வியாழன், 18 ஆகஸ்ட், 2016

சமூக சீர்திருத்தசிந்தனையாளர் ஆர். எஸ். சுபலட்சுமி பிறப்பு ஆகஸ்ட் 18.


சமூக சீர்திருத்தசிந்தனையாளர் ஆர். எஸ். சுபலட்சுமி  பிறப்பு ஆகஸ்ட் 18.
.சகோதரி சுபலட்சுமி ( R. S.
Subbalakshmi , ஆகத்து 18, 1886 - திசம்பர்
20, 1969) என்றழைக்கப்பட்ட ஆர்.
எஸ். சுபலட்சுமி
பெண்ணியத்திற்காகப் பாடுபட்ட
சமூக சீர்திருத்த
சிந்தனையாளரும் தென்னகத்தின்
முதல் பட்டதாரிப்
பெண்மணியுமாவார்.  .
வாழ்க்கை
சென்னையில் மயிலாப்பூரில்
ஒரு பிராமணக் குடும்பத்தில்
பிறந்தவர்.  இவருடைய தந்தை
சுப்பிரமணிய அய்யர். அரசுப்
பொதுப்பணித்துறையில்
பொறியாளராகப்
பணியாற்றியவர். [4] தாயார்
விசாலாட்சி. இவர்களது முதல்
குழந்தையாகப் பிறந்தவர்
சுபலட்சுமி. இவரது குடும்பம்
தஞ்சை வைகளத்தூர் என்ற ஊரைச்
சேர்ந்த பிராமணக்
குடும்பமாகும்.
சைதாப்பேட்டையில் தனது
ஆரம்பக்கல்வியைப் பயின்றார் 1898
இல் சுபலட்சுமியின் 11 ஆவது
வயதில் இவர்களது
குலமுறைப்படி திருமணம்
நடைபெற்றது. ஆனால் உடனே
தனது கணவனை இழந்தார்.
கல்வியின் மீதுள்ள ஆர்வத்தால்
எழும்பூரிலிருந்த பிரசிடென்சி
மேல்நிலை மற்றும்
பயிற்சிப்பள்ளியில் தனது
கல்வியைத் தொடர்ந்தார். 1905
மெட்ரிகுலேசன் தேர்வில்
எல்லாப்பாடங்களிலும்
( முதலாவதாத் தேறினார்.
கல்வி மட்டுமின்றி வீணை
மீட்டுவதிலும்
பயிற்சியெடுத்துக் கொண்டார்.
1898 இல் பின்னர் ஜார்ஜ்
டவுனிலிருந்த பிரசன்டேசன்
கான்வென்டில் எப். ஏ வகுப்பில்
சேர்ந்தார். 1908 இல் பி. ஏ வகுப்பில்
சேர்ந்து 1911 ஆம் வருடம்முதல்
பிராமணக் குடும்பத்துப்
பட்டதாரியாகவும் தென்னகத்தின்
முதல் பட்டதாரிப்
பெண்மணியாகவும் தேர்வு
பெற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக