வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

தேசிய விளையாட்டு நாள் ஆகஸ்ட் 29.


தேசிய விளையாட்டு நாள் ஆகஸ்ட்  29.
இந்திய தேசிய விளையாட்டு நாள் (Indian National Sports Day) இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளன்று (ஆகத்து 29) கொண்டாடப்படுகிறது. இந்நாளின் முக்கிய நோக்கமானது நாட்டு மக்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிப்பதாகும். தேசிய விளையாட்டு நாளில் குடியரசுத் தலைவரால், விளையாட்டுகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, மற்றும் துரோணாச்சாரியார் போன்ற விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. 2012 இல் முதன் முதலாக இந்திய அரசு, தியான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ஆம் நாளை, தேசிய விளையாட்டு தினமாக அறிவித்தது.

கத்தார் தேசிய விளையாட்டு நாள்
கத்தார் நாட்டில் தேசிய விளையாட்டு நாள் ஆண்டுதோறும் பெப்ரவரி மாதத்தின் இரண்டாம் செவ்வாய்க்கிழமையில் கொண்டாடப்படுகிறது. இந்நாள் ஒரு பொது விடுமுறை நாளும் ஆகும். முதலாவது தேசிய விளையாட்டு நாள் 2012 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
பெரிய பதவி தருகிறேன். எங்கள் நாட்டுக்காக விளையாட வந்துவிடுங்கள்' - என்று ஹிட்லர் கேட்டபோது, மறுத்து தாய்நாடுதான் பெரிது என்று இந்தியாவுக்காக தொடர்ந்து ஹாக்கி விளையாடிய வீரர் தயான் சந்த்-தின் பிறந்த தினம் தான் தேசிய விளையாட்டு தினம்!

இந்தியாவில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினமாக (National Sports Day) கொண்டாடப்படுகிறது.

இந்தத் தினம், நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கியில் சாதனை படைத்த தயான் சந்த் நினைவாக அவரின் பிறந்த தினத்தில் கொண்டாடப்படுகிறது.

தயான் சந்த் கடந்த 1905-ம் ஆண்டு, ஆகஸ்ட் 29-ம் உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் பிறந்தார். இவரின் தந்தை சாமேஸ்வர் தத் சிங், இந்திய ராணுவத்தில் பணி புரிந்தார். அவர் ராணுவ ஹாக்கி அணிக்காக விளையாடி இருக்கிறார். அரசு பணி என்பதால் சாமேஸ்வர் தத் சிங் பல ஊர்களுக்கு பணி மாற்றம் நடந்தது. இதனால், தயான் சந்த் சரிவர கல்வி கற்க முடியவில்லை. அவர் ஆறாம் வகுப்புடன் படிப்பை முடித்துக் கொண்டார். இவர்கள் குடும்பம் ஒரு வழியாக உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் வீடு கட்டி அமர்ந்தது.

சிறு வயது முதல் தயான் சந்த்க்கு வலுதூக்குவதில்தான் அதிக ஆர்வம். 1922-ம் ஆண்டு ராணுவத்தில் தயான் சந்த் சேர்ந்த பிறகே அவருக்கு ஹாக்கி மீது ஒர் ஆர்வம் பிறந்தது. அப்போது அவருக்கு வயது 16. அப்போது ஹாக்கி விளையாட்டில் சாதனை படைக்க வேண்டும் என்கிற மனதில் இருத்துக் கொண்டார். 1926 வரை இந்திய ராணுவ அணி சார்பில் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்று விளையாடினார். 1934-ல் தயான் சந்த் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஆக உயர்ந்தார்.

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம்..!

1928 (ஆம்ஸ்டர்டாம்), 1932 (லாஸ் ஏஞ்செல்ஸ்), 1936 (பெர்லின்),  ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல தயான் சந்த் முக்கிய காரணமாக இருந்தார்.

ஆயிரம் கோல்களுக்கு மேல் போட்டு சாதனை படைத்த இவர், தன் 51-வது வயதில் 1956-ம் ஆண்டு இந்திய ராணுவ மேஜர் பதிவியிலிருந்து ஓய்வு பெற்றார். அந்த ஆண்டு அவருக்கு நாட்டின் மூன்றாவது பெரிய விருதான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இன்றைய தேதி வரையில் ஹாக்கி வீரர் ஒருவர் இவர் மட்டும்தான் இந்த உரிய விருதை பெற்றிருக்கிறார்.

பணி ஓய்வுக்கு பிறகு ராஜஸ்தானில் மவுண்ட் அபு-ல் இருந்துக் கொண்டு ஹாக்கி பயிற்சி அளித்தார். மேலும், பாட்டியாவில் உள்ள தேசிய விலையாட்டு அமைப்பின் தலைமை ஹாக்கி பயிற்சியாளராக இருந்தார்.

1952-ல் கோல் என்கிற பெயரில் சுய சரிதை எழுதினார். இதை சென்னையை சேர்ந்த ஸ்போர்ட் அன்ட் பாஸ்டைம் நிறுவனம் வெளியிட்டு பெருமை சேர்த்துக் கொண்டது.  தயான் சந்த், 1979-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி இந்த உலகிலிருந்து விடை பெற்றார்.

தயான் சந்த்-தின் தேசப்பற்று..

1936-ல் பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் தயான் சந்த் சிறப்பாக விளையாடினார். அதை பார்த்த ஹிட்லர், 'மேஜர் பதவி மற்றும் ஜெர்மன் குடியுரிமை தருகிறேன்,' என்று சொல்லி இருக்கிறார். அதற்கு எல்லாம் மசியாமல் தாய்நாட்டுக்கு மட்டும் தான் ஹாக்கி விளையாடுவேன் என்று தயான் சந்த் சொல்லி இருக்கிறார்.

1935-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உலக கிரிக்கெட் சாதனையாளர் பிராட்மேன், தயான் சந்த்தின் ஹாக்கி ஆட்டத்தை பார்த்தார். இது குறித்து பிராட்மேன் கூறும் போது, "கிரிக்கெட்டில் ரன் எடுப்பது போல் தயான் சந்த் கோல்களை எடுக்கிறார்" என்றார்.

ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் இவருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அது நான்கு கைகளில் நான்கு ஹாக்கி மட்டைகளுடன் காட்சி அளிக்கிறது.

ஆனால், தற்போது 'இந்திய ஹாக்கி'யோ ஐ.சி.யு.வில் முடங்கியுள்ளது. தேசிய விளையாட்டு மீண்டும் எழுச்சி பெறுவது ஒன்றே தயான் சந்த்-துக்கு நாம் அளிக்கிற உண்மையான சல்யூட்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக