திங்கள், 1 ஆகஸ்ட், 2016

குருபகவான் & தட்சிணாமூர்த்தி ,குரு பெயர்ச்சி சிறப்புகள்.


குருபகவான் & தட்சிணாமூர்த்தி ,குரு  பெயர்ச்சி சிறப்புகள்.

*குரு பெயர்ச்சிக்கு யாருக்கு பரிகாரம் செய்வது?*

*நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவானையும் (வியாழன்), ஞான குருவான தட்சிணாமூர்த்தியையும் போட்டு குழப்பிக்கொள்ளும் வழக்கம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.*

குருபகவானுக்கு செய்யவேண்டிய அனைத்து பரிகாரங்களையும் மோன நிலையில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு செய்வது எந்த வகையில் சரி?

“அந்த குரு தான் இந்த குரு!” என்று சொன்னது எந்த மகானுபாவர் என்று தெரியவில்லை.

கோவில்களில் வியாழக்கிழமைகளில் குரு பரிகாரத்துக்காக கூடும் கூட்டத்தை மனதில் கொண்டும் அதன் மூலம் பல்வேறு விதங்களில் கிடைக்கும் வருவாயை மனதில் கொண்டும், இந்த தவறு அனுமதிக்கப்படுகிறது.

பல கோவில்களில் இதை வழக்கமாகவே ஆக்கிவிட்டார்கள்.

நமக்கும் இந்த அறியாமை இருந்ததுண்டு.

சொற்பொழிவு ஒன்றில் ஒரு பெரியவர் இது குறித்து விளக்கியபோது தான் உண்மையை உணர்ந்துகொண்டோம்.

அண்மையில் இது குறித்த ஒரு அற்புதமான கட்டுரையை தினகரன் நாளிதழில் படிக்க நேர்ந்தது.

இதோ உங்கள் கவனத்திற்கு அந்த கட்டுரை. படியுங்கள்.

*குருபகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள்.*

குருபகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை தவறாது செய்யுங்கள்.

குருபகவானின் நல்லருளை பெறுங்கள்.

*குரு பெயர்ச்சி காலத்தில் யாரைப் பணிவது?*

*நவக்கிரக குருவையா,*
*ஞான குருவையா?*

சமீப காலமாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சந்நதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இவர் களில் 99  சதவீதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள்.

அதே நேரத்தில் நவகிரகங்களில் ஒருவரான குரு பக வானை வழிபடுவோரின்  எண்ணிக்கை மிகக் குறைவு.

*குரு பகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்வது  சரிதானா?*

*இவர்கள் இருவருக்கும் உள்ள  வித்தியாசம் என்ன?*

*தட்சிணாமூர்த்தி என்பதற்கு தென்முகக் கடவுள் என்று பொருள்.*
*அதாவது, தெற்கு நோக்கி வீற்றிருப்பவர்.*

*நவகிரகங்களில்  ஒருவரான வியாழ (குரு) பகவானின் திசை வடக்கு.*

திசையின் அடிப்படையிலேயே இருவரும் வேறுபடுகின்றனர்.

*அதே போல வியாழனுக்கு உரிய நிறம், மஞ்சள். இவருக்கு உரிய தானியம், கொண்டைக் கடலை.*

*தட்சிணாமூர்த்தியோ வெண்ணிற  ஆடையை  உடுத்தியிருப்பவர்.*

‘ஸ்வேதாம்பரதரம் ஸ்வேதம்…’ என்று உரைக்கிறது வேதம்.

*ஸ்வேதம் என்றால் வெள்ளை நிறம் என்று  பொருள்.*

உண்மை  நிலை இவ்வாறு இருக்க வியாழனுக்கு பரிகாரம் செய்ய நினைப்பவர்கள்,

ஞான குருவாய் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரமும், கொண்டைக்கடலை மாலைகளும் சாற்றுகிறார்கள்.
*இது, தியானத்தில் ஆழ்ந்திருக்கும் தட்சிணாமூர்த்திக்கு தொல்லை கொடுப்பது போல் அமைகிறது.*

ஞானம் வேண்டி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை  முக்கியமில்லை.

வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

*தெளிவாகச் சொல்வதானால், வியாழக் கிழமைக்கும் தட்சிணாமூர்த்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை*

*சிவபெருமான் ஞானத்தை போதிக்கும் குருவாக ஸநகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களின் பொருளை உபதேசிக்கும் திருவுருவமே   தட்சிணாமூர்த்தி.*

*கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவராக இவர் காட்சியளிக்கிறார்.*

*இவர் ஆதிகுரு அல்லது ஞானகுரு என்று  போற்றப்படுகிறார்.*

*அதே நேரத்தில் தேவர்களின் சபையில் ஆச்சாரியனாக, தேவர்களுக்கு ஆசிரியராக பணி செய்பவர் வியாழன்  என்று அழைக்கப்படும் ப்ருஹஸ்பதி.*

ஆசிரியர் தொழில் செய்வதால் இவரை குரு என்று அழைக்கின்றனர்.

ஞானகுரு வேறு, நவகிரக குரு வேறு என்பதைப் புரிந்து கொள்வது நல்லது.

*வியாழ பகவானுக்கு உரிய அதிதேவதை மருத்வந்தன்  என்றும், ப்ரத்யதி  தேவதை பிரம்மா என்றும் தெளிவாகச் சொல்கிறது வேதம்.*

*எந்த விதத்திலும் தட்சிணாமூர்த்தியோடு வியாழ (குரு) பகவானை சம்பந்தப்படுத்தி  வேதத்திலோ, புராணங்களிலோ சொல்லப்படவில்லை.*

*இந்த நிலையில் வியாழனுக்கு உரிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்ய வேண்டிய  அவசியம் என்ன?  இந்தக்குழப்பத்திற்கு என்ன காரணம்?*

ஞான குருவாம் தட்சிணா மூர்த்தியை வழிபடும் வகையில் பள்ளிக்குழந்தைகளும் இந்த  ஸ்லோகத்தினை எளிதாகச் சொல்கிறார்கள்:

*குருப்ரஹ்மா: குருர்விஷ்ணு: குரு தேவோ மஹேஸ்வர:*
*குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம* *தஸ்மைஸீ*
*குருவே நம:*

இந்த ஸ்லோகத்தில் இடம்பெறும் *‘குரு’* என்ற வார்த்தையை வைத்து *குரு பகவானும் இவரும் ஒன்று என நினைத்திருக்கலாம்.*

குரு  பகவானுக்கு  உரிய பரிகாரத் தலமாக ஆலங்குடி தட்சிணாமூர்த்தி ஸ்வாமி பிரபலம் அடைந்திருப்பதும் கூட காரணமாக இருக்கலாம்.

*இறைவன் இட்ட பணியைச்  செய்பவர்களே நவக்கிரகங்கள்.*

ஒன்பது கோள்களுக்கும் ஒவ்வொரு காரகத்துவம் உண்டு.

*இவர் களில் சுபகிரகமாகவும், வேண்டுகின்ற நன்மையைச்  செய்பவராகவும் விளங்குபவர் வியாழ (குரு) பகவான்.*

*குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி.*

*ஜென்ம ராசியை குரு பார்த்தால் நினைத்த  காரியம் கைகூடும்.*

இந்த உலகத்தில் நாம் ஆனந்தமாய் வாழ்ந்திடத் தேவையான அனைத்து சுகங்களையும் அருள்பவர் *குரு பகவான்.*

*குரு பலம் இருந்தால் திருமணம்  நடைபெறும்.*

*குருவின் அனுக்ரகம் இருந்தால் பிள்ளைப்பேறு கிட்டும்.*

*திருமணத்தடை நீங்கவும், புத்திரபாக்கியம்  கிட்டவும், உயர் கல்வியில் இடம்  பிடிக்கவும் குருவின் அருள் வேண்டி பரிகாரம் செய்ய விழைகின்றனர்.*

அவ்வாறு பரிகாரம் செய்ய  விரும்புபவர்கள் இந்த குரு பெயர்ச்சி நாளிலும்,

*இனி வரும் வியாழகிழமைகளிலும் நவகிரகங்களில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கும்  வியாழ பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றியும்,  கொண்டைக் கடலை மாலை அணிவித்தும் வழிபடலாம்.*

கொண்டைக் கடலை சுண்டல் நைவேத்யம் செய்து, வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம்.

வியாழன்தோறும் விரதம் இருந்து  வடக்கு முகமாய்  நெய் விளக்கு ஏற்றியும் வழிபடலாம்.

அதே நேரத்தில் ஞானமார்க்கத்தை நாடும் அன்பர்கள் தட்சிணாமூர்த்தியை  வழிபடலாம்.

வியாழக்கிழமைதான்  என்றில்லை,

எந்த நாளிலும் அவரை வழிபடலாம்.

மனம் சஞ்சலத்திற்கு உள்ளாகும் எந்த நேரத்திலும் தட்சிணாமூர்த்தியின் சந்நதியில் அவருக்கு  முன்பாக அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபடுங்கள்.

குழப்பங்கள் அகன்று  மனம் தெளிவடையும்.

*இந்த குரு பெயர்ச்சி நாளன்று ஞான குரு வேறு,*

*நவகிரக குரு வேறு என்ற உண்மையைப் புரிந்துகொள் வோம்.*

*அந்தந்த தேவதைகளுக்கு உரிய பரிகாரத்தைச் சரியாக செய்து முழுமையான  பலனை அடைவோம்.

குருபகவான் தட்சிணாமூர்த்தி வழிபாடு :
குருவை வழிபடும் முன் சொல்லவேண்டிய துதி ; கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறங்கமுதற் கற்றவேள்வி, வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பலாய், எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச், சொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைத்து பவத் தொடக்கை வெல்வாம். திருவிளையாடற்புராணம்.
ஆலமர் எனச் சொல்லக்கூடிய குருபகவானை மேற்கண்ட துதியை பாராயணம் செய்து வழிபடுபவர்களுக்கு குருபகவானை கல்வி,ஞானம். போன்றவற்றை தருவார் என்பது கண்கூடு.
குருபகவான் பற்றி உப தகவல்கள் ;
1.குணம் ;ஆண். 2. பதவி ;அமைச்சர் மந்திரி 3.திசை ;ஈசான்யம் 4.உலோகம் ;சிலேத்துமம் .நகை,பொன் ,தங்கம் 5.உணவு ;கடலை 6.தூயதீபம் ;ஆம்பல் 7.மலர்கள் ;முல்லை மலர்,புஷ்பராகம் 8.வாகனம் ;யானை 9.வலிமை ;பகல் நேரம் 10.உறுப்பு ;வயிற்றுப்பகுதி 11.சுவை ;இனிப்பு 12.வடிவம் ; நீள்சதுரம் 13.ஜாதி-பிராமணர் 14.உடலமைப்பு -உயரமானவர் 15.கடவுள் - பிரம்மா16.மொழி -கன்னடம், தெலுங்கு17.நாடி -வாத நாடி.18. நிறம்-மஞ்சள் மேற்கண்ட 18 ம் குரு தட்சிணாமூர்த்தி ஆட்சி செய்பவை அல்லது பிடித்தவை ஆக தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
 ஜாதகத்தில் குருபகவான் ; -
ஜோதிடத்தில் குருபகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 பார்வையாக பார்ப்பதாக கூறுகிறது. "குரு பார்த்தால் கோடி நன்மையுண்டு" என்பது பொது விதியாகும். சிவாலயத்தில் சிவனுக்கு வலப்புறம் இருக்கும் குரு பகவான் எனப்படும் தட்சிணாமூர்த்தியை மஞ்சள் ஆடை,கொண்டைக்கடலை மாலை கோர்த்து முல்லைப்பூ அணிவித்து நேருக்கு நேராக நின்று வழிபடுங்கள்.
திருமணம் போன்ற சுபகாரீயங்கள் குரு அருளால்தான் நடைபெறுகிறது. உங்கள் வாழ்வில் ஏற்றம் பெற வியாழக்கிழமையில் குருஓரையில் சிவாலய தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். எல்லா வளமும் நலமும் பெறுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக