திங்கள், 3 அக்டோபர், 2016

பத்திரிக்கை ஆசிரியர் சோ ராமசாமி பிறந்த நாள் அக்டோபர் 5,

பத்திரிக்கை ஆசிரியர்
சோ ராமசாமி பிறந்த நாள் அக்டோபர் 5,

சோ ராமசாமி (பிறப்பு: அக்டோபர் 5, 1934 ),
பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர்,
நடிகர், வக்கீல் போன்ற பல துறைகளில்
ஈடுபாடு கொண்டவர். சோ என
அழைக்கப்படுகிறார். துக்ளக் என்னும்
அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவுநர்
மற்றும் ஆசிரியர் ஆவார். இவரின்
'அரசியல் நையாண்டி' எழுத்துக்கள்
இவருக்கு 'பத்திரிக்கை உலகில்' தனி இடம்
வகுத்து தந்தது.
வாழ்க்கைக் குறிப்பு
சோ ராமசாமி சென்னையில் பிறந்தவர்.
இவருடைய தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன்,
தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய
பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர்
நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை லயோலா
கல்லூரியிலும் பயின்று இளநிலைஅறிவியல்
(பி.எஸ் சி) பட்டப் படிப்பை விவேகானந்தா
கல்லூரியிலும் பயின்றார். பின் 1953 -55 -
ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக்
கல்லூரியில் பயின்று இளநிலைச்சட்டப்
படிப்பில் (பி.எல்) பட்டம் பெற்றார்.
1957 முதல் 1962 வரை சென்னை உயர் நீதி
மன்றத்தில் வக்கீலாகப்
பணியாற்றினார். 1962 முதல் டி.டி.கே
(T.T.K) கம்பெனிகளுக்குச் சட்ட
ஆலோசகராகப் பணியாற்றினார்.
இவருக்கு 1966 - ம் ஆண்டு திருமணம்
நடந்தது. இவருக்கு ஒரு மகனும் மகளும்
உள்ளனர். ’சோ’ எனும் பெயர் பகீரதன்
எழுதிய தேன்மொழியாள் மேடை
நாடகத்தில் இவர் ஏற்ற
கதாபாத்திரத்தின் பெயர். [1]
கலையுலகம்
1957 ஆம் ஆண்டு நாடகங்களை எழுதத்
துவங்கினார். 1970 ஆம் ஆண்டு துக்ளக்
வார இதழைத் தொடங்கினார்.
பின்னர் 1976ஆம் ஆண்டில் PickWick என்ற
ஆங்கில இதழைத் தொடங்கினார்.
இவர் 14 திரைப்படங்களுக்கு கதை
எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில்
நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை
இயக்கியுள்ளார். நான்கு
தொலைக்காட்சிப் படங்களுக்குக்
கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார்.
விருதுகள்
இவர் தனது ஏட்டுத்துறைச் (பத்திரிக்கைத்துறைச்)
சேவைக்காக 1985 இல் 'மஹாரான
மேவார்' வழங்கிய ஹால்டி காட்டி
விருதும், 1986 இல் வீரகேசரி விருதும், 1994
ஆம் ஆண்டு கொயங்கா விருதும்,
1998 இல் நச்சிக்கேதஸ் விருதும்
பெற்றுள்ளார்.
படைப்புகள்
இவர் 22 நாடகங்களையும், 8
புதினங்களையும், அரசியல், கலை எனப்
பல்வேறு துறைகளைச் சார்ந்த கட்டுரைகளையும்
எழுதியுள்ளார்.
இவரது முகமது பின் துக்ளக் என்னும்
'அரசியல் நையாண்டி' நாடகம் மிகவும்
புகழ் பெற்றது. இது பின்னர்
திரைப்படமாகவும் வெளிவந்தது.
அரசியல்
இவர் மாநிலங்களவை உறுப்பினராக
வாஜ்பாயால் நியமனம்
செய்யப்பட்டு 1999 முதல் 2005 வரை
பணியாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக