வியாழன், 18 ஆகஸ்ட், 2016

உலக புகைப்பட நாள் ( Worldphotograph day ) ஆகஸ்ட் 19


உலக புகைப்பட நாள் ( World
photograph day )
ஆகஸ்ட் 19 .
புகைப்படங்களின்
சிறப்பையும்,
புகைப்படக்காரர்களின்
திறமையும் கொண்டாடும்
வகையில் ஒவ்வொரு ஆண்டும்
ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலகம்
முழுவதும்
கொண்டாடப்படுகிறது.
வரலாறு
20ம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட
சில புகைப்படங்கள் உலக
வரலாற்றை மாற்றியுள்ளன.
உதாரணமாக, சீனவீரர்களின்
ராணுவ பீரங்கியை எதிர்த்து
நின்ற டேங்க் மேன் , வியட்நாம்
போரை நிறுத்த காரணமாக
இருந்த சிறுமியின் புகைப்படம்,
1994ம் ஆண்டு, சூடானில் நிலவிய
உணவுப் பஞ்சத்தை எடுத்துரைத்த
குழந்தையின் போட்டோ
ஆகியவற்றை சொல்லலாம்.
லூயிஸ் டாகுரே
19ம் நூற்றாண்டின் துவக்கத்தில்,
லூயிசு டாகுவேரே என்பவர்,
"டாகுரியோடைப்' எனப்படும்
புகைப்படத்தின் செயல்பாட்டு
முறையை வடிவமைத்தார். 1839ம்
ஆண்டு ஜனவரி 9ம் தேதி
பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ்
இம்முறைக்கு ஒப்புதல்
அளித்தது. ஆகஸ்ட் 19ம் தேதி ,
பிரான்ஸ் நாட்டு அரசு
"டாகுரியோடைப்'
செயல்பாடுகளை ""ப்ரீ டூ தி
வேர்ல்டு என உலகம் முழுவதும்
அறிவித்தது. இதை
எடுத்துரைக்கும் வகையில்
இன்றைய தினம் உலக புகைப்பட
தினமாக கொண்டாடப்படுகிறது.
முதல் புகைப்படம்
1826 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை
சேர்ந்த ஜோசப் நைஸ்போர் நீப்ஸ்
என்பவர் முதல் நிலையான நவீன
புகைப்படத்தை எடுத்தார். இந்த
புகைப்படம் நாளடைவில்
அழிந்தது. இதன் பின், 1839ம்
ஆண்டு லுõயிஸ் டாகுரே
பாரிசில் உள்ள போல்வர்டு
கோயிலை அருகில் உள்ள
தெருவை புகைப்படமாக
எடுத்தார். தனிநபர் எடுத்த முதல்
புகைப்படம் இது.
புகைப்பட
விருதுகள்
சிறந்த புகைப்படங்களுக்கு
ஆண்டு தோறும் பல்வேறு
அமைப்புகளால் விருதுகள்
வழங்கப்படுகின்றன. பத்திரிக்கை
துறையில் சிறந்த
புகைப்படங்களுக்கு "வேர்ல்டு
பிரஸ் போட்டோ' ,"டைம்' இதழ்
மற்றும் புலிட்சர் விருதுகள்
வழங்கப்படுகின்றன.
புகைப்படக்கலையின்
பெருமையை அனைவரும்
உணர்ந்து கொள்ளும்
வகையில் ஆண்டுதோறும்
ஆகஸ்ட் 19-ம் தேதி உலக
புகைப்பட தினம்
கொண்டாடப்படுகிறது.
அதிலும், இன்று 175-வது
ஆண்டு புகைப்பட
தினமாகும். புகைப்பட
கருவியை உருவாக்கு
வதற்கான முயற்சி 13-வது
நூற்றாண்டிலேயே
தீவிரமடைந்து விட்டது.
அப்போது கேமரா அப்ஸ்குரா
என்ற கருவி
கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து,
சிறியதும், பெரியதுமாக
பல்வேறு கருவிகள்
கண்டுபிடிக்கப்பட்டன.
மிகப்பெரிய முன்னேற்றம்
1825-ம் ஆண்டு ஏற்பட்டது.
பிரான்ஸை சேர்ந்த ஜோசப்
நீப்ஸ் என்பவர் ஒரு கட்டிடத்தின்
புகைப்படத்தை தனது
கருவியில் படம் எடுத்தார்.
ஆனால், அந்த பிம்பம் 8 மணி
நேரத்திற்கு பிறகு
அழிந்துவிட்டது.
1839-ம் ஆண்டு சர் ஜான்
ஹெர்செல் என்பவர்
கண்ணாடியை பயன்படுத்தி
நெகட்டிவ்களை எடுக்கும்
முறையை கண்டுபிடித்
தார். அவர்தான், இக்கலைக்கு
போட்டோகிராபி என்று
பெயர் வைத்தார். இது
கிரேக்க மொழியி
லிருந்து வந்த சொல்லாகும்.
அதன் அர்த்தம் ஒளியின்
எழுத்து என்பதாகும். அதே
ஆண்டு, லூயிஸ் டாகுரே
என்பவர், சில்வர் காப்பர்
பிளேட்டில் பிம்பங்கள் விழும்
வகையிலான புகைப்படம்
எடுக்கும் முறையை
அறிமுகப்படுத்தினார்.
மரத்தாலான இந்த புகைப்படக்
கருவியில் லென்ஸ்
பொருத்தப்பட்டிருந்தது.
இதற்கு டாகுரியோடைப்
என்று பெயரிடப்பட்டு
மிகவும் பிரபலமாக
விளங்கியது. இந்த
முறைக்கு பிரான்ஸ்
அகாடமி ஆஃப் சயின்ஸ்
ஒப்புதல் அளித்தது. இதன்
செயல் பாடுகளை 1839-ம்
ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி ‘ப்ரீ
டூ தி வேர்ல்ட்’ என உலகம்
முழுவதும் அறிவித்தது.
அந்த நாளையே
ஆண்டுதோறும் உலக
புகைப்பட தினமாக கொண்
டாடுகிறோம்.
1841-ல் பிரிட்டனை சேர்ந்த
வில்லியம் ஹென்ரி பாக்ஸ்
என்பவர் கலோடைப் என்ற
முறையை
அறிமுகப்படுத்தினார். இதில்
நெகட்டிவ்களாக பேப்பர் கள்
பயன்படுத்தப்பட்டன.
அதிலிருந்து பாசிட்டிவ்
இமேஜ் உருவாக்கப்பட்டது.
1851-ல் பிரெடிரிக் ஸ்காட்
என்பவர் சில்வர் நைட்ரேட் பயன்
படுத்தப்பட்ட வெட்
கோலோடியன் செயல்
முறையை கண்டறிந்தார்.
1880-களில் செல்லுலாய்ட்
பிலிம்களை பயன்படுத்தி
புகைப் படம் எடுக்கும்
கருவியை ஜான் கார்பட்,
ஹன்னிபால் குட்வின்,
ஈஸ்ட்மேன் கோடாக் ஆகியோர்
தயாரித்தனர் இந்த முறையில்
செல்லுலாஸ் நைட்ரேட்
பயன்படுத்தப்பட்டது.
1888-ம் ஆண்டு ஜார்ஜ்
ஈஸ்ட்மேன் முதல் முறையாக
பேப்பர் பிலிம்களை
பயன்படுத்தி பாக்ஸ்
கேமராவில் புகைப்படம்
எடுக்கும் முறையை
கண்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து 1900-ல்
பாக்ஸ் பிரவுனி என்ற வகை
கேமராக்களை கோடாக்
அறிமுகப்படுத்தினார். 35
மி.மி. ஸ்டில் கேமராக்களை
1913-ல் ஆஸ்கர் பர்னாக் வடிவ
மைத்தார். இது புகைப்படத்
துறை யையே
புரட்டிப்போட்டது.
முதல் டிஜிட்டல் கேமராவை
சோனி நிறுவனம் 1981-ம்
ஆண்டு தயாரித்தது. அதன்
பின்பு, தற்போது வரை
டிஜிட்டல் கேமராக்களில்
பல்வேறு முன்னேற்றங்கள்
ஏற்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக