செவ்வாய், 26 டிசம்பர், 2017

அன்னை மீனாம்பாள் சிவராஜ் பிறந்த நாள் டிசம்பர் 26, 1904.



அன்னை மீனாம்பாள் சிவராஜ் பிறந்த நாள் டிசம்பர் 26, 1904.

மீனாம்பாள் சிவராஜ் (அன்னை மீனாம்பாள் சிவராஜ்) 26 டிசம்பர் , 1904 - 30 நவம்பர் , 1992 பெண் விடுதலைக்காகவும், தலித் விடுதலைக்காகவும் போராடுவததைத் தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு போராடி வென்ற பெண். இவர் இந்தி எதிர்ப்புப் போரின் முதல் படைத்தலைவியாக விளங்கியவர்.
தமிழ் , தெலுங்கு , இந்தி , ஆங்கிலம் போன்ற மொழிகளில் வல்லமை பெற்றவர். சென்னை மாநகராட்சியின் துணை மேயர். 1938 திசம்பரில் நீதிக்கட்சியின் மாநாடு 29,30,31 மூன்று நாட்கள் நடைப்பெற்றன.அந்த மாநாட்டில்தான் பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த மாநாட்டுப் பந்தலிலேயே மூன்றாம்நாள் இறுதியில் ஆதி திராவிடர் மாநாடு நடத்த மீனாம்பாள் சிவராஜ் நீதிக்கட்சி தலைவர்களிடம் ஒப்புதல் பெற்றிருந்தார்.மீனாம்பாள் தலைமையில் நடைபெற்ற அந்த மாநாட்டில் அம்பேத்கர் தலைமையை ஏற்று அகில இந்திய அளவில் மாநாடு நடத்துவது என்று தீர்மானித்தனர் .


குடும்பவிபரம்

இவர் தலித் சமுதாயத்திலிருந்து சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதிநிதியான வாசுதேவப்பிள்ளையின் மகள். முதன் முதல் கப்பலோட்டிய தமிழர் என்று புகழப்பட்டவரும், கோடீஸ்வரப்பிள்ளை என்று அழைக்கப்பட்டவருமான மதுரைப்பிள்ளையின் பேத்தி.இவர் அக்காலத்தில் ரங்கூனில் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அக்காலத்திலேயே ரங்கூனில் மெட்ரிக்குலேசன்வரை படித்தவர். [2] இவர் தனது 16வது வயதில் 1918இல் தலித் இயக்கத் தலைவர் ந. சிவராஜ் என்பவரை மணந்து கொண்டார்.
பொறுப்புகளும் பணிகளும்
கவுன்சிலர் (6 ஆண்டுகள்)
கௌரவ மாகாண நீதிபதி (16 ஆண்டுகள்)
திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் (6 ஆண்டுகள்)
சென்னை மாகாண ஆலோசணைக் குழு உறுப்பினர் (9 ஆண்டுகள்)
தொழிலாளர் ட்ரிப்யூனல் உறுப்பினர்
சென்னை நகர ரேஷன் ஆலோசனைக் குழு உறுப்பினர்
சென்னை பல்கலைக் கழக செனட் உறுப்பினர் (13 ஆண்டுகள்)
போருக்குப்பின் புனரமைப்புக்குழு உறுப்பினர்
S.P.C.A உறுப்பினர்
நெல்லிக்குப்பம் பாரி கம்பெனி தொழிலாளர் தலைவர்
தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர்
அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர் (6 ஆண்டுகள்)
சென்னை கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர்
விடுதலை அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர்.

காந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர்

மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத்தலைவர் (6 ஆண்டுகள்)
சென்னை அரசு மருத்துவ மனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர்
அடையார் மதுரை மீனாட்சி மகளிர் விடுதி நடத்துனர்
லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர்.



டாக்டர் அம்பேத்கரின் தங்கை அன்னை மீனாம்பாள் சிவராஜ்!

டாக்டர் அம்பேத்கரின் தங்கை அன்னை மீனாம்பாள் சிவராஜ்!
மானுட விடுதலைக்கு, பெண் விடுதலையை தலித் விடுதலையை முன் நிபந்தனைகளாகக் கொண்ட அன்னை மீனாம்பாள், பெண்களுக்கு மட்டுமல்ல தலித் மக்களுக்கும் தலைவராக வாழ்ந்தார். தமிழ் வள்ளலாகவும், ஆதிதிராவிடர் மகாஜனசபாவின் புரவலராகவும், முதன் முதலில் கப்பலோட்டிய தமிழராகவும் புகை உச்சியில் இருந்த கோடீஸ்வரப் பிள்ளை என்று அழைக்கப்பட்ட மதுரைப்பிள்ளையின் பேத்திதான் அன்னை மீனாம்பாள். அன்னை மீனாம்பாள், 1902 இல் பிறந்தார். அன்னை மீனாம்பாளின் தந்தை வாசுதேவப் பிள்ளை தலித் சமுதாயத்திலியிருந்து சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதிநிதி. 1918இல் அன்னை மீனாம்பாள் அவர்களுக்கு வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தம் ஏற்பட்டது. தலைவர் சிவராஜ் அவர்கள் துணைவராக வாய்க்கபெற்றார்.
அன்னை மீனாம்பாள், இளம் வயதிலேயே எழும்பூர் நீதிமன்றத்தில் பதிமூன்று ஆண்டு காலம் கவுரவ நீதிபதியாக இருந்தவர். கவுரவ நீதிபதிக்கான நேர்முகத் தேர்வில், உங்கள் கணவர் வழக்குரைஞராக இருந்து நீங்கள் நீதிபதியானால் அவர் வாதாடுகிற பக்கம் தீர்ப்புச் சொல்ல மாட்டீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அன்னை மீனாம்பாள் கணவர் என்பது வீட்டோடுதான். நீதி மன்றத்தில் அவர் வழக்குரைஞர், நான் நீதிபதி. கணவன் மனைவி உறவு அங்கே கிடையாது என்று ஆளுமையுடன் பதிலளித்தார். நீதிபதி பொறுப்பின் போது உலகத்தையும், வாழ்க்கையையும் மக்களின் பல்வேறு பிரச்சினைகளையும் பெருமளவு புரிந்து கொண்டார்.
அன்னை மீனாம்பாள் சுயமரியாதை இயக்க மாநாடுகளில் வரவேற்புக் குழுத்தலைவராக, திறப்பாளராக, தலைவராக, சிறபுரையாளராக முக்கியத்துவம் பெற்றியிருந்தார். ஈ.வெ. ராமசாமிக்கு 20/11/1938 இல் தமிழக பெண்கள் மாநாட்டில் நாயக்கர் பட்டத்தை ஒழித்து பெரியார் என்ற மதிப்பு மிக்க பட்டத்தை தந்தவர் அன்னை மீனாம்பாள். டாக்டர் அம்பேத்கர் அன்னை மீனாம்பாள் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார். ஒருமுறை செட்டி நாட்டரசர் ராஜா சர் முத்தையாருடன், டோகோட்ரோ அம்பேத்கர் பம்பாயில் பேசிக்கொண்டு இருந்த போது "சென்னையில் எனக்கு ஒரு தங்கை இருக்கிறார்" என்றார். அதற்கு முத்தையா அவர்கள் சென்னையிலா? அதுவும் உங்களுக்கா? என்று ஆச்சரியப்பட அதற்க்கு அண்ணலும் ஆமாம், அவர் பெயர் மீனாம்பாள். தலைவர் சிவராஜின் துணைவி என்று விளக்கமாகச் சொன்னார். 1942-இல் அன்னை மீனாம்பாள் தலைவர் சிவராஜ் அவர்களுடன் பம்பாயில் தங்கியிருக்கையில் டாகடர் அம்பேத்கர் தன கைவண்ணத்தில் அற்புதமாகச் சமைத்து அவரே அன்போடு பரிமாறினார். டாக்ற்றோர் அம்பேத்கர் சமைத்துச் சாப்பிடக் கொடுத்த வைத்தவர் அன்னை மீனாம்பாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக