திங்கள், 25 டிசம்பர், 2017

முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாள்: டிசம்பர் 25 .1924 )



முன்னாள்  இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்  பிறந்த நாள்: டிசம்பர் 25 .1924 )

அடல் பிகாரி வாச்பாய் (பிறப்பு: டிசம்பர் 25 1924 ) 1996ம் ஆண்டு சில காலமும், 1998ல் இருந்து 2004 வரையிலும் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் பிறந்த இவர் திருமணம் செய்து கொள்ளாதவர். 50 வருட பாராளுமன்ற உறுப்பினரான இவர் மக்களவைக்கு 9 முறையும் மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 4 முறை வெவ்வேறு மாநிலங்களில் ( உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், டெல்லி ) இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் இவர் ஆவார். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றி உள்ளார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
கிருஷ்ணா தேவி - கிருஷ்ணா பிகாரி வாஜ்பாய் ஆகியோருக்கு 25 டிசம்பர் 1924 இல் நடுத்தர பிராமண குடும்பத்தில்
குவாலியர் என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணா பிகாரி வாஜ்பாய் ஒரு கவிஞர் மற்றும் பள்ளி ஆசிரியர். இவர் பள்ளிப்படிப்பை குவளியரில் பயின்றார்.
அரசியலில் ஈடுபாடு
இவர் இரண்டாவது முறையாகப் பிரதமராகப் தேர்ந்தெடுக்கப்பட்டபின் நாடு பல கோணங்களில் முன்னேறியது. குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறைகள்.
வெள்ளை மாளிகையில் அடல் பிகாரி வாச்பாயும் அதிபர் புஷ் சந்திப்பு,2001
விருது
இந்தியாவின் உயரிய பாரத் ரத்னா விருதினை, 27 மார்ச் 2015 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரும் மற்றும் இந்தியப் பிரதமரும், வாஜ்பாயின் இல்லம் சென்று வழங்கி கௌரவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக