திங்கள், 26 ஆகஸ்ட், 2019

உலக நாய்கள் தினம் ஆகஸ்ட் 26.


 உலக நாய்கள் தினம் ஆகஸ்ட் 26.

நாய்
விலங்கு
வேறொரு மொழியில் படிக்கவும்
இந்தப் பக்கத்தைக் கவனிக்கவும்

வீட்டு நாய்
புதைப்படிவ காலம்:Late Pleistocene -
இராசபாளையம் நாய்
காப்பு நிலை
கொல்லைப்படுத்தப்பட்டுவிட்டது
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
யூக்கார்யோட்டா
[நல்லுயிர் (அல்) பாவுயிர்]
(Eukaryota)
திணை:
விலங்கினம்
தொகுதி:
முதுகுநாணி
வகுப்பு:
பாலூட்டி
வரிசை:
ஊனுண்ணி
குடும்பம்:
நாய்ப் பேரினம்
பேரினம்:
நாயினம்
கேனிசு (Canis)
இனம்:
சாம்பல் ஓநாய்
கேனிசு லூப்பஸ்
(C. lupus)
துணையினம்:
C. l. familiaris
மூவுறுப்புப் பெயர்
Canis lupus familiaris
(லின்னேயசு, 1758)


தமிழகத்திலிருக்கும் ஒரு நாய்

நாய்: சிறியது+பெரியது
நாய் அனைத்துண்ணி பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு இனமாகும். இன்று பெரும்பாலும் மனிதர்களோடு வாழ்கின்றது. இன்றுள்ள வளர்ப்பு நாய்கள் ஏறத்தாழ 17,000  ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் ஓநாய்களைப் பழக்கி நாயினமாக வளர்த்தெடுக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. மறைந்த உயிரினப் படிவத்தில் இருந்து பெற்ற டி.என்.ஏ (DNA) க்களைக் கொண்டு 150,000  ஆண்டுகளுக்கு முன்னமேயே கூட நாய்கள் பழக்கப்பட்டிருக்கலாம் என எண்ண வாய்ப்பிருக்கின்றது என்பர்.

நாய்கள் மனிதர்களை விரும்பி, மனிதர்களை அண்டி வாழ்கின்றது. நாய்கள் மனிதனின் நண்பன் என்று பரவலாக கருதப்படுகிறது. நாய்கள் மனிதர்களுக்குக் காவல் நாய்களாகவும், ஆடுமாடுகளை மேய்க்கப் பயன்படும் மேய்ப்பு நாய்களாகவும், வேட்டையாட உதவும் வேட்டை நாய்களாகவும், பனிப்பகுதிகளிலே சறுக்குப்பொதிகளை இழுத்துச் செல்வது போன்று பணிபுரியும் நாய்களாகவும் (இழுநாய்), கண்பார்வை இழந்தவர்களுக்குத் துணையாக வழிகாட்டு நாய்களாகவும், பல்வேறு வழிகளிலே துணை நிற்கின்றன. சீனா போன்ற சில நாடுகளில் நாய் இறைச்சி, உணவாக உட்கொள்ளப்படுகிறது.


பெயர்களும், வகையும்

நாய்களுக்குத் தமிழில் பல பெயர்கள் உள்ளன. நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டே திரிவதால் 'நாய்' என்னும் பெயர் தமிழில் தோன்றியது. ஞாளி, ஞமலி என்பன நாயைக் குறிக்கும் சங்ககாலத் தமிழ்த் திசைச்சொற்கள்.

அவற்றில் சில குறிப்பிட்ட வகை நாய்களைக் குறிக்கும். சிவிங்கி நாய் என்பது வேகமாய் ஒடக்கூடிய ஒல்லியாய் உயரமாய் கழுத்து நீண்ட நாய், சடை நாய் என்பது உடலில் எங்கும் நிறைய முடி உள்ள நாய். இதே போல ஞாளி, எகினம், கடிநாய், அக்கன், அசுழம், குக்கர், கூரன், கொக்கு, செந்நாய், ஞமலி, ஞெள்ளை, முலவை, முவ்வை, மடிநாய், குடத்தி நாய், குக்குரன், கடுவாய், வடி, வங்கு, தோல்நாய், நயக்கன், தோனாய் (தோல்நாய்), பாகி, பாசி, முடுவல் என பல பெயர்கள் உள்ளன. இவற்றில் தோல்நாய் என்பது வேட்டை நாய் வகையச் சேர்ந்தது. வங்கு என்பது புள்ளியுடைய நாய் (டால்மேசன் என்னும் வகையைப்போல). (இப்பெயர் கழுதைப்புலி என வழங்கும் புள்ளி கொண்ட காட்டில் வாழும் கொடிய விலங்கையும் குறிக்கும்.)

அறிவுத்திறன்
நாய்களுக்கு ஓரளவுக்கு அறிவுத்திறனும் மிக நல்ல மோப்பத் திறனும் உண்டு. மிகக்குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலிகளையும் (16–20 Hz) மிக அதிக அதிர்வெண் ஒலிகளையும் (70 kHz – 100 kHz) கேட்க வல்லவை. நாய்களுக்கு காணும் திறத்தில், கருப்பு-வெள்ளையாக இருநிறப் பார்வை மட்டும் தான் உள்ளது என்று கருதுகிறார்கள். நாய்களின் மோப்பத்திறன் மிகவும் கூர்மையானது. நாய்களுக்கு 220 மில்லியன் நுகர்ச்சிக் கண்ணறைகள் (cells) இருப்பதாகக் கண்டுள்ளனர். ஆனால் மனிதர்களுக்கு சுமார் 5 மில்லியன் நுகர்ச்சிக் கண்ணறைகள் தாம் உள்ளன.

நாய்களின் வாழ்க்கை, இனப்பெருக்கம்

நாய்களின் வாழ்நாள் சுமார் 7 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை இருக்கலாம். இது பெரும்பாலும் நாயினத்தின் வகையும், வளர்ப்பு நிலைகளையும் பொருத்தது.

பாகுபாட்டியல்

உயிரியல் பாகுபாட்டியலின் தந்தை எனப்போற்றப்படும் கரோலசு இலின்னேயசு அவர் காலத்தில் அவருக்குத் தெரிந்த "நான்கு கால்கள்" கொண்டவை ("quadruped") என்னும் வகைப்பாட்டில் உள்ள விலங்குகளில் நாய்க்கு இலத்தீன் பெயராகிய canis என்பதை 1753 இல் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பேரினத்தில் நரி என்பதை Canis vulpes என்றும், ஓநாய் என்பதை Canis lupus என்றும் குறிப்பிட்டிருந்தார் இலின்னேயசு. வீட்டில் வளர்க்கும் நாயை Canis canis என்று குறிப்பிட்டிருந்தார்.

பின் வந்த பதிப்புகளில் இலின்னேயசு இந்த Canis canis என்பதை நீக்கிவிட்டார், ஆனால் "நான்குகால்கள்" ("quadruped") விலங்குகளின் குழுவில் Canis என்னும் பேரினத்தை விரிவாக்கினார்; 1758 ஆம் ஆண்டு வாக்கில் நரிகள், ஓநாய்கள், குள்ள நரிகளோடு பலவற்றையும் சேர்த்திருந்தார், அவற்றுள் மயிர் இல்லாத aegyptius (தோல்நாய்கள்), aquaticus எனப்படும் "நீர்மீட்பு நாய்கள்", mustelinus எனப்படும் "குட்டைக்கால் நாய்கள்" அல்லது "பேட்சர் என்னும் விலங்கைப் பிடிக்கும் நாய்கள்" என்பனவற்றையும் சேர்த்திருந்தார். இப்பெயர்களுள் Canis domesticus என்று அழைக்கப்படும் வீட்டு நாய் (கொல்லைப்படுத்தப்பட்ட நாய்) என்பதும், Canis familiaris, நன்கு அறியப்பட்ட நாய் என்பதும் ஆகிய இவ்விரண்டு பெயர்களையும் பின்னர் வந்த துறைவல்லுநர்கள் பயன்படுத்தினர்.

வீட்டுநாய் அல்லது பழக்கப்படுத்தப் பட்ட, கொல்லைப்படுத்தப்பட்ட நாய் என்பது தனி இனம் என்பது உறுதியாகியுள்ளது; அதன் பழக்கவழக்கங்களையும், குரைத்தல் போன்ற குரல் வெளிப்பாடுகளையும், உருவ அமைப்பு, மூலக்கூற்று உயிரியல் வகைப்பாடு போன்ற பல கூறுகளைக் கண்டபோது தற்கால அறிவியலில் அடிப்படையில் இவ்விலங்கு ஒரு தனி இனம் என்னும் கருத்து வலுப்பெற்றுள்ளது. இந்த இனம் காட்டுவிலங்காகிய சாம்பல் ஓநாய் (gray wolf) என்னும் ஒரு விலங்கினத்தில் இருந்தே பற்பல வளர்ப்புநாய் இனங்களாகப் பிரிந்து பல்கிப் பெருகியது என்று கண்டுபிடித்துள்ளனர்.[9][10] இக்கண்டுபிடிப்புகளின் பயனாய் 1993 இல் வீட்டு நாயை சாம்பல்நிற ஓநாயின் துணை இனமாக, Canis lupus familiaris (கானிசு இலூப்பசு பெமீலியாரிசு) என்னும் பெயரில் வழங்குமாறு அமெரிக்கப் பாலூட்டியியல் அறிஞர்கள் குழுமமும் (American Society of Mammalogists) சுமித்துசோன் கழகமும் (Smithsonian Institution) வகைப்படுத்தியுள்ளார்கள். இப்பெயரையே ஒருமித்த வகைப்பாட்டியல் தகவல் ஒருங்கியம் (Integrated Taxonomic Information System) என்னும் நிறுவனமும் பரிந்துரைக்கின்றது, எனினும் பழைய பெயராகிய கானிசு பெமிலியாரிசு (Canis familiaris) என்பதும் ஈடான ஒருபொருள் பன்மொழிப் பெயராகக் கொள்ளப்படுகின்றது.

இந்திய நாய்கள் மிக முக்கியதுவம் வாய்ந்தவை(ராஜபாளையம்/கன்னி/கோம்பை/அலங்கு)

ஓநாயிலிருந்து வேறுபாடு

ஒரே அளவுள்ள நாயையும் ஓநாயையும் ஒப்பிட்டால் நாயின் மண்டையோடு 20% சிறியது, மூளை 30% சிறியதாகும் . மற்ற நாய் பேரினங்களை விட விகிதப்படி நாயின் பற்கள் சிறியதாகும். நாய் செயல்பட ஓநாய் அளவு கலோரி தேவையில்லை . ஓநாயின் தோல் மெல்லியதாகும் வீட்டு நாயின் தோல் தடிமனனானது ஆகும். இதனால் சில இனுவிட்டு மக்கள் நாயின் தோலை கடும் குளிரிலிருந்து காக்க ஆடையாக பயன்படுத்துகிறார்கள் .

தொன்மவியல்

நாயுடன் பைரவர்
தொன்மங்களில் நாய் வளர்ப்பு விலங்காகவும் காவல் விலங்காகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. கிரேக்க தொன்மத்தில் செர்பெரஸ் என்பது ஏடிசு நகர வாயிலை காக்கும் மூன்று தலையுடைய நாய் ஆகும். நோர்சு தொன்மவியலில் கார்ம் என்பது நான்கு கண்களுடன் கூடிய இரத்தகறை படிந்த காவல் நாய் ஆகும். பாரசீக தொன்மத்தில் சின்வாட் பாலத்தை இரண்டு நான்கு கண்கள் உடைய நாய்கள் காப்பதாக உள்ளது. யூத, இசுலாம் சமயங்களில் நாய் தூய்மையற்ற விலங்காக பார்க்கப்படுகிறது.
கிறித்துவத்தில் நாய் நம்பிக்கைக்குரியதாக பார்க்கப்படுகிறது. சீனா, கொரியா, நிப்பான் போன்ற நாடுகளில் நாய் அரசனின் பாதுகாவலாளியாக கருதப்படுகிறது.

இந்து சமயத்தில், கிராமத்துக் காவற்தெய்வமாக வணக்கப்படும் பைரவர் என்ற தெய்வத்தின் வாகனமாக நாய் உள்ளது. இதனால் சிலர் நாயை பைரவர் என்று அழைப்பதும் உண்டு.

இலக்கியங்களில் நாய்

நாலடியாரில் நாய்

நாலடியாரில் நாயானது நன்றியுள்ள மிருகமாகவும், நல்லவர்களின் நட்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மகாவம்சத்தில் நாய்

இலங்கையில் காலத்தால் முற்பட்ட நூலான மகாவம்சத்தின் கூற்றுக்கிணங்க விசயனும் அவனது நண்பர்கள் 700 பேரும் தம்பபண்ணிக்கு (இன்றைய இலங்கையின் மன்னார் பகுதி) வந்தடைந்த பொழுது ஒரு பெண்ணை (யாக்கினி) கண்டதாகவும், அவளை பின் தொடர்ந்து விசயனின் நண்பர்கள் ஒவ்வொருவராக சென்றவிடத்தில் ஒரு கிராமமும் அங்கே நாயும் இருந்ததாக கூறப்படுகிறது. அது இலங்கையில் விசயனின் வருகைக்கு முன்னரே நாயை வீட்டு வளர்ப்பு மிருகமாக வளர்த்துள்ளமையை மகாவம்சம் காட்டுகிறது.


நாய்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்....

உ‌ங்க‌ள் ‌வீ‌ட்டில‌் நா‌ய் வள‌ர்‌த்தாலு‌ம் ச‌ரி, நா‌ய் வள‌ர்‌‌க்க ஆசை‌ப்ப‌ட்டாலு‌ம் ச‌ரி இதை முத‌லி‌ல் படியு‌ங்க‌ள்.

பொதுவாக வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்களின் ஆயுள் 18 முதல் 20 ஆண்டுகள் வரை.

நாய்கள் தனக்குதானே பிரசவம் பார்த்துக் கொள்ளும். நாய்கள் பிரசவம் முடிந்ததும் ஓரிரண்டு குட்டிகளை தானே சாப்பிட்டு விடுவது‌ம் உண்டு.

நாயின் மூக்குப்பகுதி காய்ந்து இருந்தால் அவற்றுக்கு காய்ச்சல் என்று அர்த்தம்.

நாய்கள் அருகம்புல்லை சாப்பிடும் பழக்கமுடையவை. அவற்றின் உடலில் ஏற்படும் பல உபாதைகளுக்கு அரும்கம்புல் மருந்தாகிறது. ‌வீ‌ட்டி‌ல் வள‌ர்‌க்கு‌ம் நாயை பூ‌ங்கா அ‌ல்லது பு‌ற்க‌ள் இரு‌க்கு‌‌ம் பகு‌திகளு‌க்கு ‌நி‌ச்சய‌ம் அழை‌த்து‌ச் செ‌ல்ல வே‌ண்டு‌ம்.

நாய்கள் தினமும் ஒரு வேளை மட்டுமே உணவை உண்ணும் பழக்கம் கொண்டவை. பெரு‌ம்பாலு‌ம் அசைவ உணவுக‌ள்தா‌ன் நா‌‌ய்களு‌க்கு‌ப் ‌பி‌ரிய‌ம்.

தனது குட்டிகளின் மீது அதிக பாசம் கொண்டவை. நாய்கள் பிரியமானவர்களை பிரிந்தால் கண்ணீர் விட்டு அழும்.

நா‌ய் கு‌ட்டியை ஈனு‌ம் வரை ஒரே இட‌த்‌தி‌ல் வ‌சி‌க்கு‌ம். கு‌‌ட்டியை ஈ‌ன்றது‌ம் உடனடியாக ம‌ற்றொரு இட‌த்‌தி‌ற்கு மா‌ற்‌றி‌விடு‌ம் பழ‌க்க‌ம் கொ‌ண்டது.

எப்போதும் நாய்கள் காற்றடிக்கும் திசையை எதிர் நோக்கித்தான் படுக்கும். ஏ‌ன் எ‌ன்றா‌ல், கா‌ற்று மூலமாக வரு‌ம் வாசனையை‌க் கொ‌ண்டு எ‌ந்த ‌விஷய‌த்தையு‌ம் மோ‌ப்ப ச‌க்‌தியாலே க‌ண்ட‌றி‌ந்து கொ‌ள்வத‌ற்காக.

நாய்களுக்கு குளிர் காலங்களில் அதிகமாக முடி கொட்டும். எனவே அதற்கு முன்பாகவே அவற்றுக்கு முடியை வெட்டிவிடுவது நல்லது.


 நாட்டுநாய் இனங்களை காக்க களமிறங்கிய இளைஞர் குழு #world_dog_day

நாட்டு மாடுகளைப் போன்று தமிழர் களின் வாழ்க்கை முறை, பாரம்பரி யத்தோடு ஒன்றியவை நாட்டு நாய் கள். ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை, கன்னி போன்ற நாட்டு நாய்கள் மன்னர்கள் காலத்தில் இருந்தே மனித வாழ்க்கைக்கு பேருதவியாக இருந்துள்ளன.

தற்போது வெளிநாட்டு நாய் களின் பெருக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. ஜெர்மன் ஷெப் பர்டு, டாபர்மேன், லேப், டால் மேஷன், பக், ராட்வீலர் போன்ற வெளிநாட்டு ரக நாய்களை காவ லுக்காகவும், வர்த்தக ரீதியிலும் வளர்க்கும் ஆர்வம் அதிகரித் துள்ளது. நாட்டு நாய்களை வளர்ப்பதில் ஆர்வம் குறைந்து வருவதால், அந்த இனங்கள் மெல்ல அழிந்து வருகின்றன.

இந்நிலையில் நாட்டு நாய் இனங்களை அழிவில் இருந்து காத்து, மீட்கும் முயற்சியில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் குழு ஈடுபட்டுள்ளது. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெற்றுள்ள ‘ப்ரவுட் ஓனர்ஸ் ஆஃப் ராயல் தமிழ் ஹௌண்ட்ஸ்’ (Proud owners of royal tamil hounds) எனும் இக்குழு சமூக வலைதளங்களில் நாட்டு நாய் ஆர்வலர்களை தொடர்ந்து ஒருங் கிணைத்து வருகிறது.

இக்குழுவின் அட்மின் கன்னி யாகுமரியைச் சேர்ந்த எம்.நாக ராஜன் கூறியதாவது: வீரமும், விசுவாச குணமும் அதிகம் கொண் டவை நாட்டு நாய்கள். இவை அழியும் ஆபத்தான சூழலில் இருப் பதால், ஜல்லிக்கட்டு காளைகளை மீட்டெடுத்ததுபோல் நாட்டு நாய்களையும் காக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


இதனால், கல்லூரி ஆசிரியர் பணியை துறந்து, இளைஞர்கள் அடங்கிய குழுவைத் தொடங்கி பாரம்பரிய நாட்டு நாய்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். கோம்பை இன நாட்டுநாய்கள் சிங்கம், புலியைகூட எதிர்க்கும் குணாதிசயம் கொண்டவை மட்டு மின்றி உடல் பலம் மிக்கவை. இதற்காகவே இவற்றை பொள் ளாச்சி, சத்தியமங்கலம், உத்தரா கண்ட் போன்ற மலையோர பகுதி மக்கள் வளர்த்து வருகின்றனர்.

வெள்ளை குதிரை போல் கம்பீர மும், வளர்ப்பவரிடம் விசுவாசமும் கொண்டவை ராஜபாளையம் நாய் கள். கிராமப்புறங்களில் பெண் வீட் டார் சீதனமாக கொடுக்கும் கன்னி நாய் வகைகளை மதுரை, தேனி சுற்றுவட்டார பகுதியினர் ஆர்வ முடன் வளர்க்கத் தொடங்கியுள்ள னர்.

சிறந்த தோட்ட காவலாளியான வேட்டை குணாதிசயம் கொண்ட சிப்பிப்பாறை இனம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஓரளவு காணப் படுகிறது. சென்னையில் இருந்த பாரம்பரிய நாட்டு நாய்கள் அபி விருத்தி மையம் மூடப்பட்டதால், எங்கள் குழுவைச் சேர்ந்த இளை ஞர்கள் அந்தந்த பகுதிகளில் பண்ணை அமைத்து நாட்டு நாய் இனங்களை மீட்டு வருகிறோம். இதற்கு அரசு உதவ வேண்டும் என்றார்.

நோய்கள் தாக்காது

கன்னியாகுமரி அரசு கால்நடை மருத்துவர் அனிஷ் கூறும்போது, “ நமது நாட்டு தட்பவெப்பத்துக்கு ஏற்றவை நாட்டுநாய்கள். உடலில் முடி குறைவாக உள்ளதால் நோய் கள் பாதிக்காது. வெளிநாட்டு நாய் களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவு. நோய்கள் எளிதில் தொற்றிக் கொள்ளும். நாட்டுநாய்களுக்கு பிரத்யேக கவனம் செலுத்த வேண் டியதில்லை. சாதாரண உணவே போதும். நாட்டுநாய்கள் வளர்ப்பு குறித்து படித்த இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருப் பதால், அவை அழிவில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றன” என்றார் அவர்.
நன்றி இந்து தமிழ் திசை.


நாய்களுக்கான உணவு

நாய்களுக்கு உணவு அளிப்பதில் எவ்விதக் காலதாமதமும் ஏற்படக்கூடாது. சாதாரணமாகத் தினசரி நாய்களுக்கு 8 மணி நேர இடைவெளியில் மூன்று முறை உணவு அளிக்கலாம்.
பதிவு: மே 10,  2018 11:27 AM
காலை நேரத்தில் பாலும், இரவில் அளவான உணவும், நடுப்பகலில் நல்ல சத்தான உணவும் தேவைக்கேற்றவாறு அளிக்கலாம். இடையில் நாய்களுக்கு சிறிதளவு ரொட்டி, பிஸ்கெட்டுகள் அளிக்கலாம். நாய்களுக்கு மோப்ப உணர்வு அதிகமாக உள்ளதால் அவற்றுக்கு அளிக்கப்படும் உணவை முதலில் முகர்ந்து பார்த்துப் பின்னர் உண்ணும். ஆகவே, அவற்றிற்கு அளிக்கப்படும் உணவு எந்த வகையான உணவாக இருந்தாலும் சத்தாகவும், சுத்தமான புதிய உணவாகவும் இருக்க வேண்டும்.

நாய்களுக்கான உணவில் 40 சதவீதம் இறைச்சி, 30 சதவீதம் காய்கறி, 30 சதவீதம் மாவுச்சத்துக்கான பொருட்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சைவ உணவு கொடுக்கும் போது இறைச்சிக்குப் பதிலாக பயறு வகைகள் மற்றும் பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். கெட்டுப்போன உணவுப் பண்டங்களை கொடுக்கக்கூடாது. உண்டு முடித்த பின்னர் மீதமுள்ள உணவை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.

செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்கு அன்னியர் தரும் உணவை பயன்படுத்தக் கூடாது. மேலும், தெருக்களில் எறியப்படும் உணவுப் பண்டங்களை சாப்பிட நாய்களை அனுமதிக்கக்கூடாது. கோடைக்காலத்தில் நாய்கள் குறைந்த அளவு உணவை உட்கொள்ளும். ஆகையால் சைவ உணவு உட்கொள்ளும் நாய்களுக்கு தேவையான அளவு எரிசக்தி கிடைப்பதில்லை. இந்த நேரங்களில் உணவுடன் சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

உணவுடன் தாது மற்றும் உயிர்ச்சத்துக்களை கொடுக்க வேண்டும். வாசனைப் பொருட்கள் மற்றும் நொறுக்குத்தீனிகளை தவிர்க்க வேண்டும். உணவு வகைகளையும், உணவிடும் நேரத்தையும் அடிக்கடி மாற்றம் செய்தல் கூடாது.

நாய்களுக்கு கொடுக்கப்படும் சில உணவுகள் கெடுதலை தரும். சாக்லெட், காபி, டீ போன்றவற்றில் உள்ள புரோமின் என்னும் வேதிப்பொருள் நாய்களின் இதயம் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். இவற்றை சாப்பிடும் பொழுது நாய்களுக்கு சோர்வு, வாந்தி மற்றும் ரத்தப்போக்கு ஏற்படும். திராட்சை மற்றும் உலர் திராட்சையை நாய்கள் சாப்பிட்டால் சிறுநீரகத்தை பாதிக்கும்.

செயற்கை இனிப்பு கலந்த உணவுகளை எந்த காரணம் கொண்டும் நாய்களுக்குக் கொடுக்கக்கூடாது. இவை சிறுநீரகத்தை பெரிதளவு பாதிக்கும். வேகவைக்காத இறைச்சியை நாய்கள் சாப்பிட்டால் அவற்றில் உள்ள நுண்ணுயிர் கிருமிகள் நாய்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும். நாய்களுக்கு உப்பு அதிகம் உள்ள உணவை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவை நாய்களின் உடலில் வறட்சியை ஏற்படுத்தும். இதே போல் வெங்காயம், பூண்டு அதிக அளவில் உணவில் சேர்த்தால், நாய்களுக்கு ரத்தச் சோகை ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் கெடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக