செவ்வாய், 13 செப்டம்பர், 2016

இல்லறம் நல்லறமாக...


இல்லறம் நல்லறமாக...
➕➕➕
*திரு.கண்ணதாசன்* அவர்களின்
*நெஞ்சுக்கு நிம்மதி*
என்ற புத்தகம் வாசித்திருக்கிறீர்களா..?
*Following are excerpted  from this book.in my way...!*
*‍‍‍தகராறு இல்லாத குடும்பம் இல்லை...*

வீட்டுக்கு வீடு வாசப் படி...
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை...
*யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தால்,*
அணிலுக்கு தன் உடம்பு இவ்வளவு சிறிதாக இருக்கிறதே என்ற கவலை...
*洛ஏழைக்கு தொப்பையை நிறைப்பது கவலையென்றால்,*
பணக்காரருக்கு தொப்பையைக் குறைப்பது கவலை...
*‍❤‍காதலித்து கல்யாணம் செய்தவரும் கட்டிலைப் பிரித்து போட்டதுண்டு,*
‍‍‍பெற்றோர் நிச்சயித்த திருமணத்திலும்
பேரன்பு பெருக்கெடுப்பதுண்டு.
*அன்பிருந்தும்,*
*பணமிருந்தும் சந்ததி இல்லாத குடும்பங்களும் உண்டு,*
‍‍‍சந்ததி இருக்கும் குடும்பங்கள்
சாப்பாட்டுக்கே கஷ்டபடுவதுண்டு.
*அமெரிக்காவில் பகல் என்றால்,*
இந்தியாவில் இருட்டு!
*பிரச்சனை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை,*
珞ஆக அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் நாம் மட்டும் தான் கஷ்டப் படுவது போலவும் பிரமை வேண்டாம்.
*கணவர் வீட்டுக்கு வரும் போதே பிர்ச்சனையோடு வரக் கூடாது,*
மனைவியும் அவரை கேள்விகுறிகளோடே வரவேற்க கூடாது...
*கணவர் எதையும் அடித்து சொல்ல கூடாது*
மனைவி எதையும் இடித்து பேச கூடாது.
*"நீங்க வாங்கின காய்கறி மகா மட்டம் "என்று மனைவி சொன்னால்..."*
எந்த நாய் சொன்னது?" என்று கணவன் பதில் சொன்னால் தான் *பிரச்சனை*...
*தன் தவறை ஒத்துக் கொண்டு...*
邏"சரி இனி பார்த்து வாங்குகிறேன்" என்று சொல்லி விட்டால் முடிந்தது.
*"நீ செய்த சாப்பாடு சகிக்கலை"என்று*
*கணவன் சொன்னால்...*
"எனக்கு தெரிந்த லட்சணம் இவ்ளோதான் ...
*நீங்க உங்க அம்மா வீட்டுக்கு போய் சாப்பிடுங்க"என்று*
*மனைவி பதில் சொன்னால் தான்
*பூகம்பம் ஆரம்பம்...*
"இன்னிக்கு உடம்பு முடில..நாளைக்கு நன்றாக சமைக்கிறேன்" என்று சொன்னால் *அன்பு* வெள்ளம் தான்...
*மனைவி புது புடவை உடுத்தினால்....*
"இந்த புடவை நன்றாக இருக்கு.. அழகா இருக்கே" என்று சொல்லணும்.
*கணவன் வெளியிலிருந்து வரும் போது" ஏன் இப்படி வியர்த்திருக்கிறது...*
*எளச்சு போய்ட்டீங்களே" என்று அக்கறையோடு
*மனைவியும் விசாரிக்க வேண்டும்...*
மனைவியை, கணவன் *"அம்மா"*என்று அழைக்கணும்.
கணவனை, மனைவி *"அப்பா"* என்று அழைக்கணும்.
*தன் தாயை மனைவி நன்றாக நடத்தினால்,*
*கணவனுக்கு நிம்மதி.*
தன் தாய் வீட்டை கணவன் பெருமையாக கூறினால்,
மனைவிக்கு நிம்மதி.
*⛺BedRoom இல் Board Room இல்*
*பேசுவது போல் பேசக் கூடாது...*
கணக்கு பண்ணும் நேரத்தில்
கணக்கு வழக்குகள் பேசக் கூடாது...
*பகலில் நடக்கும் எந்த வாக்குவாதமும்*
அன்று இரவிற்குள்
சரி செய்யப் பட்டு
*சேர்ந்து விட வேண்டும்...*
*樂முக்கியமாக கணவனும் மனைவியும் சிந்திக்க வேண்டிய விஷயம்...*
蘿வார்த்தைகளில் ஜாக்கிரதை...
*எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம்,*
சொல்லைக் கொட்டி விட்டால் பொறுக்க முடியாது.
*முள்ளால குத்தின காயம் ஆறிடும்,*
சொல்லால குத்தினா ஆறவே ஆறாது.
*ஒருவரையொருவர் அனுசரித்து போனால்*
உலகையே தனக்குள் அடக்கி கொள்ள முடியும்.
*இரண்டு கைத் தட்டினால் தான் ஓசை என்பார்கள்...*
ஒருவர் கோபம் கொள்ளும் போது,
இன்னொருவர் விட்டு கொடுக்க வேண்டும்.
*"பெண்டாட்டி தானே சொல்லிவிட்டு போகிறாள்"என்றும்,*
"கணவன் தானே பேசட்டும்" என்றும் விட்டுக் கொடுத்து விட்டால்,
*உள்ளம் துடிக்காது,*
*❣உடல் வலிக்காது,*
*ஊர் சிரிக்காது.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக