திங்கள், 29 ஆகஸ்ட், 2016

சிகரம் தொடு...


சிகரம் தொடு...
------------------------
பூமியில் விதைக்கப்பட்ட விதை கூட
எதிர்ப்பை சமாளித்து வாழ்ந்து
காட்டுகிறது.
சிங்கம்,புலி வாழும்
காட்டில் துணிச்சலாக
வாழ்ந்து காட்டுகிறது மான்!
பெரிய மீன்களால் விழுங்கப்படும் சிறிய
மீன்கள் கூட கடலில்
எதிர் நீச்சல்
போடுகின்றன.
மனிதனால் வெட்டப்படும் மரங்கள் கூட
மீண்டும் தலை நிமிர்கின்றன.
பல மைல்கள் ஆகாரத்திற்காக பறக்கும்
பறவைகள் கூட சந்தோஷமாக வாழ்ந்து
காட்டுகின்றன.
சிறிய உடலை உடைய எறும்புகள் கூட
எவ்வளவு சுறுசுறுப்பாக வாழ்க்கையை
வாழ்கிறது.
தண்ணீரே இல்லாத பாலைவனத்தில்கூட ஓட்டகம்
வாழ்ந்து காட்டுகிறது.
ஒரே ஒரு நாள் வாழும் பூச்சிகள் கூட
வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கின்றன.
அப்புறம் நீ ஏன் புலம்பிக் கொண்டு சாகிறாய்,,
அதை ஏன் நொந்து கொண்டே
சாகிறாய்,
ஏன் வெறுத்துக் கொண்டு
வாழ்கிறாய்,
ஏன் தப்பிக்கப் பார்க்கிறாய்?
ஏன் அழுது கொண்டு வாழ்கிறாய்?
ஒரு வாய்ப்புத்தான்.
சந்தோஷமாகத் தான்
வாழ்ந்து பாரேன்,,
பரந்த உலகம், எண்ணற்ற இயற்கைச் செல்வம்,
பார்க்க, கேட்க, ரசிக்க, ருசிக்க.
கொட்டிக் கிடக்கும்
சந்தர்ப்பங்கள்,
கண்னை திறந்துதான் பாரேன்,,
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்,,,,
தொட்டி மீனாக இருக்காதே!
கடல் மீனாக மாறு!
கூட்டின் சிங்கமாக இருக்காதே
காட்டின் சிங்கமாக இரு!
இறக்கை மறந்த கோழியாக இருக்காதே!
இறக்கைகொண்டு பறந்த
கழுகாக மாறு.
வாழ்ந்து விடவே வாழ்க்கை
வீழ்ந்து விட அல்ல! ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக