வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

உலக பூனை தினம் ஆகஸ்ட் 8.


உலக பூனை தினம் ஆகஸ்ட் 8.(World Cat Day)

பூனைகள் உலகின் அனைத்து இடங்களிலும் மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. மனிதனிடம் சுமார் 9500 ஆண்டுகளாக வாழ்கின்றன. சிறந்த இரவுப் பார்வையும், சிறந்த கேட்கும் திறனும் கொண்டவை. அதிக விளையாட்டுத்திறன் கொண்டுள்ளது. பூனையால் இனிப்புச் சுவையை உணர முடியாது. உலக பூனை தினம் முதன்முதலாக 2014ஆம் ஆண்டில் துவங்கியது.


உலகளாவியரீதியில் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி
உலக பூனை தினமாக
கொண்டாடப்படுகின்றது. அந்தவகையில்,
பூனைகள் தொடர்பிலான
சுவாரஷ்சியமான தகவல்கள் உங்களுக்காக…!

🎯உலக பூனை தினம்🐒 (World Cat Day)

🐒பூனைகள் உலகின் அனைத்து இடங்களிலும் மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. மனிதனிடம் சுமார் 9500 ஆண்டுகளாக வாழ்கின்றன. சிறந்த இரவுப் பார்வையும், சிறந்த கேட்கும் திறனும் கொண்டவை. அதிக விளையாட்டுத்திறன் கொண்டுள்ளது. பூனையால் இனிப்புச் சுவையை உணர முடியாது👀.

🐒உலக பூனை தினம் முதன்முதலாக 2014ஆம் ஆண்டில் துவங்கியது.

🐒உலகில் 40 வகையான பூனை இனங்களில் 500 மில்லியனுக்கும் மேற்பட்ட பூனைகள் உலகில் வாழ்கின்றன.ஆய்வுத் தடயங்களின் பிரகாரம், உலகில் கி.மு 3600 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வீட்டுப் பூனைகள் வாழ்ந்துவருகின்றன என கண்டறியப்பட்டுள்ளது.

🐒பூனைகள் மணித்தியாலத்திற்கு 30 மைல்கள் வேகத்தில் ஓடக்கூடியவையாகும்.

🐒பூனைகளுக்கு சுவை அரும்புகள் இல்லை.

🐒பூனைகள் 100 இற்கும் மேற்பட்ட வித்தியாசமான சத்தங்களை எழுப்பக்கூடியவையாகும்.

🐒சராசரியாக பூனை ஒரு நாளில் 16-18 மணி நேரங்கள் உறங்குகின்றன.

🐒மனிதர்களின் கைரேகையினைப் போன்றே பூனைகளின் மூக்கு ரேகைகள் தனித்துவமானவையாகும்.

🐒பூனையின் காதில் அவற்றின் இயக்கத்தினை கட்டுப்படுத்தும் 32 தசை நார்கள் உண்டு. இதனால், பூனைகள் தமது காதினை 180° வரையும் அசைக்கக்கூடியதுடன், அவை தனது இரண்டு காதுகளையும் தனித்தனியாக அசைக்கக்கூடிய ஆற்றலினையும் கொண்டவையாகும்.

🐒பூனைகளின் மோப்ப சக்தி மனிதர்களை விடவும் 14 மடங்குகள் அதிகமானதாகும்.

🐒விண்வெளிக்குச் சென்ற முதலாவது பூனை Félicette (“Astrocat”) ஆகும். பிரான்ஸ் நாட்டினால் 1963ம் ஆண்டு அக்டோபர் 13ம் திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்தப் பெண் பூனை தனது விண்வெளிப் பயணத்தின் முடிவில் உயிருடன் பூமியினை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

🐒இங்கே சுவாரஷ்சியமான விடயம் என்னவென்றால் Félix என்கின்ற பாரிஸ் நகர தெருப்பூனையே விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண் பூனை தப்பிச்சென்றமையினால் கடைசி நிமிடத்தில் Félicette என்கின்ற பெண் பூனைக்கு இந்த வாய்ப்புக் கிடைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

🐒32 மாடிகள் (320மீட்டர்கள்) உயரத்திலிருந்து பூனைகள் காங்கிரீட் தரையில் விழுந்தாலும் அவை பெரும்பாலும் உயிர்பிழைத்து விடுகின்றன.


பூனைகள் பற்றிய தகவல்கள்:-

பூனை (Cat) பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணும் விலங்கு ஆகும். இவை காடுகளில் வாழ்ந்து வந்தாலும் மனிதர்களால் பழக்கப்பட்டு பெருமளவில் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. வளர்ப்பு பூனைகள் சைவ உணவையும் உண்கின்றன. இவை பொதுவாக 2.5 கிலோவிலிருந்து 7 கிலோ வரை எடை கொண்டவையாக இருக்கின்றன. சிறிய அளவிலான பூனைகள் 1.8 கிலோ கிராமுக்கு குறைவாகக் காணப்படும்.

சிறிய பறவைகள், எலி போன்ற சிறிய விலங்குகள், மீன்கள் போன்றவை இவற்றின் விருப்ப உணவுகளாகும். இவற்றின் கால் நகங்கள் கூர்மையாக வளைந்து தன் வேட்டை உணவினைப் பிடிக்க ஏதுவாக உள்ளன. பற்கள் கடினமான உணவினைக் கடித்து உண்ணக் கூடியதாகவும் இருக்கின்றன.

பூனைகள் இரவில் (இருட்டில்) நன்றாக பார்க்கும் திறன் கொண்டவை. அதுபோல் பூனைகளின் கேட்கும் திறன் மிக அதிகம். அவற்றின் காதுகளில் 32 தசை நார்கள் காணப்படுகின்றன. இவை அதிகபட்சமாக 64 கிலோஹேர்ட்ஸ் வரையிலான சத்தத்தைக் கேட்கும் திறன் உடையவை. பூனைகளுக்கு 30 முதுகெலும்புகள் உள்ளன. பூனைகளின் மோப்ப சக்தி மனிதனை விட 14 மடங்கு அதிகம். இவை ஒரு நாளைக்கு 12 முதல் 16 மணி நேரம் உறங்கும்.

பூனையை போற்றுதும்!

எவ்வளவு பெரிய ஆளாய் இருந்தாலும், என்ன டென்சனாக இருந்தாலும், ரிலாக்ஸ் பண்ண சிலர் பார்ப்பது டாம் அண்ட் ஜெர்ரி ஷோ அல்லது பூனை இடம்பெறும் கார்ட்டூன் தான். பூனையின் கண்களும், அதன் மீசையும் ஒரு அழகு தான். பூனையை தூக்கி அதன் தலையை ஆசையுடன் தடவி விட்டு பார்க்கும் சுகம் தனி தான்.
சாதாரணமாக, பூனை குறுக்கே போனால் சகுனத் தடை, காரியத் தடை என்று சொல்வார்கள். 'சகுனம் சரியில்லை, போற காரியம் ஜெயமாகாது; உள்ளே வா, ஒரு டம்ளர் தண்னி குடிச்சுட்டு போ' என்கிறோம். இது முழுதும் சரி அல்ல. ஏனென்றால் பூனைக்கென்று ஒரு தனி சக்தி உண்டு. அதிலும் கடுவண் பூனைக்கு அபார சக்தி உண்டு. கரும்பூனை முகத்தில் விழித்தால் நல்லது நடக்கும் என்று சொல்லப்படுவதுண்டு.
பூனைகள் எகிப்தியர்களால் வழிபடப்பட்டது. பூனைக்கு பல ஆயுள்கள், மறுவாழ்வுகள் (பிறவிகள்) என்று நம்பப்பட்டது. இந்நம்பிக்கையின் சமூக தாக்கத்தை இன்றும் உணரலாம். வி.ஐ.பி.க்கள் கோரும் ‘ஜெட்-க்ளாஸ் செக்கூரிட்டி’ கருப்பு பூனைகளுக்கு புல்லட் புரூஃப் வெஸ்ட் தயவில் ஆயுள் கெட்டி. எவரெடி பாட்டரியின் உருளைபரப்பில் உறையும் கருப்புபூனைக்கும் ஒன்பது ஆயுள்.
உலகம் முழுவதும் 50 கோடி பூனைகள் வீடுகளில் வளர்க்கப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. செல்லப் பிராணிகள் என்று பார்க்கும்போது பூனையையும் வீட்டில் தாராளமாக வளர்க்கலாம். அது குட்டி ஈன்றி அதனைப் பராமரிப்பது என்பதும் நல்லதுதான். பழங்காலத்தில் பூனை இல்லாத வீடே இருக்காது. ஏனென்றால், எலி இல்லாத வீடும் இல்லாமல்தான் இருந்தது. அதனால் பூனையை வீட்டில் வளர்ப்பது ஒன்றும் தவறில்லை.
மதிமேல் பூனை, ருசி கண்ட பூனை, பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடும் என நினைக்குமாம்- இப்படி பூனை பற்றிய பழமொழிகள் உலவுகின்றன.
சாதரணமாக அதிக உயரத்தில் இருந்து குதித்தால் அடி அதிகம் படும். குறைந்த உயரத்தில் இருந்து விழுந்தால் அடி குறைவாக இருக்கும். பூனைக்கு இந்த விதி தலை கீழ்.
முதல் மாடியிலிருந்து விழும் பூனையைக்காட்டிலும், ஏழாவது மாடியிலிருந்து தரையில் விழும் பூனை அதிக சேதாரமின்றி தப்பிவிடும் என்று பௌதீகஸ்தர்கள் நிறுவியுள்ளனர். காற்றின் வழியே விழுகையில் பூனை பாரசூட் போல தன் உடலை வளைத்து கால்களைப்பரப்பி விரித்துக்கொள்கிறதாம். காற்றின் உராய்வையும், குடை போன்ற வடிவத்தின் கீழ் மேல்புறங்களின் அழுத்த வித்தியாசங்களினாலும் கிட்டத்தட்ட மிதந்தவாறே தரையை அடைகிறது. தலைகுப்புறத் தள்ளிவிட்டாலும் சுதாரித்து இந்த ’பாரசூட் நிலையை’ அடைந்து விடுமாம். முதல் மாடியிலிருந்து தள்ளிவிட்டால், சுதாரித்துகொண்டு இவ்வாறு பாரசூட் போல விழுவதற்குள் தரையை தொட்டுவிடுவதால் அடி பலமாக வாய்ப்பு அதிகம்.

பூனை சுத்தமான விலங்கு. தன் நேரத்தின் பெரும்பகுதியை உடலின் மேற்பகுதியை நக்கிச் சுத்தம் செய்வதில் செலவிடும். ஜப்பானில் ஸ்டேஷன் மாஸ்டராக செயல்பட்ட பூனை மரணம் அடைந்ததால் மக்கள் கவலையிலுள்ளனர். ஜப்பானிலுள்ள சிறிய ரயில் நிலையம் ஒன்றில் ஸ்டேஷன் மாஸ்டராக செயல்பட்ட பூனை மரணமடைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளைப் பெரிய அளவில் ஈர்ந்த அந்தப் பூனைக்கு வயது 16 என்பது குறிப்பிடத்தக்கது.


உலகின் பணக்கார பூனை - ரூ.1,400 கோடி சொத்து

உலகின் மிகப் பெரிய ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஜெர்மனியை சேர்ந்த கார்ல் லாகெர்பெல்ட். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வாழ்ந்து வந்த இவர் 85 வயதில், கடந்த 19ம் திகதி காலமானார்.

கார்ல் லாகெர்பெல்ட் செல்லப்பிராணியாக பூனை ஒன்றை வளர்த்து வந்தார். ‘சவ்பெட்’ என பெயர் கொண்ட அந்த பெண் பூனை மீது அவர் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.

கார்ல் லாகெர்பெல்ட் ஒரு பேட்டியின் போது, சட்டம் அனுமதித்ததால் தனது செல்லப்பிராணியான சவ்பெட்டை திருமணம் செய்து கொள்வேன் என்றும், கண்களின் வழியாக தாங்கள் இருவரும் உரையாடிக்கொள்வதாகவும் வேடிக்கையாக கூறினார்.

மேலும், சவ்பெட்டை தனது வாரிசாக அறிவித்த அவர், தனது இறப்புக்கு பின் தன்னுடைய சொத்தில் ஒரு பகுதி பூனைக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில், கார்ல் லாகெர்பெல்ட் மறைவுக்குப் பின், இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் சவ்பெட் பூனை பெயரில் உயில் எழுதப்பட்டிருப்பதாகவும், அதனை நிர்வகிக்க அறங்காவலர்களை நியமித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் உலகிலேயே பணக்கார விலங்கு என்ற பெயரை ‘சவ்பெட்’ பூனை பெற்றுள்ளது.

பூனைகளைப் பற்றி 10 ருசிகர தகவல்கள்

பூனை வளர்ப்பது உங்களுக்கு பிடிக்குமா? உங்கள் செல்லப்பிராணியின் மீது அதீத அன்பு இருக்கிறதா? அப்படியென்றால் உங்களுக்கு பூனையை பற்றிய இந்த 10 விஷயங்கள் தெரியுமா?


சராசரியாக பூனைகள் ஒரு நாளில் 70 சதவீதத்தை தூங்கியே கழிக்கின்றன.
பொதுவாக பூனைகள், ஒரு உணவை மூன்று முறை ருசித்து சோதனை பார்த்த பின் நான்காவது முறை நம்பிக்கையுடன் அதனை உண்ணும்.
பூனைகள் தனது உள்ளங்கால் வழியாக வியர்வையை வெளியேற்றுகின்றன.
அவற்றின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மை கொண்டது.
பூனைகளால் இனிப்பு பொருட்களை ருசிக்க முடியாது.
பெண் பூனைகள் பொதுவாக வலது கால் பழக்கமுடையவை. மேலும் ஆண் பூனை இடது கால் பழக்கம் கொண்டவையாக இருக்கும்.
பூனைகளுக்கு காலர் எலும்புகள் என்று சொல்லக்கூடிய கழுத்திற்கும் தோலுக்கும் இடையேயான எலும்புகள் கிடையாது.
பெண் பூனைகள் மோலி அல்லது ராணி என்று அழைக்கபடும்.
பூனைகளால் கடல் நீரை குடிக்க முடியும். அதன் சிறுநீரகங்கள் உப்பை வடிகட்டும் அளவிற்கு திறன் கொண்டவை.
பாலூட்டிகள் மற்றும் பறவைகளைச் சேர்ந்த 33 இனம் பூனைகளால் அழிந்துள்ளது. மிகவும் அதிகமாக வேட்டையாடக் கூடிய 100 இனங்களில் பூனையும் ஒன்று.


டாம் அண்ட் ஜெர்ரி முதல் பீஸ்ட் வரை... இணையத்தை கலக்கும் இன்ஸ்டா பூனைகள்! #CatDay

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பிப் பார்க்கப்படுவது டாம் அண்ட் ஜெர்ரி ஷோ தான். மனதில் எவ்வளவு தான் டென்ஷன் இருந்தாலும் ஒரு 5 நிமிடம் டாம் அண்ட் ஜெர்ரி ஷோ அல்லது பூனைகள் வரும் எதாவது ஒரு கார்ட்டூன் பார்த்தால் போதும். மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் ஓடிவிடும். பெரியவர்களைக் கூட குழந்தைகளாக்கிவிடும் வல்லமை படைத்தது தான் பூனை. பாத்திரத்தில் உள்ள பாலைத் திருட்டுத் தனமாக குடித்து விட்டு அமைதியாக எதுவுமே நடக்காதது போலிருக்கும் அந்த அப்பாவியான 'லுக்'கை பூனையால் மட்டுமே கொடுக்க முடியும். பூனைகளின் குறும்புத்தனத்தை கொண்டாடுவதற்காகவே ஆகஸ்ட் 8-ம் தேதியைச் சர்வதேச பூனை தினமாக உலகம் முழுவதும் கொண்டாடுகின்றனர்.  பூனை தினம் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

உலகளவில் அதிகமாக வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளில் பூனையும் ஒன்று. நம்முடைய வீட்டில் கூட ஜெர்ரியைப் பிடிக்கக் கண்டிப்பாக ஒரு டாம் இருக்கும். பூனைக்கு அழகே அதனுடைய கண்களும் மீசையும் தான். அதை விடப் பூனை தன்னுடைய தலையை மேலும் கீழும் தூக்கிப் பார்க்கும் பார்வையை எத்தனைத் தடவை வேண்டுமானாலும் பார்த்து ரசிக்கலாம். வாட்ஸ்அப்பிலோ, ஃபேஸ்புக்கிலோ பூனை வீடியோக்களோ, புகைப்படங்களோ வந்தால் அதைப் பார்த்துவிட்டுத்தான் மற்ற வேலையைச் செய்வார்கள். உலகம் முழுவதும் 40 வகையான பூனை இனங்கள் உள்ளன. அதில் 50 கோடிக்கும் அதிகமான பூனைகள் வீடுகளில் வளர்க்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மனிதன் கூட சுத்தத்தைப் பற்றி அதிகளவு அக்கரை எடுத்துக் கொள்ள மாட்டான். ஆனால் பூனை மிகவும் சுத்தமான விலங்கு. தனக்குக் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் தன் உடலின் மேற்பகுதியை நாக்கால் நக்கி நக்கி சுத்தம் செய்வதிலேயே செலவிடும். மீன் குழம்பை விட அதிகளவில் விரும்பி சாப்பிடக் கூடியது கருவாட்டுக் குழம்புதான். பூனைகள் சுமார் 18 லிருந்து 20 ஆண்டுகள் வரைதான் வாழக்கூடியது. ஆனால் இங்கிலாந்தில் பாபி என்ற பூனை 24 வயது வரை வாழ்ந்துள்ளது. பூனைகள் 24 வயது வரை வாழ்வது மனிதன் 114 வருடங்கள் வாழ்வதற்குச் சமமானது. மேலும், சில பூனைகள் 30 வயது வரை உயிர்வாழ்ந்ததற்கு ஆதாரங்களும் உள்ளன.

பூனைகள் பெரும்பாலும் 2.5 லிருந்து 7 கிலோ வரையிலான எடையுடன் இருக்கும். சராசரியாக 23-25 செ.மீ உயரமும், 46 செ.மீ உடல் நீளமும் வளரக்கூடியது. சாதாரணமாக நாயின் வால் 15 செ.மீ வரை தான் இருக்கும். ஆனால் பூனைக்கு 30 செ.மீ வரை நீளமான வால் இருக்கும். அதேபோல் பூனைக்கு மனிதனை விட 3 பற்கள் அதிகம். இதைவிட இன்னொரு சிறப்பு என்னவென்றால் பூனைகள் மனிதனை விட 3 கி.மீ வேகம் அதிகமாக ஓடக்கூடியது. ஒரு மணிநேரத்தில் 48 கி.மீ வேகம் ஓடிவிடும். இரண்டே மாதத்தில் கர்ப்பமடைந்து,முதல்முறை மட்டும் 2 லிருந்து 3 குட்டிகள் போடும், இரண்டாவது முறையிலிருந்து 4 முதல் 6 குட்டிகள் வரைப்போடும். வாழ்நாளில் 150-க்கும் மேற்பட்ட குட்டிகளை போட்டுவிடும். கும்பகர்ணனைப் போல, ஒரு நாளைக்கு 12 லிருந்து 16 மணி நேரம் தூங்குமாம். அதிக சுறுசுறுப்புடன் இருக்கும் பூனையானது, டாம் அண்ட் ஜெர்ரியில் வருவது போலவே அதனுடைய தலை எந்த இடத்தில் நுழையுமே அந்த இடத்தில் எல்லாம் நுழைந்து விடும் உடலமைப்பைக் கொண்டது.

பூனைகளுக்கு அதிக இரவுப் பார்வை, கேட்கும் திறன் உண்டு. மனிதனுக்கு பார்க்கத் தேவைப்படும் ஒளியில் ஆறில் ஒரு பங்கு ஒளியிலேயே பார்க்கக்கூடிய திறன் படைத்தவை. பூனைகள் தமது காதை 180°வரை அசைக்கக்கூடியதுடன், தனது இரண்டு காதுகளையும் தனித்தனியாகவும் அசைக்கக்கூடிய ஆற்றலினையும் கொண்டது. இரவில் சிறு சத்தம் கேட்டாலும், சட்டென்று இரையை வேட்டையாடிவிடும். பூனைகள் அமைதியாக அடி எடுத்து வைத்து வேட்டையாடும் திறன் கொண்டவை. முன்னங்கால்களை வைத்த அதே இடத்தில்தான் பின்னங்கால்களையும் வைக்குமாம். இதனால் சிறிது சத்தம் கூட இல்லாமல் வேட்டையாட முடியும். சத்தம் போடாமல் வேலையைக் கச்சிதமா முடிக்கும் திறமை பூனைகளுக்கே உள்ள ஒரு தனி சிறப்பு தான். மற்ற நேரத்தில் பூனைகள் 100-க்கும் அதிகமான சத்தம் எழுப்பும் என்பதும் ஆச்சர்யமிக்கது.

பழங்காலத்தில் பூனைகள் இல்லாத வீடே இருக்காது. ஏனென்றால், அப்போதெல்லாம் எலிகள் இல்லாத வீடுகளே இல்லை. ஆரம்பத்தில் எலிகளை உண்பதற்காகவே பூனைகள் வளர்க்கப்பட்டன. பிறகு பூனைகள் மனிதனுடன் அன்பாகப் பழகும் விதத்தினால் ஈர்க்கப்பட்டு பூனைகளை வீட்டில் ஒருவர் போன்று நேசித்து வளர்க்கத் தொடங்கினர். சாதாரணமாக, அதிகளவு உயரத்தில் இருந்து குதித்தால் அதிக அடிபடும். குறைந்தளவு உயரத்தில் இருந்து குதித்தால் குறைவாக அடி படும். ஆனால் பூனைகளுக்கு இது நேர்மறை. பூனைகள் 32 மாடி உயரத்தில் இருந்து குதித்தாலும் அவற்றுக்கு அடிபடுவது மிக மிகக் குறைவே. பெரும்பாலும் பூனைகள் அதிக உயரத்தில் இருந்து கீழே குதிக்கும் போது பாரசூட் போல தன் உடலை வளைத்து கால்களைப்பரப்பி விரித்துக்கொள்ளும். இதனால் அதிக உயரத்தில் இருந்து குதித்தாலும் மிகக் குறைவாகவே காயங்கள் ஏற்படும். ஆனால் குறைந்த உயரத்தில் இருந்து குதிக்கும்போது தங்கள் கால்களை தயார் செய்வதற்குள் கீழே விழுந்து விடுவதால் அதிக அடிபட்டுவிடுகின்றன.

வீடுகளில் மட்டுமின்றி தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப இணையத்திலும் பூனைகள் தங்களுக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்து விட்டன. பூனைகளுக்கு என்றே ஆயிரக்கணக்கான வலைத்தளங்கள், யூடியூப் சேனல்கள், ஃபேஸ்புக் பக்கங்கள், அனிமேஷன்கள் என்று இணையதளத்தில் எல்லா இடங்களிலும் எதாவது ஒரு வகையில் பூனைகள் இருக்கின்றன. சோஷியல் மீடியாக்களில் உள்ள Pet-களில் அதிக பாப்புலராக இருப்பதே பூனைகள் தான். உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு 14 லட்சம் பூனை புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. 3.5 லட்சம் பூனை உரிமையாளர்கள் பூனைகளுக்கென ஃபேஸ்புக், யூடியூப், ட்விட்டர் போன்ற சோஷியல் மீடியாக்களில் கணக்குகள் (Account) வைத்துள்ளனர். இதில் 15% பேருடைய பூனைகள் இணையதளத்தில் மிகவும் பிரபலமாக உள்ளன.

18 முதல் 34 வயதிற்குட்பட்டவர்கள் Instagram மற்றும் SnapChat ஐ அவர்களின் பூனைகளுக்காகவே பயன்படுத்துகின்றனர். பூனைகளுக்காக இணையதளத்தைப் பயன்படுத்தும் 3-ல் இரண்டு பேர் பூனைகளுடன் செல்ஃபி எடுத்துப் பதிவிடுகின்றனர். யூடியூப்-ல் இதுவரை அதிகமாகப்  பார்க்கப்பட்டது  Nyan Cat வீடியோ தான். இதுவரை சுமார் 16.1 கோடி பேர் பார்த்துள்ளனர். பூனை பற்றிய வலைத்தளங்கள் மட்டுமின்றி திரைப்படங்களும் எடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்தவர்களும் பலர் இருக்கிறார்கள். இது மட்டுமின்றி,  தன்னுடைய குறும்புத்தனத்தைக் காட்ட விண்வெளி வரை சென்றது ஃபெலிசிட் (Felicette)என்ற பெண் பூனை. 1963ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி  விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. விண்வெளிப் பயணம் முடிந்து உயிருடன் பூமிக்குத் திரும்பியதே இதன் சிறப்புக்கு முக்கிய காரணம்.

பூனைகளின் குறும்புத்தனத்தை ரசிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு  இவர்கள்தான். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான பில் கிளின்டன், 'சாக்ஸ்' என்ற பூனையை வளர்த்து வந்தார். ஜனாதிபதியின் ஓய்வு அறை, பத்திரிகையாளர் அறை என எங்கு வேண்டுமானாலும் சுற்றிவர அதற்கு அனுமதி உண்டு. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் இரண்டு பூனைகளை வளர்த்து வந்தார். வெள்ளை மாளிகையில் நடைபெறும் விருந்தில் பூனைகளுக்கு உணவு ஊட்டுவார். இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தம் பூனைகளோடு நெருக்கமானவர். இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தன் ஆராய்ச்சியில் சோர்வுறும்போதெல்லாம் அவரின் தனிமையைப் போக்கி ஆறுதல் அளித்தது பூனைகளின் நெருக்கம்தான் என்று கூறியுள்ளார். புவி ஈர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்த சர் ஐசக் நியூட்டன், தாம் வளர்த்த இரண்டு பூனைகள் அதன் உருவ அமைப்புக்கு ஏற்ப வெளியே சுதந்திரமாய் சென்று வர வீட்டுக் கதவில் பெரியதும் சிறியதாய் இரண்டு துளைகளைச் செய்துள்ளார். புளேரென்ஸ் நைட்டிங்கேல் அறுபது பூனைகள் வரை வளர்த்ததாகவும் எங்குச் சென்றாலும் பூனைகளை விட்டுச் செல்வதில்லை என்றும் வரலாற்றுக் குறிப்பு உள்ளது. வாழ்வின் துன்பங்களிலிருந்து விடுபட இரண்டு வழிகள், இசையும், பூனைகளும் என்று கூறியது நோபல் பரிசு பெற்ற தத்துவமேதை  ஆல்பர்ட் சுவெய்ட்ஷர். இவ்வளவு ஏன் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் கூட பீஸ்ட் (Beast)என்ற பூனையை வளர்த்து வருகிறார். இது போன்று வின்ஸ்டன் சர்ச்சில், ஊர்சுலா என்ரெஸ், லெனின் என்று இன்னும் எத்தனையோ புகழ்பெற்றவர்களின் இதயங்களைச் சிறைபிடித்துள்ளது பூனைகள்.

எவ்வளவு குறும்புத்தனம் செய்தாலும், தன் எசமானரைக் கண்டதும் வாலை ஆட்டி, அவர்களை உரசி, விளையாடி, அவர்களோடு படுத்து உறங்கி தன் அன்பினை தெரிவித்துவிடும். நன்றியுணர்வுமிக்க விலங்குகளின் பட்டியலில் பூனை இடம்பெறாவிட்டாலும், உலகம் முழுவதும் பூனை செல்லப்பிராணியாகவே வளர்க்கப்படுகிறது. உங்களுக்குப் போர் அடிக்கும் நேரத்தில் யூடியூபில் 'Cats'என்று மட்டும் தேடிப் பாருங்கள். நேரம் போவதே தெரியாது. உங்களுடைய வீட்டில் கூட கண்டிப்பாக ஒரு டாம் இருக்கும். உங்களுக்கும்பூனைக்கும் இடையே நடைபெற்ற சின்ன சின்ன சுவாரஸ்யமான நிகழ்வை கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளலாமே...? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக