திங்கள், 19 ஆகஸ்ட், 2019

உலக புகைப்பட தினம் ஆகஸ்ட் 19.


உலக புகைப்பட தினம் ஆகஸ்ட்.19.
பழசு என்றும் புதுசு:
1839 ஆக., 19ல் உலகில் முதன் முதலாக புகைப்படம் அங்கீகரிக்கப்பட்டது. இதையடுத்து இந்தாண்டு புகைப்படத்துக்கு 175வது ஆண்டு. புகைப்படம் என்பது ஒரு "படம்' அல்ல. அது ஒரு "கலை'. புகைப்படத்துக்கு பெரிய வலிமை உள்ளது. உலகளவில் புகைப்படம், பல வரலாற்று மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. புகைப்படம் நாம் வாழ்க்கையோடு ஒன்றிணைந்தது. அனைத்து இடங்களிலும் புகைப்படத்தின் பயன் உள்ளது. வரலாற்று நிகழ்வுகள், சமூக பிரச்னைகள், சுப, துக்க நிகழ்ச்சிகள், மாநாடு, பொதுக்கூட்டம் என வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் கண் முன் கொண்டு வருவது புகைப்படம். ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை, வரும் தலை முறையினர் அறிந்து கொள்ள உதவுவதும் புகைப்படம் தான். 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் லூகிஸ் டாகுரே என்பவர் "டாகுரியோடைப்' எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839ம் ஆண்டு ஜன., 9ம் தேதி பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ், இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆக., 19ல் பிரான்ஸ் அரசு "டாகுரியோடைப்' செயல்பாடுகளை "ப்ரீ டூ தி வேர்ல்டு' என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில், ஆக., 19 உலக புகைப்பட தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

முதல் படம்:

1826ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவர் முதல் நவீன புகைப்படத்தை எடுத்தார். இது நாளடைவில் அழிந்தது. 1839ம் ஆண்டு லூயிஸ் டாகுரே, பாரிசில் உள்ள ஒரு தெருவை புகைப்படமாக எடுத்தார். தனிநபர் எடுத்த முதல் புகைப்படம் இதுவே. இதன் பின் புகைப்படத்துறை பல்வேறு நிலைகளில் முன்னேறியது. பல அமைப்புகள் சார்பாக, சிறந்த புகைப்படங்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

வரலாற்றில்...:

20ம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலக வரலாற்றை மாற்றியுள்ளன. உதாரணமாக, சீனவீரர்களின் ராணுவ பீரங்கியை எதிர்த்து நின்ற "டேங்க் மேன்', வியட்நாம் போரை நிறுத்த காரணமாக இருந்த "சிறுமியின் புகைப்படம்', 1994ம் ஆண்டு, சூடானில் நிலவிய உணவுப் பஞ்சத்தை எடுத்துரைத்த "குழந்தையின் புகைப்படம்' ஆகியவை குறிப்பிடப்படுகிறது.

நன்மை மட்டும் :

முன்பெல்லாம் புகைப்படம் எடுப்பது அரிதான செயலாக இருந்தது. இந்த டிஜிட்டல் யுகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் புகைப்படம் எடுப்பது எளிதாகி விட்டது. தரம், வேகம், தூரம் என அனைத்து விதங்களிலும் புகைப்படக் கலை முன்னேற்றமடைந்து விட்டது. குழந்தைகள் கூட புகைப்படம் எடுத்து மகிழ்கின்றன. எந்த ஒரு அறிவியல் வளர்ச்சியிலுமே நன்மையும், தீமையும் சேர்ந்தே இருக்கும். கேமராவால் இன்று பல்வேறு பிரச்னைகள் உருவாகின்றன. எனவே கேமராவை நன்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஒரே ஒரு 'க்ளிக்'; ஓராயிரம் 'லைக்!':

தூரிகையை எடுக்காமல் தீட்டப்படும் ஓவியம்; நான்கு கட்டங்களில் சொல்லக்கூடிய காவியம்; ஒற்றை 'பளிச்'சில், ஒரு சரித்திர பதிவு. நிஜத்தை நிழலாக்கி, நிழலுக்கு உயிர் கொடுக்கும், விரலின் வித்தைநமது எண்ணத்தின் ஒருமைப்பாடு, கலையாக பிரதிபலிக்கிறது. அந்தக் கலையில் ஒன்று தான், ஒரு கண்ணை மறைத்து 'ஆங்கிள்' பார்க்கும் புகைப்படத் துறை. ஓராயிரம் கவிதைகள், ஒரு பக்க செய்திகள் ஆகியவற்றை விட, நான்கு கட்டங்களுக்குள் அடங்கும் ஒரு புகைப்படம் பல தகவல்களை சொல்லி விடும்.போபால் நகர் சம்பவத்தின் கொடூரத்தை, இன்று வரை, கண்ணை மூடாமல் இறந்த சிறுவனின் புகைப்படம் தான் சொல்லிக் கொண்டிருக்கிறது. வியட்நாம் போரை நிறுத்த காரணமாக இருந்த சிறுமியின் புகைப்படம், சூடானில் நிலவிய உணவுப் பஞ்சத்தை எடுத்துரைத்த குழந்தையின் புகைப்படம், கடந்த கால வரலாறுகளை மட்டுமல்ல, எதிர்காலத்தின் கூற்றையும் எடுத்துரைப்பதாக இருக்கிறது.புகைப்படக்காரர்களின் சிறப்பையும், இவர்களின் திறமையையும் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆக., 19ம் தேதி, உலக புகைப்பட நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில், லூயிஸ் டாகுவேரே என்பவர், 'டாகுரியோடைப்' எனப்படும் புகைப்படத்தின் செயல்பாடு முறையை வடிவமைத்தார்.கடந்த 1839ம் ஆண்டு ஜன., 9ம் தேதி, பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ், இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆக., 19ம் தேதி, பிரான்ஸ் நாட்டு அரசு, 'டாகுரியோடைப்' செயல்பாடுகளை 'ப்ரீ டூ தி வேர்ல்டு' என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில், இன்றைய தினம் உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.பத்திரிகை துறையில் சிறந்த புகைப்படங்களுக்கு, பல்வேறு அமைப்புகளால் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஏனென்றால், இவர்கள் கனவுகளை தின்று திறமை வளர்ப்பவர்கள்.இன்று உலக புகைப்பட தினம் : ஆகஸ்ட் 19ம் தேதி உலகம் முழுவதும் புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு இந்த தினம் ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது. சமூக வலைதளம் மற்றும் வர்த்தக ரீதியாக புகைப்பட போட்டிகள் நடத்தப்படுகின்றன. 1839ம் ஆண்டு, ஆகஸ்ட் 19ம் தேதியன்று காப்புரிமை பெறாமல், யார் வேண்டுமானாலும் பயன்படுத்தக்கூடிய புகைப்படம் வெளியிடப்பட்டது.அதன் நினைவாகவே, ஆண்டுதோறும் புகைப்படதினம் கொண்டாடப்படுகிறது. முதல் வணிக ரீதியிலான புகைப்படம், 90 ஆண்டுகளுக்கு முன்பு, 110 மற்றும் 120 எம்.எம்., பிலிம் மூலம் எடுக்கப்பட்டது. கடந்த 15 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து 'டிஜிட்டல் கேமரா' பிரபலமானது.தற்போது 'ஸ்மார்ட் போன்' இருந்தாலே, ஒருவர் புகைப்பட நிபுணர் ஆகிவிடுகிறார் என்ற நிலை வந்து விட்டது.


புகைப்பட கலையின் வரலாறு :

மனித குலத்தின் மகத்தான கண்டுபிடிப்புகளில் முக்கியமானது புகைப்படக்கலை. இன்று, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புகைப்பட கலையின் தாக்கம் மிக அதிகம். இந்த பூமியையே செயற்கைக்கோள் என்னும் பெரிய கேமரா தினமும் படம் பிடித்துக் கொண்டே இருக்கிறது. மருத்துவத் துறையில் மனிதனின் உடலினுள் கூட சென்று படம் பிடித்துக் கொண்டிருக்கிறது கேமரா. ஆனால், புகைப்படக் கலையின் வரலாறு 1000 ஆண்டுகள் பழமை உடையது. கி.மு., 300 களில் அரிஸ்டாட்டில் எனும் அறிவியல் மேதையால் கண்டுபிடிக்கப்பட்ட தலைகீழ் விதியே புகைப்படத்திற்கு ஆணிவேர்.கேமரா என்னும் சொல் 'இருட்டு அறை' என்று லத்தின் மொழியில் பொருள் கொள்ளப்படுகிறது. ஆரம்ப காலங்களில் மிகப்பெரிய கேமரா மூலம் உருவங்களின் பிம்பத்தில் ஓவியம் வரைய பயன்படுத்தினர். பின், 16ம் நூற்றாண்டில் தான் லென்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 1700ம் ஆண்டுகளில் நடந்த ஆராய்ச்சியில் வெள்ளி முலாம் பூசப்பட்ட தகட்டில் ஒளி பதிவானது கண்டுபிடிக்கப்பட்டது. நைஸ் போர் என்பவரால் 1826ல் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டது. கடந்த 1850ல் புகைப்படக்கலை இந்தியாவிற்கு வந்தது.


ஸ்மைல் ப்ளீஸ்...
 உலக புகைப்பட தினம்

 ஆயிரம் வார்த்தைகள் சொல்வதை ஒரு புகைப்படம் உணர்த்தி விடும். மக்களிடம் எளிதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் புகைப்படத்துக்கு மட்டுமே உண்டு. எனவே தான் புகைப்பட தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது.


ஒரு நல்ல புகைப்படத்திற்காக மணிக்கணக்கில் ஏன் நாள் கணக்கில் கூட காத்திருக்கின்றனர் புகைப்படக்கலைஞர்கள்.

புகைப்படக்கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. இன்று 177வது புகைப்பட தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

உலகிலேயே

சிறந்த நிழல் படம்...

காலம் தின்ற

கண்ணாடிக்குள் கரையான் அரித்த

அட்டையில்

ஒட்டியிருக்கும்

என் அம்மாவின்

சிரித்த முகம்! என்று புகைப்பட தினத்தில் கவிதை எழுதியுள்ளார் ஒரு கவிஞர்.

கேமரா அப்ஸ்குரா என்ற கருவி மூலம் 13ம் நூற்றாண்டில் தனது பயணத்தை தொடங்கிய புகைப்படக்கலை, தற்போது பல பரிமாணங்களையும் கடந்து நிற்கிறது. டிஜிட்டல் கேமிரா, ஸ்மார்ட்போன் போன்றவற்றை பயன்படுத்தி யார் வேண்டுமெனாலும் எளிதாக புகைப்படத்தை எடுக்கலாம்.

புகைப்படக் கலை

புகைப்படம் எடுப்பது என்பது ஒரு தனிக்கலை. ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கும் சமம்... ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை, வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள புகைப்படங்கள் உதவுகின்றன.


போட்டோகிராபி

1839 ஆம் ஆண்டு சர் ஜான் ஹெர்செல் என்பவர் கண்ணாடியை பயன்படுத்தி நெகட்டிவ்களை எடுக்கும் முறையை கண்டுபிடித்தார். அவர்தான், இக்கலைக்கு போட்டோகிராபி என்று பெயர் வைத்தார்.

ஒளியின் எழுத்து

போட்டோகிராபி என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்த சொல்லாகும். அதன் அர்த்தம் ஒளியின் எழுத்து என்பதாகும். அதே ஆண்டு, லூயிஸ் டாகுரே என்பவர், சில்வர் காப்பர் பிளேட்டில் பிம்பங்கள் விழும் வகையிலான புகைப்படம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.

பிலிம் புகைப்படங்கள்

1888 ஆம் ஆண்டு ஜார்ஜ் ஈஸ்ட்மேன் முதல் முறையாக பேப்பர் பிலிம்களை பயன்படுத்தி பாக்ஸ் கேமராவில் புகைப்படம் எடுக்கும் முறையை கண்டறிந்தார்.

கேமரா அறிமுகம்
1900 இல் பாக்ஸ் பிரவுனி என்ற வகை கேமராக்களை கோடாக் அறிமுகப்படுத்தினார். 35 மில்லி மீட்டர் ஸ்டில் கேமராக்களை 1913 இல் ஆஸ்கர் பர்னாக் வடிவ மைத்தார். இது புகைப்படத்துறையையே புரட்டிப்போட்டது.

டிஜிட்டல் கேமராக்கள்

முதல் டிஜிட்டல் கேமராவை சோனி நிறுவனம் 1981 ஆம் ஆண்டு தயாரித்தது. அதன் பின்பு, தற்போது வரை டிஜிட்டல் கேமராக்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

அதிர வைத்த ஐலான்

ஆயிரம் வார்த்தைகள் சொல்லததை ஐலான் சிறுவனின் புகைப்படம் உலகிற்கு உணர்த்தியது. சிரியாவைச் சேர்ந்த 3 வயது சிறுவன் ஐலான், தனது குடும்பத்தினருடன் படகில் துருக்கிக்கு அகதியாக வந்தபோது, படகு கடலில் கவிழ்ந்ததில் ஐலான் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது உடல் செப்டம்பர் 2ம் தேதி கடற்கரையில் சடலமாக ஒதுங்கிய காட்சியைப் பார்த்து உலகமே அதிர்ந்து போனது.

எளிதான புகைப்படக்கலை

முன்பெல்லாம் புகைப்படம் எடுப்பது மிகவும் அரிதான செயலாக இருந்தது. ஆனால், தற்போது தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் புகைப்படம் எடுப்பது எளிதாகி விட்டது. அனைவரும் தற்போது புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். குழந்தைகள் கூட புகைப்படம் எடுக்கின்றன

செல்போன் செல்ஃபிக்கள்

கேமராக்களில் மற்றவர்கள் நம்மை புகைப்படம் எடுத்தது போய் இப்போது செல்ஃபி எடுப்பது அதிகரித்து வருகிறது. என்னதான் செல்போனில் செல்ஃபி எடுத்தாலும் கறுப்பு வெள்ளையில் அட்டென்சன் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை யாராலும் மறக்க முடியாது.
நன்றி தினமலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக