சனி, 1 அக்டோபர், 2016

கர்ம வீரர் காமராசர் நினைவு தினம் அக்டோபர் 02.

கர்ம வீரர் காமராசர் நினைவு தினம் அக்டோபர் 02.

காமராசர் (காமராஜர்) தமிழ்
நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள்
ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு
அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர்
ஆனார். இவர் ஒன்பது ஆண்டுகள்
தமிழகத்தின் முதல்வராகப் பதவி
வகித்தார். தமிழகத்தில் பள்ளிக்
குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத்
திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும்
பெயர் பெற்றவர். இவரை,
தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை,
அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர்
என்றெல்லாம் புகழ்வர். இவர்
"கருப்பு காந்தி" என்றும் அன்போடு
அழைக்கப்படுகிறார். இவர் இறந்த பிறகு,
1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத
ரத்னா விருது வழங்கியது. மதுரைப்
பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர்
பல்கலைக்கழகம் என்றும், சென்னை
பன்னாட்டு வானூர்தி நிலையத்தின்
உள்நாட்டு முனையத்திற்கு காமராசர்
பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இக் கட்டுரையைக் கேட்கவும் ( info/dl )
இந்த ஒலிக்கோப்பு மார்ச் 30, 2013
தேதியிட்ட காமராசர் பதிப்பில்
இருந்து உருவாக்கப்பட்டது. இது
கட்டுரையின் பிந்திய
தொகுப்புக்களைக்
காட்டாது. ( ஒலி உதவி )
பிற பேச்சுக் கட்டுரைகளைக் காண
தொடக்ககால
வாழ்க்கை
காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு
ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். அவருடைய
பெற்றோர் குமாரசாமி நாடார்
மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். இவர்
நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்குக்
குல தெய்வமான காமாட்சியின்
பெயரையே முதலில் சூட்டினார்கள்.
தாயார் சிவகாமி அம்மாள் மட்டும்,
அவரை "ராசா" என்றே அழைத்து வந்தார்.
நாளடைவில் காமாட்சி என்ற பெயர்
மாறி, ‘காமராசு’ என்று ஆனது. தனது
பள்ளிப் படிப்பைச் சத்ரிய வித்யா சாலா
பள்ளியில் தொடங்கினார்.
படிக்கும் போதே மிகவும்
பொறுமையுடனும் விட்டுக்
கொடுக்கும் மனத்துடனும்
விளங்கினார். சிவகாமி அம்மாளுக்கு
இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா
நாடார். இவர் துணிக்கடை வைத்திருந்தார்.
மற்றொருவர் பெயர்
காசிநாராயண நாடார். இவர்
திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி
வந்தார்.
சிறை வாழ்க்கையும் படிப்பும்
பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத
நிலை ஏற்பட்டதும் காமராசர் தன்
மாமாவின் துணிக்கடையில் வேலையில்
அமர்ந்தார். அங்கிருக்கும்போது பெ.
வரதராசுலு நாயுடு போன்ற தேசத்
தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு
அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும்
ஆர்வம் காட்டினார். தன்னுடைய 16ஆம்
வயதில் காங்கிரசின் உறுப்பினராக
ஆனார்.
ராசாசியின் தலைமையில் 1930 மார்ச்சு
மாதம், வேதாரண்யத்தில் உப்பு
சத்தியாக்கிரகம் நடைபெற்றபோது அதில்
கலந்து கொண்டார்.
அதற்காகக் காமராசர் கைது
செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர்
சிறைக்கு அனுப்பப்பட்டார். அடுத்த ஆண்டு
காந்தி - இர்வின் ஒப்பந்தத்தின்
அடிப்படையில் விடுதலை ஆனார். விருதுநகர்
வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சேலம்
டாக்டர் பெ. வரதராசுலு
நாயுடுவின் வழக்காடும் திறமையால்
குற்றச்சாட்டு நிறுவப்படாததால் விடுதலை
ஆனார். 1940 இல் மீண்டும் கைதாகி வேலூர்
சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும் போதே
விருதுநகர் நகராட்சித் தலைவராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது
மாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும்
நேராகச் சென்று தன் பதவி
விலகினார். பதவிக்கு நேர்மையாக
முழுமையாகக் கடமையாற்ற முடியாத
நிலையில் அதில் ஒட்டிக்
கொண்டிருப்பது தவறு என்பது
அவருடைய கொள்கையாக இருந்தது.
மீண்டும் 1942-ல் ஆகத்து புரட்சி
நடவடிக்கைகளுக்காகக் கைது
செய்யப்பட்டார். இந்த முறை மூன்று
ஆண்டுகள் தண்டனையாகப்
பெற்றார்.
அரசியல் குரு
காமராசர், சிறந்த பேச்சாளரும்
நாடாளுமன்றவாதியும் ஆன
சத்தியமூர்த்தியைத் தன் அரசியல் குருவாக
ஏற்றுக் கொண்டிருந்தார். 1936 -ல்
சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின்
தலைவரானபோது காமராசரைச்
செயலாளராக ஆக்கினார்.
இருவரின் முயற்சியில் காங்கிரசு கட்சி
நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில்
பெருவெற்றி பெற்றது.
இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி
கேட்டுக் காமராசர் முதலில்
சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று
அங்குதான் தேசியக் கொடியை
ஏற்றினார்.
தமிழக ஆட்சிப் பொறுப்பு
1953 -க்குப் பிறகு சக்ரவர்த்தி ராசாசிக்கு
அவர் கொண்டு வந்த குலக்கல்வித்
திட்டத்தால் அதிக அளவில் எதிர்ப்புகள்
கிளம்பி இருந்த நேரம். காமராசர் ஆட்சித்
தலைமைப் பொறுப்புக்கு வரத்
தயங்கியதற்கு அவருக்கிருந்த
மொழிவளம் குறித்த
தாழ்வுணர்ச்சி ஒரு முக்கிய காரணம்.
(அப்போது தமிழகம் சென்னை
ராச்சியமாக ஆந்திராவின்
பெரும்பகுதி, கர்நாடகாவின் சில
பகுதிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே
கொண்டிருந்தது)
குலக்கல்வித் திட்டத்தால் ராசாசியின்
செல்வாக்கு வேகமாகக் கீழிறங்கிக்
கொண்டிருக்க,
மொழிவாரி மாநிலங்கள்
அமைப்பின் காரணமாக (அக்டோபர் 1, 1953-
ல் ஆந்திரா பிறந்து விட்டது) தமிழ்நாடும்
சுருங்கிப் போக, காங்கிரசின் உள்ளேயே
ராசாசிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பி
விட்டது. நிலைமை அறிந்த கட்சி மேலிடம், தமிழக
அளவில் தீர்மானித்துக் கொள்ள
அனுமதி வழங்கி விட்டது. ராசாசி தான்
அவமானப்படுவதைத் தவிர்க்க, ‘எனக்கு
எதிராகக் கட்சியில் யாரும் தீர்மானம்
கொண்டு வர வேண்டாம. நானே
விலகிக் கொள்கிறேன்’ என்று
அறிவித்து விட்டாலும் தன் இடத்திற்குத்
தன்னுடைய முக்கிய ஆதரவாளரான
சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்த பின் வேலை
செய்தார். அவருடைய
இன்னொரு முக்கிய
ஆதரவாளரான எம். பக்தவத்சலம்
அதனை முன்மொழிந்தார்.
ஆனால் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின்
கூட்டத்தில் காமராசர்
பெருவாரியான வாக்குகள்
முன்னணியில் வெற்றி பெற்றார்.
இதுதான், காமராசர் தமிழக
முதல்வராக 1953 தமிழ்ப்புத்தாண்டு
அன்று பதவியேற்றதன் பின்னணி.
அமர்ந்திருப்பவர்கள் காரைக்குடி
இராமநாதன், - சா. கணேசன் , -
இராஜாஜி - பாகனேரி
பில்லப்பா, - காமராசர், - ரா.
கிருஷ்ணசாமி நாயுடு
அமைச்சரவை
காமராசர் அமைச்சரவை அமைத்த விதத்தில்
சில நுட்பமான விஷயங்கள் உள்ளன:
மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (8 பேர்)
அமைச்சர்கள் இருந்தனர்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட
சி.சுப்பிரமணியம் , அவரை
முன்மொழிந்த எம். பக்தவத்சலம்
இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்திருந்தார்.
அவருடைய அமைச்சரவையில் இடம்
பெற்றிருந்த இன்னும் முக்கிய இருவர்,
ராமசாமி படையாச்சி, மாணிக்கவேலு
நாயக்கர் ஆகியோர். இவர்கள் இருவரும்
காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்டு தி.மு.க
ஆதரவோடு வென்றவர்கள். (1952
தேர்தலில் தி.மு.க. போட்டியிடவில்லை
என்றாலும் அது சில வேட்பாளர்களை
வெளிப்படையாக ஆதரித்தது.
"தி.மு.க.வின் திராவிட நாடு
கொள்கையை ஆதரிக்கிறேன்;
சட்டமன்றத்தில் திமுக-வின்
கொள்கைகளை
எதிரொலிப்பேன்; தி.மு.க
வெளியிடும் திட்டங்களுக்கு ஆதரவு
பெருக்கும் வகையில் சட்ட மன்றத்தில்
பணியாற்றுவேன்" என்கிற நிபந்தனைகளுக்கு
எழுத்துபூர்வமாகக் கையெழுத்திட்டுத்
தருபவர்களுக்கு ஆதரவு அளித்தது திமுக.
அப்படிக் கையெழுத்துப் போட்டுக்
கொடுத்துக் காங்கிரசை எதிர்த்து
வெற்றி பெற்று அமைச்சர்
ஆனவர்கள் இந்த இருவரும் [சான்று தேவை ].)
அமைச்சரவையின் இன்னொரு
குறிப்பிடத் தக்க அம்சம், பி. பரமேசுவரன்
என்கிற அமைச்சர். அவருக்குத் தரப்பட்டிருந்த
பொறுப்பு, தாழ்த்தப்பட்டோர் நலம்
மற்றும் அறநிலையத் துறை.
முதலமைச்சராக ஆற்றிய பணிகள்
ராசாசி கொண்டு வந்திருந்த
குலக்கல்வித் திட்டத்தினைக் கைவிட்டார்.
அவரது ஆட்சிக் காலத்திற்குள்
தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000
ஆனது. (1920 இல் நீதிக்கட்சி அரசு
ஆதரவுடன் சென்னை
மாநகராட்சியில் மதிய உணவுத் திட்டம்
கொண்டுவரப்பட்டது. முதலில்
ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த ஒரு
மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத்
திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்
மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவு
படுத்தப்பட்டது. இத்திட்டமே 1960 களில்
காமராசரால் அறிமுகப்படுத்தப்பட்டு
எம். ஜி. ராமச்சந்திரனால் 1980 களில்
விரிவுபடுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தின்
முன்னோடியாகும்.)அவரது மதிய உணவுத்
திட்டம் இன்று உலக அளவில்
பாராட்டப்படும் திட்டமாகும். அதன்
பலனாகப் பள்ளிகளில் படிப்போரின்
எண்ணிக்கை 37 விழுக்காடாக உயர்ந்தது.
(பிரித்தானியர் காலத்தில் இது 7
விழுக்காடாக இருந்தது). பள்ளிகளில்
வேலைநாட்கள் 180 இல் இருந்து 200 ஆக
உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத்
தொழில்நுட்ப நிறுவனம்
தொடங்கப்பட்டது.
காமராசர் முதலமைச்சராகப் பதவி
வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம்,
நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம்,
கல்வி, தொழில் வளத்துக்கு
முன்னுரிமையளித்து பல திட்டங்களை
நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 9
முக்கிய நீர்பாசனத்திட்டங்கள்
நிறைவேற்றப்பட்டன. அவைகீழ்
பவானித்திட்டம் , மேட்டூர்
கால்வாய்த்திட்டம், காவேரி
டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்,
மணிமுத்தாறு , அமராவதி , வைகை ,
சாத்தனூர் , கிருசுணகிரி, ஆரணியாறு
ஆகியவையாகும். கன்னியாகுமரி
மாவட்டத்தில் மலை கிராமங்களுக்குக்
குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகக்
காமராசரால் கட்டப்பட்ட மாத்தூர்
தொட்டிப் பாலம் ஆசியாவின்
மிகப்பெரிய
தொட்டிப்பாலமாக இன்றளவும்
உள்ளது.
அவர் காலத்தில் தமிழகத்தில்
தொடங்கப்பட்ட முக்கிய
பொதுத் துறை நிறுவனங்களும்
பெருந்தொழிற்சாலைகளும்:
பாரத மிகு மின் நிறுவனம்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம்
(MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
இரயில்பெட்டி இணைப்புத்
தொழிற்சாலை (ICF)
நீலகிரி புகைப்படச் சுருள்
தொழிற்சாலை
கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள்
தொழிற்சாலை
மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
குந்தா மின் திட்டமும், நெய்வேலி
மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின்
வெப்ப மின் திட்டங்களும்
காமராசரால் ஏற்படுத்தப்பட்டவை.
காமராசர் முதல் அமைச்சரான முதல்
ஆண்டிலேயே அனைத்துத்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும்
ஓய்வு ஊதியம் வழங்க ஆணையிட்டார்.
பின்னர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும்
அதன்பின்னர் தனியார் கல்லூரி
ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம்
வழங்கும்படி ஓய்வு ஊதியத் திட்டத்தை
நீட்டித்தார். [1]
1967 ஆம் ஆண்டுத் தேர்தல் தோல்வி
1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக
சட்டமன்றப் பொதுத் தேர்தலில்
தமது சொந்த ஊரான விருதுநகர்
தொகுதியில் பெ. சீனிவாசன்
என்பவரால் 1,285 வாக்குகள்
வேறுபாட்டில் தோற்கடிக்கப்பட்டார். [2]
நாகர்கோயில் மக்களவைத்
தொகுதியில் 1969 இல்
நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி
பெற்றார். [3][1]
அகில இந்திய காங்கிரசு
தலைமை
திருமங்கலம் பி.கே.என்.
ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்
அமைந்துள்ள காமராசரின்
சிலை
மூன்று முறை (1954–57, 1957–62, 1962–63)
முதலமைச்சராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராசர்,
பதவியைவிடத் தேசப்பணியும் கட்சிப்பணியுமே
முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாகக்
கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட
விரும்பிக் கொண்டு வந்த திட்டம்
தான் K-PLAN எனப்படும் 'காமராசர்
திட்டம் ' ஆகும். அதன்படி கட்சியின் மூத்த
தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம்
ஒப்படைத்து விட்டுக் கட்சிப்பணியாற்றச்
செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம்
சொன்னதை அப்படியே ஏற்றுக்
கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை
முன்மொழிந்த கையோடு தன்
முதலமைச்சர் பதவியைப் பதவி விலகல்
செய்து (2. அக்டோபர் 1963)
பொறுப்பினை பக்தவத்சலத்திடம்
ஒப்படைத்து விட்டு டெல்லி
சென்றார் காமராசர். அக்டோபர் 9
அன்று அகில இந்தியக் காங்கிரசின்
தலைவர் ஆனார். லால் பகதூர் சாசுதிரி ,
மொரார்சி தேசாய், எசு. கே.
பாட்டீல், செகசீவன்ராம் போன்றோர்
அவ்வாறு பதவி துறந்தவர்களில்
முக்கியமானவர்கள்.
அகில இந்திய அளவில் காமராசரின்
செல்வாக்கு கட்சியினரின்
மரியாதைக்குரியதாக இருந்தது.
அதனாலேயே 1964 இல் சவகர்லால் நேரு
இறந்தவுடன் இந்தியாவின் தலைமை
அமைச்சராக லால் பகதூர் சாசுதிரியை
முன்மொழிந்து காமராசர்
சொன்ன கருத்தினை அனைவரும்
ஏற்றனர். 1966-ல் லால் பகதூர்
சாசுதிரியின் திடீர் மரணத்தின்போது ஏற்பட்ட
அசாதாரண அரசியல் சூழ்நிலையின்போது
இந்திரா காந்தியை தலைமை அமைச்சராக
வரச் செய்ததில் காமராசருக்குக்
கணிசமான பங்கு இருந்தது.
இறுதிக் காலம்
காமராசருக்கு இந்திராகாந்தியுடன்
ஏற்பட்ட பிணக்கின் காரணமாகக்
காங்கிரசு கட்சி இரண்டாக உடையும் நிலை
ஏற்பட்டது. காமராசரின் தலைமையிலான
சிண்டிகேட் காங்கிரசு தமிழக அளவில்
செல்வாக்குடன் திகழ்ந்தது.
ஆனாலும் திராவிட முன்னேற்றக்
கழகத்தின் மாபெரும் வளர்ச்சியால்
அதன் பலம் குன்றிப் போகக் காமராசர்
தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக
அளவில் சுருக்கிக் கொண்டார்.
தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச்
சுட்டிக் காட்டி வந்தார். இந்திரா காந்தி
நெருக்கடி நிலையினை அமல்
செய்தபோது அதனைக் கடுமையாக
எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர்.
இந்தியாவின் அரசியல் போக்குகுறித்து மிகுந்த
குறையும் கவலையும் கொண்டிருந்த
நிலையில் காமராசர் இருந்தார்,
இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட
ஜெயப்பிரகாஷ் நாராயணன் ,
மொரார்ஜி தேசாய் மற்றும் பல
தலைவர்கள் இக்காலகட்டத்தில் இந்திரா
காந்தி அரசால் கைது
செய்யப்பட்டிருந்தனர். அக்டோபர்
இரண்டு காந்தியடிகள் பிறந்த நாளன்று
அவர்கள் விடுதலை
செய்யப்படுவார்கள் என்று
எதிர்பார்த்திருந்தார் காமராசர்.
ஆனால், அன்று ஆச்சார்ய
கிருபளானியும் கைது செய்யப்பட்டார்
என்ற செய்தியைக் கேட்ட அன்றே உயிர்
துறந்தார். [4] 1975 அக்டோபர் திங்கள்
இரண்டாம் நாள் (காந்தியின்
பிறந்தநாள்) மதிய உறக்கத்திற்குப்
பின்னர் அவரின் உயிர் பிரிந்தது[5] . அவர்
இறந்தபோது பையில் இருந்த சிறிதளவு
பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ,
சொந்த வீடோ, வேறு எந்த வித
சொத்தோ இல்லை என்பது
குறிப்பிடத்தக்கது. தன் வாழ்நாள் இறுதி
வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.
நினைவுச் சின்னங்கள்
காமராசர் நினைவிடம், கிண்டி
தமிழ்நாடு அரசு, காமராசர் நினைவைப்
போற்றும் வகையில் சென்னை கிண்டியில்
நினைவிடம் ஒன்றை அமைத்துள்ளது. இங்குக்
காமராசரின் மார்பளவு சிலை
அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில்
காமராசர் மணிமண்டபம் ஒன்றையும்
அமைத்துள்ளது. இங்குக் காமராசரின்
மார்பளவு சிலையும் நூலகமும்
அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை
வரலாறு தொடர்பான
புகைப்படங்கள் பொதுமக்கள்
பார்வைக்குக் கண்காட்சியாக
வைக்கப்பட்டுள்ளது. பார்க்க
திரைப்படங்கள்
2004 ஆம் ஆண்டு காமராஜ் என்கிற
பெயரில் அவருடைய வாழ்க்கை
வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படம்
வெளியானது. அதன் ஆங்கில
மொழியாக்க குறுந்தகடு 2007-
ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
காமராசரைப் பற்றிய
கருத்துக்கள்
“தனது பலவித கஷ்டங்களையும்
பொருட்படுத்தாது, சதா
காலமும் நாட்டின் நலன்களிலே
ஈடுபட்டுள்ள உள்ளத்தைப் பெற்றவரே
சகல தர்மங்களையும், நிதிகளையும்
நன்குணர்ந்தவரே காமராசு, காமராசு
மகாபுருசர்.”- காஞ்சி
சங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகர
சரசுவதி
"திறமை, நல்லாட்சி, இவைகளுக்கு
எடுத்துக்காட்டாக இருக்கும் ஓர்
அரசாங்கத்திற்குத் தலைவர் என்ற முறையில்
காமராசர் சென்னை முதல்
அமைச்சராக இருக்கிறார். மக்களுக்கு
மேலும் மேலும் தொண்டுபுரிய அவர்
நீண்ட காலம் வாழ்வாரென
நான் நம்புகிறேன். -நேரு
“சென்ற இரண்டாயிரம்
ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத
மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது
ஏற்பட்டுள்ளன. இதற்குக் காரணம் நமது
காமராசர்தான். ஊர்தோறும் சாரம்
தொழில்வளம் ஏற்பட்டுள்ளன.
மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த
அதிசயத்தைச் சாதித்த நமது
காமராசரின் அறிவுத்திறனை மறுக்க
முடியுமா?" -பெரியார்.
“காமராசு தோற்றத்தில் மட்டுமின்றி
மதிநுட்பத்திலும் மக்களையும், அவர்களுடைய
பிரச்சினகளையும் புரிந்து
கொள்வதிலும் அப்பிரச்சினைகளுக்கு
தீர்வு காண்பதிலும் நாட்டம் மிகுந்த
தலைவராக விளங்குகிறார்.” -இந்திரா
காந்தி
"சத்தியமூர்த்திக்கு பின்னர் காமராசை
நான் பிள்ளையாகப் பார்த்திருக்கிறேன்.
நான் இன்னும் அப்படியே இருக்கிறேன்.
அவர் உயர்ந்திருக்கிறார். அன்று அவரை
நான் குனிந்து பார்த்தேன். இன்று
அண்ணாந்து பார்க்கிறேன்." -சிதம்பரம்
சுப்ரமண்யம்
"காமராசர் என் தலைவர், அண்ணா
என் வழிகாட்டி"- ம. கோ. இராமச்சந்திரன்
"தியாகச் சுடர், தமிழ் மக்களின்
நெஞ்சில் நீங்காத இடம்
பெற்றவர்."- கருணாநிதி
"காமராசர் அரசு பிற
மாநிலங்களுக்கு ஒரு வழிகாட்டியாக
இருக்கிறது. முற்போக்கு அரசியலிலும்,
சுதந்திரமான சர்க்காரிலும்,
நிர்வாகத்திறமையிலும் தமிழகம் ஒரு
வழிகாட்டியாக இருக்கிறது." - மத்திய
உணவு அமைச்சர் ஏ.எம்.தாமசு .

..............................

கல்வியின் நாயகன்
’காமராஜர்’- வரலாற்று
நாயகர்!
நம்மை வழிநடத்துவோரை தலைவர்கள் என்கிறோம்.
நாட்டை வழிநடத்துவோரை அரசியல் தலைவர்கள்
என்கிறோம், உலக அரசியலை அலசிப்
பார்த்தால் பல தலைவர்கள் தங்கள்
நாட்டை வழிநடத்துவதற்குப் பதிலாக
சொந்த வீட்டை மட்டும் வழிநடத்திக்
கொண்ட அவலம் தெரிய வரும்
சுயநலத்துக்காகவும் புகழுக்காகவும்
அரசியலை அசிங்கப்படுத்தும் அது போன்ற
தலைவர்களுக்கு மத்தியில் அத்திப்
பூத்தாற்போல்தான் ஒருசில பெரும்
தலைவர்கள் தோன்றுகின்றனர்.
பொதுநலத்தை உயிராகப் போற்றி
தங்கள் பணியை செவ்வெனச்
செய்கின்றனர். அரசியலில் லஞ்சம்,
ஊழல் அதிகாரத் துஷ்யப்பிரயோகம் ஆகியவை
மலிந்த ஒரு தேசத்தில் இப்படிப்பட்ட ஒரு
மாமனிதன் இருந்திருக்கிறார் என்பதே
ஆச்சரியமாக இருக்கிறது.
தொடக்கப்பள்ளி வரை கல்விகற்ற
ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரான
கதையைக் கேட்டிருக்கிறீர்களா! அவர் ஆங்கிலம்
தெரியாமல் அரசியல் நடத்தியவர்
மூத்தத் தலைவர்கள் அரசியலில் பதவி
வகிக்கக்கூடாது என்று ஒரு சட்டத்தை
கொண்டு வந்து அதற்கு முன்
உதாரணமாக தனது முதலமைச்சர் பதவியையே
துறந்தவர்.
'கல்வியே தேசத்தின் கண்களைத்
திறக்கும்' என்று கூறி பட்டித்
தொட்டிகளெல்லாம்
பள்ளிக்கூடங்களைக் கட்டியவர் ஏழைப்
பிள்ளைகளும் பள்ளிக்கு வரவேண்டும்
என்பதால் புரட்சிக்கரமான மதிய
உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தவர்.
தாம் முதலமைச்சராக இருந்தபோதும் வறுமையில்
வாடிய தன் தாய்க்கு சிறப்புச் சலுகைகள்
எதையும் தராதவர், சினிமாவில்தான்
இதுபோன்ற கதாப்பாத்திரங்களைப் பார்க்க
முடியும் என்று சொல்லுமளவுக்கு
தமிழகத்தில் நம்ப முடியாத
நல்லாட்சியைத் தந்து இறவாப்
புகழ்பெற்ற அந்த உன்னத தலைவர்
கர்ம வீரர் காமராஜர்.
இவரைப் போன்றத் தலைவர்கள் தமிழகத்தில்
தொடர்ந்திருந்தால் நமது
மாநிலம் தரணிப் போற்றும் அளவுக்கு
உயர்ந்திருக்கும் என்பது மறுக்க முடியாத
உண்மை. 1903 ஆம் ஆண்டு ஜீலை 15-ஆம்
நாள் தமிழ்நாட்டின் விருதுநகரில்
குமாரசாமி நாடார் சிவகாமி
அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார்
காமராஜர், ஏழ்மையான குடும்ப ஏழ்மையின்
காரணமாகவும், படிப்பு ஏறாத
காரணத்தினாலும் அவரால் ஆறு
ஆண்டுகள்தான் கல்வி கற்க முடிந்தது.
12-ஆவது வயதில் தனது தாய்மாமனின்
துணிக்கடையில் வேலைப் பார்த்தார். அப்போது
இந்தியா முழுவதும் சுதந்திரத் தீ
கொழுந்துவிட்டு எரிந்து
கொண்டிருந்தது. அவருக்கு 15
வயதான போது ஜாலியன் வாலாபாக்
படுகொலைப் பற்றிய செய்தி
அவரின் காதுக்கு எட்டியது. அதே நேரம்
காந்தி விடுத்த ஒத்துழையாமை இயக்க அழைப்பை
ஏற்று தனது 16-ஆவது வயதில் அவர்
காங்கிரஸ் கட்சியில் முழுநேர உறுப்பினராக
சேர்ந்தார். அன்றிலிருந்து பல ஆண்டுகள்
சவுகர்யம், பதவி, வசதி என்று பாராமல்
கட்சிக்காக கடுமையாக உழைத்தார்.
1930-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்
வேதாரண்யத்தில் நடந்த காந்தி அடிகளின்
உப்பு சத்தியாக்கிரகதில் கலந்து
கொண்டார். அதனால் அவருக்கு
2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அந்த
முதல் சிறை தண்டனைக்குப் பிறகு அவர் மேலும் 5
முறை சிறைவாசம் அனுபவித்திக்கிறார்.
கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் அவர் சிறையிலேயே
கழித்திருக்கிறார். 1940 ஆம் ஆண்டு பிப்ரவரி
மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின்
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்த பொறுப்பை அடுத்த 14
ஆண்டுகளுக்கு வகித்தார். 1952-ஆம் ஆண்டு
நாடாளுமன்ற உறுப்பினராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 2
ஆண்டுகளில் சென்னை மாநிலத்தின்
முதலமைச்சரானார்.
மிகவும் தயக்கத்தோடுதான் அந்த
பொறுப்பை ஏற்றுக்
கொண்டதாக வரலாற்றுக்
குறிப்புகள் கூறுகின்றன. இந்தியாவில்
ஆங்கிலம் தெரியாத ஒருவர் ஒரு
மாநிலத்தின் முதலமைச்சரானது அதுவே
முதன்முறை. ஆனால் ஆங்கிலம்
தெரியாமலும் 6 ஆண்டுகளே கற்ற
கல்வியுடனும் முதலமைச்சர் பொறுப்பை
ஏற்ற அவர்தான் அடுத்த 9 ஆண்டுகளுக்கு
தலை சிறந்த தலமைத்துவத்தை தமிழகத்திற்கு
வழங்கினார். அவரது கால கட்டத்தில்
இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில்
நிர்வகிக்கப்பட்ட மாநிலம் என்ற
பெருமையை பெற்றது தமிழ்நாடு
அப்படி அவர் என்ன செய்தார்?
அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே ஒருவர்
அரவனைத்த கதையை நீங்கள்
கேள்விப்பட்டிருக்கிறீர்களா? காமராஜர்
முதலமைச்சரான உடனேயே அதே பதவிக்கு
தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியம்,
எம்.பக்தவத்ஜலம் ஆகிய இருவரையும் தன்
அமைச்சரைவையில் சேர்த்துக்கொண்டு
அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவர்
தனது அமைச்சர்களுக்கு சொன்ன
அறிவுரை என்ன தெரியுமா? “பிரச்சினையை
எதிர்கொள்ளுங்கள் அவை
எவ்வளவு சிறியதாக இருந்தாலும்
பரவாயில்லை அதனை தீர்ப்பதற்கான
வழிகளைத் தேடுங்கள் நீங்கள் ஏதாவது
செய்தால் மக்கள் நிச்சயம் திருப்தி
அடைவார்கள்” என்பதுதான்.
அவர் நல்லாட்சியில் கல்வித்துறையிலும்
தொழிற்துறையிலும் தமிழ்நாடு
துரிதமான வளர்ச்சி கண்டது. மாநிலம்
முழுவதும் பல புதிய பள்ளிகளை கட்ட
உத்தரவிட்டார். பழைய பள்ளிகள் சீர்
செய்யப்பட்டு ஒவ்வொரு
கிராமத்துக்கும் ஒரு
தொடக்கப்பள்ளி, ஒவ்வொரு
பஞ்சாயத்துக்கும் ஒரு உயர்நிலைப் பள்ளி
இருப்பதை உறுதி செய்தார்.
எழுத்தறிவின்மையை போக்க வேண்டும்
என்பதற்காக பதினோராம் வகுப்பு வரை
இலவச கட்டாயக் கல்வியை
அறிமுகப்படுத்தினார். ஏழை சிறுவர்களின்
வயிறு காயாமல் இருக்க மதிய உணவு
வழங்கும் உன்னதமான திட்டத்தை அறிமுகம்
செய்தார்.
ஜாதி வகுப்பு, ஏழை பணக்காரன் என்ற
பேதத்தை ஒழிக்க விரும்பிய அவர் எல்லாப்
பள்ளிப் பிள்ளைகளுக்கும் இலவச சீருடையை
வழங்கினார். அவ்ர் ஆட்சியில்
தமிழ்மொழிக்கு நல்ல அங்கீகாரம்
கிடைத்தது. பள்ளிகளிலும் உயர்கல்வி
நிலையங்களிலும் தமிழைப் போதன
மொழியாக்கியதோடு அறிவியல்
தொழில்நுட்பப் பாடப்
புத்தகங்களும் தமிழில் வெளிவரச்
செய்தார். அரசாங்க
அலுவலகங்களுக்கு தமிழ் தட்டச்சு
இயந்திரங்கள் அறிமுகம்
செய்யப்பட்டன. நீதிமன்றங்களிலும்
வழக்குகளை தமிழில் நடத்த
ஊக்குவிக்கப்பட்டது.
காமராஜரின் ஆட்சியில் விவசாயம் நல்ல
வளர்ச்சி கண்டது. வைகை அணை, மணிமுத்தாறு
அணை, கீழ்பவானி அணை, பரமிக்குளம்
சாத்தனூர் அணை என்று பல அணைக்கட்டு
திட்டங்கள் அசுர வேகத்தில் நிறைவேற்றப்பட்டன.
தொழிற்துறையிலும் முத்திரை பதித்தார்
காமராஜர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி
சென்னை ஆவடி ராணுவ தளவாடத்
தொழிற்சாலை சென்னை
ஹிந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் என
பல பெரியத் தொழிற்சாலைகள்
தமிழகத்தில் உருவாயின. அவரது மாட்சிமை
பொருந்திய ஆட்சியைக் கண்டு இந்திய
பிரதமர் நேரு இந்தியாவிலேயே மிகச்சிறந்த
முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலம்
தமிழ்நாடு என்று பாராட்டினார்.
இப்படிப்பட்ட சிறந்த நல்லாட்சியை
வழங்கியதால்தான் தொடர்ந்து
மூன்றாவது முறையாக முதலமைச்சராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வளவும்
செய்த அவர் அடுத்து செய்த
காரியம் அரசியலுக்கே ஒரு புதிய
இலக்கணத்தை கற்றுத் தந்தது. காங்கிரஸ்
கட்சி அதன் துடிப்பையும் வலிமையும் இழந்து
வருவதாக உணர்ந்த காமராஜர்
எல்லா மூத்த காங்கிரஸ் தலைவர்களும்
தங்கள் அரசியல் பதவியை ராஜினாமா
செய்துவிட்டு நாட்டு நலனுக்காக
கட்சிப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஒரு
திட்டத்தை உருவாக்கி பிரதமர் நேருவிடம் பரிந்துரை
செய்தார்.
இரண்டே மாதங்களில் அந்த திட்டத்தை
ஏற்றுக்கொண்டது காங்கிரஸ்
பணிக்குழு. அந்தத் திட்டத்திற்கு 'காமராஜர்
திட்டம்' என்றே பெயரிடப்பட்டது. தனது
திட்டத்திற்கு முன் உதாரணமாக இருக்க
1963-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி தனது
முதலமைச்சர் பதவியை ராஜினாமா
செய்தார் அந்த அதிசய தலைவர்.
அவரைத் தொடர்ந்து லால் பகதூர்
சாஸ்திரி, ஜக்ஜிவன்ராம் முராஜிதேசாய்,
எஸ்கே.பட்டேல் போன்ற மூத்தத் தலைவர்களும்
பதவி விலகினர். அதே ஆண்டு அகில இந்திய
காங்கிரஸ் கட்சியின் தலைமைப்
பொறுப்பை தந்தார் ஜவகர்லால்
நேரு, அதற்கு அடுத்த ஆண்டே நேரு இறந்ததைத்
தொடர்ந்து இந்தியாவின் அடுத்த
பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை முன்
மொழிந்தார் காமராஜர்.
இரண்டே ஆண்டுகளில் சாஸ்திரியும்
மரணத்தைத் தழுவ அப்போது 48 வயது
நிரம்பியிருந்த நேருவின் மகள்
இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த
பிரதமராக்கினார் காமராஜர். அந்த
இரண்டு தலமைத்துவ மாற்றங்களையும் அவர்
மிக லாவகமாக செய்து முடித்ததால்
காமராஜரை ' கிங்மேக்கர்' என்று அழைத்தனர்
பத்திரிக்கையாளர்களும் மற்ற
அரசியல்வாதிகளும். தமிழ்நாட்டில்
மெச்சதக்க பொற்கால
ஆட்சியை தந்த காமராஜர் தனது கடைசி மூச்சு
வரை சமூகத்தொண்டு
செய்வதிலேயே குறியாக இருந்தார்.
1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள்
தனது 72-ஆவது அகவையில் காலமானார்.
அதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு உயரிய
“பாரத ரத்னா” விருது வழங்கி
கெளரவித்தது இந்திய அரசு. சமூகத்
தொண்டையே பெரிதாக
நினைத்ததால் தனக்கென்று ஒரு
குடும்பத்தை அமைத்துக் கொள்ளவில்லை
காமராஜர். ஆம் அவர் திருமணமே
செய்து கொள்ளவில்லை மேலும்
சிறு வயதிலேயே கல்வியை கைவிட்டதை நினைத்து
வருந்திய அவர் தான் சிறைவாசம்
சென்ற போதெல்லாம்
கொஞ்சம் கொஞ்சமாக
ஆங்கில நூல்களை வாசிக்க
கற்றுக்கொண்டார். ஒரு
மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போதும்
அவருடைய தாய் விருதுநகரில் அடிப்படை
வசதிகள் கூட இல்லாத ஒரு வீட்டில்தான்
வாழ்ந்தார் என்றால் ஆச்சரியமாக
இருக்கிறதல்லவா!
தன் குடும்பம் என்பதற்காக தன்
தாய்க்குக்கூட எந்த சலுகையும்
வழங்கியதில்லை. அவர் தனக்கென
வைத்திருந்த சொத்துக்கள் என்ன
தெரியுமா? சில கதர் வேட்டி சட்டைகளும்,
சில புத்தகங்களும்தான். பதவிக்குரிய
பந்தா எப்போதும் அவரிடம் இருந்ததே இல்லை
எந்த நேரத்திலும் எவரும் அவரை தடையின்றி
சந்திக்க முடியும். அதனால்தான் அவரை
கர்ம வீரர் என்றும், கருப்பு காந்தி என்றும்
இன்றும் போற்றுகிறது தமிழக வரலாறு.
அப்படிப்பட்ட ஒரு கன்னியமான
நேர்மையான இன்னொரு தலைவனை
தமிழக வரலாறு மட்டுமல்ல உலக
வரலாறும் இனி சந்திக்குமா என்பது
சந்தேகமே?
முறையான கல்விகூட இல்லாத ஒருவர்
நாட்டின் நலனை மட்டுமே குறிக்கோளாக
கொண்ட ஒருவர் ஒரு மாநிலத்தின்
முதலமைச்சராகி இவ்வுளவும்
செய்திருக்கிறார் என்றால்
“துணிந்தவனால் எதையும் செய்ய
முடியும் என்றுதானே பொருள்”
நல்லாட்சி என்ற வானம் வசப்பட்டதற்கு
அவருடைய சமதர்ம சிந்தனையும், நாடும்
மக்களும் நலம்பெற வேண்டும் என்ற
வேட்கையும், சுயநலமின்றி சமூக
நலத்தொண்டு செய்ய
வேண்டுமென்ற நல் எண்ணமும்தான்
காரணம். அதே காரணங்கள் நமக்கும்
வானத்தை வசப்படுத்த
உதவும். வாழ்க்கையில் நம்பிக்கையோடும்
விடாமுற்சியோடும் போராடினால் நமக்கும்
நாம் விரும்பும் வானம் வசப்படாமலா
போகும்!
“பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
ஒவ்வொரு மனிதனும்
சாதனையாளனே”

......................

எத்தனை பேருக்கு தெரியும் இந்த
உண்மை....
யார் சிறந்த மனிதர்? ஏது 100 ஆண்டு பேசும்
சாதனை?
காமராசரின் ஆட்சி காலம்:
ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக்
காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப்
பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில
மாதங்களில் ஆட்சிக்கு வந்தார்
காமராஜ். அதுதான் அவர்
முதன்முதலாக ஆட்சியில் அமர்வது.
ஆட்சியில் இருந்த
ராஜாஜி,அரசாங்கத்திடம்
பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000
பள்ளிகளைச் சிலமாதங்களில் ஆட்சிக்கு
வந்த காமராஜ் மீண்டும் திறக்கும்படி
உடனடியாக ஆணையிட்டார்.
அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள்
கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும்
மாணவர்கள் பட்டினியாக இருக்கக்
கூடாதென்று உணவும் அளிக்கத்
திட்டம் தீட்டி நிறைவேற்றினார்! நிதிப்
பற்றாக்குறை, அரசாங்க கஜானா
காலி என்று ராஜாஜி தமிழகத்தைப் பிச்சைக்
கார மாநிலமாக முன்னிருத்தினார்.
ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த
காமராஜ் அதே பிச்சைக்காரத் தமிழகத்தை
இந்தியாவிலேயே தொழில்
வளர்ச்சியில் இரண்டாவது
மாநிலமாகக் கொண்டுவந்து
நிறுத்தினார்!
1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2.பெரம்பலூர் ரயில்பெட்டித்
தொழிற்சாலை
3.திருச்சி பாரத் ஹெவி
எலெக்ட்ரிகல்ஸ்
4.ஊட்டி கச்சா பிலிம்
தொழிற்சாலை
5.ஆவடி கனரக வாகன
தொழிற்சாலை
6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
7.கிண்டி டெலிபிரின்டர்
தொழிற்சாலை
8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட்
தொழிற்சாலை
9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித்
தொழிற்சாலை
11.துப்பாக்கித் தொழிற்சாலை
12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
13.சேலம் இரும்பு உருக்காலை
14.பெரம்பூர் ரயில்பெட்டித்
தொழிற்சாலை
15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட்
தொழிற்சாலை
16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
17.சென்னை அனல்மின் நிலையம்
18.நீலகிரி கச்சாபிலிம்
தொழிற்சாலை
இவை மட்டுமா?
மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி
என்று இன்றைக்கும் விவசாயிகள்
பெரும்பங்கு
நம்பிக்கொண்டிருக்கும்
பாசனத்திட்டங்கள் காமராஜ்
உருவாக்கியவை!
அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது
3 சர்க்கரைத் தொழிற்சாலைகள்.
அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14
இன்னும் சொல்லவா?
159 நூல் நூற்பு ஆலைகள்
4 சைக்கிள் தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலைகள்
21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
2 சோடா உற்பத்தித்
தொழிற்சாலைகள்
ரப்பர் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை
அலுமினிய உற்பத்தித்
தொழிற்சாலை
கிண்டி,விருதுநகர்,அம்பத்தூர், ராணிப்பேட்டை,
மதுரை,மார்த்தாண்டம், ஈரோடு,காட்பாடி,
தஞ்சாவூர்,திருச்சி...என்று.
தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள்
உருவாக்கினார்.
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்
தோழர்களே...! காமராஜ் ஆட்சி புரிந்தது 9
ஆண்டுகள்தான்..! (பட்டியலில் இன்னும்
சில விடுபட்டுள்ளன) அவர் 9 ஆண்டுகள்
ஆட்சிக் காலத்தில் செய்த இந்தச்
சாதனைகளில்... இந்தியாவிலெயே
தொழில்வளர்ச்சியில்
இரண்டாவதாகக் கொண்டு
வந்த காமராஜர் செய்தது
சாதனை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக