வெள்ளி, 30 செப்டம்பர், 2016

மகாத்மா காந்தி பிறந்த தினம் அக்டோபர் 02.

மகாத்மா காந்தி பிறந்த தினம் அக்டோபர் 02.

மோகன்தாசு கரம்சந்த் காந்தி
( Mohandas Karamchand Gandhi , குசராத்தி :
મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 -
ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி
என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தை
வெற்றிகரமாக தலைமையேற்று
நடத்தியதன் காரணமாக இவர்
" விடுதலை பெற்ற இந்தியாவின்
தந்தை " [1] என்று அழைக்கப்படுகிறார்.
சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது
அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு
விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில
நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு
வழிகாட்டியாக அமைந்தது.
இவரது பிறந்த நாள் இந்தியாவில்
காந்தி ஜெயந்தி என்று
கொண்டாடப்படுகிறது.
வாழ்க்கை
இளமை
மோகன்தாஸ் காந்தி 2 அக்டோபர் 1869
அன்று இந்திய நாட்டின் குஜராத்
மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில்
பிறந்தார். இவரது தாய் மொழி
குஜராத்தி . தந்தையார் பெயர்
கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய்.
காந்தி தனது 13ஆம் வயதில் தம்
வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார்.
பின்னாளில் இருவரும் நான்கு ஆண்
மகன்களைப் பெற்றெடுத்தனர்:
ஹரிலால் (1888), மணிலால் (1892),
ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900).
தனது 16வது வயதில் காந்தி தன் தந்தையை
இழந்தார்.
இளமை வயதில் காந்தியடிகள்,
வயது 7, 1876
பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான
மாணவனாகவே காணப்பட்டார்
காந்தி. தனது 18ஆம் வயதில்
பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர்
(barrister) எனப்படும் வழக்குரைஞர்
படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து
சென்றார். தன் படிப்பை
வெற்றிகரமாக முடித்து தாயகம்
திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம்
வழக்குரைஞராக பணியாற்றினார். இது
வெற்றிகரமாக அமையாததால் தன்
அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட்டிற்கு
சென்ற காந்தி, அங்கேயுள்ள
நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின்
படிவங்களை நிரப்பும் எளிய பணியில்
ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த
ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய
தகராறால் இவ்வேலையும் பறிபோனது.
இச்சமயத்தில்
தென்னாப்பிரிக்காவில் தன்
தகுதிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக
அறிந்த காந்தி, 1893 ஏப்ரல் மாதம்
அப்துல்லாஹ் அன் கோ எனும் இந்திய
நிறுவனம் ஒன்றின் உதவியுடன் உடனே
அங்கு பயணமானார்.
தென்னாப்பிரிக்காவில்
இச்சமயம் தென்னாப்பிரிக்காவில்
ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும்
இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது.
இதுவரை அரசியல் ஈடுபாடில்லாது
தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே
கவனித்து வந்த இளைஞராயிருந்தார்
காந்தி. தென்னாப்பிரிக்காவில்
அவருக்கேற்பட்ட அனுபவங்கள்,
பின்னாளில் அவரை ஒரு மாபெரும்
அரசியல் சக்தியாக உருவாக்க
உதவியது.
அங்குள்ள நாட்டல் (Natal)
மாகாணத்தின் டர்பன் (Durban) நகரில்
உள்ள நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய
வழக்கப்படி தலைப்பாகை அணிந்து
வழக்காடச்சென்ற காந்தியிடம்
அத்தலைப்பாகையை விலக்குமாறு
நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார்.
காந்தியோ இவ்வுத்தரவை எதிர்க்கும்
பொருட்டு நீதிமன்றத்தை விட்டு உடனே
வெளியேறினார். பிறகொரு
நாள் பிரிட்டோரியா (Pretoria)
செல்வதற்காக தகுந்த
பயணச்சீட்டுடன் தொடருந்தில்
முதல் வகுப்புப் பெட்டியில் பயனம்
செய்த காந்தி, அவர் ஒரு
வெள்ளையர் இல்லை என்ற
காரணத்திற்காக, ஆங்கிலேய அதிகாரி
ஒருவரால் (Pietermaritzburg)
தொடருந்து நிலையத்தில்
பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.
வெள்ளையர் அல்லாத ஒரே
காரணத்தால் இது போன்று பல
இன்னல்களை காந்தி அனுபவித்தார்.
இதன் மூலம்
தென்னாப்பிரிக்காவின் கறுப்பின
மக்களும் அங்கே குடியேறிய இந்தியர்களும்
படும் இன்னல்களை காந்தி
நன்குணர்ந்தார்.
தென்னாப்பிரிக்காவில்
காந்தி (1906)
தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து
இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது,
அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப்
பறிக்கும் தீர்மானத்தை நாட்டல் சட்டப்பேரவை
இயற்ற இருப்பதாக செய்தித்தாளில்
படித்தறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி
அவரது இந்திய நண்பர்களிடம்
அறிவுறுத்தினார். அவர்களோ, தங்களிடம்
இதற்குத் தேவையான சட்ட அறிவு
இல்லையெனக் கூறி, காந்தியின்
உதவியை நாடினர். காந்தியும் அவர்கள்
வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம்
திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு
இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில்
ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி
பெறாவிட்டாலும் அங்குள்ள
இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை
ஏற்படுத்தினார். பிறகு 1894ம் ஆண்டு
நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற
பெயரில் கட்சி தொடங்கி
அதற்கு அவரே
பொறுப்பாளரானார். இதன்
மூலம் நாட்டல் மாகாணத்திலிருந்த
இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி,
அவர்களை தங்கள் உரிமைக்காக
குரலெழுப்ப ஊக்கப்படுத்தினார்.
1906ஆம் ஆண்டு ஜோகார்னஸ்பேக் நகரில்
நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக
சத்தியாகிரகம் எனப்படும்
அறவழிப்போராட்டத்தை பயன்படுத்தினார்.
அகிம்சை , ஒத்துழையாமை,
கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல்
ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப்
போராட்டத்தின் பண்புகளாகும். இந்த
காலகட்டத்தில் காந்தியும் அவருடன்
சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை
சென்றனர். தொடக்கத்தில்
ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக
அடக்கியது போல் தோன்றியது. பின்னர்
பொதுமக்களும் ஆங்கில
அரசாங்கமும் இவர்களின் உண்மையான
மற்றும் நேர்மையான வாதங்களை
புரிந்துகொண்டு இவர்களுடைய
கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது.
இவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின்
மூலம் தென்னாப்பிரிக்க வாழ்
இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும்
முயற்சியில் வெற்றி கண்ட காந்தி
தாயகம் திரும்பினார்.
மும்பை துறைமுகத்தில்
1915 -ம் ஆண்டு ஜனவரி 9 ம் தேதி மும்பை
துறைமுகத்தில் காந்தி இறங்கியபோது உடையில்
அடியோடு உருமாறியிருந்தார். தழையத்
தழையக் கச்சமிட்டுக் கட்டிய மில் வேட்டி,
தொள தொள ஜிப்பா,
அங்கவஸ்திரம், தலையில் பெரிய
முண்டாசு சகிதம் ஒரு கத்தியவாரி
விவசாயி உடையில் காட்சியளித்தார்.
அப்பல்லோ பந்தர் துறைமுகத்தில் இறங்கிய
காந்தி - கஸ்தூரிபா தம்பதி வெளியே
வந்தபோது ஒரு கோலாகல வரவேற்பளிக்க,
மிதவாத அரசியல் தலைவர்
கோபாலகிருஷ்ண கோகலே ஏற்பாடு
செய்திருந்தார். மேல் விரிப்பு திறந்த
மோட்டார் காரில் காந்தியையும் அவரது
மனைவியையும் அமரச் செய்து
ஊர்வலமாக இட்டுச் சென்றார்.
(தற்போது இந்நாளை நினைவு கூர்ந்து
வெளிநாடுவாழ் இந்தியர் நாள்
கொண்டாடப்படுகின்றது) [2]
இந்தியாவுக்கு வந்து சேர்ந்த மூன்றாம்
நாள், 1915 ஜனவரி 12 அன்று பம்பாய்
பெட்டார் சாலையில் மவுண்ட்
பெடிட் வளாகத்தில் காந்திஜிக்கு
வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில்
தென்னாப்பிரிக்காவில் காந்தி
தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி
இந்திய மக்கள் அறிந்திருந்தனர்.
காந்திக்கு, கோபால கிருஷ்ண கோகலே ,
ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு
ஏற்பட்டது. காந்தி இந்திய தேசிய
காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து
ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப்
போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார்.
1924ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ்
இயக்கத்தின் தலைவராக காந்தி
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல
மாற்றங்களை அறிமுகப்படுத்தி
இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார்.
அறப்போராட்ட வழிமுறைகளையும் சுதேசி போன்ற
கொள்கைகளையும் வலியுறுத்தி
காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின்
மாபெரும் விடுதலை
இயக்கமாக்கினார்.
உப்பு சத்தியாகிரக தண்டி
யாத்திரை (மார்ச் 1930)
பிப்ரவரி 1930ல் ஆங்கிலேய அரசு,
இந்தியாவில் இந்தியர்களால்
தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது.
மேலும், இந்தியாவில் இந்தியரால்
தயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ்
அரசாங்கத்தை தவிர வேறு யாரும் விற்கக்
கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது. இதை
விலக்கிக் கொள்ளுமாறு காந்தி
பிரிட்டிஷாரிடம் விடுத்த கோரிக்கை
நிராகரிக்கப்பட்டது. சத்தியாகிரக முறையில்
இதை எதிர்க்க முடிவெடுத்த காந்தி
மார்ச் 2, 1930 அன்று 78
சத்தியாகிரகிகளுடன்
அகமதாபாத்திலிருந்து குஜராத்
கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல்
நடைப் பயணத்தை துவக்கினார். 23 நாட்கள்
நடைப் பயணத்திற்குப் பிறகு, தன்
சகாக்களுடன் தண்டி கடற்கரை வந்து சேர்ந்த
காந்தி, அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி
உப்பு தயாரித்து பிரிட்டிஷ் சட்டத்திற்கு
எதிராக பகிரங்கமாக
பொதுமக்களுக்கு விநியோகித்தார்.
மேலும் இந்தியாவில் கடலோரத்தில் இருந்த
அனைத்து இந்தியர்களையும் இது போல் உப்பு
தயாரித்து பயன்படுத்தச்
சொன்னார். இந்தியாவின் பல
இடங்களில் இது போல் நடந்தது; காந்தி
உட்பட பல்லாயிரக் கணக்கான
இந்தியர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.
காந்தி-ஜின்னா (காங்கிரஸ்-
முஸ்லீம்லீக் பேச்சுவார்த்தை)
காந்தியடிகளுடன் முகமது அலி
ஜின்னா
வேறு வழியில்லாமல் பிரிட்டிஷ்
அரசாங்கம் காந்தியுடன் பேச்சு வார்த்தை
நடத்தி இறுதியில் வரியை நீக்கிக்
கொண்டது. உப்பு சத்தியாகிரகம்
என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு இந்திய
விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு
திருப்புமுனையாக கருதப்படுகிறது. 1942ல்
நடைபெற்ற வெள்ளையனே
வெளியேறு போராட்டத்திலும் காந்தி
பெரும் பங்கு வகித்தார்.
இது போன்ற பல போராட்டங்களின் முடிவில்
1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள்
இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது.
ஆனால் காந்தியோ, சுதந்திர
கொண்டாட்டங்களில் கலந்து
கொள்ளாமல், இந்தியா-
பாகிஸ்தான் பிரிவினையை நினைத்து மனம்
வருந்தி துக்கம் அனுசரித்தார்.
உண்ணாநிலைப்
போராட்டங்கள்
முதன்மைக் கட்டுரை: காந்திஜியின்
உண்ணாநிலைப் போராட்டப் பட்டியல்
காந்திஜி இந்திய விடுதலைக்கும் , சமூக நீதியை
வலியுறுத்தியும், சமய நல்லிணக்கதிற்கும்,
தீண்டாமைக்கு எதிராகவும், முழு
மதுவிலக்கு கோரியும் 17 முறை, 139 நாட்கள்
உண்ணாநிலைப் போராட்டங்கள்
மேற்கொண்அவற்றி அவற்றில்
மூன்று முறை 21 நாட்கள் கொண்ட
தொடர் உண்ணாநிலைப்
போராட்டங்களை நடத்தினார்.
மகாத்மா
காந்திக்கு “மகாத்மா” என்னும் பட்டம்
அளித்தவர் இரவீந்திரநாத் தாகூர்
மறைவு
பிர்லா மாளிகை (காந்தி சமிதி)
மகாத்மா காந்தியின் அஸ்தி
அலகாபாத் சங்கமத்தில் கரைப்பு
காட்சி ஜவகர்லால் நேரு,
மகாத்மா காந்தியின்
புதல்வர்கள் ராம்தாஸ்
(கலசத்துடன்) மற்றும் தேவ்தாஸ்
ஆகியோருடன்
மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு ,
ஜனவரி 30 ஆம் நாள் மாலை (5:17 மணி)
தன் வாழ்நாளில் இறுதியாக 144
நாட்கள் தங்கியிருந்த டில்லி பிர்லா
மாளிகை காந்தி சமிதி தோட்டத்தில்
நாதுராம் கோட்ஸே ஆல்
சுட்டுக்கொலை
செய்யப்பட்டார்.
நினைவு நாள்
ஜனவரி 30 இந்தியாவில் தியாகிகள்
தினமாக நடத்தப்படுகிறது.
கொள்கைகள்
பகவத் கீதை, ஜைன சமய
கொள்கைகள்,
லியோ டால்ஸ்டாயின்
எழுத்துக்கள்
போன்றவற்றால்
ஈர்க்கப்பட்ட காந்தி,
சத்தியம், அகிம்சை
ஆகிய
கொள்கைகளை
தன் வாழ்நாள்
முழுவதும் விடாமல்
கடைபிடித்தார். அசைவ
உணவுகளை தவிர்க்கும்
வைணவ குடும்பத்தில்
பிறந்த காந்தி, சிறு வயதில் புலால்
உணவை சிறிது உண்டாலும், பின்னர் சைவ
உணவையே, குறிப்பாக பழங்கள், கடலை,
ஆட்டுப்பால் போன்றவற்றையே உண்டு
வாழ்ந்தார். சைவ உணவே அசைவ உணவை
விட மனித உடலுக்கு ஆரோக்கியமானது
என்று தன் சோதனைகள் மூலம் அறிந்ததாக
அவர் குறிப்பிட்டுள்ளார். 1902 ஆம்
ஆண்டுக்குப் பிறகு, பிரம்மச்சரிய விரத்தையும்
கடைபிடித்தார். இவர் தனது காமத்தை
வெல்லும் பொருட்டு பல்வேறு
சோதனைகளைச் செய்து வந்தார். அவை
பெரும் விமரிசனத்திற்கு
உள்ளாகின.அவரது பரிசோதனைகளை அவரது
மனைவியின் அனுமதியுடன் தான்
செய்தார். இவை இன்றளவும்
சரியாகப் புரிந்து
கொள்ளப்படாமல்
விமர்சிக்கப்படுகின்றன. வாரத்திற்கு
ஒருநாள் மௌன விரதம்
மேற்கொண்டார்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து
இந்தியா திரும்பியவுடன், மேல்நாட்டு உடை
அணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே
அணியத் தொடங்கினார்.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் காதி
உடையையே இந்திய மக்கள் உடுத்தவேண்டும்
என்று அறிவுறுத்தினார்.
வேறுபாடுகள்
தாழ்த்தப்பட்டவர்களும் கோயிலுக்கு
செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்
என போராட்டங்கள் எழுந்த
பொழுது, அனைவரும் இந்து மதத்தின்
அறத்தைப் பேண வேண்டும் என காந்தி
சொன்னார் என அம்பேத்கர் எழுதி
உள்ளார்.
திருநெல்வேலி சைவ சித்தாந்த குருகுலப்
பள்ளியில், சமூகத்தில் உயர்ந்த
வகுப்பினர்க்கு தனி விடுதி, மற்றவர்க்கு தனி
விடுதி என கடைபிடிக்கப்பட்டதை, இந்து மத
அறத்தின்படி சரி என காந்தி
வாதிட்டார். இதனால் ஏற்பட்ட கருத்து
வேறுபாடுகளே, ஈ. வெ. இராமசாமி
நாயக்கரை பேராய கட்சியிலிருந்து (congress
party) வெளியேற முடிவெடுக்க
தள்ளியது. இதனை ஒட்டி, பெங்களூரில்
ஈ. வெ. இராமசாமி
நாயக்கருக்கும் , காந்திக்கும் பேச்சு
வார்த்தைகள் நடைபெற்றது. இக்
கலந்தாய்விலும், காந்தி இந்து மத
அறத்தின் தேவையை வலியுறுத்தியதால் ஈ.
வெ. இராமசாமி நாயக்கர்
பேராய கட்சியிலிருந்து வெளியேற
முடிவெடுத்தார்  .
சுயசரிதை
காந்தி குஜராத்தி மொழியில்
எழுதிய சுயசரிதை, சத்திய சோதனை என்ற
பெயரில் தமிழ் மொழியிலும்
An Autobiography: The Story of My Experiments
with Truth என்ற பெயரில்
ஆங்கிலத்திலும்
மொழிபெயர்க்கப்
பட்டுள்ளன.
தமிழ்நாடு நினைவுச்
சின்னங்கள்
மகாத்மா காந்தி நினைவு
மண்டபம் கன்னியாகுமரி
மகாத்மா காந்தி
அருங்காட்சியகம்- மதுரை
தமிழ்நாடு அரசு காந்திக்கு அவரது
தியாகத்தைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில்
சென்னை கிண்டியில் காந்தி மண்டபம்
மற்றும் அருங்காட்சியகம் அமைத்துள்ளது.
மதுரையில் இராணி மங்கம்மாள்
காலத்தில் அமைக்கப்பட்ட கட்டிடத்தில்
1959 முதல் காந்தி அருங்காட்சியகம்
செயல்பட்டு வருகிறது.  இங்கு
அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை
வரலாறு தொடர்பான புகைப்படக்
கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. முக்கடலும்
சங்கமிக்கும் கன்னியாகுமரிக் கரையில்
நினைவு மண்டபம் அமைத்துள்ளது. இங்கு
அண்ணல் காந்தியடிகளின் மார்பளவு
சிலை ஒன்று வளாகத்திலும்,
மற்றொன்று
அருங்காட்சியகத்திலும்
அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரம் பேர்கள்
அமரக்கூடிய அளவில் அரங்கம்
அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணல்
காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு
தொடர்பான புகைப்படங்கள்
மற்றும் பொருட்கள்
கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ள
அருங்காட்சியகமும் நூலகமும் இங்குள்ளது.

மகாத்மா காந்தி
பயன்படுத்திய
பொருள்கள்
ஏலம்
இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தி
பயன்படுத்திய சர்க்காவும், அவரது கடைசி
உயிலும் 2013இல் லண்டனில் ஏலத்தில்
விடப்பட்டது.அவரது சர்க்கா 1,10,000
பவுண்டுக்கும் (சுமார் ரூபாய் ஒரு கோடி),
அவரது கடைசி உயில் 20,000 பவுண்டுக்கும்
(சுமார் ரூபாய் 18 லட்சம்) ஏலம் போனது.
இந்த ஏலம் பற்றி முன்னமே அறிந்திருந்தும்
எந்த தடையும் இந்திய அரசு
ஏற்படுத்தாதலால், அவை தனி நபர் வசம்
செல்லும் மதிப்பற்ற நிலை அந்தப்
பொருட்களுக்கு ஏற்பட்டது. [12]
விமர்சனங்கள்
பகத்சிங்கின் தூக்குதண்டனை
பகத் சிங் கின் தூக்குதண்டனையின் போது
வெள்ளையர்கள் கேட்ட தூக்குதண்டனை
அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி
கையொப்பம் இட்டார். [13] தி
லெஜன்ட் ஆஃப் பகத்சிங் என்ற இந்தி
திரைப்படத்தில் இந்த தண்டனைக்கான
ஒப்பீட்டு பத்திரத்தில்(காந்தி இர்வின் பேக்ட்)
கையெழுத்திட்டதற்காக காந்தியை
மக்கள் கடுமையாக விமர்சிப்பது போலவும்
காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அகிம்சையை
பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும்
தூக்குதண்டனைக்கு ஒப்புதல் அளிக்கலாம்?
என்பது போல கருத்துகள் மக்களால்
பேசப்பட்டன.
கறுப்பின மக்களுக்கு எதிரான
இனவாதம்
தென் ஆப்பிரிக்க காந்தி: பேரரசின்
பல்லக்குப் பணியாளன் (The South African
Gandhi: Stretcher-Bearer of Empire) என்ற
நூலும் தெய்வீக முகமூடிக்குப்
பின்னால் உள்ள காந்தி (Gandhi Behind
the Mask of Divinity) என்ற நூலும் பிற பல
கட்டுரைகளும் காந்தியை அவரது தென்
ஆப்பிரிக்க எழுத்துக்களையும்
செயற்பாடுகளையும் முன்வைத்தும்
கறுப்பின மக்களுக்கு எதிரான
இனவாதியாகவும், வெள்ளை
அரசுக்கு சார்பான ஆரிய
பேரினவாதியாகவும் சித்தரிக்கின்றன,
விமர்சிக்கின்றன. [14] எ.கா நற்றல் (Natal)
நாடுளுமன்றத்துக்கு 1893 ஆம் ஆண்டு
காந்திய எழுதிய ஒரு கடிதத்தில்
பின்வருமாறு கூறுகிறார்: [15]
“ I venture to point out that
both the English and the
Indians spring from a
common stock, called the
Indo-Aryan. … A general
belief seems to prevail in the
Colony that the Indians are
little better, if at all, than
savages or the Natives of
Africa. Even the children are
taught to believe in that
manner, with the result that
the Indian is being dragged
down to the position of a
raw Kaffir.” ”
“ இந்தியர்களும்
ஆங்கிலேயர்களும் இந்தோ-
ஆரியர்கள் என்ற ஒரே
பொதுவான
மூலத்தில் இருந்து
வந்தவர்கள்.
...கொலனிகளில்
இந்தியர்கள் ஆப்பிரிக்க
காட்டுமிராண்டிகளை விட
மேம்பட்டவர்களாக
கருதப்படவில்லை.
குழந்தைகளும் இதனை நம்ப
கற்பிக்கப்படுகிறார்கள்.
இதனால் இந்தியர்கள்
பச்சைக் காப்புலிகளின்
நிலைக்கு கீழே
இழுக்கப்படுகிறார்கள். ”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக