சனி, 20 ஆகஸ்ட், 2016

ராஜீவ் காந்தி பிறந்த தினம் ( ஆகஸ்ட் 20 ,

ராஜீவ் காந்தி (Rajiv Gandhi) ( ஆகஸ்ட்
20 , 1944 - மே 21, 1991 ), இவரது
தாயாரான பிரதமர் இந்திரா
காந்தி 1984 , அக்டோபர் 31 ஆம் திகதி
சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்
இந்தியப் பிரதமரானவர் .
இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல்
குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது
ஆர்வமில்லாது, விமான ஓட்டும்
தொழிலில் ஈடுபட்டிருந்தார்.
தாயார் இந்திரா காந்தியால்
வாரிசாக வளர்க்கப்பட்டு
வந்தவரெனக் கருதப்பட்ட இவரது
தம்பியான சஞ்சய் காந்தி, விமான
விபத்தொன்றில் காலமான
பின்னர், மிகுந்த தயக்கத்துடன்
வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு
வந்தார். 1981 பெப்ரவரியில்,
சஞ்சய் காந்தியின்
தொகுதியான உத்தரப்
பிரதேசத்திலுள்ள, அமேதியில் போட்டியிட்டு
வெற்றி பெற்றார்.
இந்திய அமைதி காக்கும் படையினை
இலங்கைக்கு அனுப்பி தமிழர்களுக்கு
கூட்டாச்சி முறையிலான உரிமையை
பெற்று தர முயன்றார். 21 மே 1991
அன்று ஸ்ரீபெரும்புதூரில்
தற்கொலைப் படையினரால்
வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி
படுகொலை செய்யப்பட்டார்.
சமய நல்லிணக்க நாள்
ராஜீவ் காந்தி பிறந்த நாளான
ஆகஸ்டு, இருபதாம் நாளை
இந்தியாவில் சமய நல்லிணக்க
நாளாக அனைத்து அரசு மற்றும் கல்வி
நிறுவனங்களில் உறுதி மொழி
எடுத்துக் கொண்டாடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக