செவ்வாய், 2 மே, 2017

உலக ஆஸ்துமா தினம் ஆண்டு தோறும் மே மாதம் முதல் செவ்வாய்கிழமை.



உலக ஆஸ்துமா தினம்  ஆண்டு தோறும் மே மாதம் முதல் செவ்வாய்கிழமை.


உலகம் முழுவதும் ஆஸ்துமா தினம் ஆண்டு தோறும் மே மாதம் முதல் செவ்வாய்கிழமை (இன்று) கடைபிடிக்கப்படுகிறது. ஆஸ்துமா நோய்க்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். ஆஸ்துமா நோய் ஏற்படுவதால் மூச்சுக்குழலில் உள்ள சுவாச சிறுகுழல் சுருக்கம் ஏற்படுகிறது. நுரையீரலுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பதில்லை. இதனால், மூச்சு திணறல் உண்டாகிறது. இந்நோயினால் உலகம் முழுவதும் 30 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர். இந்தியாவில் சராசரியாக 10 முதல் 14 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதுகுறித்து அரசு பொது மருத்துவமனை ஆஸ்துமா துறை பேராசிரியர் முத்து செல்வக்குமார் மற்றும் டாக்டர் பி.ராஜகோபாலன் ஆகியோர் கூறியதாவது:
ஆஸ்துமா நோய் பரம்பரையாகவும் (மரபணு கோளாறு), சுற்றுச்சூழல் பாதிப்புகளால் ஏற்படுகிறது. பெரும்பாலும் சிகரெட் புகையினாலும், காற்று மாசுபாட்டினால் ஆஸ்துமா நோய் தாக்குகிறது. மேலும், மாறி வரும் வாழ்க்கை முறைகளான பாஸ்புட், உடலில் பவுடர் மற்றும் வாசனை திறவங்களை போடுவதால் ஆஸ்துமா ஏற்படுகிறது. ஆஸ்துமா நோயின் தன்மை மற்றும் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும். நோயினை முழுமையாக குணப்படுத்த முடியாது. சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் நீண்ட நாள் வாழலாம்.
இந்நோய்க்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் இறக்கின்றனர். கடந்த 10 ஆண்டில் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. ஆஸ்துமா நோய் நாட்டிற்கே பெரிய சவாலாக இருக்கிறது. பெரியவர்களை விட இளைஞர்கள் தான் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றுநோய்களால் (வைரஸ் கிருமிகள்) நுரையீரல் பாதிக்கப்படுகிறது. இதனாலும், சுற்றுச்சூழல் பாதிப்புகளாலும் குழந்தைகள் சுவாசிக்க மிகவும் கஷ்டப்படுகின்றனர். நெஞ்சிலே சளி தங்கி விடுகிறது. இதனால், குழந்தைகள் எளிதில் ஆஸ்துமா நோய்க்கு உள்ளாகின்றனர். மொத்த குழந்தைகள் எண்ணிக்கையில் 10 சதவீதம் குழந்தைகள் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காசநோயினால் பாதிக்கப்பட்டவர்களையும், சிகரெட் பழக்கம் உள்ளவர்களையும் ஆஸ்துமா எளிதில் தாக்கும். சிகரெட் பிடிப்பவர்கள் அருகில் இருந்தால், மூச்சு திணறல் ஏற்பட்டு ஆஸ்துமா நோய் தாக்க வாய்ப்புள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்டாயம் நுரையீரல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.




ஆஸ்துமா, மருத்துவ உலகின் தீண்டாமை நோய். இந்தியாவில், மூன்று கோடி பேர் உட்பட, உலகில், 30 கோடி பேர், இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மோனலிசாவின் மர்மமான புன்னகை போல், மருத்துவர்களும் புரிந்து கொள்ள முடியாத நோயாக, ஆஸ்துமா உள்ளது. இதற்கு, ஈளை நோய், ஈஸ்னோபிளியா, அல்லுமாந்தம், வீசி பிரான்கைடிஸ் போன்ற பல பெயர்கள் உள்ளன.
அறிகுறிகள் என்ன?
ஆஸ்துமா, நம் மூச்சுக்குழலின் உட்பகுதியில் வீக்கம், தசைச்சுருக்கம், அதிக சளியை சுரக்கும் தன்மையும் ஏற்படுத்தும். சுவாசக்கோளாறு, தொடர் இருமல், மூச்சு இரைப்பு, மூச்சு விடும் போது விசில் சத்தம், மார்பில் இறுக்கம், சோர்வு போன்றவை தான், ஆஸ்துமா நோயின்
முக்கிய வெளிப்பாடுகள்.
சிறு குழந்தைகள், முதியவர்களுக்கு, இரவு, கடின உடற்பயிற்சி நேரம், சிரித்தல், பேசுதல் போன்ற செயல்களின் ஏற்படும் தொடர் இருமல், ஆஸ்துமாவின் வெளிப்பாடாக இருக்கலாம். இதை, ஆங்கிலத்தில், 'காப் வேகன்ட் ஆஸ்துமா'
என்பர். அலர்ஜி, மரபணு கோளாறுகளே, ஆஸ்துமாவிற்கு முக்கிய காரணங்கள்.
ஒவ்வாமை
* காற்று ஒவ்வாமை என்பது, சுவாசக் காற்றின் மூலம் வரும் ஒவ்வாமை, வாகனப்புகை, தொழிற்சாலைகளின் நச்சுப்புகை, கட்டுமானப்பணிகளில் வெளியேறும் துாசு, மரங்களின்
மகரந்தம், பலவிதமான வாசனைகள், துர்நாற்றங்கள், சிகரெட் புகை, கொசுவத்திகள், காற்றில் ஏற்படும் ஈரப்பத மாற்றங்கள், நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளின் அருகாமை உள்ளிட்டவற்றால் ஒவ்வாமை ஏற்படும்
* உணவு ஒவ்வாமை என்பது, பால், முட்டை, இறால், கருவாடு, நண்டு, கடலை, முந்திரி, பிஸ்தா போன்றவற்றால் ஏற்படலாம். செயற்கை வண்ணம், வாசனை, பதப்படுத்தும் வேதிப்பொருள் நிறைந்த துரித உணவு, 'ஜங்க் புட்' எனப்படும், உடல் எடையை அதிகரிக்கும் தின்பண்டங்களால் ஒவ்வாமை ஏற்பட லாம்
* தச்சர்கள், கட்டட பணியாளர்கள், வேதி தொழிற்சாலை ஊழியர்கள், பீடி சுற்றுவோர் உள்ளிட்டோருக்கு தொழில் ரீதியான
ஒவ்வாமை ஏற்படும்
* மரபணுக்கள் மூலம் தலைமுறை தலைமுறையாக தொடரக்கூடியது நோய் ஆஸ்துமா. அதனால், நெருக்கமான சொந்தத்தில், திருமணம் செய்து கொள்ள கூடாது. அதாவது, மரபணு பாதி, மாசுத்தன்மை பாதி; இரண்டும் கலந்த கலவை தான்
ஆஸ்துமா.
கண்டறிவது எப்படி?
கணினி மூலம், நுரையீரல் செயல் திறனை அறியும், 'ஸ்பைவோமெட்ரி - பி.எப்.டி.,' என்ற எளிய சோதனை மூலம் ஆஸ்துமாவின் தாக்கத்தை துல்லியமாக அறியலாம். 6 வயதுக்கு முன், இப்பரிசோதனை செய்வது கடினம். தொடர் இருமல், தொடர் சளி, நெஞ்சு சளி, தொடர் மூச்சுத்திணறல், மூச்சுவிடும் போது விசில் சத்தம், விலா எலும்புகளின் இடையே தசைகள் உள்நோக்கி போவது போன்ற வெளிப்பாடுகளை, தொடர்ந்தோ, விட்டுவிட்டோ குழந்தை
களிடம் கண்டால்,ஆஸ்துமா இருப்பதை அறியலாம். இப்பாதிப்புகள் உள்ள குழந்தைகளுக்கு, ஒவ்வாமை தரும் பல பாதிப்புகளும் சேர்ந்தே இருக்கலாம். மூக்கில் நீர் வடிவது, மூக்கு அடைப்பு, சைனஸ் பாதிப்பு, தோல் உலர்தல், அரிப்பு, கண்கள் சிவப்பு, கண் அரிப்பு, இப்படி பலவும் ஆஸ்துமாவை காட்டிக்கொடுக்கும் அறிகுறிகள்.
தீர்வு உண்டா?
ஆஸ்துமாவிற்கு, பாதுகாப்பான, மிகவும் பயனுள்ள, எளிமையான பலரின், பட்ஜெட்டிற்குள் அடங்கக்கூடிய எளிமையான தீர்வு, ஆங்கில மருத்துவத்தில் மட்டுமே உள்ளது. மாற்று மருத்துவம் என்பது, ஏமாற்று வேலை.
ஆஸ்துமா நோயால் ஏற்படும் நாள்பட்ட மூச்சுக்குழல் பாதிப்புகளை கட்டுப்படுத்தி, மூச்சுக் குழலை இயல்பு நிலைக்கு கொண்டு வரவேண்டும். இதற்கு, நோயின்
தீவிரத்தை பொறுத்து, பல மாதங்களோ, பல ஆண்டுகளோ தினமும், 'ஸ்டீராய்டு இன்ஹேலர்' எடுப்பது அவசியம்.
பக்கவிளைவு இல்லை
அதாவது, ஸ்டீராய்டு இன்ஹேலர், மாத்திரை, ஊசி போல் பாதிப்பு, பக்க விளைவுகளை தராது. அது, மூச்சுக்குழலின் பாதிப்பை சரி செய்த பின், சக்தி இழந்த நிலையில் தான் ரத்தத்தில் கலக்கும்.
எனவே, தொடர் உபயோகத்திலும், உடல் பாதிப்பு ஏற்படாது. இன்ஹேலர், போதை மருந்து போல் அடிமைப்படுத்தாது. ஆஸ்துமா பாதிப்பை கட்டுப்படுத்திய பின், ஸ்டீராய்டு இன்ஹேலர் மருந்தை நிறுத்தி விட முடியும்.
தவறான சிகிச்சை முறைகளால் ஆஸ்துமா மரணங்கள் சாத்தியம். சரியான சிகிச்சை அளித்தால், அதை தவிர்க்கலாம்என்பதே சத்தியம்.
டாக்டர் ஸ்ரீதரன் ஆஸ்துமா அலர்ஜிசிறப்பு மருத்துவர் karpagadasan@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக