ஞாயிறு, 24 டிசம்பர், 2017

கீழ்வெண்மணி படுகொலை தியாகிகள் நினைவு தினம் டிசம்பர் 25.


கீழ்வெண்மணி படுகொலை  தியாகிகள் நினைவு தினம் டிசம்பர் 25.

தஞ்சை மாவட்டத்தில் 44 வேளாண் தொழிலாளர்கள் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட துக்க தினம் 48வது வருட தியாகிகள் தினமாக இன்று அனுசரிக்கப்படுகிறது.
நாகையில் இருந்து 25கிமீ தொலைவில் உள்ள கீழ்வெண்மணி எனும் கிராமத்தில், நிலக்கிழார்கள் அங்குள்ள கீழ் சமூகத்து மக்களை அடிமைகளாக நடத்தி வந்தனர். குறைந்த ஊதியத்தில் அதிகமாக வேலை வாங்கி “பண்ணையாள்” முறையில் மக்கள் நடத்தப்பட்டனர். ஒரு கட்டத்தில் கொடுமை தாங்கமுடியாத மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து விவசாயிகள் சங்கத்தை உருவாக்கினர். இதனால் கோபமடைந்த நிலக்கிழார்கள் கிசான் போலீஸ் எனும் காவலர் அமைப்பை உருவாக்கி விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
1968ஆம் ஆண்டு டிசம்பர் 25ம் நாள் அன்று ஊருக்குள் புகுந்த காலர்கள் மற்றும் நிலக்கிழார்களின் ஆட்கள் விவசாயிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் விவசாயிகள் பலரும் ஓடி தெருவின் மூலையில் இருந்த ராமையா என்பவரின் குடிசைக்குள் ஒளிந்தனர். சிறிய அளவுள்ள அந்த குடிசையில் சுமார் 48 அடைந்திருந்தனர். அப்போது வெளிப்புறமாக கதவை அடைத்து குடிசைக்கு தீ வைத்து எரித்ததில் 44 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர்.
இதில் 20 பெண்கள், 19 குழந்தைகள் அடங்குவர். இந்த குற்றம் சம்பந்தமாக 103 பேர் கைது செய்யப்பட்டு 1973ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர். இந்த குடிசை எரிப்பு சம்பவத்தின் போது இறந்தவர்களின் நினைவாக வருடந்தோரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் நாளன்று “கீழ்வெண்மணி தியாகிகள் தினம்” அனுசரிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக