திங்கள், 3 அக்டோபர், 2016

ஆன்மிகவாதி வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் பிறந்த தினம் அக்டோபர் 5,

ஆன்மிகவாதி வள்ளலார் என்று அழைக்கப்படும்
இராமலிங்க அடிகளார் பிறந்த தினம் அக்டோபர் 5,

வள்ளலார் என்று அழைக்கப்படும்
இராமலிங்க அடிகளார் ( அக்டோபர் 5,
1823 – சனவரி 30, 1873 ) ஓர் ஆன்மிகவாதி
ஆவார். இவர் சத்திய ஞான சபையை
நிறுவியவர். "வாடிய பயிரைக்
கண்டபோதெல்லாம், வாடினேன்"
என்று பாடியவர் இவர்.
சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது
நிலைப்பாடு காரணமாக, சமுதாயத்தின்
பழைமைப் பற்றால் பெரிதும்
பாதிக்கப்பட்டவர். வள்ளலாருக்கு
எதிராக வழக்குமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தவர் ஆறுமுக நாவலர்.
[3]
பிறப்பு
இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில்
இருந்து 10 மைல் தொலைவில் உள்ள
மருதூரில் 05.10.1823இல் பிறந்தவர்.
பெற்றோர் இராமையாபிள்ளை,
சின்னம்மையார். இவரோடு சபாபதி,
பரசுராமன், உண்ணாமுலை,
சுந்தராம்பாள் ஆகிய நால்வரும்
உடன்பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்த
ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார்.
தாயார் குழந்தைகளோடு பொன்னேரி
சென்று வாழ்ந்தார். பின்னர்
சென்னையில் ஏழுகிணறு பகுதி 39,
வீராசாமி பிள்ளை தெருவில் உள்ள
வீட்டில் குடியேறினார். அண்ணன் சபாபதி
சமயச் சொற்பொழிவு
செய்து வந்தார்.
பசியாற்றல்
அரிசி மூட்டைகள் இருக்கும் இராமலிங்க
அடிகளால் உருவாக்கப்பட்ட
தருமசாலை
இராமலிங்க அடிகள் 23–5–1867 அன்று
வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம்
பெற்று தருமசாலையை
தொடங்கினார். இந்த
தருமசாலைக்கு வந்தவர்களுக்கு 3 வேளையும்
உணவு வழங்கப்பட்டது.தற்போது
தருமசாலைக்கான
உணவுப்பொருட்களை தமிழக அரசு
குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது என்பது
பாராட்டுக்கு உரியதாகும். [4] மக்களின்
மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியை
போக்கிட வள்ளலார் வழி வகுத்தார்.
இன்றளவும் வள்ளலார் பெயரால்
லட்சக்கணக்கான மக்களுக்கு
பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம்
இருந்தாலும், உலகமெங்கும் அவரது
கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள்
பசியாற்றுகிறார்கள்.
வள்ளலாரின் பன்முக
ஆற்றல்கள்
1. சிறந்த
சொற்பொழிவாளர் .
2. போதகாசிரியர்.
3. உரையாசிரியர்.
4. சித்தமருத்துவர்.
5. பசிப் பிணி போக்கிய அருளாளர் .
6. பதிப்பாசிரியர்.
7. நூலாசிரியர்.
8. இதழாசிரியர்.
9. இறையன்பர்.
10. ஞானாசிரியர்.
11. அருளாசிரியர்.
12. சமூக சீர்திருத்தவாதி.
13. தீர்க்கதரிசி
14. மொழி ஆய்வாளர் (தமிழ்)
சன்மார்க்கச்
சிந்தனையாளர்
the main gate of sathya gnana
tharuma sabai, vadalur, established by
vallalar ramalinga adigal
தன் வாழ்வின் பெரும்பகுதியைச்
சென்னையில் கழித்த இவர், நவீன
சமுதாயங்களின் பிரச்சினைகளை
உணர்ந்திருந்தார். அனைத்துச் சமய
நல்லிணக்கத்திற்காகவும்
சன்மார்க்கத்திற்காகவும் ( righteousness
in all endeavours ) தன் வாழ்நாளை
அர்ப்பணித்துப் பணியாற்றினார்.
இந்நோக்கத்தை அடையும் பொருட்டு
சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய
ஞானசபையை அமைத்தார். 1867ஆம்
ஆண்டில் சத்திய தரும சாலையையும்
நிறுவினார். அவர் வாழ்ந்த காலத்தில்
அவருடைய சிந்தனைகள் மிகவும்
முற்போக்குடையதாக கருதப்பட்டாலும்,
தற்பொழுது உலகெங்கும்
அவருடைய சிந்தனைகளுக்கு ஒத்த
கொள்கைகள்
புரிந்துகொள்ளப்பட்டு
பின்பற்றப்படுகின்றன.
இவருடைய காலத்தில்
இருந்தவர்கள்
ஆறுமுக நாவலர்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை
காஞ்சிபுரம் சபாபதி முதலியார்
இராமலிங்க அடிகள்
கோட்பாடுகள்
இராமலிங்க அடிகள்
கொள்கைகள்
1. கடவுள் ஒருவரே. அவர்
அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.
2. புலால் உணவு உண்ணக்கூடாது.
3. எந்த உயிரையும்
கொல்லக்கூடாது.
4. சாதி , மதம் , இனம், மொழி
முதலிய வேறுபாடு கூடாது.
5. இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி
வைத்தல் வேண்டும்.
6. எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
7. பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம்,
மொழி முதலிய வேறுபாடு கருதாது
உணவளித்தல் வேண்டும்.
8. சிறு தெய்வ வழிபாடு கூடாது.
அவற்றின் பெயரால் பலி இடுதலும்
கூடாது.
9. எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே.
அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.
10. மத வெறி கூடாது .
அதாவது எந்த சமயத்தின்
நிலைப்பாட்டையும், எல்லா மத
நெறிகளையும் சம்மதம் ஆக்கிக்
கொள்கிறேன் என்கிறார்.
வளரும் பிள்ளைகளுக்கு
வள்ளலார் வழங்கிய
அறிவுரைகள்
1. நல்லோர் மனதை நடுங்க செய்யாதே.
2. தானம் கொடுப்போரைத் தடுத்து
நிறுத்தாதே.
3. மனமொத்த நட்புக்கு வஞ்சகம்
செய்யாதே.
4. ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே.
5. பொருளை இச்சித்து
பொய் சொல்லாதே.
6. பசித்தோர் முகத்தைப் பாராதிராதே.
7. இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே.
8. குருவை வணங்கக் கூசி நிற்காதே.
9. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம்
அழிக்காதே
10. தந்தை தாய் மொழியைத் தள்ளி
நடக்காதே.
படைப்புக்கள்
வள்ளலார் பதிப்பித்தவை
1. சின்மய தீபிகை
2. ஒழிவிலொடுக்கம்
3. தொண்டமண்டல சதகம்
இயற்றிய உரைநடை
1. மனுமுறைகண்ட வாசகம்
2. ஜீவகாருண்ய ஒழுக்கம்
திருவருட்பா
இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின்
திரட்டு, திருவருட்பா என்று
அழைக்கப்படுகிறது. [5] இது ஆறு
திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது.
திருவருட்பா, முதலில்
இராமலிங்கஅடிகளின் தலைமைச் சீடர்
தொழுவூர் வேலாயுதனாரால்
நான்கு திருமுறைகளாக
வெளியிடப்பட்டது. பின்னர் ஐந்தாம்,
ஆறாம் திருமுறைகள் வெளியிடப்பட்டன.
முன்னாள் தமிழக அறநிலையத்துறை
ஆணையாளர் பாலகிருஷ்ணன்,
இராமலிங்கரின் உரைநடை, கடிதங்கள்
முதலியவற்றைத் தனி நூலாகத்
தொகுத்து வெளியிட்டார்.
பின்னர் ஊரன் அடிகளும் காலமுறை பதிப்பு
வெளியிட்டுள்ளார்.
அருள் விளக்க மாலை பாடல்
(4174)
நால்வருணம் ஆசிரமம் ஆசாரம்
முதலா
நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை
யாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார்
இலைநீ விழித்திதுபார் என்றெனக்கு
விளம்பியசற் குருவே
[6]
கண்டன நூல்கள்
வள்ளலார் எழுதிய திருவருட்பாவுக்கு
எதிராக பல கண்டன நூல்கள்
வெளிவந்தன.வள்ளலார் மேற்
கொண்ட சமய சீர்திருத்தத்தால்
அவரை அன்றைய சைவவாதிகள் ஏற்கவில்லை.
இதன் தொடர்ச்சியாக
வள்ளலார் எழுத்துக்களையும் புறம்
தள்ளினர். எதிர்ப்பு தெரிவித்து
கண்டனம் செய்தனர். வள்ளலார்
முன் வைத்த மாற்றுப் பண்பாட்டையும்
மறுத்தனர். 1868 இல் சண்முகம் பிள்ளை
என்பவரால் திருவருட்பா தூஷண
பரிகாரம் என்னும் நூலின் வழி
இவ்விவாதம் தொடங்க
ஆரம்பித்தது. 1869 இல் போலியருட்பா மறுப்பு
என்ற நூல் எழுதப்பட்டது , இது அருட்பா
அல்ல, அது போலி அருட்பா என்று பல
காரணங்களைக் கூறி இந்நூல் மறுத்தது.
இதற்கு எதிராக 12 கண்டன நூல்கள்
வெளிவந்தன.
1904 இல் கதிரைவேல் பிள்ளை வள்ளலாருக்கு
எதிராக இராமலிங்கம் பிள்ளை பாடல்
ஆபாச தர்ப்பணம் அல்லது மருட்பா
மறுப்பு என்ற நூலை அவர் எழுதி
வெளியிட்டார். இந்நூலுக்கு மறுப்பாக
ம.தி. பானுகவி என்பவர், 1905 இல்
இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாச
தர்ப்பண கண்டன நியாய வச்சிர
குடாரம் என்ற நூலை எழுதி
வெளியிட்டார். சைவ சமயத்தில்
சீர்திருத்தம் செய்த வள்ளலாரை பழைமை
வாதிகள் ஏற்றுக் கொள்ள
மறுத்த நிகழ்வுகளாகவே இக்கண்டன நூல்
போக்குகளைப் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக