புதன், 28 செப்டம்பர், 2016

உலக இருதய தினம் செப்டம்பர் 29.

உலக இருதய தினம் செப்டம்பர் 29.

இருதயம் மனித உறுப்புகளில்
மகத்தான பங்கான
பங்காற்றுகிறது. 24
மணிநேரமும் உறங்காமல்
இயங்குவதால்தான்
நம்மால் நிம்மதியாக உறங்கி
எழுந்து அன்றாட பணிகளை
செய்யமுடிகிறது. நமக்கான
அயராது உழைக்கும் இதயத்தின்
ஆரோக்கியத்தைப் பற்றி நாம்
கவலைப்படுவதில்லை,
கண்டதையும் சாப்பிடுகிறோம்
தேவையற்ற பாரங்களை மனதில்
ஏற்றிக்கொள்கிறோம் விளைவு
இருதயம் நோய்க்கு
ஆளாகிவிடுகிறது.
மாரடைப்பு ஏற்பட்டு
இருதயத்திற்கு இடைஞ்சல்
என்றால் மட்டுமே நாம்
அதைப்பற்றி
கவலைப்படுகிறோம். இதயத்தைப்
பாதுகாக்கவும் இதயநோய் பற்றி
விழிப்புணர்வு ஏற்படுத்தவும்
செப்டம்பர் 29 ம் நாள் உலக இருதய
தினமாக
அனுஷ்டிக்கப்படுகிறது.
இதய நோயிலிருந்து
தப்பிக்க வல்லுனர்கள் கூறும்
வழிமுறைகள்:
*அவை, தொலைக்காட்சி
பார்ப்பதை குறைக்க
வேண்டும்; தொலைக்காட்சி
முன் குறைந்த நேரத்தையே
செலவிட வேண்டும்.
நாளொன்றுக்கு இரண்டு மணி
நேரத்திற்கு மேல்
தொலைக்காட்சியை
பார்ப்பவர்களுக்கு 125 சதவீதம்
மாரடைப்பு ஏற்படும் அபாயம்
உள்ளது.
*உயர் ‌புரூக்டோஸ்
உணவுகளை தவிருங்கள்;
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
மற்றும் குளிர்பானங்களில் உள்ள
உயர் ட்ரை கிளிசராய்ட் அளவு
மாரடைப்பு அபாயத்தை
அதிகரிக்க வாய்ப்புள்ளது.
*உப்பு அதிகளவில்
பயன்படுத்துவதால் உடலில்
ரத்தக்கொதிப்பு அதிகரிக்கும்.
இதன் மூலம் இதய நோய் ஏற்படும்
வாய்ப்பு அதிகரிக்கிறது.
*ரத்தத்தில் கொலஸ்ட்ரால்,
சர்க்கரை, பிபி போன்றவற்றின்
அளவை சீரான அளவில்
வைத்திருக்க வேண்டும்.
*காய்கறிகள் அதிகளவில்
எடுத்துக்கொள்ள வேண்டும்.
*கொழுப்பு இல்லாத இறைச்சி,
மீன், ஆலிவ் எண்ணெய்,
மக்காச்சோளம், சூரிய காந்தி
எண்ணெய் வகைகள்
இருதயத்துக்கு
பாதுகாப்பளிக்கின்றன.
*புகையை தவிர்க்கவும்
; புகை பழக்கம் இதயத்தின்
தமனிகளை பாதித்து
குறுகலாக செய்கிறது. புகை
இலையில் உள்ள கார்பன்
மோனாக்சைடு ரத்தத்தில்
ஆக்சிஜன் அளவை
குறைக்கிறது. இதனால் ரத்த
அழுத்த பிரச்சனை ஏற்படும்,
இவை நாளடைவில் பெரிய
பாதிப்பை கொண்டுவரும்.
மேலும் புகை பிடிப்பவரின்
அருகில் இருப்பதையும்
தவிர்பது அவசியம்.
*நல்ல தூக்கம்; தூக்கமின்மை
என்பது மனதளவிலும்
உடலளவிலும் உபாதைகளை
கொண்டு வரும். மேலும் இருதய
தமனிகளில் கால்சியம் அளவை
அதிகரிக்க செய்யும்.
இதனால் ‌பிளேக், பக்கவாதம்
மற்றும் மாரடைப்பு ஏற்படும்.
*உடற்பயிற்சி அவசியம்;
ஒவ்வொரு நாளும் ஒரு அரை
மணி நேரம் உடற்பயிற்சி செய்து
வந்தாலே இருதய நோய்
வருவதிலிருந்து 60 சதவீதம்
தப்பிக்க முடியும்
*ஒரு நாளுக்கு சராசரியாக 10
ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும்.
*சிரிக்கும் பழக்கத்தை
வளர்த்துக்கொள்வது, இதய
நோயிலிருந்து
விடுபடுவதற்கு சிறந்த மருந்து.

***********************************
இன்றைய சூழலில் இருதய
நோயால்
பாதிக்கப்படுவோரின்
எண்ணிக்கை அதிகரிக்கிறது.
உலகில் இருதய
நோய்களால் தான் அதிக
உயிரிழப்புகள்
ஏற்படுகின்றன. ஆண்டுதோறும்
1 கோடியே 73
லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
இது 2030ல் 2 கோடியே 30
லட்சமாக உயரும்
எனவும் உலக சுகாதார
நிறுவன
ஆய்வு தெரிவிக்கிறது. இதில்
80 சதவீத
மாரடைப்புகள், தடுக்கக்
கூடியவை.
இருதயத்தை பாதுகாப்பது
பற்றி
விழிப்புணர்வு ஏற்படுத்தும்
விதமாக செப்டெம்பர் கடைசி
ஞாயிறு (செப்டெம்பர் 29)
உலக இருதய தினமாக
கடைப்பிடிக்கப்படுகிறது.
இரவுப் பணி, முறையற்ற
உணவு பழக்கம், அதிக
நேர பணி, குடும்பத்தில்
நிம்மதியின்மை போன்றவை
இருதய நோய் சாத்தியக்
கூறுகளை அதிகரிக்கின்றன.
உலகில்
மாரடைப்பால் இறப்பவர்களில், 20
சதவீதம் பேர்
புகை பிடிப்பவர்கள்.
மற்றவர்களை விட,
புகை பிடிப்பவர்களுக்கு
இருதய நோய் வரும்
வாய்ப்பு இரண்டு மடங்கு
அதிகம்.
புகை பிடிப்பதால்
இருதயத்துக்கு செல்லும்
ஒட்சிஜன் அளவு குறைகிறது.
புகை பிடிப்பவர்கள்,
வெளியிடும்
புகையினால் அருகில்
உள்ளவர்களும்
பாதிக்கப்படுகின்றனர். உடல்
பருமன்
ஆதலாலும், சர்க்கரை நோய்
காரணமாகவும்
இருதய நோய் ஏற்படலாம்.
சர்க்கரை நோயால்
இருதயத்துக்கு செல்லும்
ரத்தக்குழாய்கள்
சேதமடைவதால் மாரடைப்பு
ஏற்படலாம்.
சர்க்கரை நோயாளிகளில் 75
சதவீதம்
பேருக்கு இக்குறைபாடு
இருக்கிறது.
* புகை பிடிப்பதற்கு நோ
சொல்லுங்கள்.
* உப்பு அதிகம்
பயன்படுத்துவதால்
ரத்தக்கொதிப்பு அதிகரிக்கும்.
இதன் மூலம்
இதய நோய் வாய்ப்பு
அதிகரிக்கிறது.
* ரத்தத்ததில் கொலஸ்ட்ரால்,
சர்க்கரை, ரத்த
அழுத்தம் போன்றவற்றை சீராக
வைத்திருக்க
வேண்டும்.
* யோகா மற்றும் தியானம்
செய்வது நல்லது. உடல் எடை
அதிகரிக்காமல்
பார்த்துக்கொள்ள
வேண்டும், தினமும்
குறைந்தது 30
நிமிடமாவது உடற்பயிற்சி
செய்வது அவசியம்.
முறையான உடற்பயிற்சி,
சரியான
உணவு பழக்கம், உரிய
முறையில் மருத்துவம்
எடுத்துக்கொள்வது இருதய
நோயிலிருந்து
பாதுகாக்கும்.
* முடிந்தளவு எஸ்கலேட்டர்,
லிப்ட்
ஆகியவற்றை பயன்படுத்தாமல்,
மாடிப்படிகளை பயன்படுத்த
வேண்டும்.
ஒரு நாளுக்கு சராசரியாக, 10
ஆயிரம் அடிகள்
நடக்க வேண்டும். * காய்கறிகள்,
அதிகம் எடுத்துக்கொள்ள
வேண்டும்.
மதுப்பழக்கத்தை கைவிட
வேண்டும்.
கொழுப்பு இல்லாத இறைச்சி,
மீன்,
பருப்பு வகைகள், ஆலிவ்
எண்ணெய், மக்காச்சோளம்,
சூரிய காந்தி எண்ணெய்
ஆகியன,
ஓய்வின்றி உழைக்கும்
இருதயத்துக்கு
பாதுகாப்பளிக்கின்றன.
* சிரிக்கும் பழக்கத்தை
வளர்த்துக்கொள்வது,
இதய நோயிலிருந்து
விடுபடுவதற்கு சிறந்த
மருந்து.
இதயத்தை பாதுகாப்பது
எப்படி? இதயத்திற்கு இதம் தரும்
உணவுகள்,
மலர்களை பார்க்கும் போதும்,
மழலைகளைப்
பார்க்கும் போதும், மனதும்,
முகமும்
சிரிக்கும். ஓயாது துடிக்கும்
நம் இதயமும்,
சிரிக்க வேண்டாமா? இன்று
உலக இதய தினம்.
இதயம் இளமையாக சிரிக்க
வேண்டுமா? இதயத்திற்கு இதம்
தரும்
உணவுகளை சொல்கிறார்;
மதுரை சித்தா டாக்டர்
ஜெ.ஜெய
வெங்கடேஷ்.காதலையும்,
கோபத்தையும்
சமாளித்து துடிக்கும் இதயம்,
புகையாலும்,
மதுவாலும், எண்ணெய்
உணவாலும் வலியால்
துடிக்கிறது. "அட்ரினலின்,
தைராக்ஸின்'
ஹார்மோன்களால், கெட்ட
கொழுப்பு, அதிக ரத்த
அழுத்தம், ரத்தக் குழாய்
சுருக்கம்
போன்றவற்றால், இதயம்
சற்று பாதிக்கப்படுகிறது.
தினம் ஒருவேளை,
30 கிராம் தயிர் சாப்பிடுவது
நல்லது. பாலில்
உள்ள சத்துக்களை விட, தயிரில்
அதிக சத்துக்கள் உள்ளன.
சிவப்பு நிற பசலை,
பொன்னாங்கன்னி, கரிசாலை,
தண்டுக்கீரை, பீட்ரூட், கேரட்
ஆகியவற்றில்,
இதயத்தை பாதுகாக்கும்,
"ஆன்தோசயனின்கள்'
உள்ளன. இவை, இதயத்திற்கும்,
ரத்தக்
குழாய்களுக்கும் இடையே
உராய்வு அழுத்தத்தை,
குறைத்து
மென்மைப்படுத்துகின்றன.
குறைந்த தண்ணீரில் அவித்த
சோளம், கொள்ளு இரண்டும்,
ரத்தக் குழாய்களில் கெட்ட
கொழுப்பு சேர்வதை
தடுக்கின்றன.
சிவப்பு சோயா, பாதாம்,
பிஸ்தா,
சாரைப்பருப்பு, வெந்தயம்,
பட்டாணி, மீன்களில்
உள்ள, "ஒமேகா 3 அமிலம்', கெட்ட
கொழுப்பை கரைத்து, நல்ல
கொழுப்பை
அதிகப்படுத்துகிறது.
தக்காளி,
வெண்டைக்காயை அதிகம்
வேக வைக்கக் கூடாது.
பச்சையாக சாப்பிடுவது
இன்னும் நல்லது.
இவற்றிலுள்ள,
"லைக்கோபின்கள்' பித்தநீருடன்
வினைபுரிந்து, கெட்ட
கொழுப்பு உருவாவதை
தடுக்கின்றன. ஆப்பிள்,
ஸ்ட்ரா பெர்ரி, ஆப்ரிகாட்,
முலாம்பழம், கிவி,
மாதுளை, எலுமிச்சை,
ஆரஞ்சு,
புளு பெர்ரி சாப்பிட்டால்,
நுண்ணிய ரத்தக்
குழாய்களில் நைட்ரஜன்
ஆக்ஸைடு அதிகரித்து,
ரத்தக் குழாய்
விரிவடைகிறது. இதனால்
அடைப்பு மற்றும் சுருக்கம்
தவிர்க்கப்படுகிறது.
இதிலுள்ள
"பீட்டா கரோட்டின், விட்டமின் இ'
இரண்டும்,
இதயத்தை
பாதுகாக்கின்றன.பப்பாளி,
பிளம்சில்
உள்ள, மெக்னீசியம்,
பொட்டாசியம் இரண்டும்,
ரத்தத்தில் சோடியம்
அதிகரிக்காமல் தடுத்து,
இயல்பான நிலைக்கு
கொண்டு வருகின்றன.
இதிலுள்ள, "விட்டமின் ஏ' செல்,
அழிவை தடுக்கிறது. நல்ல
கொழுப்பை அதிகரித்து
வயிறு, இடுப்பு,
தொடைப்பகுதியில் உள்ள
கெட்ட
கொழுப்பை கரைத்து,
இருதயத்திற்கு தேவையற்ற
சுமையை தவிர்க்கின்றன.
சிறுமலை வாழை,
ரஸ்தாளியும் இருதய தசைக்கு
ஏற்றது.
முளைவிட்ட தானியங்கள்,
பார்லி, ஓட்ஸ்,
மட்டை அவல், சிவப்பு அரிசி,
கோதுமை, ஆலிவ்
எண்ணெய், கொழுப்பு
நீக்கப்பட்ட பால்,
முட்டை வெள்ளைக்கரு, அதிக
எடையுள்ள மீன்கள்,
தோலுரித்து, கொழுப்பு
நீக்கப்பட்ட கோழி,
சோயா சார்ந்த உணவுகள்,
குடலில்
கொழுப்பு படிவதைத்
தடுக்கிறது.வெள்ளைநிற
அரிசி, ரவை, மைதா, சீனி,
உப்பை குறைத்துக்
கொள்வது நல்லது. ஒவ்வொரு
மாதமும், சமையல்
எண்ணெய் மாற்றி பயன்படுத்த
வேண்டும்.கோபம், கவலை,
மனஅழுத்தம், பயத்தாலும்
இருதயம்
பாதிக்கப்படும். தியானம்,
மூச்சுப்பயிற்சி,
யோகா, எளிய
உடற்பயிற்சிகளால்
இருதயத்தை பாதுகாப்போம்.
இவ்வாறு அவர்
தெரிவித்துள்ளார்.

***********************************
2020
ஆம் ஆண்டு உலக அளவில் இருதய
நோயால் பாதிக்கப்படும்
நாடுகளில் இந்தியா முதலிடத்தில்
இருக்கும் என் ஆய்வில்
தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கிட்டத்தட்ட மூன்றில்
ஒரு பங்கு இறப்பிற்கு இருதய
நோயே காரணமாக உள்ளது. இதன்
அடிப்படையில் உலக இருதய
தினமான இன்று இந்த அறிக்கை
வெளியிடப்பட்டுள்ளது.
உங்கள் இதயத்துக்காக கவனம்
செலுத்த வேண்டிய நல்ல நேரம்
இது. இந்திய நகர்ப்புறம் மற்றும்
கிராமப்புறங்களில் இதய நோய்கள்
காரணமாக ஏற்படும் இறப்பு
விகிதம் அதிகரித்துள்ளது.
அதிலும் 40 வயதுக்கு
உட்பட்டவர்களே இந்த பட்டியலில்
இருக்கின்றனர்.
மரபணு ரீதியாக ஏற்பட்டு வந்த
இருதய நோய் இப்போது நாம்
கையாளும் பழக்க வழக்கங்களால்
வாழ்க்கை முறைப்படியான
நோயாக மாறியுள்ளது.
இதய நோயிலிருந்து தப்பிக்க
வல்லுனர்கள் ஐந்து
வழிமுறைகளை பின்பற்ற
வழிவகுகின்றனர்.
அவை, தொலைக்காட்சி
பார்ப்பதை குறைக்க வேண்டும
்;
தொலைக்காட்சி முன் குறைந்த
நேரத்தையே செலவிட வேண்டும்.
நாளொன்றுக்கு இரண்டு மணி
நேரத்திற்கு மேல்
தொலைக்காட்சியை
பார்ப்பவர்களுக்கு 125 சதவீதம்
மாரடைப்பு ஏற்படும் அபாயம்
உள்ளது.
உயர் ‌புரூக்டோஸ் உணவுகளை
தவிருங்கள் ; பதப்படுத்தப்பட்ட
உணவுகள் மற்றும்
குளிர்பானங்களில் உள்ள உயர் ட்ரை
கிளிசராய்ட் அளவு மாரடைப்பு
அபாயத்தை அதிகரிக்க
வாய்ப்புள்ளது.
புகையை தவிர்க்கவும் ; புகை
பழக்கம் இதயத்தின் தமனிகளை
பாதித்து குறுகலாக செய்கிறது.
புகை இலையில் உள்ள கார்பன்
மோனாக்சைடு ரத்தத்தில்
ஆக்சிஜன் அளவை குறைக்கிறது.
இதனால் ரத்த அழுத்த பிரச்சனை
ஏற்படும், இவை நாளடைவில்
பெரிய பாதிப்பை கொண்டுவரும்.
மேலும் புகை பிடிப்பவரின்
அருகில் இருப்பதையும் தவிர்பது
அவசியம்.
நல்ல தூக்கம்; தூக்கமின்மை
என்பது மனதளவிலும்
உடலளவிலும் உபாதைகளை
கொண்டு வரும். மேலும் இருதய
தமனிகளில் கால்சியம் அளவை
அதிகரிக்க செய்யும்.
இதனால் ‌பிளேக், பக்கவாதம் மற்றும்
மாரடைப்பு ஏற்படும்.
உடற்பயிற்சி அவசியம்; ஒவ்வொரு
நாளும் ஒரு அரை மணி நேரம்
உடற்பயிற்சி செய்து வந்தாலே
இருதய நோய் வருவதிலிருந்து 60
சதவீதம் தப்பிக்க முடியும்.
நன்றிதினமலர்.வெப்துனியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக