திங்கள், 10 ஏப்ரல், 2017

சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம்



சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம்

சித்திரை மாதப் பிறப்பை ‘ சைத்ர விஷூ புண்ணிய காலம் ’ என்பார்கள் . ராசி மண்டலத்தில் முதல் ராசியான மேஷத்தில் சூரியன் பிரவேசிப்பது , சித்திரை முதல் நாள் ; சூரியன் மேஷத்தில் சஞ்சரிக்கும் காலம் சித்திரை . பல்குண- சைத்ர மாதமாகிய சித்திரையை ‘ வசந்த ருது’ என்பார்கள் .
சித்திரை முதல் நாளில் , திறந்தவெளியில் சூரியக் கடவுளுக்கு பூஜைகள் செய்வர் . பிரம்மன் உலகைப் படைத்தது சித்திரை முதல்நாளில் என்கின்றன சில ஞான நூல்கள்.
சித்திரை முதல் நாளன்று பஞ்சாங்கம் படிப்பது சிறப்பு . இந்த தினத்தில் வீடுகளில் மட்டுமல்ல , கோயில்களிலும் பஞ்சாங்கம் படிப்பார்கள் . இந்த வைபவத்துக்கு ‘ பஞ்சாங்க படனம்’ என்று பெயர். திதி , வாரம், நட்சத்திரம் , யோகம் , கரணம் ஆகிய ஐந்து அங்கங்களைக் கொண்டது பஞ்சாங்கம் .
ஒவ்வொரு நாளும் பஞ்சாங்கம் பார்த்து அன்றைய நாளின் திதியை அறிவதால் திருமகள் அருள் கிட்டும் ; நட்சத்திரத்தை அறிவதால் வினைகள் தீரும்; அனுதினமும் அன்றைய யோகம் என்ன என்பதை அறிவதால் நோயற்ற வாழ்வு கிட்டும் ; கரணம் அறிவதால் காரிய ஸித்தி உண்டாகும் . அனுதினமும் கடைப்பிடிக்க வேண்டிய இந்தப் பழக்கத்தை , சித்திரை முதல் நாளே துவங்குவது விசேஷம் !
வருடப் பிறப்பன்று புதுப் பஞ்சாங்கத்தை பூஜையில் வைத்து , மாலை நேரத்தில் அதைப் படிக்கும் வழக்கமும் சில வீடுகளில் உண்டு . வீட்டிலுள்ள அனைவரும் கூடி அதைக் கேட்பார்கள்.

தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சித்திரை முதல் நாளை புனித தினமாகக் கொண்டாடுகின்ற னர் . கேரளத்தில் ‘ சித்திரை விஷு ’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது . பங்குனி மாதக் கடைசி நாள் இரவில், தங்க - வெள்ளி நாணயங்கள், ஆபரணங்கள், நவரத்தினங்கள் , பழ வகைகள் , காய் வகைகள் , புத்தாடை, முகம் பார்க்கும் கண்ணாடி , தேங்காய் ஆகியவற்றை பூஜையறையில் அழகாக அலங்கரித்து வைப்பர் . மறுநாள் அதிகாலையில் எழுந்ததும் , அந்த மங்கலப் பொருட்களைத்தான் முதலில் பார்ப்பார்கள் . இது ‘ விஷுக்கணி ’ ( விஷுக் காட்சி ) எனப்படுகிறது . பிறகு , கண்ணாடியில் முகம் பார்ப்பார்கள் . சிறியவர்கள் , பெரியவர் களுக்கு நமஸ்காரம் செய்வார்கள் . அவர்களைப் பெரியவர்கள் ஆசீர்வதிப்பார்கள் . அன்றைய தினம் வயதில் சிறியவர்களுக்கும் வீட்டுக்கு வருபவர்களுக்கும் பணம் பரிசளிக்கும் வழக்கம் உண்டு . இதை ‘ விஷுக் கைநீட்டம் ’ என்பர் .
தமிழகத்தில் , தமிழ்ப் புத்தாண்டு தினத்தில், வேப்பம்பூக்களைச் சேகரித்துப் பச்சடி செய்து சாப் பிடுவார்கள். கசப்பும் இனிமையும் கலந்தது வேப்பம்பூ பச்சடி . கசப்பும் இனிப்பும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்பதை இது உணர்த்துகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக