இந்திய காலண்டர்
இந்தியத் துணைக்கண்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே, சூரியனை அடிப்படையாகக்கொண்டு 360 நாட்களும் 12 மாதங்களோடும் ஒரு காலண்டரும் கிருஷ்ணரை மையமாக வைத்தும் ஒரு காலண்டரும் இருந்துள்ளதாக தகவல்கள் உள்ளன. அதன்படி ஆங்கில வருடம் 2015 என்பது கிருஷ்ண வருடம் 5117 ஆக உள்ளது.
தமிழ் காலண்டர்
பழந்தமிழர் காலத்தைப் பெரும்பொழுது, சிறுபொழுது என இரண்டாகப்பிரித்தனர்.
ஒரு வருடத்தை இளவேனில் (சித்திரை, வைகாசி) முதுவேனில் (ஆனி, ஆடி), கார்(ஆவணி, புரட்டாதி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, )பின்பனி ( மாசி, பங்குனி) என்று ஆறாகப் பிரிப்பதுதான் பெரும் பொழுது.
ஒரு வருடத்தை இளவேனில் (சித்திரை, வைகாசி) முதுவேனில் (ஆனி, ஆடி), கார்(ஆவணி, புரட்டாதி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, )பின்பனி ( மாசி, பங்குனி) என்று ஆறாகப் பிரிப்பதுதான் பெரும் பொழுது.
ஒரு தினத்தை வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்று ஆறாகப் பிரிப்பதுதான் சிறுபொழுது.
ஒரு தினம் 60 நாழிகை கொண்டது என்றும் கணக்கிட்டனர். ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள். இன்றைய 24 மணிநேரம் கொண்ட ஒருநாள் இந்த கணக்குக்கு சரியாகப் பொருந்துகிறது.
தமிழில் நாட்களுக்கு ஞாயிறு என்று சூரியனின் பெயரும் கிரகங்களின் பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன.
நட்சத்திரங்களை முன்வைத்தும் பூமியின் சுழற்சியை அடிப்படையாக வைத்தும் உருவாக்கப்பட்டதாகத் தமிழ் காலண்டர் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஏப்ரல் 14 அன்று புத்தாண்டு தொடங்குவது என்பது தமிழில் மட்டும் அல்ல. அஸ்ஸாம், வங்காளம், கேரளம் பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் ஏப்ரல் 14தான் புத்தாண்டு.
இந்தியாவுக்கு வெளியிலும் பர்மா,கம்போடியா, லாவோஸ், நேபாளம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இந்தத் தேதிதான் புத்தாண்டு.
பழமையான வான சாஸ்திரமான சூரிய சித்தாந்தம் எனும் சமஸ்கிருத நூலில் நட்சத்திரங்களின் சுற்றுப்பாதையின் காலமாக 60 வருடங்கள் கணிக்கப்பட்டுள்ளன. அதில்தான் இன்று நாம் கடைப்பிடிக்கிற தமிழ் வருடங்களின் பெயர்ப் பட்டியல் முதலில் காணப்பட்டுள்ளது.
60 வருடச் சுற்று
60 வருடங்கள் முடிந்த பிறகு மீண்டும் முதல் ஆண்டில் இருந்து மறுபடி தொடங்கினாலும் இந்த ‘ஒரு 60 வருட சுற்று’ என்பது தற்போதைய ‘ஒரு நூறாண்டு’ எனும் சுற்றுக்கு சமமானது.
‘60 ஆண்டுகள் கணிப்பு’ என்பதை பூமியோடு தொடர்புடையதாக மற்ற கிரகங்கள் வானத்தில் இருக்கிற நிலையோடு தொடர்புபடுத்தி நமது முன்னோர்கள் கணித்துள்ளனர். சூரியனை ஒரு முறை சுற்றுவதற்கு 30 வருடங்களை எடுத்துக்கொள்கிற சனிக் கிரகமும் 12 வருடங்களை எடுத்துக்கொள்கிற வியாழன் கிரகமும் 60 வருடங்களுக்கு ஒரு முறை குறிப்பிட்ட ஒரே நிலைக்கு வருவதை இந்த 60 ஆண்டுகள் சுழற்சி முறை குறிக்கிறது.
‘60 ஆண்டுகள் கணிப்பு’ என்பதை பூமியோடு தொடர்புடையதாக மற்ற கிரகங்கள் வானத்தில் இருக்கிற நிலையோடு தொடர்புபடுத்தி நமது முன்னோர்கள் கணித்துள்ளனர். சூரியனை ஒரு முறை சுற்றுவதற்கு 30 வருடங்களை எடுத்துக்கொள்கிற சனிக் கிரகமும் 12 வருடங்களை எடுத்துக்கொள்கிற வியாழன் கிரகமும் 60 வருடங்களுக்கு ஒரு முறை குறிப்பிட்ட ஒரே நிலைக்கு வருவதை இந்த 60 ஆண்டுகள் சுழற்சி முறை குறிக்கிறது.
தொடர் ஆண்டு முறை
இந்தப் பழைமையான ‘60 ஆண்டுகள் சுழற்சி முறை’ காலப்போக்கில் மாறிவிட்டது. புத்தர் பிறந்தநாளிலிருந்து புத்த சமயத்தவரும், மகாவீரரை வைத்து சமணர்களும் தொடர் ஆண்டு முறையை பின்பற்றுகிறார்கள். மலையாளிகள், வங்காளிகள், உள்ளிட்டோரும் தொடர் ஆண்டுமுறைக்கு மாறியுள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே தமிழகத்திலும் தொடர் ஆண்டு தேவை எனும் கோரிக்கை எழுந்தது.
பேரரசரின் பிறப்பு, அரசர்கள் முடி சூட்டிக்கொண்ட ஆட்சியின் தொடக்கம், ஒரு தலை நகரின் தோற்றம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு தொடர்ஆண்டுமுறையை பழங் காலத்தில் தமிழர்கள் கடைப்பிடித்து வந்தனர்.சங்க இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள் மூலம் கிடைக்கிற விவரங்கள் இதைத் தெரிவிக்கின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.
தமிழ், தமிழ்நாடு தொடர்பான வரலாற்று நிகழ்வுகளை பொதுவான ஒரு ஆண்டுக் கணக்கில் குறித்து வைத்து வரலாற்றைப் பாதுகாக்கத் தமிழர்கள் முயலவில்லை. இந்த மனநிலைக்கு சுழற்சி முறையிலான 60 ஆண்டுகள் முறையே காரணம் என என்ற விமர்சனமும் உள்ளது.
திருவள்ளுவர் ஆண்டு முறை
அதனால்தான், யேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31ஆண்டுகள் முன்பு பிறந்தவர் திருவள்ளுவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் 1921 ல் தமிழ் அறிஞர்கள் முடிவு செய்தார்கள். இந்தத் திருவள்ளுவர் ஆண்டு முறையைத் தமிழ்நாடு அரசு 1971முதல் பின்பற்றிவருகிறது.
சீனாவின் காலண்டரும் 60 ஆண்டுகள் முறையை கடைப்பிடித்தாலும் அங்கே தங்களின் பழங்கால வரலாற்றை தொகுப்பதற்கான வழிமுறைகள் காணப்பட்டு தற்கால காலக் கணக்கோடு பொருத்தியிருப்பதாக தெரிகிறது. உண்மையிலேயே பழைய வரலாற்றை விஞ்ஞானரீதியாகத் தொகுப்பதுதான் நோக்கம் என்றால் அதற்கான வழிகள் பிறக்கவே செய்யும்.




இந்துகளின் ஆண்டுமுறை என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தெற்காசிய நாடுகளில் உள்ள இந்து மக்களும், சில நேரங்களில் பிற மக்களும் பின்பற்றும் நாட்காட்டி முறையாகும். இதில் பல்வேறு மொழியினரும் உள்ளடங்குவர்.
தமிழர்களில் பெரும்பாலான மக்கள் இந்த ஆண்டுமுறைகளையே பின்பற்றினாலும், அவை தமிழ்ப் பெயர்களில் இல்லாத நிலையில் அவை எந்த வகையிலும் பயனுள்ளதாக இருந்ததில்லை.
பெரும்பாலான சோதிடர்கள் சாதகங்கள் குறிப்பதற்கும் நாள் குறிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். 60 ஆண்டுகள் ஒரு வட்டமாகக் கருதப்படுகிறது. தமிழ் நாட்டில் உள்ள சில இந்துகளும், பிற சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்களும் பெரும்பாலும் ஆண்டுமுறையைப் பற்றி பெரிதும் கருதுவது கிடையாது; மாதங்கள், தேதிகள், கிழமைகள், அமாவாசை, பெளர்ணமி, அஷ்டமி, நவமி போன்றவற்றை கருத்தில் கொள்வர்.
தமிழ்ப்புத்தாண்டு போன்ற பல விழாக்கள் இந்த தமிழ் ஆண்டுகளின் அடிப்படையில் அமைவனவே. இந்துகளால் பரவலாகக் கொண்டாடப்படும் சஷ்டியப்தப் பூர்த்தி எனும் அறுபதாம் ஆண்டுக்கொண்டாட்டங்களும் இந்த ஆண்டின் அடிப்படையில் அமையும் ஒன்று.
பல பழைமையான தமிழ் நூல்களும், கல்வெட்டுகளும் இந்த தமிழ் ஆண்டுகளையே குறிப்பிடுகின்றன.
அபிதான சிந்தாமணியில் (1932) தமிழ் ஆண்டுகள் என்று கூறப்பட்ட ஆண்டுகள் பெயர்கள் வருமாறு :
உத்தம ஆண்டுகள்
பிரபவ
விபவ
சுக்கில
பிரமோதூத
பிரசோத்பத்தி
ஆங்கீரச
சிறிமுக
பவ
யுவ
தாது
ஈசுவர
வெகுதானிய
பிரமாதி
விக்ரம
விச
சித்திரபானு
சுபானு
தாரண
பார்த்திப
விய
மத்திம ஆண்டுகள்
சர்வசித்த
சர்வதாரி
விரோதி
விகிர்தி
கர
நந்தன
விசய
சய
மன்மத
துன்முகி
ஏவிளம்பி
விளம்பி
விகாரி
சார்வரி
பிலவ
சுபகிருது
சோபகிருது
குரோதி
விசுவாவசு
பராபவ
அதம ஆண்டுகள்
பிலவங்க
கீலக
சவுமிய
சாதாரண
விரோதி கிருது
பரிதாபி
பிரமாதீச
ஆனந்த, இராகூச
நள
பீங்கள
காளயுக்தி
சித்தார்த்தி
ரவுத்ரி
துன்மதி
துந்துபி
உருத்ரோத்காரி
இரத்தாகூசி
குரோதன்
அகூய
60 ஆண்டுகளின் பெயர் பட்டியல்
தமிழ் ஆண்டுகள் அறுபதாக பிரிக்கப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் இப்பெயர்கள் ஆண்டுகளுக்கு இடப்படுகின்றன. இவற்றில் தமிழ்ப் பெயர்கள் தனியாக குறிப்பிடப்பட்டுள்ளவை முன்பு குறிப்பிடப்பட்ட ஆண்டுப்பெயர்கள் தமிழில் இல்லாத காரணத்தினால் தமிழ் ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டதாகும். அறுபது தமிழ் ஆண்டுப்பெயர்களை முதல் முதலில் வெளியிட்டவர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் ஆவார். தெய்வமுரசு என்னும் ஆன்மிக மாத இதழின் ஆசிரியராக 2009 ஆம் ஆண்டில் அவர் இப்பணியைச் செய்தார். எனினும் இவை எந்த அளவிற்கு மக்களால் ஏற்று கொள்ளப்படுகிறது என்பது தெரியவில்லை. இது பற்றி அறிஞர்களிடம் பல்வேறு விவாதங்கள் நடத்தேறியும், தமிழர்கள் இவ்வாண்டுமுறைகளை தொடர்ந்து பின்பற்றுவார்களா என்பதும், இல்லை திருவள்ளுவர் ஆண்டுமுறையை பின்பற்றுவார்களா என்பதும் தெரியவில்லை. தமிழகத்தில் ஆட்சி மாறும் பொழுது ஆண்டுமுறைகளும் மாற்றபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எண். பெயர் பெயர் (தமிழில்) பெ (ஆ
01. பிரபவ நற்றோன்றல் Prab
02. விபவ உயர்தோன்றல் Vibha
03. சுக்ல வெள்ளொளி Sukla
04. பிரமோதூத பேருவகை Pram
05. பிரசோற்பத்தி மக்கட்செல்வம் Prac
06. ஆங்கீரச அயல்முனி Aang
07. ஸ்ரீமுக திருமுகம் Srim
08. பவ தோற்றம் Bhav
09. யுவ இளமை Yuva
10. தாது மாழை Dhaa
11. ஈஸ்வர ஈச்சுரம் Eesv
12. வெகுதானிய கூலவளம் Bahu
13. பிரமாதி முன்மை Pram
14. விக்கிரம நேர்நிரல் Vikra
15. விஷு விளைபயன் Vishu
16. சித்திரபானு ஓவியக்கதிர் Chitr
17. சுபானு நற்கதிர் Subh
18. தாரண தாங்கெழில் Dhaa
19. பார்த்திப நிலவரையன் Paart
20. விய விரிமாண்பு Viya
21. சர்வசித்து
முற்றறிவு முழுவெற்றி
[6] Sarva
22. சர்வதாரி முழுநிறைவு Sarva
23. விரோதி தீர்பகை Virod
24. விக்ருதி வளமாற்றம் Vikru
25. கர செய்நேர்த்தி Kara
26. நந்தன நற்குழவி Nand
27. விஜய உயர்வாகை Vijay
28. ஜய வாகை Jaya
29. மன்மத காதன்மை Man
30. துன்முகி வெம்முகம் Dhun
ஆண்டின் தமிழ்ப் பெயர் ஆட்சி
மேலே 60 ஆண்டுகளின் பெயருக்கு இணையான தமிழ்ச்சொற்கள் தரப்பட்டுள்ளன. இந்தத் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்திப் பாடப்பட்ட பாடல் ஒன்று
விவேக சிந்தாமணி நூலில் உள்ளது.
ஒருநான்கும் ஈரரையும் என்றே கேளாய் உண்மையாய் ஐயரையும் அரையுங் கேட்டேன்
இருநான்கு மூன்றுடனே ஒன்றும் சொல்லாய் இம்மொழியைக் கேட்டபடி ஈந்தாய் ஆயின்
பெருநான்கும் அறுநான்கும் பெறுவாய் பெண்ணே பின்னையோர் மொழிபுகல வேண்டாம் இன்றே
சரிநான்கும் பத்துமொரு பதினைந் தாலே சகிக்கமுடி யாதினியென் சகியே மானே. (18)
ஒருநான்கும் ஈரரையும் – நான்கும் இரண்டும் ஆறு – ஆறாவது ஓரை கன்னி – கன்னியே நான் அரையும் சொல்லை நீ கேளாய்
உண்மையாய் ஐயரையும் சொல்வனவற்றையும் கேட்டேன்.
இருநான்கு மூன்று – 2 * 4 * 3 = 24 – 24 ஆவது தமிழாண்டு விக்ருதி – இதன் தமிழ்ப்பெயர் வளமாற்றம். - நீ எனக்கு வளமான மாற்றம் (விடை) தரவில்லை.
என் மொழியைக் கேட்டபடி உன்னை எனக்குக் கொடுத்தால் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் பெருநான்கு பேறும் பெறுவாய். உன்னிடம் அறுந்து கிடக்கும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நான்கும் பெறுவாய்.
பெண்ணே!
பின்னை மேலும் ஒரு மொழி புகலவேண்டாம்.
இன்றே உன்னைத் தருக.
சரியாக நான்கு – நான்காவது தமிழாண்டு பிரமோதூத – இதன் தமிழ்ப்பெயர் பேருவகை
பத்து – பத்தாவது தமிழாண்டு தாது – இதன் தமிழ்ப்பெயர் மாழை – மாழை = தங்கம்
பதினைந்து – பதினைந்தாவது தமிழாண்டு விசு – இதன் தமிழ்ப்பெயர் விளைபயன்.
தங்கமே பேருவகையோடு விளையும் பயனைக் காண்.
சகியே (காதல் கனியே) என் ஆசையை இனிமேல் சகித்துக்கொள்ள முடியாது.
காதலன் காதலியிடம் இவ்வாறு உரையாடுகிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக