செவ்வாய், 11 அக்டோபர், 2016

உலக மனநல தினம் அக்டோபர் 10.

உலக மனநல தினம் அக்டோபர் 10.

பொதுவாக் மனது என்ன
நினைக்கிறதோ, அதுதான் செயல்
வடிவம் பெறுகிறது.. ஆரோக்கியமான
வாழ்வுக்கு,உடல்நலத்தைப் போல,
மனநலமும் முக்கியம்..உலகளவில் 35 கோடி
பேர், மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக
உள்ளனர்..என புள்ளிவிவரம் கூறுகிறது……
எனினும்,நாம் எல்லோருமே ஏதோ ஒரு
காலகட்டத்தில் மனநிலை
பாதித்தவர்களாகவே இருக்கிறோம்…

அனைத்து வயதினரையும் மனநலம்
பாதிக்கிறது..நீண்டகால சோகம்,
வேலையின்மை,ஏமாற்றம்,ஏக்கம்,
தொடர்தோல்வி,மதுப்பழக்கம்,
பிடிப்பு இல்லாமை ஆகியவை மன அழுத்தம்
உருவாக காரணங்கள்..மனநிலை
பாதிக்கப்பட்டவர்கள்,
தற்கொலைக்கும்
முயற்சிக்கின்றனர்..ஆண்டு தோறும் உலகம்
முழுவதும், 8 லட்சம் பேர் தற்கொலை
செய்கின்றனர்..இவர்களில் 15 முதல்
44 வயதுக்குட்பட்டோரே அதிகம்..இந்நிலையில்
உடலால் நன்றாக இருந்து, மனதால்
பாதிக்கப்பட்டுள்ள உள்ளங்களுக்கு
ஆறுதல் அளிக்க வலியுறுத்தியே அக்., 10ம்
தேதி உலக மனநல தினம்
கடைப்பிடிக்கப்படுகிறது.
இத்தகைய மனநல பாதிப்பு என்பது
வயதானவர்களுக்கு மட்டுமே
சொந்தமல்ல. ஒரு வயது
குழந்தைக்கு கூட மனஅழுத்தம், மனச்சோர்வு
ஏற்படும் வாய்ப்பு உள்ளதால்
பின்னாளில் மனநலம்
பாதிக்கப்படலாம். இன்று உலக
மனநல தினம். இளமையிலும்,முதுமையிலும்
மனநலம் பேணுவதின் அவசியத்தை
விளக்குகின்றனர், இந்தாண்டு
உலகமனநல நாள் முதியோர் மனநலம்
பேணும் ஆண்டாக அனுசரிக்கப்படுகிறது.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் 50
சதவீதம் பேர் முதியோர்களாக உள்ளனர்.
உடல் நலம் குறைவு, பிள்ளைகள் புறக்
கணிப்பு, கவனிக்க ஆள் இல்லாத
நிலையில் கடுமையான மனஅழுத்தம்,
மனச்சோர்வால்
பாதிப்புக்குள்ளாகின்றனர். இதில்
ஆண்கள் அதிகம். பிள்ளைகளுக்கு
கொடுக்க ஒன்றுமில்லாத போது
தான் பெற்றோரின் உறவு கசக்க
ஆரம்பிக்கும். 30 வயதைத் தாண்டும் போதே
தங்களது முதுமைக்காக சேமித்து வைக்க
வேண்டும். சொத்து இருந்தால்
பிள்ளைகளின் பெயரில்
மாற்றக்கூடாது. இப்படிச்
செய்வதன் மூலம் முதுமையின் சுமையை
ஓரளவு குறைக்கலாம் எனகிறார்கள்
மருத்துவர்கள் .
இதற்கிடையில் கண்டிப்பாக முதியோர் மன
நலத்தையும் கவனித்தே ஆக வேண்டும்.
ஏனெனில் மருத்துவர்களின்
கருத்தின்படி பெரும்பாலான உடல்
நலக்குறைவிற்கு காரணம் மன அழுத்தம்,
கவலைகள் அதனால ஏற்படும் பதட்டம்
ஆகியனவாகும். இவை சீரண மண்டலத்தை
பாதிக்கலாம் முக்கியமாக கல்லீரல்
பாதிக்கப்படும்.. விளைவாக
நெஞ்சில் எரிச்சல், கைகால் வலி,
சத்து குறைவு , மூச்சு கோளாறு
தொடர்ச்சியான இருமல்
ஆகியன ஏற்படும்.
இவை நாற்பதுகளின் ஆரம்பத்திலேயே
ஏற்படலாம். டயாபடீஸ் , ஹைபர்
டென்சன், இரத்த அழுத்தம் போன்ற
வியாதிகள் இல்லாதபோதே இவை அறிகுறி
காட்டலாம். எந்த பரிசோதனையும்
இவற்றின் ஆதிமூலத்தை அடையாளம்
காட்டாது. இந்த நிலையில் அவர்களிடம்
கனிவாக நடந்து கொண்டு,
சீரணிக்க சுலபமான உணவு வகைகளை
தரவேண்டும். காலை உணவை சீக்கிரமாக
தந்து விடவேண்டும். முடிந்தால் தேநீர்
போன்றவை தரும்போதே பிஸ்கட்டையும்
சேர்க்கலாம். ஒரே வேளையில் அதிகம்
உண்ணுவதைவிட கொஞ்சம்
கொஞ்சமாக இரண்டு மணி
நேரத்திற்கு ஒரு முறை உட்கொள்ளச்
செய்யலாம்.
மனிதகுலம் நாகரிகம் அடையாத
காலத்தில், முதியோர் நலம் பேணுதல்
என்பது கடமைகளுக்கான செயல்
திட்டத்திலேயே(agenda) கிடையாது.
பழங்கால சீனாவில் முதியோரை காட்டில்
விடுவதும், சங்ககால தமிழகத்தில்
முதுமக்கள் தாழியும் இருந்தன.
விலங்கிலிருந்து மனிதன் தன்னை
பிரித்துணர ஆரம்பித்தபின்தான்
பெற்றோரை பராமரித்தல் என்ற
விஷயமே வந்தது. அதிலும் அன்பு, பாசம்,
காதல் போன்றவைதான் மனிதனை மறு
நாளை நோக்கி நகர்த்துகின்றன.
போராட்டத்தில் வெற்றியடைய
செய்கின்றன. வாழ்க்கையை
அர்த்தமுள்ளதாக்கியது. வியாபார
கொள்கைகள் வாழ்க்கையிலும்
வந்தபின் , எதையும் நியாயப்படுத்தும்
சுயநல அரக்கன் முதலில் பலி
கொண்டது இத்தகைய
பொறுப்புகளைத்தான். இதன்
முடிவில் மனித்தத்துவம் மரித்து போகும்.
************************************
உலக மனநல தினம்
உலகம் முழுக்க அக்டோபர் 10 ஆம்
தேதி சர்வதேச மனநல தினம் (World
Mental Health Day, October 10 ) ஆக
அனுசரிக்கப்படுகிறது.
மனிதனின் அனைத்து வெற்றி
தோல்விக்கு அவன் மனமே
மூலமாக இருக்கிறது என்றால்
மிகை இல்லை. எந்த ஒரு
காரியத்தையும் வெற்றி
பெறுவோம் என்கிற மன
நம்பிக்கையுடன் நிச்சயம்
வெற்றிதான்.
உலக மனநல பாதுகாப்பு வாரம்..!
உலக சுகாதார அமைப்பு, உலக நல
மருத்துவ அமைப்பு, இந்திய
மனநல மருத்துவ சங்கம்
போன்றவற்றின் அறிவுறுத்தலின்
பேரில் இந்தியாவில் அக்டோபர் 4
முதல் 10 ஆம் தேதி வரை உலக
மனநல பாதுகாப்பு வாரம்
கடைபிடிக்கப்படுகிறது.
மக்கள் உடல் நலத்திற்கு
கொடுக்கும் முக்கியத்துவத்தை மன
நலத்துக்கு கொடுப்பதில்லை.
இதனால், மனநலம்
பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை
ஆண்டு அதிகரித்துக்
கொண்டிருக்கிறது.
இந்தியாவில் தீவிர மனநோயால்
சுமார் 3% பேர், லேசான மன
நோயால் 10&15%
பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 65
லட்சம் பேர் மன நோயால்
பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களில் சிகிச்சை எடுத்துக்
கொள்பவர்கள் மிகக்
குறைவானவர்களே.
மனநோய் என்பது ஒரு சமூக நோய்.
ஆடைகளை கிழித்துக் கொண்டு
சாலைகளில் அலைபவர்கள் மட்டும்
மனநோயாளிகள் அல்ல. ஆசைகள்
நிறைவேறாதவர்கள், ஆசைகளை
அடக்கி கொண்டவர்கள்
எப்போதாவது ஒரு முறை
மனநோய்க்கான அறிகுறிகளை
வெளிப்படுத்துபவர்களாக
இருக்கிறார்கள்.
$மன நல பாதிப்புக்கான
காரணங்கள்...!
* குடும்ப பிரச்னை
* வேலையில்லா நிலை
* ஏமாற்றம்
* செக்ஸ் பிரச்னை
* ஏக்கம், தோல்வி
* பாதுகாப்பாற்ற உணர்வு
* சந்தேக புத்தி
* போட்டி மற்றும் பொறாமை
* தவறான சேர்க்கை
* அதிகமான மது, போதை பழக்கம்
அடுத்து, முக்கிய காரணம். தனிக்
குடித்தனம் அதிகரித்து வருவது.
இதற்கு முன் தந்தை, தாய்
வேலைக்கு செல்லும் போது
பிள்ளைகளை தாத்தா, பாட்டி
உள்ளிட்ட உறவினர்கள் பாசத்துடன்
அரவணைத்தனர். இன்றைக்கு
வேலைக்காரர்களிடம் அல்லது
வீட்டிலே பூட்டி வைத்துவிட்டு
போய்விடுகிறார்கள். இதனால்,
சிறு வயதிலே குழந்தைகளிடம்
மனநலம் பாதிக்கப்படுகிறது.
படி படி என எப்போதும் சொல்வது, ஓடி
ஆடி விளையாட
அனுமதிக்காதது, குழந்தைகளை
மற்றவர்கள் முன் திட்டுதல்,
அரவணைப்பு இல்லாதது
போன்றவற்றால் குழந்தைகளுக்கும்
மன நல பாதிப்பு ஏற்படுகிறது.
பெற்றோர்கள் தங்கள் குடும்ப
பிரச்சினைகளை தள்ளி
வைத்துவிட்டு குழந்தைகளிடம்
பாசமாகவும் அரவணைப்புடனும்
இருக்க வேண்டும்.
உளவியலின் தந்தை என
போற்றப்படும் சிக்மண்ட்
ஃபிராய்ட் ‘‘பண்பாடு என்று
சொல்லி பாலியல் உணர்வை
கட்டுப்படுத்துவதும் கூட மன நல
பாதிப்புக்கு காரணம்’’ என்று
குறிப்பிட்டுள்ளார்.
$மனநோயின் அறிகுறி...
மன நோய்க்கு உடல் அறிகுறி
மற்றும் மன அறிகுறி என இரு
காரணங்கள் இருக்கின்றன.
* உடல் சோர்வு
* பசியின்மை
* தலைவலி
* ஜீரணப் பிரச்னை போன்றவை
உடல் அறிகுறி.
* பய உணர்வு
* விபரீத கற்பனை
* தேவையில்லாத சிந்தனை
* மன கலக்கம்
* நம்பிக்கையற்ற உணர்வு
* எதிர்மறையான எண்ணங்கள்
* குற்ற உணர்வு
* மற்றவர்கள் மதிக்காதது போல்
உணர்தல்
* உதவிக்கு யாருமில்லாதது போல்
உணர்தல்
* தற்கொலை எண்ணம் மற்றும்
தற்கொலைக்கு முயற்சி செய்தல்
போன்றவை மன அறிகுறிகளாக
இருக்கின்றன.
உடல் நலம் பாதிக்கப்படால் டாக்டரை
பார்க்கிறோம். ஆனால், மன நல
மருத்துவரிடம் சென்றால்
சமூகத்தில் கேலி, கிண்டல் மற்றும்
அவமானத்துக்கு உள்ளாக நேரிடும்
என்று அஞ்சி செல்வதை தவிர்த்து
விடுகிறார்கள். இது மகா தவறு.
மனநல பாதிப்புகளை
ஆரம்பத்திலே கவனிக்க வில்லை
என்றால் மூளை
பாதிக்கப்படுகிறது.
மனச் சோர்வு இருந்தால்,
உங்களுக்கு விருப்பமான
மகிழ்ச்சியான தரும்
நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்.
உதாராணமாக, பாட்டு கேட்டல்,
சினிமா பார்த்தல், புத்தகம்
படித்தல் போன்றவற்றை
மேற்கொள்ளுங்கள். நடைபயிற்சி,
யோகானசம் கூட செய்யலாம்.
பெரும்பாலும் தனிமையை
தவிருங்கள். பணப் பிரச்னையை
பெரிதாக எடுத்துக்
கொள்ளாதீர்கள்.
இருப்பதற்குள் சிக்கனமாக வாழ
பழகிக் கொள்ளுங்கள். .
உளவியல் நிபுணர் கிளிபோர்ட்
பியர்ஸ் ‘‘ஓவ்வொரு
மனநோயாளிக்கும் மிகவும்
தேவையானது அவரை எந்த
நிலையிலும் புரிந்துக் கொள்ளும்
ஒரு நல்ல நண்பனே’’ என்கிறார்.
எதற்கும் உணர்ச்சி வசப்படாமல்
எதையும் ‘டேக் இட் ஈஸி’‘ என்ற
பாலிசியுடன் வாழ்பவர்களுக்கு
மன நல பாதிப்பு இல்லை என்றும்
அவர்கள் மற்றவர்களை விட
அழகாக, உடல் ஆரோக்கியத்துடன்
இருக்கிறார்கள் என்கிறது ஆய்வு
முடிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக