வெள்ளி, 15 செப்டம்பர், 2017

உலக ஜனநாயக தினம் செப்டம்பர் 15.



உலக ஜனநாயக தினம் செப்டம்பர் 15.

அனைத்துலக சனநாயக நாள் செப்டெம்பர் 15 அன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
நவம்பர் 8 , 2007 இல் நடந்த ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபைக் கூட்டத்தில் இது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சனநாயகத்தினை ஊக்குவிக்கும் முகமாகவும் அபிவிருத்தி செய்யவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய கௌரவத்தை கொடுக்கும் முகமாக ஐநா இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இப்பொதுத் தீர்மானத்தை 192 உறுப்பு நாடுகள் அனுமதித்துள்ளன.
மேலும், உலகளாவிய ரீதியில் எந்தவொரு தனிமனிதனும் தனது சொந்த அரசியல் ,
பொருளாதாரம் , சமூக மற்றும் கலாசார நடவடிக்கைகளை தனது வாழ்நாளில் அனுபவிக்கும் உரிமை கொண்டவன் ஆகுமென பொதுச்சபைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகல நாடுகளினதும் பிரதிநிதிகள், ஐ.நா.வின் சகல அமைப்புகள், அரச அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் அனைத்தும் இத்தினத்தைக் கொண்டாட வேண்டுமென ஐநா கேட்டுள்ளது.


சர்வதேச மக்களாட்சி நாள் ஆண்டுதோறும் செப்டெம்பர் 15ம் தேதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. நவம்பர் 8, 2007ல் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டப் பிரகடனப்படியே அனைத்துலக மக்களாட்சி நாள் கொண்டாடப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் இப்பொதுத் தீர்மானத்தை 192 உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
உலகளாவிய ரீதியில் எந்தவொரு தனிமனிதனும் தனது சொந்த அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் கலாசார நடவடிக்கைகளை தனது வாழ்நாளில் அனுபவிக்கும் உரிமை கொண்டவன் ஆவான் என பொதுச்சபைத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய உலகிலுள்ள அனைத்து நாடுகளினதும் பிரதிநிதிகள், ஐ.நா.வின் சகல அமைப்புகள், அரச அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் அனைத்தும் இத்தினத்தைக் கொண்டாட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை கேட்டுள்ளது.
உலகில் காணப்படும் அரசியல் முறைக் கோட்பாடுகளுள் ஜனநாயகக் கோட்பாடும் ஒன்றாகும். பொதுவாக ஜனநாயகம் என்பது மக்களாட்சியைக் குறிக்கும். மக்களாட்சியை ஆங்கிலத்தில் டெமாக்ரசி (Democracy) என்பர். டெமாக்ரசி என்ற சொல் டெமோஸ் (Demos) கிராட்டோஸ் (Kratos) என்ற இரண்டு சொற்களிலிருந்து தோன்றியது. டெமோஸ் என்பதற்கு மக்கள் என்றும் கிராட்டோஸ் என்பதற்கு அதிகாரம் அல்லது ஆட்சி என்றும் பொருள் கொள்ளப்படும்
"மக்களாட்சி என்பது பலருடைய அரசாங்கம்" என்று கிரேக்க அறிஞர் பிளேட்டோ வரைவிலக்கணப்படுத்தினார் அரிஸ்டாட்டில் மக்களாட்சி ஏழ்மை நிலையிலுள்ளோர் தங்களுக்காக நடத்தும் ஆட்சி என்று கூறினார். 'மக்களால் மக்களுக்காக மக்களால் புரியப்படும் ஆட்சி முறையே மக்களாட்சி ஆகும். அதாவது மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே மக்களாட்சி அரசாகும். எனவே மக்களாட்சி அரசில் மக்களுக்காகவே ஆட்சி மேற்கொள்ளப்படும்." என்று முன்னாள் அமெரிக்க குடியரசின் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் தெளிவு படுத்தினார்.மேலும் அரசியல் அறிஞர் ராபர்ட்டால் அவர்களின் கருத்துப்படி 'சாதாரண மனிதர்களும் அரசியல் தலைவர்களைக் கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரத்தைப் பெற்றுள்ள ஆட்சி முறை ஜனநாயகமாகும்" என்றார்.
தற்போது உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் இந்த ஆட்சி முறையே நடைமுறையில் உள்ளது. பொதுவாக ஒரு நாட்டின் மக்கள், தங்களின் கருத்துக்களைத் தேர்தலின் மூலம் பதிவு செய்து, தங்கள் பிரதிநிதிளைத் தேர்ந்தெடுப்பர். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தனிக்கட்சியாகவோ அல்லது ஏனைய கட்சிகளுடன் கூட்டணியாகவோ ஆட்சி செய்வர். எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்காகவே ஆட்சி செய்ய வேண்டும். மக்களின் தேவை அறிந்து மக்களுக்கு சேவையற்ற வேண்டும். ஆகவே இங்கு மக்கள்பிரதிநிதி என்பவர் மக்கள் சேவகரே. கோட்பாட்டு ரீதியாக விளக்கம் அழகாக காணப்பட்டாலும் கூட ஆட்சிக்கு வரும் வரை மக்கள் சேவகர்களாக காட்டிக் கொள்ளும் இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மாறி விடுவது பொதுவாக ஜனநாயக நாடுகளில் காணக்கூடிய நடைமுறை நிலைப்படாகும்.
ஜனநாயகத்தின் அளவைத் தீர்மானிப்பது 'ஜனநாயக சுட்டெண்" ஆகும். ஜனவரி 2007ல் 'தி எக்கொனொமிஸ்ட்" இதழ் வெளியிட்ட மதிப்பீடுகளின்படி மொத்தமான 10 புள்ளிகளில் 9.5 புள்ளிகளும் புள்ளிகளுக்கு மேலும் பெற்றுள்ள நாடுகள் சிறந்த ஜனாநாயக நாடுகளாக இனங்காட்டப்படுகிறன. மேற்படி புள்ளி விபரத்தின் அடிப்படையில் சுவீடன் 9.88 புள்ளிகளுடன் அதி கூடிய மக்களாட்சிப் பண்பு கொண்ட நாடாக குறிப்பிடப்பட்டிருந்தது. வட கொரியா 1.03 புள்ளிகளுடன் மிகக் குறைந்த மக்களாட்சிச் சுட்டெண் உடைய நாடாகும்.
உலகத்தில் பல பகுதிகளிலும் உள்ள அரசியல் கோட்பாடுகளில் மக்களாட்சி என்பது ஒரு சிறந்த ஆட்சிமுறை என்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. ஜனநாயகம் எனும் மக்களாட்சி முறை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் உலகில் தோன்றி மறைந்து, அதன் பின் 2000 ஆண்டுகள் கழித்து மறுபடியும் உருவாகி 20 ஆம் நூற்றாண்டில் பலமான ஓர் ஆட்சிமுறையாக உலகெங்கிலும் உருவானது. இதனை மேலும் தெளிவு படுத்துவதாயின் பழங்கால கிரேக்க ரோமானிய அரசுகளில் மக்களாட்சி கொள்கை பின்பற்றப்பட்டது. இடைக்காலத்தில் மக்களாட்சி முறையில் சில இடர்பாடுகள் ஏற்பட்டன. ஆனால் அமெரிக்க சுதந்திரப்போர், பிரான்சியப் புரட்சி, ரஷ்யப் புரட்சி போன்றவற்றால் மன்னராட்சிக்கு மாற்றாக மக்களாட்சி என்ற புரட்சிக் கருத்திற்கு செயல்வடிவம் கொடுத்தன. அதனடிப்படையில் மக்களாட்சி முறை பல நாடுகளில் ஏற்பட்டது.
மக்களாட்சி முறையில் நேரடி மக்களாட்சி, மறைமுக மக்களாட்சி என இருவகைகள் உள்ளன. நேரடி மக்களாட்சியில் அரசாங்க செயல்பாடுகளில் மக்கள் நேரிடையாக பங்கேற்கின்றனர். அரசாங்கத்தில் தீர்மானங்களை உருவாக்கும் வகையில் மக்கள் நேரிடையாக தொடர்பு கொண்டிருந்தனர். பழங்கால கிரேக்க ரோமானிய நாடுகளில் இம்முறையான மக்களாட்சி நடைபெற்றது. இம்முறையான மக்களாட்சி இடைக்காலத்தில் இத்தாலிய அரசுகளிடையே புதுப்பிக்கப்பட்டது. பழங்கால இந்தியாவில் நேரடி மக்களாட்சிக் கருத்துப்படி கிராம பஞ்சாயத்து முறை செயல்பட்டு வந்தது.
20ம் நூற்றாண்டில் பெரிய நாடுகளில் இக்கருத்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதற்கு காரணம், மக்கள் தொகைப் பெருக்கமே ஆகும். எனவே மறைமுக மக்களாட்சி முறையில் மக்கள் அவர்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சி அமைத்து அரசாங்கத்தை நடத்துகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர். உலகின் பல நாடுகளில் இம்முறையே பின்பற்றப்படுகிறது.
ஜனநாயக ஆட்சி முக்கிய இரண்டு அம்சங்கள் காணப்படுகின்றன. அவை சமத்துவம், சுதந்திரம் என்பனவாகும்.
இங்கு சமத்துவம் எனும் போது இது விரிவான விளக்கப்பரப்பைக் கொண்ட போதிலும் கூட சுருக்கமாக 'உரிமைகளைப் பொருத்தமட்டில் எல்லோரும் சமம்" என்பதையே எடுத்தக்காட்டுகின்றது. அமெரிக்க சுதந்திர பிரகடனத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 'சகலரும் சம உரிமைகளுடன் படைக்கப்பட்டுள்ளனர் என்பதை ஒப்புக் கொள்கிறோம்", 1789ல் பிரான்சின் உரிமைப்பிரகடனம் பின்வருமாறு கூறுகின்றது. 'மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை சம உரிமைகளை உடையவர்கள்., இவற்றின் கருத்து குடிகள் என்ற ஒவ்வொருவருக்கும் எல்லோருடைய உரிமைகளும் சமமாகும்" என்பதாகும். குடியாட்சி வெற்றி பெற வேண்டுமாயின் மக்களுடைய சமத்துவம் நிலவ வேண்டியது அவசியமாகும்.
"எல்லா மக்களுக்கும் அரசில் பதவி வகிக்கவும், பொது சட்டதிட்டங்களை உருவாக்கவும் உரிமை உண்டு எனும் விதி மேலெழுந்தவாரியாக நோக்கும்போது சிறப்பாகத் தெரிகிறது. கல்வியறிவு இல்லாதவர்கள் நல்லவர்களைத் தேர்ந்தெடுப்பதில்லை எனவும், இதுமாதிரியான மக்களை டெமஃகாக் என அழைக்கப்படும் மேடைப் பேச்சு வல்லுநர்களான தலைவர்கள் தவறான விளக்கங்களை அளித்து கெட்ட பாதைக்கு இட்டுச்சென்று அவர்களது ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்து விடுவார்கள் என்றும் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே அரசியல் ஞானிகளான பிளாட்டோவும் அவரது ஆசான் சோக்ரட்டீசும் சொல்லி இருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது. நடப்பு அரசியலை 25 நூற்றாண்டுகளுக்கு முன்பே கணித்திருக்கிறார்கள் என்பது தான் அதிசயம்.



சுதந்திர இந்தியா, நாடாளுமன்ற ஜனநாயக முறையைப் பின்பற்ற வேண்டும் என தலைவர்கள் விரும்பினர். ''சுதந்திர இந்தியாவில் அனைவரும் சமம். குறிப்பிட்ட வயது வந்தவர்கள் அனைவருக்கும் வாக்குரிமை'' என பிரதமர் நேரு கூறியபோது பதறிப்போனார் கவர்னர்
ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன்.
அறநுாறு ஆண்டுகள் பழமையான பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் வாக்குரிமை என்பது படிப்படியாகத்தான் கொடுக்கப்பட்டது. நீண்ட காலத்துக்குப் பிறகே பெண்களுக்கு
வாக்குரிமை வழங்கப்பட்டது. இந்தியாவில் போதிய கல்வியறிவு இல்லை. அவர்களுக்கு வாக்குரிமையின் மதிப்பு தெரியாது. வேண்டாம் இந்த விஷப்பரீட்சை" என்று எச்சரித்தார். பின்னர் "இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு" என்ற பெயரினைப் பெற்றது.
ஜனநாயகம் என்ற பதம் மிகவும்
பழமையானதாகும். உலகில் காணப்படும் அரசியல் முறைக் கோட்பாடுகளுள் ஜனநாயகக் கோட்பாடும் ஒன்று. பொதுவாக ஜனநாயகம் என்பது மக்களாட்சியைக் குறிக்கும். மக்களாட்சியை ஆங்கிலத்தில் டெமாக்ரசி (Democracy) என்பர். டெமாக்ரசி என்ற சொல் டெமோஸ் (Demos) கிராட்டோஸ்(Kratos)என்ற இரண்டு சொற்களிலிருந்து தோன்றியது. டெமோஸ்
என்பதற்கு மக்கள் என்றும் கிராட்டோஸ் என்பதற்கு அதிகாரம் அல்லது ஆட்சி என்றும் பொருள்.
மக்களாட்சி என்பது ஒரு சிறந்த ஆட்சிமுறை என்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. காரணம், மக்களின் பங்களிப்பு இதில் அதிகம்.
எந்தவொரு தனிமனிதனும் தனது சொந்த அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் கலாசார நடவடிக்கைகளை அனுபவிக்கும் உரிமை கொண்டவன் ஆவான் என ஐ.நா. பொதுச்சபைத் தீர்மானத்தில் கூறப்பட்டுஉள்ளது. இது ஜனநாயக ஆட்சிமுறையால் மட்டுமே சாத்தியமாகும்.
பேராசிரியர் சீலி “ஜனநாயகம் என்பது ஒரு அரசாங்கமுறைமை. இதில் ஒவ்வொருவரும் இதன் பங்குதாரர்கள்” எனக் கூறுகின்றார். பார்கர் என்பவர் “கலந்துரையாடலிலான அரசாங்க முறை" என்கின்றார் .
"மக்களாட்சி என்பது பலருடைய அரசாங்கம்" என்று கிரேக்க அறிஞர் பிளேட்டோ வரையறுத்தார். அரிஸ்டாட்டில் "மக்களாட்சி ஏழ்மை நிலையிலுள்ளோர் உங்களுக்காக நடத்தும் ஆட்சி" என்று கூறினார். டைசி என்பவர் "ஜனநாயக முறையில் ஆளும் அதிகாரம் சட்டரீதியாக
சமூகத்திலுள்ள எல்லா அங்கத்தவர்களிடமும் முழுமையாக அளிக்கப்படும்.
ஜனநாயகத்தின் பண்புகள்
ஜனநாயகம் சிறப்பாக இயங்க சில அடிப்படை அம்சங்கள் தேவை. சமத்துவமும் சுதந்திரமும் ஜனநாயகத்தின் முக்கிய அடிப்படைத் தத்துவங்கள். அதாவது, ஜனநாயக அரசாங்கமானது, தன் மக்கள் அனைவருக்கும் சமூக, பொருளாதார வாய்ப்புக்களை சமமாக ஏற்படுத்தித் தர வேண்டும்.
ஒரு மனிதன், சட்டத்துக்கு உட்பட்டு, அவனது வளர்ச்சிக்கு அவசியமானது எனக் கருதுபவற்றை மற்றவர்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி செய்வதற்கான உரிமை சுதந்திரமாகும். இதில் அரசியல், பொருளாதார, சமய சுதந்திரம் ஆகியவை அடங்கும். மக்களாட்சியில் கருத்து
சுதந்திரம் ஒவ்வொருக்கும் உண்டு என்பதால் சகிப்புத் தன்மையும் அவசியம். சகிப்புத் தன்மையில்லாவிட்டால் ஜனநாயகம் தோற்றுவிடும். இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
மக்களாட்சியில் குறிப்பிட்ட வர்க்கமோ அல்லது வர்க்கங்களோ முதன்மையானதாக கருதப்படுவதில்லை. அதேநேரத்தில், மக்களாட்சி நிர்வாகத்தில் பெரும்பாலானோரின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதோடு சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு மதிப்பளித்தாக வேண்டும். ஜனநாயகத்தில் இறுதியான அதிகாரம் மக்களிடமே உள்ளது. ரூசோவின் வார்த்தையில் சொல்வதாயின் 'உண்மையான ஜனநாயகம் என்பது மக்களின் குரலே'.
இன்றைய நிலை
"ஜனநாயக நாட்டின் மக்கள், தங்கள் பிரதிநிதிகளைத் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுப்பர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்காகவே ஆட்சி செய்ய வேண்டும். இங்கு மக்கள் பிரதிநிதி என்பவர் மக்கள் சேவகரே"... இப்படி, கோட்பாட்டு ரீதியான அழகான விளக்கம் சொல்லப்பட்டாலும் கூட, ஆட்சிக்கு வரும் வரை மக்கள் சேவகர்களாக காட்டிக் கொள்ளும் இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மாறி விடுவதனைக் காண்கிறோம்.
ஆபிரகாம் லிங்கன் மக்களாட்சியை “மக்களுடைய, மக்களிலாலான, மக்களுக்கான அரசாங்கம்” என்கிறார். இன்றைக்கு, “மக்களாட்சி என்பது மக்களுக்காக” என்பது எந்த அளவில் சாத்தியமாக இருக்கிறது? கெட்டுப்போக இருக்கும் உணவுத்தானியத்தை உடனடியாக ஏழைகளுக்குப்
பங்கிட்டுக் கொடுக்குமாறு சில ஆண்டுகளுக்கு முன் உச்சநீதிமன்றம் கூறியது.
"உச்சநீதிமன்றம் கருதுவதுபோல் பங்கிட்டு கொடுப்பது அவ்வளவு எளிதல்ல. நீதிமன்றங்கள் நிர்வாகத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது” என்றனர் மத்தியில் ஆளுபவர்கள். இன்றைய மக்களாட்சி நிலைக்கு இது ஒரு உதாரணம்.அரசமைப்புச் சட்டத்தில் பெரும்பாலான அதிகாரங்கள் மத்திய அரசிடம் குவிக்கப்பட்டுவிட்டன. நாளடைவில் மாநிலம் வசம் இருந்த சில அதிகாரங்களும் மத்திய அரசின் கைக்குப் போனது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை நிலைகுலைக்கும் அதிகாரத்தையும் மைய அரசு கொண்டிருக்கிறது.
அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரும் தருணத்தில், அரசியல் நிர்ணய சபையில் இது தொடர்பான விவாதம் நடந்தபோது "இந்த விதிமுறை தவறாகப் பயன்படுத்தப்படலாம்" என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்த்தனர். அதற்கு அம்பேத்கர் பதிலளிக்கையில், "இது ஏட்டில் முடங்கிக் கிடக்கும் ஒரு விதிமுறையாக இருக்குமே தவிர நடைமுறையில் பயன்படுத்த வேண்டிய நிலைமை வராது" என்றார். ஆனால் இதுவரை மத்திய அரசுகளால் நுாற்றுக்கு மேற்பட்ட தடவைகள் மாநில அமைச்சரவைகள் நீக்கப்பட்டும் சட்டசபைகள் கலைக்கப்பட்டும் இருக்கின்றன.
ஏற்றத்தாழ்வுகள்
சமுதாயத்தில் உள்ள எல்லாவிதமான ஏற்றத் தாழ்வுகள் நீக்கப்படும் என்பதில் தொடங்கி, தொழில் வளர்ச்சியும், பொருளாதார வசதிகளும் ஒரு சிலரிடம் குவிந்துவிடுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதுவரை, பல்வேறு கோட்பாடுகளை மக்களாட்சி மலர்வதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதி வைத்திருந்தாலும், அவை நிறைவேற்றப்படவில்லை. குறிப்பிட்ட மக்களின் வாழ்க்கை நிலை பெரிதாக உயரவில்லை என்பதோடு, இருந்த வசதிகள்கூட நாளுக்கு நாள் சரிந்து வருகின்றன என்பதே நிஜம்.
இந்தியாவின் அரசியல் நிர்ணய சபை 1946 டிசம்பர் 9 கூடியது. அப்போது தலைவராக இருந்த டாக்டர் சச்சிதானந்த சின்கா, அமெரிக்க நீதிபதி ஜோசப் ஸ்டாரி என்பவரின் அறிவுரையை அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களுக்கு நினைவூட்டினார். "உயர்தர மேதைகளின் சீரிய திறமை யினால் அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆழ்ந்த லட்சியங்களும் அறிவுகூர்ந்த விதிமுறைகளும் அதில் மிகுதியாக இடம்பெற்று இருக்கலாம்.
ஆனால், ஆட்சியாளர்கள் செய்கிற குற்றங்களினாலும், அரசியல்களத்தில் குவிந்துவிடும் ஊழல் மேடுகளாலும், அதைவிட மக்கள் காட்டுகிற அக்கறையின்மையாலும் சிறப்பான அரசியலமைப்புச் சட்டத்துக்கு அழிவு ஏற்படலாம். மக்கள்தான் ஒரு மக்களாட்சியின் உண்மையான காப்பாளர் களாக இருக்க முடியும்.
மக்களுடைய முயற்சியால், கடும் உழைப்பால், தன்னலமற்ற போராட்டங்களால் பல நாடுகளில் மக்களாட்சிகள் நிறுவப்பட்டன. ஊழல் நாயகர்களிடம் நாடாளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால், மக்களாட்சியின் கடைசிக் காலம் நெருங்கி விட்டதாக ஆகிவிடும்" என்றார்.
சமுதாய மக்களாட்சி
1949 நவம்பர் 24ம் நாள் முழுமைபெற்ற அரசமைப்பு சட்டத்தை சமர்ப்பித்துப் பேசிய அம்பேத்கர், "இந்தியாவில் அரசியல் மக்களாட்சி வந்துவிட்டது. ஆனால் சமுதாய மக்களாட்சி இங்கு இல்லை. சமுதாய அமைப்பில் சமத்துவமான மக்களாட்சி நிலை இல்லையென்றால் அரசியல் மக்களாட்சி வெகுநாளைக்கு நீடிக்காது. இந்த நாட்டில், பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாக்கப்பட்டு விட்டன. அதேபோல் பொருளாதாரத் துறையில் செல்வச்
செழிப்பி ல் வாழ்பவர்களின் உல்லாசபுரியும், ஏழ்மைச் சேற்றில் அழுந்தி உணவில்லாமல்,
உடையில்லாமல் அல்லற்படும் ஏழைகளின் சேரிகளும் அடுத்து அடுத்து இருக்கின்றன. இது சமத்துவமல்ல" என்றார்.
அத்தோடு, "தற்போது வெள்ளையர் அரசாங்கம் வெளியேறிவிட்ட நிலைமையில், நம் மக்களாட்சியின் குறைபாடுகளுக்கு வேறு யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது. நம் குறைபாடுகளுக்கு நாமேதான் பொறுப்பேற்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.." என்று எச்சரித்தார்.
அரசியல் நிர்ணயசபையின் முதல் கூட்டத்தில் தலைவர் சச்சிதானந்த சின்கா கூறிய அறிவுரையையும், அரசியல் நிர்ணயசபையின் கடைசிக் கட்டத்தில் அம்பேத்கர் அளித்த எச்சரிக்கையும் இந்திய மக்களாட்சி நிலைமைக்குப் பொருந்துவதாக இருக்கின்றன. சமத்துவம், சுதந்திரம், வாழ்வுரிமை, மனிதமாண்பு ஆகியவை ஏழையின் வீட்டுப்பக்கமும் எட்டிப்பார்க்கவேண்டும். அப்போதுதான் மக்களாட்சி சிறக்கும்.
நன்றி விக்கிப்பீடியா , தாட்ஸ் தமிழ், தினமலர்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக