திங்கள், 3 ஏப்ரல், 2017


புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி  பிறந்த நாள் ஏப்ரல் 3.

கிருஷ்ணசாமி ( K. Krishnasamy ) பழைய கோயமுத்தூர் மாவட்டம், இன்றைய திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுக்கா, குடிமங்கலம், மசக்கவுண்டர் புதூர் எனும் சிற்றூரில் ஒரு நடுத்தர குடும்பத்தில்1952-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 04-ஆம் நாள் பிறந்தார். தந்தை கருப்புசாமி ஒரு விவசாயி. தாய் தாமரையம்மாள்  ஒரு இல்லத்தரசி. உயர்நிலை பள்ளிப்படிப்பினை பூளவாடி என்ற ஊரிலும், புகுமுக வகுப்பினை அரசினர் கலைக்கல்லூரியிலும் முடித்தார் பின்னர் கோயமுத்தூர் வேளாண்மைக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை கழகத்தில் வேளாண் படிப்பில்சேர்ந்தார். அங்கே 45-நாட்கள் மட்டுமே கல்வி பயின்றார். வேளாண்மைப் பல்கலைக் கழக துணை முதன்மையர் முனைவர் தானியல் சுந்தராசு அறிவுறுத்தலின்படி வேளாண்மை கல்வியை தொடராமல் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்து திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் (1972–75) இளநிலை மருத்துவ பட்டப்படிப்பில் சேர்ந்தார். அங்கே இரண்டு ஆண்டுகள் மட்டுமே பயின்று, கல்லூரி இடமாறுதல் அனுமதி பெற்று மதுரை மருத்துவக் கல்லூரியில் (1975–78) மூன்றாம் ஆண்டு துவங்கி பயிற்சி மருத்துவர் பணி வரை இங்கேயே மருத்துவ கல்வி கற்றார். முதுநிலை மருத்துவத்தை கோயமுத்தூர் மருத்துவக் கல்லூரியில் (1982–84) முடித்தார் .

அரசியல் வாழ்க்கை

கிருஷ்ணசாமி ஒரு தமிழக அரசியல்வாதி, இவர் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் ஆவார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியன்குளம் என்கிற ஊரில் சாதிய வன்முறை ஏற்பட்டபோது, கோயம்புத்தூரில் இருந்து வந்து பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்காக வாதாடியவர் . மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தொழிலாளர் விடுதலை மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி 23. சூலை 1999 அன்று திருநெல்வேலி மாநகரில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. அப்பொழுது காவல்துறை நடத்திய தடியடி, துப்பாக்கிச்சூடு காரணமாக சிதறி ஓடிய மக்கள், தப்பிக்க தாமிரபரணி நதிக்குள் குத்தித்தனர். இந்த சம்பவத்தில் ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர்.
இவர் 1996தேர்தலில் கொடியன்குளத்தை உள்ளடக்கிய ஓட்டப்பிடாராம் சட்டமன்றத் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்  . பின்னர் இரண்டாவது முறையாக 2011ஆம் ஆண்டு நடந்த
சட்டப்பேரவைத் தேர்தலில் , ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார். அதே போல் தென்காசி தொகுதியில் 5 முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை அடைந்துள்ளார் [19] . குல மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து இவரும் இவரது கட்சியும் செயலாற்றி வருகின்றன.

போராட்டங்கள்
விழுப்புரம் 12 தாழ்த்தப்பட்டவர்கள் படுகொலை, அதன் தொடர்ச்சியாக 22. சனவரி 1984 அன்று கைது செய்து மதுரை சிறையில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக