வெள்ளி, 7 அக்டோபர், 2016

புரட்சியாளர் சே குவேரா நினைவு தினம் அக்டோபர் 9, (1967 ).

புரட்சியாளர் சே குவேரா நினைவு தினம் அக்டோபர் 9, (1967 ).

சே குவேரா அல்லது எல் சே என
பொதுவாக அறியப்பட்ட
எர்னெஸ்டோ குவேரா டி லா
செர்னா ( Ernesto Guevara de la Serna )
( ஜூன் 14 , 1928 - ஒக்டோபர் 9, 1967 )
அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக்
கொண்ட ஒரு சோசலிசப்
புரட்சியாளர், மருத்துவர்,
மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா
மற்றும் பல நாடுகளின் ( கொங்கோ
உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற
போராளி எனப் பல முகங்களைக்
கொண்டவர்.
பெயர்
சே என்பது வியப்புச்சொல் ஆகும்.
இச்சொல்லை
அர்சென்டீனர்கள், குவேரனி
இந்தியர்களிடமிருந்து பழகினர் என்று
கருதப்படுகிறது. அவ்விந்தியர், எனது என்ற
பொருளில் பயன்படுத்துவர் என்று
மானுடவியல் அறிஞர் கூறுவர்.ஆனால்,
தென்னமரிக்கப் பாம்பாஸ்
புல்வெளியினருக்கு, ஆச்சரியம்,
ஆனந்தம், வருத்தம், நாணயம், அட்சேபம்,
அங்கீகாரம் போன்ற பல மானுட
உணர்வுகளை வெளிப்படுத்தும்
சொல்லாக அமைகிறது. இடத்திற்கு
ஏற்பவும், ஒலிப்புக்கு ஏற்றவாறும்
அச்சொல் பயனாகிறது.
இச்சொல்லின் மீதுள்ள பற்றால்,
கியூபா புரட்சியாளர்கள், 'சே' என்று
செல்லமாக அழைத்தனர். அவரது
பெற்றோர், அவரை 'டேட்டி' என்று
செல்லமாக அழைப்பர்.
இளமைக்காலம்
சே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம்
14 ஆம் நாள் அர்கெந்தீனாவில்
உள்ள ரொசாரியோ என்னும்
இடத்தில் பிறந்தார். இசுபானிய,
பாஸ்க்கு, ஐரிசிய மரபுவழிகளைக்
கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து
பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது
குடும்பம் இடதுசாரி சார்பான
குடும்பமாக இருந்ததால் மிக இளம்
வயதிலேயே அரசியல் தொடர்பான
பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது
தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான்
பெரோனினதும் ஆதரவாளராக
இருந்தார். இதனால், ஸ்பானிய
உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு
வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி
வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது
கருத்துக்களுக்கு வழிகாட்டியது.
வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த
ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு
சிறந்த விளையாட்டு வீரராக
விளங்கினார். இவர் ஒரு சிறந்த "ரக்பி"
விளையாட்டு வீரர். இவரது தாக்குதல்
பாணி விளையாட்டு காரணமாக இவரை
"பூசெர்" என்னும் பட்டப் பெயர்
இட்டு அழைத்தனர். அத்துடன், மிக
அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு
"பன்றி" என்னும் பொருளுடைய
சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.
தனது தந்தையிடமிருந்து சதுரங்கம்
விளையாடப் பழகிய சே குவேரா, 12 ஆவது
வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து
கொண்டுள்ளார். வளர்ந்த
பின்பும், பின்னர் வாழ்நாள் முழுவதும்
இவர் கவிதைகளின் மீது ஆர்வம்
கொண்டிருந்தார். நெரூடா,
கீட்ஸ், மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல்,
வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்கள் மீது
இவருக்குச் சிறப்பு ஆர்வம் இருந்தது.
குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல்
இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு
இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம்
எனலாம். இவற்றுள், மார்க்ஸ் ,
போல்க்னர், கைடே , சல்காரி, வேர்னே
போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச்
சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர
நேரு , காப்கா , காமுஸ் , லெனின்
போன்றவர்களது நூல்களையும், பிரான்ஸ் ,
ஏங்கெல்ஸ் , வெல்ஸ் ,
புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும்
அவர் விரும்பி வாசித்தார்.
அவரது வயது அதிகரித்த போது, அவருக்கு
இலத்தீன் அமெரிக்க
எழுத்தாளர்களான குயிரோகா,
அலெக்ரியா , இக்காசா , டாரியோ ,
ஆஸ்டூரியாஸ் போன்றோருடைய ஆக்கங்களின்
பால் ஈடுபாடு ஏற்பட்டது.
செல்வாக்கு மிக்க தனி நபர்களின்
கருத்துருக்கள், வரைவிலக்கணங்கள்,
மெய்யியற் கருத்துக்கள் போன்றவற்றை
எழுதிவந்த குறிப்புப் புத்தகத்தில்
இவர்களுடைய கருத்துக்களையும் அவர் குறித்து
வந்தார். இவற்றுள், புத்தர்,
அரிஸ்ட்டாட்டில் என்போர் பற்றிய ஆய்வுக்
குறிப்புக்கள், பேட்ரண்ட் ரஸ்ஸலின் அன்பு,
தேசபக்தி என்பன குறித்த ஆய்வு, ஜாக்
லண்டனின் சமூகம் பற்றிய கருத்துக்கள்,
நீட்சேயின் இறப்பு பற்றிய எண்ணங்கள்
என்பனவும் அடங்கியிருந்தன. சிக்மண்ட்
பிராய்டின் ஆக்கங்களாலும் கவரப்பட்ட
சே குவேரா, அவரைப் பல வேளைகளில் மேற்கோள்
காட்டியுள்ளார்.
கல்வி
1948 ஆம் ஆண்டில் மருத்துவம்
படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ்
அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார்.
ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில்
இருந்து ஓராண்டு விடுப்பு
எடுத்துக்கொண்டு, அவரது
நண்பரான ஆல்பர்ட்டோ
கிரெனாடோவுடன் சேர்ந்து
கொண்டு, மோட்டார் ஈருளியில்
தென்னமெரிக்கா முழுதும்
பயணம் செய்தார். பெரு
நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில்
இருந்த தொழுநோயாளர் குடியேற்றம்
ஒன்றில் சில வாரங்கள்
தொண்டு செய்வது அவரது
இப்பயணத்தின் இறுதி நோக்கமாக
இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த
குறிப்புக்களைப் பயன்படுத்தி "மோட்டார்
ஈருருளிக் குறிப்புக்கள்" (The Motorcycle
Diaries) என்னும் தலைப்பில்
நூலொன்றை எழுதினார். இது
பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை
கொண்ட நூலாகத் தெரிவு
செய்யப்பட்டது. பின்னர், 2004 இல்,
இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம்
விருதுகளையும் பெற்றது.
பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை
பறிப்பு என்பவற்றை இலத்தீன்
அமெரிக்கா முழுதும் கண்ணால்
கண்டதினாலும், மார்க்சிய நூல்களின்
செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம்
ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத்
தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என
சே குவேரா நம்பலானார். பயணத்தின்
முடிவில், இவர், இலத்தீன்
அமெரிக்காவைத் தனித்தனி
நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு
மொத்தமான கண்டம் தழுவிய
விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே
பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற
ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும்
சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப்
புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக
வெளிப்பட்டது.
ஆர்ஜெண்டீனாவுக்குத் திரும்பிய
சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம்
ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ
டிப்ளோமாப் பட்டம் பெற்றார்.
பயணங்கள்
சே குவேரா இலங்கைக்கு
சென்றபோது நாட்டிய மகோகனி
மரம். இடம்: யகலகெல
இறப்பர் தோட்டம்,
மெரககெகனை,
கொரணை. ஆகத்து 8,
1959
1953 ஜூலையில் மீண்டும்
பயணமொன்றைத்
தொடங்கிய சேகுவேரா, இம்முறை
பொலீவியா , பெரு ,
ஈக்குவடோர் , பனாமா,
கொஸ்தாரிக்கா ,
நிக்கராகுவா, ஹொண்டூராஸ் ,
எல் சல்வடோர் ஆகிய நாடுகளுக்குச்
சென்றார். அதே ஆண்டு டிசம்பரில்
சேகுவேரா குவாதமாலாவுக்குச்
சென்றார். அங்கே மக்களாட்சி
அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட
அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய
குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ
ஆர்பென்ஸ் குஸ்மான் என்பவர்
நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற
நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட
(latifundia) முறையை ஒழிப்பதற்கு முயன்று
கொண்டிருந்தார். உண்மையான
புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான
அனுபவங்களைப்
பெற்றுக்கொள்ளும் நோக்குடன்
குவேரா, குவாத்தமாலாவிலேயே
தங்கிவிட முடிவு செய்தார்.
குவாத்தாமாலா நகரில், சே
குவேராவுக்கு ஹில்டா கடேயா
அக்கொஸ்தா என்னும்
பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இவர்
பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு
பொருளியலாளரும், இடதுசாரிச்
சார்புள்ள அமெரிக்க மக்கள்
புரட்சிகர கூட்டமைப்பு (American Popular
Revolutionary Alliance) என்னும்
இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார்.
இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில்
நல்ல தொடர்புகள் இருந்தன.
இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின்
பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு
அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல்
காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக்
கொண்டிருந்தவர்களும்,
கியூபாவைவிட்டு வெளியேறி
வாழ்ந்துவந்தவர்களுமான
தொடர்புகளும் சே குவேராவுக்குக்
கிடைத்தன. இக் காலத்திலேயே "சே" என்னும்
பெயர் இவருக்கு ஏற்பட்டது. "சே" என்பது
நண்பர் அல்லது தோழர் என்னும்
பொருள் கொண்ட
ஆர்ஜெண்டீனச்
சொல்லாகும்.
மார்க்சியத்தில்
ஈடுபாடு
கியூபாவில் புரட்சி
சில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை
பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில்
இணைத்துக்கொண்டார்.
அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி
அதிகாரத்தினைக் கைப்பற்றியது. அதன்
பின்னர் கியூபாவின் மத்திய வங்கியின்
தலைவராக 14 ஆண்டுகள்
பணியாற்றினார்.அக்காலகட்டத்தில்
கரந்தடிப் போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும்,
புத்தங்களையும் எழுதியிருந்தார். 1964
டிசம்பர் 11ம் தேதியன்று கியூபாவின்
பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் அவையின்
19 வது பொது அமர்வில்
உரையாற்றினார். [9] பின்னர்,
கொங்கோ-கின்ஸாசா (தற்போது
கொங்கோ ஜனநாயகக் குடியரசு)
மற்றும் பொலிவியா போன்ற
நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு
தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965
ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து
வெளியேறினார்.
பொலிவியாவில்
சே குவேரா
சே 1966ம் ஆண்டின் கடைசிகளில்
கொரில்லாப் போரை வழி நடத்தும்
பொருட்டு உருகுவே நாட்டு போலி
பாஸ்போர்ட்டுடன் பொலிவியா
நாட்டுக்குள் நுழைந்தார். பல
காரணங்களால் பொலிவியா
நாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று
நம்பப்படுகிறது. அமெரிக்கா
பொலிவியாவைவிட கரிப்பியன்
பேசின் நாடுகளே தங்கள் பாதுகாப்பிற்கு
பங்கம் விளைவிக்கக்கூடும் என்று நம்பியதும்,
அதனால் அமெரிக்காவின் பார்வை
பொலிவியா மீது அவ்வளவு
தீர்க்கமாக விழவில்லை என்பதும் ஒரு
காரணம் . இரண்டாவதாக
பொலிவியாவின் ஏழ்மையும் அங்கு
நிலவிய சமூக மற்றும்
பொருளாதார நிலைகளும்
எந்நேரமும் அங்கு புரட்சி வெடிக்க
சாதகமாக இருந்தது . மூன்றாவதாக
பொலிவியா ஐந்து பிற
நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து
கொண்டிருந்தது .
பொலிவியாவில்
கொரில்லாப் போராட்டம்
வெற்றி பெறுமேயானால் அதை
மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவச்
செய்துவிடலாம் என்று குவேரா
நினைத்தது. (ஆனால் ஃபிடெல்
காஸ்ட்ரோ தன்னை வஞ்சித்து விட்டதாக சே
குவேரா மிகவும் வருந்தியதாக 1998ம்
ஆண்டு ஓய்வு பெற்ற
பொலிவிய ராணுவ அதிகாரி
ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
சேவின் உடல். சி.ஐ.ஏ உளவாளி
ஒருவரால் எடுக்கப்பட்டது
பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும்
அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது
இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது
செய்யப்பட்டார். பொலிவிய
இராணுவத்தினரால்
வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள
லா கிகுவேரா என்னுமிடத்தில் கேரி ப்ராடோ
சால்மோன் என்பவரின் தலைமையில்
ஒக்டோபர் 9, 1967 இல் சே குவேரா
கொல்லப்பட்டார். சாட்சிகள்
மற்றும் கொலையில்
பங்குபற்றியவர்களிடமிருந்து கிடைத்த
தகவலின்படி, சட்டத்தின் முன்
நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது
உறுதிப்படுத்தப்படுகிறது. கைதியாக
அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை
வரவேற்றார். தன்னை கொல்ல
வந்தவனைப் பார்த்தும் "ஒரு நிமிடம்
பொறு நான் எழுந்து நிற்கிறேன்
பிறகு என்னை சுடு" என்று கூறி எழுந்து
நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி
பட்டிருந்தது)
அவரது மரணத்தின்பின், சே குவேரா
உலகிலுள்ள சோசலிச புரட்சி
இயக்கங்களினால் மிகவும்
மரியாதைக்குரியவராக
கொண்டாடப்படுகிறார். நினோ டி
குஸ்மான் என்ற அந்த அதிகாரி
குவேராவை சுட்டுக் கொல்வதற்கு
முன்பு அவனிடம் நீண்ட நேரம் பேசிக்
கொண்டிருந்ததாகவும் அப்போது சே
அவனுடைய மனக்குமுறலை
வெளியிட்டதாகவும் கூறினார்.
தான் பெரு நாட்டில் புரட்சி
செய்ய முடிவெடுத்ததாகவும்
ஆனால் காஸ்ட்ரோ தான் தன்னை
வற்புறுத்தி பொலிவிய நாட்டில்
கலகம் விளைவிக்கக் கூறியதாகவும் சே
குவேரா கூறியதாக தகவல்
வெளியாயிற்று. மேலும் சே குவேரா
பெரு நாட்டின் விவசாயிகள்
தன்னுடைய புரட்சிக்கு ஆதரவு
கொடுத்திருப்பார்கள் என்றும்
பொலிவிய நாட்டில் விவசாய
மறுமலர்ச்சி திட்டத்தால் மக்கள்
அவ்வளவு அதிருப்தியடையாததால்
அவர்களின் ஆதரவு எதிர்ப்பார்த்த
அளவுக்குக் கிடைக்கவில்லை என்றும்
கூறியதாக அந்த அதிகாரி
கூறியிருந்தார்.)
வாழ்க்கை நிகழ்வுகள்
"விடுதலை சே" என்ற வாசகத்துடன்
முச்சக்கர வண்டி, கொழும்பு
1928 ஜூன் 14 - பிறப்பு
1945 - மருத்துவப்படிப்பை
மேற்கொள்ளுதல்
1950 - உந்துருளியில் 3000 மைல் தூரம்
அர்ஜென்டீனா முழுவதும் சுற்றிவரும்
பயணத்தை ஆரம்பிக்கிறார்
1952 - தனது நண்பன் அல்பெர்த்தோ
கிரனடாவுடன் பெரு ,
கொலம்பியா , வெனிசூலா ,
ஆகிய நாடுகளுக்கு பயணம்
செல்லுகிறார். பெருவில்
தொழுநோயாளர் குடியிருப்பில்
பணிபுரிதல்
1953 ஜூன் 12 - மருத்துவராக பட்டம்
பெறுதல்.
ஜூலை 6 - லத்தீன் அமெரிக்கா
பயணத்தை மேற்கொள்ளுதல்
1955 ஜூலை - ஃபிடல் காஸ்ட்ரோவை
சந்தித்தல். கரந்தடிப் போராளிகளுக்கான
பயிற்சியை மேற்கொண்டிருக்கும்
குழுவினருக்கு மருத்துவராக அவர்களுடன்
இணைந்து பின் போராளியாகிறார்.
இங்குதான் அவர முதன் முதலில் சே என
அழைக்க ஆரம்பித்தார்கள்.
ஆகஸ்ட் 18 - குவாதமாலாவில்
தாம் சந்தித்த பெரு நாட்டைச்சேர்ந்த
தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தவரான
ஹிடா காடியாவை
மணந்துகொள்கிறார்.
1956 பெப்ரவரி 15 - சே வுக்கும்
ஹில்டாவுக்கும் ஹில்டா பிட்ரீஸ் குவேரா
பிறக்கிறாள்.
ஜூன் 24 சே மற்றும் ஃபிடல்
காஸ்ட்ரோவுடன் 26 பேர்
கைதுசெய்யப்படுகிறார்கள். சே 57
நாட்கள் சிறையில் இருக்கிறார்.
1957 மே 27, 28 - யுவேராப் போர். சூனூ 5 -
இராணுவத்தினுடைய நான்காவது
அணித் தளபதியாகிறார்.
1958 ஜூலை - புரட்சிப்படை பாடிஸ்டாவின்
படைகளை தோற்கடித்து முன்னேறுகிறது.
டிசம்பர் 28 - லாஸ் வியாசின்
தலைநகரான சாண்டா
கிளாராவின்மீது சே போர்
தொடுக்கிறர்.
1958 ஆகத்து 21 - சிரோ ரிடன்டோ எட்டாவது
அணியின் தலைவராகப்
பொறுப்பேற்று லாஸ் வில்லாசு
மாநிலத்திற்கு போக உத்தரவு.
அக்டோபர் 10 நாளன்று, எஸ்கம்ப்ரே
மலைகளை, அவரின் படைப்பிரிவு அடைகிறது.
திசம்பர் சான்டா கிளாரா முற்றுகை
நடைபெறுகிறது. அம்மாதம் 28-31
நாள்வரை தலைமை ஏற்றுப் போரை
நடத்துகிறார்.
1959
ஜனவரி 1 - சாண்டா கிளாரா,
சேவின் வசமாகிறது. பாடிஸ்டா
ஓடித்தப்பிவிடுகிறார். சே ஹவானாவை
நோக்கி முன்னேறுகிறார்.
ஜனவரி 2 - காஸ்ட்ரோ அறிவித்த
பொது வேலை நிறுத்தத்தினால்
நாடே ஸ்தம்பிக்கிறது.
ஜனவரி 3 - சே ஹவானாவை அடைந்து
கபானா கோட்டையை கைப்பற்றுகிறார்
ஜனவரி 8 - காஸ்ட்ரோ ஹவானா
வந்து சேர்கிறார்.
மே 17 - உழவுத்துறையை
முன்னேற்றுவதற்கான திட்டங்கள்
அறிவிக்கப்படுகின்றன.
ஜூன் 2 - சேவும், அலெய்டா
மர்ச்சும் திருமணம்
செய்துகொள்கிறார்கள்.
ஜூன் 12 - வணிகம் மற்றும்
தொழிநுட்ப ஒப்பந்தங்களை
தீர்மானிப்பது தொடர்பாக சே
நீண்ட பயணத்தை மேற்கொண்டு
ஐரோப்பா, ஆபிரிக்கா , மற்றும் ஆசிய
நாடுகளுக்கு செல்கிறார்.
அக்டோபர் 7 - உழவுத்துறையின்
மறுமலர்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில்
சே தொழிற்றுறைக்கு தலைவராக
நியமிக்கப்படுகிறார்.
நவம்பர் 26 - சே, தேசிய வங்கியின்
தலைவராக நியமிக்கப்படுகிறார்.
1960
அக்டோபர் - சோவியத் கூட்டமைப்பு, கிழக்கு
ஜெர்மனி , செக்கோஸ்லோவேகியா ,
சீனா , வடகொரியா ஆகிய
நாடுகளுக்கு இரண்டுமாத
சுற்றுப்பயணத்தை
மேற்கொள்ளுதல்
நவம்பர் 24 - சே - அலெய்டாவின்
முதற்குழந்தை அலேய்தித்தா பிறக்கிறாள்.
1961
ஜனவரி 3 - அமெரிக்க அரசு
கியூபாவுடனான ராஜதந்திர
உறவுகளை முறித்துக்கொள்கிறது.
பெப்ரவரி 23 - சேவை அமைச்சராக்கி
தொழிற்றுறை அமைச்சகம்
நிறுவப்படுகிறது.
ஆகஸ்ட் 8 - உருகுவேயில் நடைபெற்ற
அமெரிக்க நாடுகள் அமைப்பின்
கருத்தரங்கில் கியூபாவின் சார்பில் சே
உரை நிகழ்த்துகிறார்.
1962
மே 20 - சேவுக்கும்
அலெய்டாவுக்கும் கமீலா
பிறக்கிறான்
ஆகஸ்ட் 27 - சே சோவியத்துக்கு பயணம்
மேற்கொள்கிறார்
1963
ஜூன் 14 - சே வுக்கும்
அலெய்டாவுக்கும் சிலியா
பிறக்கிறாள்.
ஜூலை 3 - பிரான்சிடமிருந்து
அப்போதுதான் சுதந்திரம் பெற்ற
அல்ஜீரியாவுக்கு பயணம்
மேற்கொண்டு அந்நாட்டின்
அதிபர் அகமது பென்
பெல்லாவை சந்திக்கிறார்.
1964
பெப்ரவரி 24 - சே வுக்கும்
அலெய்டாவுக்கும் எர்னஸ்டிடோ
பிறக்கிறான்.
மார்ச் 14 - சே கியூபா திரும்புகிறார்.
அக்டோபர் 31 - காங்கோவின்
புரட்சிப்படையினருக்கு பயற்சி தர ஒரு கியூப
படைக்குழுவினரோடு தாமும் காங்கோ
புறப்படும் சே, விடை
பெற்றுக்கொள்வதாக
ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு கடிதம்
எழுதுகிறார்.
டிசம்பர் - காங்கோ படையெடுப்பு
தோல்வியடைந்ததன் பிறகு சே இரகசியமாக
கியூபாவுக்கு திரும்பி வருகிறார்.
பொலிவியா
படையெடுப்புக்காக வீரர்களை
திரட்டுகிறார்.
1966
நவம்பர் - சே மாறு வேடத்தில்
பொலிவியா போய் சேருகிறார்.
1967
மார்ச் 23 - முதல் கரந்தடி
தாக்குதலில் சேவின் அணி
வெற்றிகரமாக
பொலிவிய ராணுவப்பிரிவை
சிதறடிகிறது.
ஏப்ரல் 16 - ஆசிய, ஆபிரிக்க,
லத்தீனமரிக்க நாடுகளின்
ஒற்றுமைக்காக நடத்தப்பட்ட முக்கண்டக்
கருத்தரங்கில் இரண்டு மூன்று அல்ல, பல
வியட்நாம்களை படைக்கலாம் என்ற
சேவுடைய அறிக்கை வாசிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 4 - ஒரு விட்டோடி,
பொலிவிய படைக்கு தலைமை
தாங்கி நடத்தி சே அணியின் ஆயுத
தளத்தை நோக்கி முன்னேறுகிறான்.
செப்டெம்பர் 26 - கரந்தடி
வீரர்களை பொலிவிய அரச
படைகள் சுற்றிவளைக்கின்றன.
அக்டோபர் 8 - மிஞ்சியிருந்த சே உட்பட 17
வீரர்களும் பொறிக்குள்
அகப்பட்டுக்கொள்கிறார்கள்.
போரில் காயமடையும் சே
கைதுசெய்யப்படுகிறார்.
அக்டோபர் 9 - சே
கொலைசெய்யப்படுகிறார்.
அவரது இறுதிக்கூற்று வருமாறு:
“ "என்னைக்
கொல்வதற்காகவே
இங்குள்ளாய்,
என்பதெனக்குத்
தெரியும். சுடு, கோழையே..,
ஓர் ஆளைதான், நீ
கொல்லப்
போகிறாய்"
("I know you are here to kill
me. Shoot,coward, you are
only going to kill a man") ”
1968
ஜூலை 1 - ஃபிடல் காஸ்ட்ரோவின்
முன்னுரையுடன் சேவின் பொலிவிய
நாட்குறிப்பு கியூபாவில்
வெளியிடப்படுகிறது.
1995 - கொலை செய்து
புதைக்கப்பட்ட சேவினதும் மற்ற இரு
வீரர்களதும் உடலங்களை தேடியெடுக்கும்
பணி தொடங்குகிறது.
1997
ஜூன் 28 - பொலிவியாவின்
வேலேகிரான்ட் அருகே கனடா தே
அர்ரோயாவில் ஏழு வீரர்களின்
சடலங்களின் எச்சங்கள்
கண்டுபிடிக்கப்படுகிறது.
ஜூலை 14 - சடல எச்சங்கள் கியூபாவை
வந்தடைகின்றன.
அக்டோபர் 13 - ஹவானா புரட்சி
சதுக்கத்தில் விழா நடைபெறுகிறது.
அக்டோபர் 14 - சேவின் சடல எச்சங்கள்
சாண்டா கிளாராவுக்கு
மாற்றப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக