வியாழன், 7 செப்டம்பர், 2017

நகைச்சுவை எழுத்தாளர் தேவன் அல்லது ஆர். மகாதேவன் பிறந்த தினம் செப்டம்பர் 8 , 1913



நகைச்சுவை எழுத்தாளர் தேவன் அல்லது ஆர். மகாதேவன் பிறந்த தினம்  செப்டம்பர் 8 , 1913

தேவன் அல்லது ஆர். மகாதேவன் ( செப்டம்பர் 8 , 1913 - மே 5 , 1957 ) பிரபல நகைச்சுவை எழுத்தாளர். பல
நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் தேவன் என்ற புனைபெயரில் எழுதியவர். துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான படைப்பாகும்.
வாழ்க்கைக் குறிப்பு
தமிழ்நாட்டில் கும்பகோணத்தை அடுத்த
திருவிடைமருதூரில் செப்டம்பர் 8 , 1913 அன்று பிறந்தார். அவ்வூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப் பள்ளில் படித்தார். மகாதேவன், பள்ளியில் சாரணர் படையில் சேர்ந்திருந்ததால், சாரணப்படைத் தலைவராக இருந்த கோபாலசாமி ஐயங்கார், மாணவர்களுக்கு நிறைய சிறுகதைகளைச் சொல்லி, மாணவர்களையும் கதை சொல்லச் சொல்லி ஊக்குவிப்பார். இவர் மூலம் கதை கட்டுவதில் மகாதேவனுக்கு ஆர்வமும் சுவையும் தோன்றியது. கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்.
பத்திரிகாசிரியர்
சிறிது காலம் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றியபின் தனது 21 ஆவது வயதில் ஆனந்த விகடன் வார இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1942 முதல் 1957 வரை நிர்வாக ஆசிரியராக இருந்தார். 23 ஆண்டுக் காலம் விகடனில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான நகைச்சுவைக் கட்டுரைகள், இருபதுக்கும் மேற்பட்ட தொடர்கள் எழுதினார்.
எழுத்துலகில்
துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான பாத்திரப் படைப்பு; இது சின்னத் திரையில் தொடராக வந்திருக்கிறது.
கோமதியின் காதலன் திரைப்படமாக வெளியாயிற்று. இவர் எழுதிய மிஸ் ஜானகி, மிஸ்டர் வேதாந்தம் , ஜஸ்டிஸ் ஜகந்நாதன் , கல்யாணி , மைதிலி,
துப்பறியும் சாம்பு முதலிய நாவல்கள், மேடை நாடகங்களாகவும் பல இடங்களில் நடிக்கப்பட்டன. மிஸ்டர் வேதாந்தம் , ஸ்ரீமான் சுதர்சனம் இரண்டு நாவல்களும் இயக்குநர்
ஸ்ரீதர் தயாரிப்பில் சின்னத்திரையிலும் வழங்கப்பட்டன. நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றிய மிக விரிவான புதினம் ஜஸ்டிஸ் ஜகந்நாதன். இது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
50களில் இவர் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டபோது எழுதிய
ஐந்து நாடுகளில் அறுபது நாள் புத்தகமாக வெளியாகியுள்ளது.
ஜஸ்டிஸ் ஜகந்நாதன் புதினம், 1974 இல்
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.
தேவன் சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இரு முறை பதவி வகித்திருக்கிறார்.
தேவனின் படைப்புகள்
புதினங்கள்
மைதிலி (1939) மைதிலி
மாலதி (1942 ) மாலதி
கோமதியின் காதலன் கோமதியின் காதலன்
துப்பறியும் சாம்பு (1942)
கல்யாணி (1944)
மிஸ் ஜானகிமிஸ் ஜானகி
ஸ்ரீமான் சுதர்ஸனம்'ஸ்ரீமான் சுதர்ஸனம்'
மிஸ்டர் வேதாந்தம் மிஸ்டர் வேதாந்தம் (1949-50)
ஜஸ்டிஸ் ஜகந்நாதன் (1953-54)ஜஸ்டிஸ் ஜகந்நாதன்
லட்சுமி கடாட்சம் (1951-5 2) லட்சுமி கடாட்சம்
ஸி.ஐ.டி. சந்துரு (1955-56)
பயணக் கட்டுரைகள்
நடந்தது நடந்தபடியே
ஐந்து நாடுகளில் அறுபது நாள்
கட்டுரை, கதைத் தொடர்கள்
மிஸ்டர் ராஜாமணி
விச்சுவுக்குக் கடிதங்கள்
அப்பளக் கச்சேரி
பெயர்போன புளுகுகள்
ராஜத்தின் மனோரதம்
கமலம் சொல்கிறாள்
ஸரஸுவுக்குக் கடிதங்கள்
போடாத தபால்
அதிசயத் தம்பதிகள்
கண்ணன் கட்டுரைகள்
ராஜியின் பிள்ளை
மல்லாரி ராவ் கதைகள்
சின்னஞ் சிறுகதைகள்
பிரபுவே! உத்தரவு
புஷ்பக விஜயம்
தொகுப்புகள், சிறுகதைகள்
ஏன் இந்த அசட்டுத்தனம்
பார்வதியின் சங்கல்பம்
சீனுப்பயல்
மனித சுபாவம்
பல்லிசாமியின் துப்பு
ஜாங்கிரி சுந்தரம்
போக்கிரி மாமா
ரங்கூன் பெரியப்பா
சொன்னபடி கேளுங்கள்
மோட்டார் அகராதி
அல்லையன்ஸ் பதிப்பகம் 'தேவ'னின் பல படைப்புகளை வெளியிட்டுள்ளது.
கிழக்குப் பதிப்பகமும் தேவனின் பல நூல்களைச் செம்பதிப்புகளாக வெளியிட்டுள்ளது.
தேவனைப் பற்றி பெரியோர்
“ "ஒரே ஒரு கட்டுரையினால், ஒரே நாளில், தமிழ்நாடெங்கும் பிரசித்தமாகிவிட்டார் தேவன். முதன் முதலில் கையெழுத்துப் பிரதியில் அவர் கட்டுரையைப் படித்தபோது, இவ்வளவு குதூகலத்துடன் குழந்தைகளின் வாழ்க்கையை எழுதும் இந்த ஆசாமி யார் என்று வியப்படைந்தேன். இவரோ, இன்னும் இருபது வயது நிரம்பாத இளைஞர் என்று அறிந்தபோது அளவிலாத மகிழ்ச்சி உண்டாயிற்று. குழந்தைகளின் அற்ப சந்தோஷங்களையும், துக்கங்களையும் மட்டுமல்ல, வயதான மனிதர்களுடைய மகா அற்ப சுக துக்கங்களையும் அவ்வளவு குதூகலத்துடன் எழுதக் கூடியவர் தேவன்" -
கல்கி ”
வெளி இணைப்புகள்
தேவனின் படைப்புகள்
தேவனின் சில கட்டுரைகள்
தேவனின் வேதாந்தம்
கல்கத்தாவில் மிஸ்டர் வேதாந்தம்
மிஸ்டர் வேதாந்தம்
தேவன் பார்வையில் ஒரு பத்திரிகை ஆபீஸ்
மிஸ்டர் ராஜாமணி-1
மிஸ்டர் ராஜாமணி-2
மிஸ்டர் ராஜாமணி-3
மிஸ்டர் ராஜாமணி-4
எழுத்தாளர்கள்
பழைய ஞாபகங்கள்
வைத்தியம்
ரோடுஸென்ஸ்
சில விளையாட்டுக்கள்
உபாத்தியாயர்கள்
ஸரஸ்வதி காலெண்டர்
அலமுவின் சுயசரிதை
பழைய நினைவுகள்
கண்ணன் கட்டுரைகள்
அட!நாராயணா!
நாகப்பன்
மாணாக்கர்களுக்கு மட்டும்
விளம்பர வாழ்க்கை
நாய்களைப் பற்றிய சில சிந்தனைகள்
ஐயோ! சுண்டெலி !
எனது மனமார்ந்த நன்றி
வியாபார தந்திரம்
வைத்தியருக்கு மருந்து
வெற்றிக்கு வழி
சொப்பனம் பலிக்குமா?
யாருக்கு எச்சரிக்கை?
மோட்டார் அகராதி
கண்!ஜாக்கிரதை!
புது வருஷம்
புகழும் புகழ்ச்சியும்
பொழுதைப் போக்காதே!
சட்டம்
”புருஷ லட்சணம்”
கண்ணன் கட்டுரைகள்
தேவனின் சில படைப்புகள்
துப்பறியும் சாம்பு : 32.திரை எழும்புகிறது!(சிறுகதை)
துப்பறியும் சாம்பு: 17.பங்களா மர்மம் (சிறுகதை)
மாலதி (நாவல்)
போடாத தபால்
கல்கி என்னும் காந்த சக்தி
நடந்தது நடந்தபடியே :4. நான் கேட்ட கதைகள்
எனது மனமார்ந்த நன்றி
தென்னாட்டுச் செல்வங்கள் -1 ‘தேவன் +
சில்பி ’
வேறு
அமரர் 'தேவன்' நினைவுக் கட்டுரைப் போட்டிகள்
துப்பறியும் சாம்பு'; ஒரு வெண்பா - பசுபதி
தேவன் -ஐம்பதாண்டு நினைவு -வி.திவாகர்
தேவன் கதாபாத்திரங்கள் -வி.திவாகர்
தேவன் கதாபாத்திரங்கள்-2 -வி.திவாகர்
துப்பறியும் சாம்பு - வி.திவாகர்
தேவனைப் பற்றி
நானும் தேவனும் -கடுகு
கல்யாணி - ஒரு விமரிசனம் -வே.சபாநாயகம்
தேவன் வருவாரா - சுஜாதா
எழுத்துக்கலை பற்றித் 'தேவன்'
தேவன் - ஓர் எளிய அறிமுகம்
தேவன் நினைவு நாள்: 2010 - சு.பசுபதி
தேவன் நினைவுகள்
துப்பறியும் தேவன் , பரிபூர்ணா,
தினமணி , சூன் 26, 2011
துப்பறியும் சாம்பு -1 - சு.பசுபதி
துப்பறியும் சாம்பு -3 - சு.பசுபதி
எங்கள் தேவன் - ஏ.எஸ்.ராகவன்
தேவன் நூறு ( தேவன் ஒரு சகாப்தம்) - திவாகர்
தேவனுக்கு வழி விடுங்கள்! - ராணி மைந்தன், தினமணி 15 செப்டம்பர் 2013
தேவன் கதைகளில் பெண்கள் - ‘அம்பை’ - நவம்பர் 2013,’அமுதசுரபி’


தேவன் 10
பிரபல நகைச்சுவை எழுத்தாளரும், ஜனரஞ்சக எழுத்தின் முன்னோடிகளில் ஒருவருமான தேவன் (Devan) எனப்படும் ஆர்.மகாதேவன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l கும்பகோணம் அடுத்த திருவிடை மருதூரில் (1913) பிறந்தார். அங்குள்ள திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப் பள்ளியில் படித்தார். சாரணர் படைத் தலைவர் கோபாலசாமி ஐயங்கார் நிறைய கதை சொல்வார். கதை கூறச் சொல்லி மாணவர்களை ஊக்குவிப்பார். அதனால், இவருக்கும் கதையில் ஆர்வம் உண்டானது.
l கும்பகோணம் அரசு கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். ஆங்கிலப் பேராசிரியர் மூலம் இலக்கியத்தில் நாட்டம் ஏற்பட்டது. சிறிது காலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.
l ‘ஆனந்த விகடன்’ இதழில் 21 வயதில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1942 முதல் 1957 வரை அதன் நிர்வாக ஆசிரியராக இருந்தார். விகடனில் 500-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான நகைச்சுவைக் கட்டுரைகள், 20-க்கும் மேற்பட்ட தொடர்கள் எழுதியுள்ளார். ‘தேவன்’ என்ற புனைப்பெயரில் எழுதினார். ‘துப்பறியும் சாம்பு’ இவரது பிரபலமான பாத்திரப் படைப்பு. அந்த வரிசையில் மட்டும் 50 கதைகள் எழுதியுள்ளார்.
l இவரது பல படைப்புகள் சின்னத்திரையில் தொடர்களாக வந்தன. ‘கோமதியின் காதலன்’ திரைப்படமாக வந்தது. ‘மிஸ்.ஜானகி’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ‘கல்யாணி’, ‘மைதிலி’ போன்ற நாவல்கள் மேடை நாடகங்களாக அரங்கேறின.
l தான் மேற்கொண்ட வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்கள் குறித்து கட்டுரைகள் எழுதினார். அவை, ‘ஐந்து நாடுகளில் அறுபது நாள்’ என்ற புத்தகமாக வெளிவந்தது. நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி இவர் விரிவாகப் படைத்த ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
l சென்னை எழுத்தாளர் சங்கத் தலைவராக 2 முறை பதவி வகித்துள்ளார். நம்மைச் சுற்றி வாழும் மனிதர்கள், பொதுவாக மக்கள் வாழும் போக்கு, அன்றைய நாட்டு நிலவரம் ஆகியவை குறித்து மிக நேர்த்தியாகவும், எளிமையான நகைச்சுவையோடும் இருப்பது இவரது படைப்புகளின் சிறப்பம்சம்.
l ‘குழந்தைகளின் அற்ப சந்தோஷங்கள், துக்கங்கள் மட்டுமல்லாது, வயதானவர்களின் மகா அற்ப சுக துக்கங்களைக்கூட அவ்வளவு அற்புதமாக எழுதக்கூடியவர் தேவன்’ என்று பாராட்டியுள்ளார் கல்கி.
l ஆங்கிலக் கதைகள் மட்டுமே படித்தவர்களைக்கூட தன் இயல்பான, நகைச்சுவை கலந்த எழுத்து மூலம் தமிழுக்கு இழுத்தவர் என்று போற்றப்பட்டார். ‘வாசகர்களால் அடுத்த தலைமுறை எழுத்தாளராக பார்க்கப்பட்டவர். தமிழ் எழுத்துலகின் சார்லஸ் டிக்கன்ஸ்’ என்று அசோகமித்திரன் குறிப்பிட்டுள்ளார்.
l நகைச்சுவைக் கட்டுரைகள், கதைகள், அபாரமான குடும்ப நாவல்கள் என அனைத்து வகைகளையும் அநாயாசமாக கையாண்டவர். பத்திரிகை துறையில் அவர் கையாளாத உத்திகளே இல்லை எனலாம். தனித்துவம் வாய்ந்த படைப்பாளி.
l கால் நூற்றாண்டு காலத்துக்கு கதைகள், நாவல்கள், கட்டுரைகளை எழுதிக் குவித்தார். உழைப்பால் உயர்ந்தவர், எழுத்தால் வளர்ந்தவர், பழகுவதற்கு எளிமையானவர், உலக விஷயங்களை ஜனரஞ்சகமாக, எதார்த்தமாக, கதைப்போக்காக மாற்றி உள்ளங்களில் புகுந்து குதூகலமடையச் செய்தவர் என்றெல்லாம் போற்றப்பட்ட தேவன் 44-வது வயதில் (1957) மறைந்தார்.

தேவன் - 12 : சாப்ளின் தமிழன் தேவன்!
தேவன் நூற்றாண்டு விழாவைப் பற்றி ‘ஆனந்த விகட’னில் வந்த கட்டுரை இதோ!
ரவி பிரகாஷ் மிக அழகாக எழுதியுள்ளார். அவருக்கு என் நன்றி. கூடவே, ‘தேவனின் பழைய பல படைப்புகளை விகடன் ‘பொக்கிஷ’ப் பகுதியில் வெளியிட்டால் மேலும் சிறக்கும்!
அச்சில் வராத பல தேவனின் படைப்புகளை வெளியிட விகடனின் உதவி தேவை !
சாப்ளின் தமிழன் தேவன்!
ரவிபிரகாஷ், படம்: ஆ.முத்துக்குமார்
[ நன்றி : ஆனந்த விகடன், 18 செப்டம்பர் 2013 ]
ஹாலிவுட்டில் நகைச்சுவைக் கதாபாத்திரம் என்றால், நமக்கு உடனே
'சார்லி சாப்ளின்’தான் நினைவுக்கு வருவார். அதே மாதிரி, தமிழில்
'நகைச்சுவை’ என்றதுமே சட்டென்று நம் நினைவுக்கு வரும் கதாபாத்திரம்
'துப்பறியும் சாம்பு’.
தமிழர் நெஞ்சங்களில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்திருக்கும் இந்தச் சிரஞ்சீவிக் கதாபாத்திரத்தை உருவாக்கிய பிரம்மா, 'தேவன்’ என்கிற மகாதேவன்.
ஆனந்த விகடன் பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றியபோது பேராசிரியர் கல்கி கண்டெடுத்த முத்து,
இந்த தேவன். விகடனில் சுமார் 23 ஆண்டுகளுக்கும் மேலாக சிரஞ்சீவிப் படைப்புகள் பல எழுதியும், சுமார் 15 ஆண்டுகாலம் பொறுப்பாசிரியராகப் பணியேற்று பத்திரிகையை நடத்தியும்,
விகடனின் புகழை உச்சத்துக்குக் கொண்டுசென்றவர் தேவன்.
துப்பறியும் சாம்பு உட்பட தேவன் எழுதிய அத்தனைக் கதைகளிலும் கட்டுரைகளிலும் நகைச்சுவை தெறிக்கும். 'ராஜத்தின் மனோரதம்’ 'மல்லாரி ராவ் கதைகள்’ போன்ற நகைச்சுவைக் கதைகளையும், 'மிஸ்டர் வேதாந்தம்’, 'ஸ்ரீமான் சுதர்சனம்’, 'லக்ஷ்மி கடாக்ஷம்’ போன்ற அற்புதமான குடும்ப நாவல்களையும் எழுதி, தனது பெயரை எழுத்துலகில் நீங்கா இடம்பெறச் செய்தவர் தேவன்.
இந்த வருடம், தேவனின் நூற்றாண்டு. 1913-ம் ஆண்டு, செப்டம்பர் 8-ம் தேதி திருவிடைமருதூரில் பிறந்த இவர், ஊர்ப் பாசம் காரணமாக தமது சொந்த ஊரை இயன்றபோதெல்லாம் தம் கதைகளில் எப்படியாவது நுழைத்துவிடுவார். இவரது கதைகளில் உவமைநயம் மிளிரும். உதாரணத்துக்குச் சில...
' எதைக் கேட்டாலும் இல்லைதான்; யார் கேட்டாலும் கிடையாதுதான். பீரங்கி வாயிலே வெளிப்படும் குண்டின் உத்வேகம் இங்கே வெட்கிப்போகும்!’
' பல்வரிசை காட்டிக் கைக்கொட்டி ஆர்ப்பரிப்பது போல சமுத்திர அலைகள் ஓயாது எழும்புவதும் குனிவதுமாக இருந்தன.’
' பகலிலேயே இருள் கவிந்திருக்கும் சுப்புரத்தினத்தின் கிரஹம் இரவில் துஷ்டமிருகத்தின் குகைபோலக் காணப்பட்டது.’
பொதுவாகவே, துயரமான, துக்கமான நிகழ்வுகளையும் மெல்லிய நகைச்சுவையோடு வாசகர்களுக்குப் படைப்பது தேவனின் பாணி. 'ஸ்ரீமான் சுதர்சனம்’ நாவல் ஓர் உதாரணம்.
எழுத்தாளர் சுஜாதா, தேவன் எழுத்துக்குப் பரமரசிகர். இவர் விகடனில் எழுதிய 'கற்றதும் பெற்றதும்’ தொடரில், 'பொதுவாக,
நகைச்சுவைக் கதைகளின் ஆயுள்காலம் மிகவும் சொற்பம். உலக அளவில் எடுத்துக்கொண்டால்கூட, இன்றுவரை நீடித்து நிற்கும் நகைச்சுவைக் கதைகளின் பெயர்களை ஓர் உள்ளங்கையில் எழுதிவிடலாம். தேவனின் 'ஸ்ரீமான் சுதர்சனம்’ அந்தப் பட்டியலில் மிகச் சுலபமாக வரும்!’ என்று குறிப்பிட்டுள்ளார்.
எழுத்தில் பல உத்திகளைப் புகுத்தியவர் தேவன். தொடர்கதை அத்தியாயங்கள் விகடனில் ஏழெட்டுப் பக்கங்கள் வெளியாகிக்கொண்டிருந்த காலகட்டத்தில் நறுக்கென்று ஒரே பக்கத்தில் 'மாலதி’
எனும் சஸ்பென்ஸ் தொடர்கதையை எழுதினார் தேவன்.
தேவன், எழுத்துலகில் மட்டும் ஜாம்பவான் அல்ல; பத்திரிகை நிர்வாகம், எழுத்தாளர் சங்கத் தலைவர், பயணக் கட்டுரையாளர், நாடக வசனகர்த்தா எனப் பல முகங்கள் கொண்டவர். தமிழ் எழுத்துலகத்துக்குப் பெரிய பங்களிப்பைச் செய்து, பெருமை சேர்த்தவர்.
இன்றைக்கு இலங்கைப் பிரச்னை பற்றிப் பேசுகிறோம்... படிக்கிறோம். இலங்கைத் தமிழர்களின் நிலை பற்றிக் கண்ணீர் வடிக்கிறோம். 1930-களிலேயே இலங்கைக்குப் பயணம் செய்து, அங்குள்ள தமிழர்களின் நிலை பற்றியெல்லாம் நேரடியாகக் கண்டு, அங்குள்ள தமிழ்ச் சங்கங்களைப் பார்வையிட்டு,
தமிழறிஞர்களைப் பார்த்துப் பேசி,
தமிழர்களின் நிலையை உலகுக்கு வெட்டவெளிச்சமாக்கியவர் தேவன்.
ஆனந்த விகடனில் தேவனின் முக்கியப் பங்களிப்பு 'தென்னாட்டுச் செல்வங்கள்’. 1948-ம் ஆண்டில், விகடனில் முழு நேர ஓவியராகப் பணிபுரிந்து வந்த சீனிவாசன் என்னும் 'சில்பி’யைக் கொண்டு தமிழகத்தில் உள்ள கோயில்களையும் தெய்வத் திருவுருவங்களையும் அப்படியே சித்திரமாக வரையச் செய்து,
வாசகர்களின் பார்வைக்கு வழங்கினால் என்ன என்று யோசித்து, அதைச் செயல்படுத்தியவர் தேவன்தான். தஞ்சை,
தாராசுரம், திரிபுவனம், ஸ்ரீரங்கம்,
பேரூர் என ஏறத்தாழ, தமிழ்நாட்டில் சிற்ப எழில் கொஞ்சும் எல்லாக் கோயில்களையுமே 'தென்னாட்டுச் செல்வங்’களில் காணலாம். ஓவியர் சில்பியின் திறமை பெரிதும் பேசப்பட்டது இந்தத் தொடர் மூலமாகத்தான். படங்களை சில்பி வரைய, அவற்றுக்கான விளக்கங்களை தமது பெயர் போட்டுக் கொள்ளாமலே எழுதினார் தேவன்.
1957 மே 5-ம் தேதி, தமது 44-வது வயதில் தேவன் மறைந்தார். மகாகவி பாரதி போல குறைந்த வயதே வாழ்ந்தாலும்,
தமிழ்கூறும் நல்லுலகுக்குக் கொடையாகப் பல பங்களிப்புகளைச் செய்துவிட்டு அமரத்துவம் பெற்றவர் அவர்.
விகடனின் மகத்தான நஷ்டம் என்னும் தலைப்பில் மனம் பதைபதைக்க ஒரு தலையங்கம் தீட்டி, அவரது மறைவுக்குத் தமது இதய அஞ்சலியைச் செலுத்தினார் எஸ்.எஸ்.வாசன்.
கடந்த எட்டாம் தேதியன்று, தேவன் அறக்கட்டளை சார்பில் சென்னையில் எழுத்தாளர் தேவனின் நூற்றாண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அந்த விழாவுக்கு, 'ஓவியப் பிதாமகன்’
கோபுலு வந்திருந்து சிறப்பித்தார்.
'தேவன் வரலாறு’ என்னும் தலைப்பில்,
தேவனின் படைப்புகளையும் அவரது அருங்குணங்களையும் வெளிக்காட்டும் விதத்தில் எழுத்தாளர் சாருகேசி தொகுத்திருந்த தேவனின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடப்பட்டது.
தொடர்புள்ள பதிவுகள்:
தேவன் நூற்றாண்டு விழா -1
தேவன் நூற்றாண்டு விழா -2
தேவன் நூற்றாண்டு விழா -3
தேவன் படைப்புகள் தென்னாட்டுச் செல்வங்கள் இப்போது விகடன் நூல்களாய்க் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றிய ஒரு விமர்சனத்தை இங்கே படிக்கலாம்.

அ ரிசி, சர்க்கரை போன்ற ரேஷன் பண்டங்களை 'பிளாக் மார்க்கெட்'டில் விற்கிறவர்களைக் கண்டால் உடனே அவர்களைப் போலீஸாரிடம் ஒப்புவித்துத்
தண்டனை அடையச் செய்யவேண்டும் என்றும்,
அது ஒரு பெரிய பொதுஜன சேவையாகும் என்றும் பத்திரிகைகளில் அடிக்கடி படித்திருந்த எனக்கு, அன்று அந்த ஆசாமியிடம் அளவு கடந்த கோபம் வந்ததில் என்ன ஆச்சரியம்?
துணிச்சல் என்றால், சாதாரண துணிச்சலா அவனுக்கு! பட்டப்பகலில், பலர் நடமாடும் ஒரு பொது இடத்தில் நின்றவாறு, அந்தப் பேர்வழி சிறிய மூட்டை ஒன்றைக் கையில்
வைத்துக்கொண்டு ''வெள்ளை மணல்,
எத்தனை வீசை வேணும்? வீசை 2 ரூபாய்''
என்று கொஞ்சங்கூட பயப்படாமல்,
பக்கத்திலிருந்த ஒரு மனிதரிடம் விலை கூறிக்கொண்டு இருந்தான். அப்போது அந்த மனிதர் ஒரு நீண்ட பெருமூச்சுடன், ''சர்க்கரைப் பஞ்சம் என்றுதான் ஒழியுமோ! இந்த பிளாக் மார்க்கெட்காரர்கள் என்று தான் ஒழிவார்களோ!'' என்று
முணுமுணுக்கவே, பிளாக் மார்க்கெட் ஆசாமி கோபத்துடன், ''ஏன் ஐயா எங்களை ஒழியச் சொல்லுகிறீர்? உங்களைப் போன்ற ஆசாமிகள், எவ்வளவு அதிக விலை கொடுத்தும் சர்க்கரையை வாங்க முன் வருவதால் தானே ஐயா, நாங்கள் செழிக்கிறோம்! முதலில் நீர் தான் ஒழிய
வேண்டும்!'' என்று இரைச்சல் போட ஆரம்பித்தான்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த
எனக்கு ஆத்திரம் பொங்கி எழுந்தது.
'வெள்ளை மணல்' என்று சொல்லி,
சர்க்கரையை பிளாக் மார்க்கெட் விலைக்கு விற்கும் அந்தப் பேர்வழியை எப்படியாவது போலீஸாரிடம் அப்போதே ஒப்புவித்துவிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.
ஆனால், அவனுடைய குற்றத்தை எப்படிப் போலீஸார் முன்னிலையில் ருசுப்படுத்துவது? ''நான் யாருக்கும் விற்கவில்லை!'' என்று அவன் சொல்லி விட்டால்?
அதற்கு ஒரு நல்ல யோசனை தோன்றிற்று எனக்கு. அவனிடமிருந்து 'வெள்ளை மணலை' அப்படியே நாம் விலைக்கு வாங்கிக்கொண்டுவிட்டு, பக்கத்திலிருந்த மனிதரை சாட்சி சொல்லச் சொன்னால்,
சட்டப்படி அந்த ஆசாமியின் குற்றத்தை ருசுப்படுத்திவிடலாமல்லவா?
இந்த யோசனையின்படி, அவனிடமிருந்து
'வெள்ளை மணல்' மூட்டையை விலைக்கு வாங்கி விட்டேன். அவன், ''இன்னும் உங்களுக்கு வேணுமானால், நம்ம வீட்டுக்கு நாளைக்குக் காலையிலே வாங்க, தரேன்'' என்று கூறிவிட்டுப் புறப்பட்டபோது, ''தம்பி! சித்தே என்னோடு போலீஸ் ஸ்டேஷன்வரை வந்துவிட்டுப் போயேன்'' என்றேன்.
''எதுக்காக?'' என்றான் அவன் முறைப்பாக.
''பிளாக் மார்க்கெட்டிலே சர்க்கரை விற்ற குற்றத்துக்காக!''
''உங்களாலே அதை ருசுப்படுத்த முடியுங்களா?''
''ஏன் முடியாது? இதோ, இந்த நண்பர் எனக்கு சாட்சி சொல்லுவார்.''
''சொன்னா அவருக்குத்தான் ஆபத்து. பைத்தியம்னு சொல்லி, பைத்தியக்கார
ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோவாங்க.''
''ஏன்?''
''இந்த மூட்டையில் இருக்கிற மணலைப் பார்த்து, சர்க்கரைன்னு சொன்னா பின்னே எங்கே கொண்டு போவாங்களாம்?''
''இதுலே மணலா இருக்குது?''
''வேற என்ன இருக்கு? நான்தான் ஆரம்பத்திலேர்ந்து சொல்லிண்டு வந்தேனே, வெள்ளை மணல்னு!''
[ நன்றி : விகடன் ]
தொடர்புள்ள பதிவுகள்:
சசி: மற்ற படைப்புகள்
பகிர்
ஞாயிறு, 15 செப்டம்பர், 2013
Pas Pasupathy at பிற்பகல் 8:04
கருத்துகள் இல்லை:
தேவன் - 11 : தேவன் நூற்றாண்டு விழா -3 : ‘தினமணி’க் கட்டுரை
தேவனுக்கு வழிவிடுங்கள்!
ராணிமைந்தன்
எளிமையாகவே வாழ்ந்து தன் 44 வயதில் மறைந்தவர் எழுத்தாளர் தேவன் (1913 - 1957).
இம்மாதம் கடந்த எட்டாம் தேதி (8.9.13)
ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை சிவகாமி பெத்தாச்சி அரங்கில், தேவன் அறக்கட்டளை எடுத்த தேவன் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியும் அதேபோல் எளிமையாகவே இருந்தது. விழாத் துளிகளில் சில:
ஞாயிற்றுக் கிழமையாக இருந்தாலும் அன்று காலை ஒன்பது மணிக்கே முக்கால் வாசி அரங்கம் நிரம்பியதற்கு முக்கியக் காரணம் சஞ்சய் சுப்ரமணியம். ஒன்றே முக்கால் மணி நேரம் ரசிகர்களை அப்படியே கட்டிப்போட்டார். அற்புதமான கச்சேரி.
தேவனின் நெருங்கிய நண்பர் ஓவியர் கோபுலு கைத்தாங்கலாக மெதுவாக அடிமேல் அடி எடுத்து வந்தபோது அவரை வாயிலில் நின்று வரவேற்றார் ஓவியர் நடனம். தேவனுக்கும் இந்த இருவருக்கும் தொடர்பு உண்டு. அவருடன் நெருங்கிப் பழகி அவர் கதைகளுக்கு சித்திரம் வரைந்தவர் கோபுலு என்றால், தேவனின் மறைவிற்குப் பிறகு வெளியாகியுள்ள முப்பதுக்கும் மேலான அவருடைய புத்தகங்களில் பெரும்பாலானவற்றுக்கு அட்டைப் படச் சித்திரம் நடனத்தின் கைவண்ணம்தான்.
பலரின் பார்வையில் "தேவன் வரலாறு'' என்ற தலைப்பில் சாருகேசி தொகுத்த நூலை கீழாம்பூர் வெளியிட, திருப்பூர் கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்."ஒருமுறை அண்ணா பெருங்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அந்த இடத்தின் வழியாக தேவன் காரில் வரவும், அவரை அடையாளம் கண்டு கொண்ட சிலர் அண்ணாவிடம் போய் "தேவனின் கார்' என்று சொன்னதும் "ஆனந்த விகடன் தேவனா... உடனே அவர் போக வழி விடுங்கள்'
என்றாராம் அண்ணா. இதைச் சொன்னவர்: கீழாம்பூர்.
"தேவனின் கதைகளை பதிப்பிக்கும்போது கோபுலுவின் சித்திரங்களையும் சேர்த்து வெளியிட வேண்டும்'' என்றார் திருப்பூர் கிருஷ்ணன்.
தேவனைப் பற்றி இவ்வளவு தெரிந்த ஒருவர் கனடாவில் இருக்கிறாரா என்று வியக்க வைத்தார் அங்கிருந்து வந்து உரை நிகழ்த்திய பேராசியர் எஸ். பசுபதி. தன் கருத்துகளை சில நிமிடங்கள் பாடல்களாகவும் அவர் பாடினார். ""தேவன் எழுத்தில் இசையின் தாக்கம் உண்டு. அவரது "மைதிலி' நாவல் முழுக்க முழுக்க இசைத் தொடர்பானதுதான். தேவன் போன்று எழுதுபவர்களை ஊக்குவிக்க போட்டி வைக்கலாம்'' என்றார் பேராசிரியர் பசுபதி.
எழுத்தாளர் அம்பை (சி.எஸ். லக்ஷ்மி) ஒரு காரியம் செய்தார். தேவனின் "லட்சுமி கடாட்சம்' நாவலுக்கு கோபுலு வரைந்த சித்திரங்களை ஸ்கேன் செய்து அதை விஷுவலாக திரையில் காட்டியது புதுமையான முயற்சியாக இருந்தது. அது மட்டுமல்ல, அந்தச் சித்திரம் ஒவ்வொன்றையும் காட்டியபோது எந்தக் காட்சிக்காக கோபுலு வரைந்தது என்று கையில் எந்தக் குறிப்பையும் வைத்துக்கொள்ளாமல் அம்பை விளக்கியது வியக்க வைத்தது. மேலும், ""தேவன் காலத்தில் உள்ள நிலையையொட்டி பெண் பாத்திரங்கள் படைக்கப்பட்டிருந்தாலும் பெண்கள் சுதந்திரத்தை வலியுறுத்துவதாக அவரது கதைகள் அமைந்தன'' என்றார் அம்பை.
தேவன் அவர்களின் சகோதரி மகன் கே. விசுவநாதன் (அன்னம்), தேவனின் பரம ரசிகர் வாதூலன், பதிப்பாளர் "அல்லயன்ஸ்'
சீனிவாசன், திருப்பூர் கிருஷ்ணன்,
கீழாம்பூர் ஆகியோருக்கு தேவனின் நினைவாகப் பரிசு வழங்கப்பட்டது. "பலரின் பார்வையில் தேவன்' புத்தகத்தைப் பதிப்பித்து நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் இலவசமாக வழங்கினார் "அல்லயன்ஸ்' சீனிவாசன்.
தேவனின் முதல் சிறுகதை "மிஸ்டர் ராஜாமணி'யை வெளியிட்டதுடன், அவரது எழுத்தில் ஈர்க்கப்பட்டு விகடனில் துணை ஆசிரியராக சேர்த்துக்கொண்டார் கல்கி. பின்னர் "தேவன்' விகடனின் நிர்வாக ஆசிரியராகவே மாறினார். அவரது எழுத்தில் நகைச்சுவை நிறைந்திருக்கும். ஜஸ்டிஸ் ஜகநாதன், மிஸ் மாலதி, சி.ஐ.டி. சந்துரு, லட்சுமி கடாட்சம், ராஜத்தின் மனோரதம், துப்பறியும் சாம்பு எல்லாமே வெவ்வேறு ரகம் என்றாலும் நகைச்சுவையே பிரதானம் என்று பேசியவர்கள் பலரும் ஒருசேர குறிப்பிட்டார்கள்.
ஒரு நூற்றாண்டு விழா என்றால் அதற்கான பதாகைகளை எப்படியெப்படி எல்லாமோ டிûஸன் செய்து பொருத்துவார்கள். ஆனால் இந்த விழாவிற்கு இரண்டே இரண்டு பேனர்கள். அவையும் அநியாயத்திற்கு சிறியதாக இருந்தன.
சாருகேசியின் தனி மனித முயற்சிதான் இந்த நிகழ்ச்சியை சாத்தியமாக்கி இருந்தது என்பது தெளிவாகப் புரிந்தது. விழா நேரத்தை அவர் எப்போதும்போல துல்லியமாக நிர்வகித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
நிகழ்ச்சி முடிந்ததும் வந்திருந்தவர்கள் கருத்து வேறுபாடின்றி வெளியிட்ட ஒரு மனதான கருத்து: "ஒரு நூற்றாண்டு விழாவை இதை விட எளிமையாக யாராலும் கொண்டாடி விட முடியாது''.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக